கட்டுரை/பத்தி

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 10

kalapriyaநவீன கவிதைகளின் வாசகர் என ஒருவர் தன்னைச் சொல்லிக்கொண்டால், நான் அவர் சில கவிஞர்களை வாசித்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பதுண்டு. உண்மையில் தமிழ் இலக்கியத்தில் அதிகமாகக் கவிதைகள்தான் எழுதப்படுகின்றன. எளிய வடிவம் என  நம்பி இலக்கியத்தில் நுழையும் பலர் கையாள நினைப்பது கவிதையாக உள்ளது. இவ்வாறான சிறுபிள்ளைதனமான முயற்சியில் ஒவ்வொருநாளும் பல கவிதை தொகுப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. ஒரு வாசகன் இவ்வாறு குவியும் அனைத்து கவிதை நூல்களையும் வாசித்து முடிப்பதென்பது சாத்தியமில்லை. இன்னும் சொல்லப்போனால் மிகத் தொன்மையான கவிதை மரபைக் கொண்ட தமிழ் மொழியில் ஒருவன் கவிதைகள் வழி தன்னை தனித்து அடையாளம் காட்டுவதை சாதனை என்றே சொல்வேன். அத்தகையச் சாதனைக்குறியவர் கவிஞர் கலாப்ரியா.

Continue reading

கழுகின் காணொளியும் நமது போலி தன்முனைப்பும்

Bald_Eagle_Portraitகொஞ்ச காலமாக முக நூலிலும் புலனத்திலும் கழுகு குறித்த ஒரு வீடியோ பதிவு தமிழில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சொல்லப்படும் அதி முக்கியமான விடயங்களைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்க்கலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 9

hqdefault

மா.சண்முகசிவா

நவீன கவிதைகள் போக்கில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தலித் கவிதைகள். தலித் என்பது மராட்டிய சொல். மராட்டியத்தில் உருவான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி தலித் இயக்கமென்று பெயர் சூட்டிக் கொண்டது. இதன் பாதிப்பு ‘தலித் இலக்கியத்தை’ உருவாக்கியது. தங்கள் ஒடுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களைக் கண்டடைதல், போராட்டத்திற்காக தங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்தல், தங்கள் பண்பாட்டுச் சிக்கல்களை ஆராய்தல் ஆகியவை தலித் இலக்கியத்தின் அடிப்படை நோக்கங்கள் எனலாம். தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றவை வாசக வகைப்படுத்தல்களுக்கும் அல்லது திறனாய்வுக்கும் தேவைப்படுகின்றன. என்னளவில் முதலில் அவை கவிதைகள். ஆனால் அவற்றுக்கென்று தனித்தனி அழகியல் உள்ளது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 8

IMG_7318 copyமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

நவீனக் கவிதைக்கென்று திட்டவட்டமான வடிவம் ஒன்றில்லை. அதன் முழு நோக்கமும் சொற்கள் மூலமாகக் கவித்துவத்தை அடைய முயல்வதுதான். அதீத மொழி ஆற்றல் மூலமாக உருவாக்க முடியாத கவித்துவ அழகியலை சில கவிஞர்கள் மிக எளிய சொற்கள் மூலமாக உருவாக்கிவிடுவதுண்டு. இத்தகைய கவிதைகள், மொழி அல்லது வடிவப் பயிற்சியால் அடையப்படுவது அல்ல. கடலில் நீந்தி அதை அறிவது ஒரு முறை என்றால் இவர்கள் கரையில் நின்று கூர்ந்த நுண்ணுணர்வுடன் அதை அவதானிப்பவர்கள். சில சமயம்  நீந்துபவனைவிட கரையில் காத்திருப்பவனுக்குக் கடல் புதிய தரிசனங்களைத் தரலாம்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 7

devadatchanமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதாக வாசித்தேன். நவீன கவிதைகளை வாசிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் என் வாசிப்புக்கு மிக உவப்பானவராக தேவதச்சன் இருந்தார். தமிழில் எழுதப்பட்ட நல்ல கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமான வயதில் பிரமிளின் அடுக்கடுக்கான படிமங்கள் அடங்கிய முறுக்கிய மொழியும் ஆழ்ந்த வாழ்வனுபவங்களின் உச்சமான கனத்தைப் பிழிந்துகொடுக்கும் தேவதேவனின் கவிதைகளும் தொடர் வாசிப்பிற்குச் சோர்வை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் தேவதச்சனின்  கவிதைகள் அறிமுகமாயின. நவீன கவிதைகள் குறித்த ஒரு கட்டுரையில் அவரது ‘காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை’ என்ற கவிதை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதுதான் நான் வாசித்த அவரது முதல் கவிதை.

