மேன்மையின் பிரதிநிதி அந்தரா – ஜெயராம்

அன்புள்ள நவீன்,

ஜெயராம்

உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த  படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.

Continue reading

சண்முகப்பிரியா கடிதங்கள் -2

சண்முகப்பிரியா சிறுகதை

The short story “Shanmugapriya” by M. Navin revolves around the storyteller’s memories of a person named Shanmugapriya, whom they met during their school years at Wellesley Tamil School. The author reflects on how he had forgotten about Shanmugapriya until a visit to the beach with his three-year-old daughter triggered a memory of her.

Continue reading

மண்ணின் கதை சொல்லி – சௌந்தர்

சௌந்தர்

வனவிலகுங்களோ, வளர்ப்பு விலங்குகளோ, தங்கள் எல்லைகளை வகுப்பதை ஒரு மூர்க்கமான கலையாக தங்கள் மரபணுவில் கொண்டுள்ளது, நம் தெருவில் வாலாட்டிக்கிடக்கும் ‘சாந்தமான’ என நாம் பெயரிட்ட நாய் கூட, தன் குழுவில் இல்லாத நாயை தன் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. கூர் பற்களைக்காட்டி வெறியுடன் மாற்றானை துரத்துவதும் மாற்றான் பின்னங்கால்களுக்கு நடுவே வாலை சுருட்டியபடி பயந்து ஓடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சி.  மனிதனோ வேறு சில கொடுக்கல் வாங்கல்களில் மூலமாக இந்த மூர்க்கக்கலையை, சமூகம் எனும் சட்டகத்திற்குள் வைத்து, நெறி படுத்திய பின்னரும், பூமி முழுவதும் அவனுடைய ‘மூர்க்கக்கலை ‘ வெளிப்பட்ட வண்ணமே இருக்கிறது. 

Continue reading

சண்முகப்பிரியா கடிதங்கள் -1

சண்முகப்பிரியா சிறுகதை

அன்பு நவீன். 2024இல் முதல் கதையென நினைக்கிறேன். வழக்கமான உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட கதை. நேரடியாக யதார்த்த பாணியில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். ஆனால் அது எளிமையல்ல. புனைவு கைவசம் வந்த கலைஞன் மொழியை கையாளும் லாவகம். தகிக்கும் இடங்களை அசால்டாக கடந்து செல்கிறீர்கள். ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை.

ராம்

Continue reading

தாரா: ஒரு நாட்டார் கவிதை – மணிமாறன்

தாரா நாவல் 80களில் மலேசியாவின் கம்பப் பின்புலத்துடன் குகன் கொலையிலிருந்து தொடங்குகிறது. கம்பம் என்பது தமிழ் சொல்லானாலும் மலாய் மொழியில் கம்போங் என்றால் (கிராமம்) என்றே அறியப்படுகிறது. கூலி வேலைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்கள் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட வரலாற்றில் மருவி கம்பத்தை அடைந்தவர்களின் படிமத்தை முன்வைக்கிறார் நாவலாசிரியர்.

Continue reading

நினைவில் நிற்கும் தாரா – பா.கங்கா

பா. கங்கா

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல நூல்களை வாங்கினேன், அவற்றுள் ஒன்று தாரா. வாங்கியப் பிறகு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சித்ரா ரமேஷ் ‘சிங்கப்பூர் வாசகர் வட்டம்’ வழியாக ம. நவீன் எழுதிய ‘தாரா’, அ. பாண்டியன் அவர்கள் எழுதிய ‘கரிப்புத் துளிகள்’ ஆகிய நாவல்கள் குறித்தக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘தாரா’ நாவல் கையிலிருந்தும் படிக்காமல் எப்படிச் செல்வது என்று ஒரு தயக்கம். ஏன்றாலும் நவீன் முகநூலில் தாராவுடனான பயணத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவுகளைப் படித்திருந்ததால் போக முடிவு செய்தேன். கலந்துரையாடலுக்கு ஒருநாள் முன்பு தாரா நாவலை எடுத்துச் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்தேன். கிச்சி, லிங்கம், கோகிலாவின் அறிமுகம், அஞ்சலையின் சொலவடை, கந்தாரம்மன், லஷ்மி சிலை, குளம், குகனின் மரணம், மருதுவின் செயற்பாடு என நாவல் என்னைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ள தொடங்கியது.

Continue reading

அந்தரா தாராவானக் கதை – ஜி.எஸ்.தேவகுமார்

தாராவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு பாணியில் அணுக இயலும். ஒவ்வொரு நாவல்களும் அதை அணுகுபவரின் தனிப்பட்டப் புரிதல்களை வைத்தே அளக்கப்படும். நவீனப் படைப்புகளை வாசகன் தனிமையில் தன் உளம் சார்ந்தே அணுகுகின்றான்.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் தொடக்கத்தில் கதை நடக்கும் காலகட்டம். ஆனாலும் காட்சிகள் முன்னும் பின்னுமாகக் காலப்பயணம் செய்ய வைத்ததில் தான் நாவலின் சுவாரசியமே அடங்கியுள்ளது. கிச்சி தாராவை தேடிப் போகும் காட்சிகளில் எதிர்ப்பாராத திருப்பம் வியக்க வைத்தது. தற்காலத்தோடு கடந்த காலத்தையும் அதே பாத்திரத்தைக் கொண்டு பிணைத்து பிரித்த விதம் சிறப்பு. மிக கவனமாக கையால வேண்டிய யுக்திகள் அவை.

Continue reading

யோகமும் சௌந்தரும்

சௌந்தர்

சௌந்தரை எனக்கு இலக்கிய வாசகராகவே அறிமுகம். ‘அசடன்’ நாவல் குறித்து ஜெயமோகன் தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார். நானும் அப்போதுதான் அசடனை வாசித்து முடித்திருந்ததால் அக்கட்டுரையை உடனடியாக வாசித்தேன். ஆழமான வாசிப்பு. தான் அதை புரிந்துகொண்ட வகையில் எளிமையாக எழுதியிருந்தார். எளிமையின் மேல் எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. ஒன்றை ஆழமாகப் புரிந்துகொண்டவரால் மட்டுமே எவ்வளவு சிரமமானதையும் எளிமையாகச் சொல்லிவிட முடியும் என நம்புபவன் நான். அதேசமயம் அவர்களால் மட்டுமே தேவையானபோது அதன் உச்சமான சாத்தியங்களுக்கும் சென்றுதொட இயலும்.

Continue reading

யாவரும் பதிப்பகத்திற்கு 60,000 ரூபாய் நிதி

பெருமழையின் காரணமாக சென்னை புத்தக் கண்காட்சி அரங்கில் நீர் புகுந்து சில பதிப்பகங்களின் நூல்கள் பாதிக்கப்பட்டன. அதில் யாவரும் பதிப்பகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நட்டம் எனக் கேள்விப்பட்டேன். நேற்று யாவரும் பதிப்பகத்திற்கு மலேசிய நண்பர்கள் சார்பாக 50,000 ரூபாய் அனுப்பி வைத்தோம். (நண்பர் அனைவருமாக கொடுத்த மொத்தத் தொகை 2750) இது தவிர என் முகநூலைப் பார்த்து சிங்கையைச் சேர்ந்த மதிப்பிற்குறிய அழகிய பாண்டியன் அவர்கள் தன் சார்பாக 10,000 ரூபாய் வழங்கினார். இத்தொகை யாவரும் பதிப்பகம் அடைந்த நட்டத்தில் இருந்து ஓரளவு மீண்டுவர உதவும் என நம்புகிறேன்.

Continue reading

2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.

Continue reading