உரை

உரை: மலேசியாவில் சமகால நவீன கவிதை

அனைவருக்கும் வணக்கம்,

2025ஆம் ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், சமகால கவிதை குறித்த இந்த அமர்வில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இதன் ஏற்பாட்டாளர் ஆயிலிஷா, கடந்த 25 ஆண்டு காலமாக மலேசியத் தமிழ்க் கவிதை சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பேசும்படி கேட்டுக்கொண்டார். மலேசிய நவீன கவிதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் 2006இல் நடைபெற்றது. இந்த மாற்றத்தை அறிய, அதற்கு முன்னர் மலேசியக் கவிதை உலகில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு குறுக்குவெட்டாகவேணும் அறியத்தருவது அவசியம் எனக் கருதுகிறேன். அது பலருக்கும் சில தெளிவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

Continue reading

குருதிவழி நாவல்: என் உரை

எனது பத்தாவது வயது வரை நான் லூனாஸில் உள்ள கம்போங் லாமா எனும் பகுதியில் வசித்து வந்தேன். அங்கு எப்போதாவது ஒருதடவை மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட சீனக் கிழவி ஒருத்தியின் வருகை நிகழ்வதுண்டு. அவளை நாங்கள் கீலா கிழவி எனக்கிண்டல் செய்வோம். அவளால்தான் முன்னர் லூனாஸ் தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவள் என. என் பாட்டி சொல்வார். 1981ஆம் ஆண்டு பலரும் இறக்கக் காரணமாக இருந்த விஷச்சாராயம் அவளால் காய்ச்சப்பட்டதுதான் என்பாள் ஆங்காரமாக. அந்த மரணச் சம்பவங்களுக்கு பின், ஊரைவிட்டு ஓடிப்போன அவள் பைத்தியக்கார கிழவியாகத்தான் திரும்பி வந்து சேர்ந்திருந்தாள். அரைநிர்வாணமாகத் திரியும் அவளை எங்கள் கம்பத்து பெரியவர்கள் கல்லால் அடித்து விரட்டுவார்கள். ஒவ்வொருமுறையும் அவள் அடிபடுவதற்கென்றே வந்து போவதுபோல இருக்கும்.

Continue reading

உரை: பாரதி

(செப்டம்பர் 15, 2024இல் சுங்கை கோப் பிரம்மவித்யாரணத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய உரையின் முழு வடிவம்)

அனைவருக்கும் வணக்கம்,

சில ஆண்டுகளுக்கு முன்னர், நண்பர் ஒருவருடன் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது எதிரில் இருந்த காரின் கண்ணாடியில் ‘தமிழன் என்று சொல்லடா’ எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாசகத்துடன் பாரதியாரின் முறுக்கிய மீசையும் கொதிக்கும் கண்களும் கொண்ட படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

Continue reading

சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்- 2

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை எனது தளத்தில் பதிவேற்றியப் பிறகு வாசகர்களிடமிருந்தும் சக நண்பர்களிடமிருந்தும் பல்வேறுவகையான கேள்விகளை எதிர்க்கொண்டேன். அதில் முதன்மையான கேள்வி ‘ஏன் இந்த அங்கத்திற்குச் சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள்? சிறுகதையின் நுட்பங்களை அறிதல் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்பதாக இருந்தது.

Continue reading

சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்

அனைவருக்கும் வணக்கம். க்யோரா.

2021இல் சிறுகதை ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் பட்டறை ஒன்றை வழிநடத்தினேன். நண்பர் மெய்யப்பன் அவர்கள் மூலமாக அப்படி ஒரு முயற்சி சாத்தியமானது. எந்த ஒரு முயற்சிக்கும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் இல்லை என்றால் அவை சடங்குகளாக ஓரிடத்தில் தேங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வகையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு முன்னெடுப்பை அவர் மீண்டும் கையிலெடுத்திருப்பதை ஆரோக்கியமான நகர்ச்சியாகக் கருதுகிறேன். அவருக்கும் அவரது குழுவினருக்கும் மற்றும் இங்கு இணைந்துள்ள நண்பர்களுக்கும் என் வணக்கத்தையும் அன்பையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Continue reading

கு. அழகிரிசாமியின் குழந்தைகள் (உரை)

அனைவருக்கும் வணக்கம்.