Continue reading

வகுப்பறையின் கடைசி நாற்காலி : பிரளயன் அவர்களின் விமர்சனம்

pralayan‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற கட்டுரைகளே இவை.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 6

IMG_3397மின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

கவிதை வாசகனின் மூலமே தன்னை முழுமைப்படுத்திக்கொள்கிறது. சங்கப்பாடல்கள் தொடங்கி திருக்குறள் என வளரும் பழந்தமிழ் இலக்கியங்கள் எதற்குமே அதன் ஆசிரியர்கள் பொருள் எழுதி வைத்துச்செல்லவில்லை. பின்னால் வந்த பல தமிழ் அறிஞர்களே அவற்றை வாசித்துப் பொருள் கூறினர். தமிழில் மிக முக்கிய ஆய்வாளரான முனைவர் துளசி ராமசாமி சங்கப்பாடல்களில் வரும் திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர் போன்ற அடிக்குறிப்புகள் எல்லாமே பிற்கால சேர்மானம் என்று சொல்கிறார். ஆக, இன்று ஒரு நவீன வாசகன் பொருளுரையின் உதவி இல்லாமல் அவற்றை வாசித்து தனது அனுபவத்தின் திரட்சியில் அவ்விலக்கியங்களுப் பொருள் கூற முழு சுதந்திரம் உண்டு. அது முற்றிலும் வேறு பொருளாகவும் இருக்கலாம். இலக்கியத்திற்கே உள்ள சுதந்திரம் அது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 5

pramil_1865025hமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

விவாதங்களால் அல்லது அறிவைச் சுரக்கும் நூல்களால் மட்டுமே அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ள முடியும் என ஒரு கருத்து உள்ளது. நிரூபிக்கப்பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுவே அறிவு என பல தோழர்கள் பேசுவதை நான் கேட்டுள்ளேன். என்னளவில் அவை அனைத்தும் சாத்தியமற்றவை. உண்மையில் தர்க்க அறிவைவிட கற்பனை மேலும் ஆழமானது. தர்க்கம் நாம் அறிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டது. கற்பனை படிமங்களால் ஆனது. அதனால் நாம் காணதவற்றையும் கற்பனை செய்ய முடியும்.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 4

sivaமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

தொ.பரமசிவம் அவர்களின் அறியப்படாத தமிழகம் எனும் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் ஒரு வரி சொல்கிறார். அக்காலத்தில் தமிழர்களுக்கு முக்கிய ஊதியமாக உப்பும் அரிசியும் இருந்துள்ளது. பின்னர் ஊதியமாகப் பணம் வழங்கும் நிலை வந்தபோது அரிசியின் சம்பா என்ற பெயரும் உப்பு விளையும் களமான ஆளம் என்ற சொல்லும் இணைந்து சம்பளம் என்ற சொல் உருவானது என்கிறார். இதை நான் என் இலக்கிய நண்பருடன் பகிர்ந்தபோது அவர் அதை முற்றிலுமாக மறுத்தார். உப்புக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்திருக்க முடியாது. அது மலிவானது எளிதில் கிடைக்கக் கூடியது என வாதாடினார். என்னாலும் உறுதியாகச் சொல்ல முடியாததால் மௌனம் காத்தேன். ஆனால் எனக்கு விடை ஒரு சங்கப்பாடலில் இருந்து கிடைத்தது.

Continue reading

நவீன கவிதை வாசிப்பு : பகுதி 3

manushyaputhiranமின்னல் பண்பலையில் ஒவ்வொரு ஞாயிறும் அமுதே தமிழே நிகழ்ச்சியின் பேச்சு இங்கே கட்டுரை வடிவில்…

மிகை உணர்ச்சி, உணர்வெழுச்சி இவை இரண்டுக்கும் அடிப்படையான வித்தியாசம் தெரியாமல் நம்மால் ஒரு கவிதையை அறிவது சாத்தியமில்லை. மிகை உணர்ச்சி என்பது ஓர் உணர்ச்சி மனநிலையை ஒரு படைப்பு மிகைப்படுத்திக் காட்டுவதிலிருந்து அறியலாம். அதாவது ஒரு துக்கமான காட்சியைச் சொல்லும்போது அக்காட்சியை விளக்குபவன் வாசகனை அழவைக்க மிகவும் மெனக்கெடுவான். வாசகனை அழச்சொல்லி உழுக்குவான். ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால் சீரியல்களை ஓர் எடுத்துக்காட்டாக்கலாம். அவை ரசிகனின் உணர்ச்சியை சீண்ட திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் அழுது அழுது நம்மையும் அழவைக்கும்.

Continue reading