கட்டுரை/பத்தி

சக்கரத்தில் ஒட்டிய பல்லி… (கவிதை குறித்த உரையாடல்)

(அண்மையில் பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ளத் தமிழ்ப்பள்ளிகள் மத்தியில் கவிதை தொடர்பான ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். கவிதை குறித்து பேச என்னை அழைத்திருந்தனர். அங்கு நான் பேசிய உரை இது. கொஞ்சம் செரிவு செய்து பதிவிடுகிறேன்.)

நண்பர்களே,
நவீன கவிதை குறித்து பேசுவதற்கு முன்பாக நான் உங்களிடம் இருக்கும் சில முன்முடிவுகளை களைத்துப்போட விரும்புகிறேன். அதன் மூலமே நீங்கள் என்னையும் கவிதை குறித்த என் கருத்துகளையும் எதிர்க்கொள்ள தயாராக முடியும் என நம்புகிறேன். காரணம் நாம் அனைவருமே நமது கடந்த காலங்களில் ‘கவிதை’ எனும் கலை வடிவம் குறித்து ஏதோ ஒரு வகையில் அறிந்து வைத்திருப்போம். நமது கல்லூரி காலங்களில் கவிதை நமக்கு அறிமுகமானவிதம் மிக அபத்தமானது.

Continue reading

கண்ணீரைப் பின்தொடர்தல்

சில நாள்களுக்கு முன் ஓர் அழைப்பு. சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலையில் இருந்து மன்சூர் என்பவர் பேசினார். தன்னைத் தூக்குத் தண்டனைக் கைதி என அறிமுகம் செய்துக்கொண்டார். மின்னல் பண்பலையில் ‘வல்லினம்’ குறித்து இடம்பெற்ற எனது நேர்காணலை செவிமடுத்தப்பின் எண்களைக் குறிப்பெடுத்து அழைத்திருந்தார். ‘வல்லினத்தின் திட்டவட்டமான தூரம் என எதுவும் இல்லை; அது மாற்றுச்சிந்தனை கொண்ட இளைஞர்களை உருவாக்க செயல்படுகிறது. புகழுக்கும் பணத்துக்குமான குறிக்கோளை அடைந்தவுடன் துடிப்பாக உருவாக்கப்படும் பல செயல்வடிவங்கள் தீர்ந்துபோய்விடுகின்றன. வல்லினத்தில் அது இல்லை’, என்று நான் பேசியதைக் கோடிட்டவர் “என்னைச் சந்திக்க முடியுமா?” என்றார்.

Continue reading

மாதங்கி சிறுகதைகள் : சிங்கப்பூர் சமகாலப் படைப்புகள் (4)

mathangiஅண்மையில் ‘எங் கதெ’ என்ற இமையத்தின் நாவல் குறித்து நண்பர்கள் பலரிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். நாவலின் உள்ளடகத்தில் எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும் என்னை வியக்க வைத்தது அவரது மொழி. மிகக் கடினமான உளவியல் இறுக்கங்களை ஒரு டால்பின் மீன் போல கடலில் சலனத்தை படரவிட்டு தாவித்தாவி கடந்துவிடுகிறார். அது இலக்கியத்திற்குத் தேவையான மொழி.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 12

லதா

லதா

தமிழ் இலக்கியம் வாழும் நாடுகளில் சிங்கப்பூர் சற்று வித்தியாசமான பின்னணியைக் கொண்டது. சிங்கப்பூரை ஒரு ‘டிரான்ஸிஸ்ட் சிட்டி’ அதாவது பயணத்தின் இடையில் தங்கிச் செல்லும் ஒரு நகரம் எனச் சொல்லலாம். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துப் போய்க் கொண்டிருக்கும் அந்த நகரத்தில் அவரவர் தங்களால் ஆன பங்களிப்பைச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்குத் தருகின்றனர். அதேபோல சிங்கையில் பிறந்து அந்நாட்டு கலை இலக்கியத்தில் இயங்கும் தீவிரமான படைப்பாளர்களும் உள்ளனர். சிங்கப்பூரிலேயே பிறந்து அந்நாட்டிலேயே வளர்ந்து எழுதத் தொடங்கிய தலைமுறையினரில் இளங்கோவன், ரெ.பாண்டியன் இருவரையும் குறிப்பிடலாம்

