சியர்ஸ்: கடிதங்கள் 1

சியர்ஸ் சிறுகதை

சியர்ஸ் வாசித்தேன். மிகக் கச்சிதமாக சிறுகதை வடிவம் கை கூடி வந்த கதை. அந்தக் கனவில் வரும் முகம் ஒரு புகைப் படம் என அவிழும் இடம் துணுக்குற வைத்தது. விவரிப்பின் ஊடே ஒரு கேமராவின் நோக்கில் பர்மாவை காட்சிப்படுத்துவது ஒரு அபாரமான யுக்தி. இது craft மேம்பட்டு creation னை உரசும் இடம். புகைப் படத்தையும் ஒரு சொல்லையும் வைத்துக் கொண்டு துவங்கும் மூர்த்தியின் பர்மா பயணம் ஒரு துப்பறியும் கதை போல வளர்ந்தது.

Continue reading

பேய்ச்சி: காலம் கடந்து வாழ்வாள் – ப.விஜயலெட்சுமி

எழுத்துத் துறையில் இதுகாறும் நவீன் எனும் எழுத்தாளரின் பல முகங்களைக் கண்ட நான், ‘பேய்ச்சி’ நாவலின் வழி வேறுபட்டு காண்கிறேன். எழுத்தாளரின் புதிய பரிணாமத்தை என்னால் 283 பக்கங்களைக் கொண்ட பேய்ச்சியின் மூலம் காண இயல்கிறது. எப்பொழுது, இந்நாவலைக் கையில் ஏந்தினோம் என, எண்ணி பார்ப்பதற்குள் இதன் இறுதிப் பக்கத்தைக் கடந்து விட்டேன்.

Continue reading

சிறுகதை: உச்சை

கொட்டகைக்கு அருகில் நிழலசைவு தெரிந்தவுடன் முத்தண்ணன் திடுக்கிட்டு எழுந்தான். உச்சையின் நெடுநேர கனைப்பு கனவின் தொலைதூரத்தில் கேட்பதுபோல இருந்ததால் அயர்ந்துவிட்டிருந்தான். சமீப காலமாக அவன் கனவுகளில் மனிதர்களே வருவதில்லை. சிறு தீப்பொறி கனன்று கம்முவது தெரிந்தது. கண்களை கசக்கிப்பார்த்தான். நின்றிருக்கும் மனிதரின் தலைக்கு மேல் தொப்பியின் நிழல்வடிவம். துரைதான் என்று தெரிந்தவுடன் பயம் அதிகரித்தது.

Continue reading

செம்மண்ணும் நீலமலர்களும்: முதல் சுடர்

மலேசிய நாவல்களை வாசிக்கும்போது பெரும்பாலானவை ஏற்படுத்தும் சலிப்புக்குக் காரணம் அதன் அடிப்படை சாரமாக மறுபடி மறுபடி வரக்கூடிய இரண்டு அம்சங்கள்தான். முதலாவது படைப்பாளிக்கு ஏற்பட்டுள்ள நீதியுணர்வு சார்ந்த கோபம். இரண்டாவது மானுட உறவுகள் சார்ந்த குழப்பம்.

Continue reading

உச்சை: கடிதங்கள் (4)

சிறுகதை: உச்சை

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மலேசியாவின் ரப்பர் தோட்டத்திற்கு ஒரு குதிரை வந்து சேர்வதும் அதன் பின் நிகழும் சம்பவங்களுமே கதை.

முத்தண்ணன் தீண்டத்தகாத ஜாதியை சேர்ந்தவன், மிக இள வயதிலேயே அனாதை யானவன், குதிரை மேல் கொண்ட பித்தின் காரணமாக, கிராமத்தில் கோவேறு கழுதையை குதிரை என்று நம்பி அது குட்டி போடும் தனக்கு ஒரு குதிரை கிடைக்கும் என்ற ஆசையில் ஆண்டுக்கணக்கில் கடுமையாக உழைக்கிறான்,அது இறந்துவிடுகிறது அவன் கையாலேயே அடக்கம் செய்துவிட்டு, ரப்பர் தோட்ட வேலைக்கு வந்து சேர்கிறான்.

