ரெ.கார்த்திகேசு நாவல்கள்: மெல்லுணர்ச்சிகளின் பூஞ்சணம்

பொழுதுபோக்கு இலக்கியம் இருப்பதை விமர்சிக்கவில்லை. அவற்றை உயர்வாக மதிப்பிடுவது, அவற்றைச் சார்ந்த சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது – இந்த அணுகுமுறையைத்தான் நான் விமர்சிக்கிறேன் – சுந்தர ராமசாமி

பறை இரண்டாவது இதழுக்காக ‘கூலிம் நவீன இலக்கிய களம்’ 2014இல் ஓர் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விதழின் முன்னுரையில் மலேசிய இலக்கிய உலகம் ரெ.கார்த்திகேசு போன்ற ‘மீடியோக்கர்’களை (mediocre) முன்னிலைப்படுத்துவதன் அபத்தங்களை எழுதியிருந்தேன். அக்கட்டுரை குறித்து மேடையில் தனது கருத்தைக் கூறிய எழுத்தாளர் கோ.புண்ணியவான், ‘ரெ.கார்த்திகேசு வணிக இலக்கியவாதிதான். அவர் தன்னை தீவிர இலக்கியவாதியென எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. அப்படியிருக்க அதை ஏன் மறுபடி மறுபடி  பதிவு செய்யவேண்டும்?’ எனக்கேட்டார்.

Continue reading

பேய்ச்சி விமர்சனம் (சிவானந்தம் நீலகண்டன்)

‘அமைவது’ என்ற ஏதோ ஒரு மாயத்தன்மை ஒவ்வொரு சிறப்பான இலக்கிய ஆக்கத்திற்குள்ளும் நிகழ்கிறது. அதைத் தெளிவான ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடிவதில்லை. இத்தனை ஆண்டுக்கால இலக்கிய விமர்சனத்துறை அதைப்பிடிக்க முயலும்போதெல்லாம் அது நழுவிக்கொண்டே வந்திருக்கிறது. அந்த மாயத்தன்மையே இலக்கியத்தில் போலிகள் மறைந்துகொள்வதற்கான இடத்தை அளிக்கிறது. அந்த வகையில் அது சாபமாக இருக்கிறது என்றாலும் அந்த மாயம்தான் எழுத்தை ஒரு தொழில்நுட்பமாகக் கற்றுத்தேறிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளோரிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்றிக்கொண்டுவரும் வரமாகவும் இருக்கிறது.

Continue reading

பேய்ச்சி: கதையல்ல வாழ்க்கை

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நாவலைக் கைகளில் ஏந்தி அதை வைக்க மணமில்லாமல் வாசித்து முடித்தேன்.

பிரபஞ்சன் சொல்வார் – கதை என்பது கதையே அல்ல, கதைவிடுவதும் அல்ல, நிகழ்ச்சிகளின் தொகுப்பும் அல்ல.. நிகழ்விற்குக் கீழே நிகழ்விற்கு வெளிப்படையாகத் தெரியாமல், நிகழ்வோடு அந்தரங்கமாக ஒரு நிகழ்வு நிகழ்கிறதல்லவா, அதுதான் கதை.

Continue reading

செலாஞ்சார் அம்பாட் : புனைவின் துர்க்கனவு

நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும்  நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.

Continue reading

கழுகு: கடிதம்

கழுகு சிறுகதை

மிஸ்டிக் ஆன கதை.

ப்ரமாதம்.

கழுகாக தோற்றம் தரும் அமிர்தலிங்கத்தில் துவங்கி…பிணங்களை உண்ண கழுகு போல காத்திருக்கும் நிலைக்கு
சிவா வருவது (அல்லது வரப்போவது) வரை…

Continue reading

கழுகு (சிறுகதை)

navin 01

“மொதல்ல அத நுப்பாட்டு!”

நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன்.

Continue reading

பேய்ச்சி ஒரு வாசிப்பு – ‘மகிழம்பூ’ கலைசேகர்

வழக்கமாக நவீனின் படைப்புகள் என்றாலே வாசிக்க தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை வேறெதிலும் ஆர்வம் திரும்பாது. ஆனால் பேய்ச்சியை பல இடங்களில் நிறுத்தி எடுத்து வைக்க நேர்ந்தது. மீண்டும் வாசிப்பை தொடர சற்று கால அவகாசமும் தேவையாக இருந்தது எனக்கு.
ஒருவேளை நாவலில் இடம்பெற்ற சில காட்சியமைப்புகளின் சாயல்களை முன்னமே அவர் படைப்புகளில் வாசித்துள்ளது காரணமாக இருக்கலாம். அது ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஒரு நிலத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் இருந்து அறிமுகம் செய்வதால் உண்டாகும் ‘பழகிவிட்ட’ மனநிலையாகவும் இருக்கலாம்.

Continue reading

பேய்ச்சி: வாசிப்பனுபவம் (சிவமணியன்)

மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளை குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், . முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை.

Continue reading

பேய்ச்சி எனும் பேரொளி (ம.சுந்தரி)

பேய்ச்சி நாவல் தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின்வாழ்க்கை முறையை அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டும் நாவல். என் தாத்தா, பாட்டி, அப்பா,அம்மா அனைவரும் தோட்டப் புறங்களின்பின்னணியைக் கொண்டிருந்ததால் கதையினுள் என்னைச் சுலபமாகப் புகுத்திக் கொள்ள முடிந்தது. நானும் சிறு பிள்ளை பருவத்தில் தோட்டப்புறத்தை மகாராணி போல்சுற்றி வலம்வந்துள்ளேன். எனினும் நாவல் என்னை மீண்டும் ஒரு முறை தோட்டப்புறத்தைச் சுற்றிப் பார்க்க அழைத்து சென்றுவந்துள்ளது.

Continue reading

நவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு

“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். மணி அப்போது 8.50. சை.பீர்முகம்மது வீட்டிலிருந்து பத்துமலை கோயில் அருகில்தான் என்றாலும் தாமதமாகிவிடும் என பதற்றம். அப்படியே தாமதமானாலும் 5 நிமிடத்திற்குக் கூடாது. ஆனால் அதுவும் தாமதம்தான்.

Continue reading