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 11

SONY DSC

கருணாகரன்

மலேசியா போன்ற நாட்டில் வாழும் நமக்கு போர் என்பது ஒரு செய்தி மட்டுமே. ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றுவதன் மூலமாக நம்மால் சட்டென அவ்வுணர்வில் அழவும் விடுபடவும் முடிகின்றது. ஆனால் பல ஆண்டுகள் போரைச் சுமந்து நின்ற ஒரு நிலத்தில் வாழ்கின்ற கலைஞர்கள் மொழியும் அதன் வெளிபாடும் என்னவாக இருக்கும் என வாசிப்பதும் உள்வாங்குவதும் ஒரு வாசகனின் முக்கிய பரிணாமம். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய முக்கிய நிலமாக ஈழம் உள்ளது. தமிழகத்தைப் போலவே நீண்ட நெடிய இலக்கிய வரலாறு இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு இருந்தாலும் போர் அந்தத் தொடர்ச்சியை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை அறிய வேண்டியுள்ளது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 10

kalapriyaநவீன கவிதைகளின் வாசகர் என ஒருவர் தன்னைச் சொல்லிக்கொண்டால், நான் அவர் சில கவிஞர்களை வாசித்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதுண்டு. உண்மையில் தமிழ் இலக்கியத்தில் அதிகமாகக் கவிதைகள்தான் எழுதப்படுகின்றன. எளிய வடிவம் என  நம்பி இலக்கியத்தில் நுழையும் பலர் கையாள நினைப்பது கவிதையாக உள்ளது. இவ்வாறான சிறுபிள்ளைதனமான முயற்சியில் ஒவ்வொருநாளும் பல கவிதை தொகுப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. ஒரு வாசகன் இவ்வாறு குவியும் அனைத்து கவிதை நூல்களையும் வாசித்து முடிப்பதென்பது சாத்தியமில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகத் தொன்மையான கவிதை மரபைக் கொண்ட தமிழ் மொழியில் ஒருவன் கவிதைகள் வழி தன்னை தனித்து அடையாளம் காட்டுவதை சாதனை என்றே சொல்வேன். அத்தகையச் சாதனைக்குறியவர் கவிஞர் கலாப்ரியா.

Continue reading

கழுகின் காணொளியும் நமது போலி தன்முனைப்பும்

Bald_Eagle_Portraitகொஞ்ச காலமாக முக நூலிலும் புலனத்திலும் கழுகு குறித்த ஒரு வீடியோ பதிவு தமிழில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சொல்லப்படும் அதி முக்கியமான விடயங்களைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 9

hqdefault

மா.சண்முகசிவா

நவீன கவிதைகள் போக்கில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தலித் கவிதைகள். தலித் என்பது மராட்டிய சொல். மராட்டியத்தில் உருவான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி தலித் இயக்கமென்று பெயர் சூட்டிக் கொண்டது. இதன் பாதிப்பு ‘தலித் இலக்கியத்தை’ உருவாக்கியது. தங்கள் ஒடுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைக் கண்டடைதல், போராட்டத்திற்காக தங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்தல், தங்கள் பண்பாட்டுச் சிக்கல்களை ஆராய்தல் ஆகியவை தலித் இலக்கியத்தின் அடிப்படை நோக்கங்கள் எனலாம். தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றவை வாசக வகைப்படுத்தல்களுக்கும் அல்லது திறனாய்வுக்கும் தேவைப்படுகின்றன. என்னளவில் முதலில் அவை கவிதைகள். ஆனால் அவற்றுக்கென்று தனித்தனி அழகியல் உள்ளது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 8

IMG_7318 copyமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

நவீனக் கவிதைக்கென்று திட்டவட்டமான வடிவம் ஒன்றில்லை. அதன் முழு நோக்கமும் சொற்கள் மூலமாகக் கவித்துவத்தை அடைய முயல்வதுதான். அதீத மொழி ஆற்றல் மூலமாக உருவாக்க முடியாத கவித்துவ அழகியலை சில கவிஞர்கள் மிக எளிய சொற்கள் மூலமாக உருவாக்கிவிடுவதுண்டு. இத்தகைய கவிதைகள், மொழி அல்லது வடிவப் பயிற்சியால் அடையப்படுவது அல்ல. கடலில் நீந்தி அதை அறிவது ஒரு முறை என்றால் இவர்கள் கரையில் நின்று கூர்ந்த நுண்ணுணர்வுடன் அதை அவதானிப்பவர்கள். சில சமயம்  நீந்துபவனைவிட கரையில் காத்திருப்பவனுக்குக் கடல் புதிய தரிசனங்களைத் தரலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 7

devadatchanமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதாக வாசித்தேன். நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் என் வாசிப்புக்கு மிக உவப்பானவராக தேவதச்சன் இருந்தார். தமிழில் எழுதப்பட்ட நல்ல கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமான வயதில் பிரமிளின் அடுக்கடுக்கான படிமங்கள் அடங்கிய முறுக்கிய மொழியும் ஆழ்ந்த வாழ்வனுபவங்களின் உச்சமான கனத்தைப் பிழிந்துகொடுக்கும் தேவதேவனின் கவிதைகளும் தொடர் வாசிப்பிற்குச் சோர்வை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் தேவதச்சனின்  கவிதைகள் அறிமுகமாயின. நவீன கவிதைகள் குறித்த ஒரு கட்டுரையில் அவரது ‘காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை’ என்ற கவிதை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதுதான் நான் வாசித்த அவரது முதல் கவிதை.

Continue reading