Continue reading

உச்சை: கடிதங்கள் (3)

சிறுகதை: உச்சை

இந்திரனின் வாகனமான உச்சைசரவஸ் தொன்மத்தில் அதன் மேல் யாரமர்ந்தாலும் அவரே இந்திரன் எனக் கொள்ளப்படும். அத்தொன்மத்தை ஆட்சி அதிகாரத்துடன் இணைத்து புனைந்திருப்பது ஒரு தொன்மம் அரசியல் என புது வித வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறது. இந்திரனால் தன் உச்சைசர்வஸில் யாரையும் அனுமதிக்க முடியாதது போலவே துரையாலும் முத்தண்ணனிடம் அதனை குடுக்க இயலவில்லை ஆனால் அதனை விட்டுச் செல்லும் தருணத்திலும் அவரால் கொல்லவும் இயலவில்லை.

Continue reading

உச்சை: கடிதங்கள் (2)

சிறுகதை: உச்சை

நேற்று நீலகண்டம் குறித்து திரு. காளி பிரசாத் பேசியதை கேட்டேன். அதில் நஞ்சிற்கும் அமுதத்திற்கும் இடையே தோன்றிய சில உயிர்களை பற்றி கூறினார். இன்று தான் தெரிந்து கொண்டேன் உச்சை சிரவஸ் என்ற வெள்ளை குதிரையும் சமுத்திர மந்தனத்தின் போது பாற்கடலில் இருந்து தோன்றியது என.
பந்தய குதிரைகள் செயல்பட இயலாத நிலை வரும் போது அவை சுட்டு கொல்லப்படுவதே வழக்கம் என்று கேள்விபட்டிருக்கிறேன். தகுதிக்கு மீறியதாக தோன்றும் உறவுமுறைகள் ஏற்படுவதை தடுக்க செய்யப்படுவதாக அறியப்படும் கவுரவ / ஆணவக்கொலைகள் நினைவிற்கு வந்தது.

Continue reading

உச்சை: கடிதங்கள் (1)

சிறுகதை: உச்சை

அண்ணா, வாசித்தேன். நல்ல மொழிநடை. வாசிபின்பம் அமைந்த கதை. ஆனால் கதையின் மைய முடிச்சு வலிமையாக உருவாகி வர வில்லை. புராணகதை  அதில் ஒன்றினை மாற்றி அமைக்கும் ஆளுமை. அது மிஸ்டிக் உரு கொண்டு மண்ணில் இறங்கி வரலாற்று தருணம் ஒன்றினை மாற்றி அமைக்கும் இந்த தொடர் பின்னல் வலிமையாக உருவாகி இல்லை. காரணம் புராண கதையில்  அந்தக் குதிரைக்கு எந்த role ம் இல்லை. கத்ரு அவள் பொறாமை மற்றும் அவள் ஏவும் பாம்புகள் சதி இவைதான் அங்கே வினையாற்றிக் கொண்டிருக்கிறது.

Continue reading

பேய்ச்சி: தமிழ்ப்பிரபா

ஒரு நல்ல நாவலுக்குள் நுழைந்து விட்டோம் என்கிற உணர்வென்பது தூரத்து அருவியின் சலசலப்பு ஏற்படுத்தும் பரவசத்திற்கு ஒப்பானது. ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ என்கிற இந்நாவல் படிக்கத் துவங்கிய முதல் சில பக்கங்களிலேயே அவ்வுணர்வை எனக்களித்தது.

Continue reading

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள்: பாலுணர்வின் கிளர்ச்சி

1

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை வலுவானது. மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை (நெருப்புப் பூக்கள் – 1979) வெளியிட்டவர். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை (1979) நடத்தியவர்.  அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து (புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் – 1979) நவீன இலக்கியச் சிந்தனை மூலம் வெளியிட்டார். மலேசியாவில் புதுக்கவிதை வளரத்தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தவர். ஆம்! இளஞ்செல்வனிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என கோ.புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது (மறக்கப்பட்ட ஆளுமை).

Continue reading