Author: வல்லினம்

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது – 2024

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது 2020இல் தொடங்கப்பட்டது. மலேசியாவில் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்புலகை விரிவான தளத்தில் அறிமுகம் செய்யவும் இந்த விருது உருவாக்கப்பட்டது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் விருது கோப்பையும் வழங்கப்படுகிறது. 2024க்கான வல்லினம் இளம் எழுத்தாளர் விருது அரவின் குமாருக்கு வழங்கப்படுகிறது. அரவின் குமார் சமகால மலேசியத் தமிழ்…

ஜார்ச் டவுன் இலக்கிய விழா 2023: பதிவும் காணொளிகளும்

2023ஆம் ஆண்டின் ஜார்ச் டவுன் இலக்கிய விழா நவம்பர் 23 முதல் 26 வரை பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ச் டவுன் நகரில் நடைபெற்றது. இந்த இலக்கிய விழாவில் இரண்டாவது ஆண்டாக தமிழ் நிகழ்ச்சிகளுக்கு இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வல்லினம் இந்த விழாவின் இணை இயக்கமாக செயல்படுவதால் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாசகர்களுக்கான தங்கும் இடங்களையும்…

எஸ்.எம். ஷாகீரின் விஷ்ணுபுரம் விருது விழா உரை

இலக்கியம், மெய்மை மற்றும் முடிவிலி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 2010ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவர்தம் நண்பர்களால் அவரின் முதன்மையான நாவலின் பெயரால் தொடங்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். வழமையான யதார்த்தவாத தமிழ் நாவல்களிலிருந்து வேறுபட்டு மீ யதார்த்தவாதத்தையும் தத்துவத்தையும் விஷ்ணுபுரம் நாவல் பேசியதாக அறிகிறேன். நவீனத்துவ இலக்கியத்துக்குப் புது பரிமாணம் அளிக்கும் வகையில் இந்திய…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…

மலேசியாவில் சௌந்தரின் யோகப் பயிற்சி

சௌந்தர் அவர்கள் தமிழகத்தில் முதன்மையான யோகப்பயிற்சியாளர்களில் ஒருவர். மரபார்ந்த யோகப் பயிற்சிகளை தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார்.  1950ல்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு முழுமையான யோக கல்வியை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். சௌந்தர் அந்த குரு மரபில் வந்தவர். எனவே அதே அளவு தீவிரத்துடன் அவரின்…

“யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்!” யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளி. இன்னும் அதிகமாகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர வேண்டிய முதன்மையான படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், குறுங்கதைகள், மொழிப்பெயர்ப்பு என இடையறாது இயங்கும் யுவன் சந்திரசேகர் அவர்கள், நவம்பர் மாதம் மலேசியாவில் நடக்கும் GTLF (ஜார்ட் டவுன் இலக்கிய விழா) நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை…

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023 : தமிழ் நிகழ்ச்சிகளின் விபரம்

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) இம்மாதம் (நவம்பர்) 23-26 ஆகிய நான்கு நாட்கள் பினாங்கு ஜார்ச் டவுனில் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் பகுதிக்கு எழுத்தாளர் ம. நவீன் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் வல்லினம் இணை இயக்கமாகச் செயல்படுகிறது. நவம்பர் 25 – 26 ஆகிய இரு நாட்கள் தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றின் விபரங்கள் பின்வருமாறு:…

தமிழாசியா இலக்கியக் கலந்துரையாடல்

தமிழாசியா மாதம் ஒருமுறை இலக்கியச் சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. சந்திப்பில் கலந்துகொள்பவர்கள் வழங்கப்படும் சிறுகதைகளை வாசித்திருப்பது அவசியம். கலந்துரையாடலில் அனைவருமே தாங்கள் வாசிப்பு புரிதல் குறித்து கருத்தைப் பதிவு செய்தல் அவசியம். இம்மாதம் கி. ராஜநாராயணன் சிறுகதைகள் குறித்த உரையாடல் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் 0163194522 என்ற எண்ணில் ம.நவீனைத் தொடர்புக்கொள்ளலாம்.

GTLF & வல்லினம் இலக்கிய விழா

GTLF எனப்படும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா இவ்வாண்டும் அக்குழுவினரால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு இவ்வாண்டும் இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழ் பிரிவுக்கு எழுத்தாளர்   ம. நவீனை GTLF அமைப்பு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும் வல்லினத்தை…

“கடவுளாக வாழ்வது சுலபம்!” சனிரா

அண்மையில் மேற்கொண்ட நேபாளப் பயணத்தில் சனிரா பஜ்ராச்சார்யா (chanira bajracharya) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனிரா முன்னாள் குமாரி தேவி. ஏப்ரல் 2001இல் பதான் தர்பார் சதுக்கத்தின் வாழும் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவருக்குப் பத்து வயது. 2011ல் தன் பதினைந்து வயதில் பருவமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எளிய பெண்ணாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து…

“விளம்பர வெளிச்சம் பட்டவர்களை மட்டுமே எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் தமிழகத்தில் கொண்டாடும் போக்கு உள்ளது!” மு. இளங்கோவன்

முனைவர் மு. இளங்கோவன் தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். இளம் வயதிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் ஏடுகள் அறிமுகம் ஆனதால், தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்வழி பன்முக ஆய்வாளராக உருமாறி நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை, மறந்துபோன தமிழறிஞர்களின் வரலாறு, ஆவணப்படம்,…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா 2023

வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. எழுத்தாளர் கி.…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதை போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்தது. அதே சமயம் யாழ் பதிப்பகம் மூலம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை போட்டி ஒன்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டது. எழுத்தாளர் ம.நவீன், அ.பாண்டியன்,…

ந. பாலபாஸ்கரன் ஆவணப்படம்

இது 2017இல் இயக்கிய ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம். தொண்டை புற்றின் காரணமாக முற்றிலும் குரலை இழந்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இயக்க எங்களுக்கு ஒத்துழைத்தார் பாலபாஸ்கரன். சிங்கை வாசகர் வட்ட ஆதரவும் எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்ததால் இந்த ஆவணப்படம் சாத்தியமானது. எழுத்தாளர் லதாவும் இந்த ஆவணப்படத்துக்கு பங்களித்தார். பாலபாஸ்கரன் எழுத்தில் வழங்கிய…

வல்லினம் 150 

வல்லினம் கடந்த காலங்களில் இலக்கியம், பண்பாடு, வரலாறு, ஆய்வு, நேர்காணல் போன்றவற்றை உள்ளடக்கிய களஞ்சியங்களை வெளியிட்டுள்ளது. 2010இல் ‘மலேசிய சிங்கப்பூர் 2010’ என்ற தொகுப்பும் 2017இல் ‘வல்லினம் 100’ என்ற தொகுப்பும் வல்லினம் வெளியீட்டில் வெளிவந்தன.  இதனைத் தொடர்ந்து ‘வல்லினம் 150’ எனும் பெருந்தொகுப்பு வல்லினம் தயாரிப்பில் வெளிவர உள்ளது. இந்தத் தொகுப்பில் மலேசியா மற்றும்…