2005இல் நான் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். தமிழ் மொழி ஆசிரியர் நான். பொதுவாகவே புதிதாகப் பணியில் அமரும் ஆசிரியர்களைப் படிநிலை ஒன்றில் பயிற்றுவிக்கப் பணிப்பது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் வழக்கம். அப்படி எனக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சற்றுக் கண்டிப்பான ஆசிரியர்தான். மாணவர்கள் மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் பிடிவாதமாகவே இருந்தேன்.

Continue reading

உரை: யுவன் சந்திரசேகர் படைப்புலகம்

2006இல்

அனைவருக்கும் வணக்கம்.

இங்கு வந்திருக்கும் பலரும் யுவன் சந்திரசேகரின் புனைவுகளை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஒரு சில கதைகளை வாசித்துவிட்டு கொஞ்சம் குழப்பத்துடன் பின்வாங்கவும் செய்திருக்கலாம். இந்த உரையை யுவனை அணுக ஓர் ஆரம்பக்கட்ட வாசகனுக்கு வேண்டிய மனத்தயாரிப்பு குறித்து பேசலாம் என வடிவமைத்துக்கொண்டேன். அதன் வழி மலேசியாவில் யுவனை வாசிக்கக்கூடிய புதிய வாசகர்கள் உருவாவார்கள் என்றால் அதுவே மகிழ்ச்சி.

Continue reading

அம்பரம் நாவல் (உரை)

அனைவருக்கும் வணக்கம்

நான் வாழ்ந்த லுனாஸ் வட்டாரத்தில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ‘பேய்ச்சி’ நாவலில் அந்தக் கோயிலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் மண்டபத்தில் தேர் ஒன்று ஓரமாக ஒதுங்கி நிற்கும். திருவிழாவின்போது மட்டுமே அதை கண்டுகொள்வார்கள். மற்ற நாட்களில் அது எங்கள் விளையாட்டு பொருள்களில் ஒன்று. திருவிழாவின்போது அதை மண்டபத்தில் இருந்து இழுத்துச் சென்று பெரிய காளை மாடுகளுடன் இணைக்க வேண்டி இருக்கும். அது சாதாரண காரியமல்ல. அவ்வளவு சீக்கிரம் தேர் நகராது. ஆனால் அதை இழுத்துச் சென்று மாட்டிடம் இணைப்பதே ஒரு மங்கள செயலாகக் கருதப்பட்டதால் பலரும் தங்கள் கைகளை தேரில் வைத்திருப்பார்கள். ஐம்பது அறுபது கரங்கள் அதில் பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில இளைஞர்களின் பலத்தால்தான் அந்தத் தேர் நகரும். அவர்களே அதில் பிரதானமானவர்கள். மூச்சுத்திணர தேரை இழுத்து மாட்டுடன் பூட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.

Continue reading

மலேசியாவில் ஏன் நவீன இலக்கியம் வளரவில்லை? (உரை)

0001சில ஆண்டுகளுக்கு முன் இதே ஜொகூர் மாநிலத்தில் நடந்த மலேசிய – சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதில் வல்லினம் வழி நாங்கள் உருவாக்க விரும்பும் இலக்கியப்போக்கு என்ன என்பதாக என் தலைப்பு இருந்தது. ஏறக்குறைய மலேசியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், ஒரு சில கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வளர்கள், எழுத்தாளர்கள் கூடியிருந்த மாநாடு அது. என்னுடைய அமர்வு இரண்டாவது நாள். இரண்டாவது நாள் சிறப்பு வருகை புரியவிருந்த தொழிலதிபருக்கு ஏற்பாட்டுக்குழுவினர் காத்திருந்தனர். எனவே அன்று முதலில் பேசவிருந்த மொழியியலாளர் திருமாவளவன் அவர்களின் உரை தாமதப்பட்டது. தனவந்தர் வந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால் திருமாவளனுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைக்கப்பட்டது. எனது முறை வந்தபிறகு நான் உரையை இவ்வாறு தொடங்கினேன்.

Continue reading