Author: வல்லினம்

வல்லினம் முகாம் 2025

முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு சாலினி வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன். இதற்கு முன்…

”விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதும் விழுமிய மீறல்களைக் கவனம் எடுத்துப் பரிசீலிப்பதும் நவீன இலக்கியம்”

உலக இலக்கிய வாசகர்கள் அறிந்து வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்களில் பெருமாள்முருகன் குறிப்பிடத்தக்கவர். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டுள்ளன. போலிஷ், ஜெர்மன், செக் போன்ற உலக மொழிகளிலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இவரது புனைவுகள் மொழியாக்கம் கண்டு வாசிக்கப்படுகின்றன. எழுத்தாளராக மட்டுமல்லாது கவிஞராகவும் ஆய்வறிஞராகவும் அறியப்படும் பெருமாள்முருகனிடம்…

இளையோர் குறுநாவல் போட்டி – நாள் நீட்டிப்பு

வல்லினம் ஏற்பாடு செய்த குறுநாவல் போட்டியின் கால அளவு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. பல கல்லூரி மாணவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நவம்பர் 30க்குள் உங்கள் குறுநாவலை novelletecontest@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் போட்டி தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் +601123822472 எனும் புலன…

Aside

இவ்வாண்டு வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மலேசியக் கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுப்படுத்தியதோடு சிறுவர் இலக்கியம் மலேசிய நாட்டில் வளர பங்காற்றியவர் பி. எம். மூர்த்தி அவர்கள். எஸ்.பி.எம் இலக்கிய வளர்ச்சிக்கும் மலேசிய இளையோர் சிறுகதை எழுச்சிக்கும் பி.எம்.மூர்த்தியின் பங்களிப்பு முதன்மையானது. அவர் வாழ்நாள் சேவையைப் போற்றி இவ்விருது வழங்கப்படுகிறது. விருது தொகையாக RM 5000 ரிங்கிட் வழங்கப்படுவதுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட விருது கேடயமும் வழங்கப்படும்.

“மலேசிய நாட்டுப்புறப் பாடல் மரபின் தொடர்ச்சி விடுபட்டு விட்டது” – கோகுலராஜன்

மலேசியத் திரைத்துறையில் இயங்கி வருபவர் கோகுலராஜன். இளம் இயக்குநர், தொகுப்பாளர், நடிகர் எனும் பரிணாமங்களைக் கொண்டவர். இவர் இயக்கிய ‘Bird on the 27th floor’ எனும் குறும்படம் சீ ஷோர்ஸ் திரைப்பட விழாவில் (Seashores Film Festival)  திரையிடப்பட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் இயக்கிய ‘வைரஸ் மைரஸ்’ குறும்படம் குமான் குறும்படப் போட்டியிலும் வென்று…

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது 2025க்கான வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மலேசியக் கல்விச் சூழலில் தமிழிலக்கியப் பாடம் நிலைத்திருப்பதற்கும் அதில் மலேசிய நாவல் இடம்பெறுவதற்கும் வித்திட்டவர் பி. எம். மூர்த்தி. ஆரம்பப்பள்ளி அடைவுநிலை தேர்வுத்தாள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைத்து அதில் படைப்பிலக்கியம் எனும் புதிய பகுதியை உருவாக்கியவர்.   படைப்பிலக்கியப்…

இளையோர் குறுநாவல் போட்டி

வல்லினம் இலக்கியக் குழு இளையோர் குறுநாவல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளையோரின் வாழ்வைப் புனைவுகள் வழியாகப் பதிவு செய்வதும் அவர்களிடையே எழுத்தார்வத்தை உருவாக்குவதும் இந்தப் போட்டி நடத்தப்படுவதின் அடிப்படை நோக்கங்களாகும். இந்தக் குறுநாவல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை: முதல் பரிசு: RM 1500.00 இரண்டாம் பரிசு: RM 1000.00 மூன்றாம்…

“சினிமா துறை என்பதை சமுராய் வீரனின் பாதை அல்லது துறவியின் பாதை என்று சொல்வேன்,” – சஞ்சய் பெருமாள்

இயக்குநர் சஞ்சய் பெருமாள் மலேசியத் திரையுலகச் சூழலில் ‘ஜகாட்’ படத்தின் வழி நன்கு அறியப்பட்டவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 28வது மலேசியத் தேசியத் திரைப்பட விருது விழாவில் ‘ஜகாட்’ படம் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றதோடு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதையும் சஞ்சய்க்குப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய ‘ப்ளூஸ்’, ‘மாச்சாய்’ ஆகிய…

முக்கோண கதைகள்/ Triangle of Tales

அறிவிப்பு காணொளி வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. இந்த விழாவுக்கு வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தலைமை தாங்குகிறார். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் தோற்றுனரான அவர் வல்லினம் உள்ளிட்ட…

நூல்களின் முன்பதிவும் நிதி சேகரிப்புத் திட்டமும்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் மொழிபெயர்ப்புக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. மலாய் சீன சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதோடு மலேசிய தமிழ் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பதுடன் அவற்றை ஒட்டிய கலந்துரையாடல்களை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் ‘தமிழாசியா’ பதிப்பகமும் இணை…

“எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே” – பாவண்ணன்

பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள்எனஇடையறாதுதமதுபங்களிப்பைஅளித்துவருகிறார். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர். மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது,  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு…

“சலனமின்மையை எதிர்வினையாகப் போர்த்தியிருக்கும் மனத்தைப் புனைவுகளில் நிகழ்த்திப் பார்க்கிறேன்” – அரவின் குமார்

அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில்  சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். செறிவான மொழி, தர்க்கப்பூர்வமான பார்வை, கச்சிதமான மொழிநடை, கற்பனையாற்றல் போன்ற கூறுகள் இவரின் எழுத்தின் பலம். இவ்வருடத்திற்கான வல்லினம் இளம் தலைமுறையினர் விருது அரவின் குமார்…

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதினை எழுத்தாளர் அரவின் குமார் பெறுகிறார். இரண்டாயிரம் ரிங்கிட் தொகையோடு நினைவுக்கோப்பையும் இந்த விருதில் வழங்கப்படும். இந்த விருது விழாவினை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் குறித்த ஓர் அரங்கு இடம்பெறுகிறது. இதில், ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி…

வல்லினம் இலக்கிய முகாம் 30 நவம்பர் – 1 டிசம்பர்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலக்கிய முகாமை ஜா. ராஜகோபாலன் வழிநடத்துகிறார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் அறியப்பட்டவர். சங்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நவீன கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த இலக்கிய முகாமில் எவ்வாறு ஒரு படைப்பை வாசித்து ஆழமாக அறிவது…

எஸ்.எம். ஷாகீரின் விஷ்ணுபுரம் விருது விழா உரை

இலக்கியம், மெய்மை மற்றும் முடிவிலி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவர்தம் நண்பர்களால் அவரின் முதன்மையான நாவலின் பெயரால் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். வழமையான யதார்த்தவாத தமிழ் நாவல்களிலிருந்து வேறுபட்டு மீ யதார்த்தவாதத்தையும் தத்துவத்தையும் விஷ்ணுபுரம் நாவல் பேசியதாக அறிகிறேன். நவீனத்துவ இலக்கியத்துக்குப் புது பரிமாணம் அளிக்கும் வகையில் இந்திய…