Category: புத்தகப்பார்வை

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: நூல் விமர்சனம்

உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள். நிகழ்தலும்…

காவி ஆடையிலிருந்து ஒரு புதுக் குரல்

இந்நூலிலுள்ள கட்டுரைகளை எச்சரிக்கை உணர்வுடன் வாசித்தேன். ஒரு நூலைப் படிக்கும் போது எச்சரிக்கை உணர்வுடன் வாசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. சுவாமியின் காவி ஆடை அந்த உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. நழுவும் தழுவல்கள், வாழ்க்கைக்கு வாழ்த்துகள், வீழ்வேன் என நினைத்தாயோ ஆகிய கட்டுரைகளில் மிகவும் முக்கியமான விசயங்கள் குறித்து எழுதியிருக்கிறார். குறிப்பாக அன்பு, உறவு பற்றிய…

கோ. புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ – கோழைகளின் விதி அடிமை வாழ்வே!

சில ஆண்டுகளாக மலேசிய தமிழ் இலக்கியத்தில் நீடித்து வரும் நாவல் வரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களின் ‘செலாஞ்சார் அம்பாட்’. அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் தொன்னூறு விழுக்காடு மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. செலாஞ்சார் அம்பாட் என்னும் ஃபெல்டா நிலப்பகுதியில், போக்கிடம் அற்று ஒதுங்கிய தொழிலாளர் கும்பல் ஒன்று…

எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ – முதிரா கதைகளின் தொகுப்பு

மலேசிய நாளிதழ்களிலும் வார மாத சஞ்சிகைகளிலும் அச்சிடப்படும் சிறுகதைகள் பெரும்பாளும் எந்த சுவாரசியமும் இன்றி தட்டையாக இருப்பது இலக்கிய ஆர்வளர்கள் பலரும் அறிந்ததே. விதிவிலக்காக சில சமயங்களில் நல்ல சில படைப்புகளையும் நாம் பார்க்க நேர்கிறது. அச்சு இதழ் கதைகளின் வெத்துப் போக்கை நாம் எந்த விமர்சனமும் இன்றி கடந்து போய்விடுவது வாடிக்கை. காரணம் மீண்டும்…

ஆலின் வேரும் அருணின் அரை ஆய்வும்!

நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் இல்லை. வரலாற்றை விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளன் மட்டுமே. எழுத்தாளன் என்பதே என் முதல் அடையாளம். எனக்குள் நான் ஆழத்தின் உணரும் அடையாளம் அது. அவ்வடையாளத்துக்கான உழைப்பாக நான் கருதுவது வாசிப்பை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு ஓரளவு வரலாற்று அறிவும் இருக்க வேண்டும் என்பதில் பிடிப்பு உள்ளவன் நான். வரலாற்றின்…

கவிதையும் கவிதையல்லாததும் : அன்று போல் அன்று

தன்னைப் புரட்டிப் போட்ட வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்கு, அது தந்த இன்பத்தையும் வலியையும் சேர்த்தே அனுபவிப்பதற்குக் கவிஞனுக்கு இருக்கிற ஒரே வழி கவிதை எழுதுவது மட்டும்தான். அதன்வழிதான் அவன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். அதே வழியில்தான் அவன் மரணத்தை நோக்கியும் செல்கிறான். நாம் கடந்து வந்த வாழ்வில் கடந்து போன நிகழ்வுகள் ஏதோ ஒரு கணத்தில்…

விரலிடுக்கில் சிக்கும் வார்த்தைகள் – அ.வெண்ணிலாவின் கவிதைகள்

எல்லைகளற்று வரைமுறைகளற்று நீண்டு விரிந்திருக்கும் சிந்தனையையும் மனதையும் போல் கவிதையும் தனது சிறகை எல்லைகளற்று விரித்தபடியே இருக்கிறது. தனக்கான வெளியை கவிதையே கட்டமைக்கிறது. அந்த வெளியைத் தகர்த்து புது புது வெளிகளையும் தொடர்ந்து கட்டமைக்கும் பணியையும் கவிதை செய்கின்றது. வெறும் அழகியலையும் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் மேல்பூச்சுகளோடு பேசி வந்த கவிதைகள் இன்று கட்டுகள் உடைத்து தன்மொழியில்…

ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை…

வெறி நாய்களுடன் விளையாடுதல் : குழந்தை மனமும் மனிதமும்

ம.நவீனின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பத்து ஆண்டுகளுக்கு மேல் நவீனின் கவிதைகளுடன் எனக்கு பரிச்சயம் இருக்கிறது. தொடர்ந்து நான் கவிதைகளோடு பயணிப்பதற்கு நவீனும் நவீனுடைய கவிதைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நான் எப்போதும் உணர்ந்தே வந்திருக்கிறேன். அந்த வகையில் நவீனின் நட்புக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொண்டு இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்த…

கே.பாலமுருகன் கவிதைகள்: நசுக்கப்பட்டவர்களின் அழகியல்.

நாவல், சிறுகதை, கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகளை விமர்சிக்கும் அதே பாணியில் கவிதையையும் அணுக முடியும் என்பது எனக்கு சரியாக படவில்லை. காரணம் சிறந்த கவிதைகள் யாவுமே பன்முகத்தன்மை கொண்டனவாகவே உள்ளன. இதன் காரணமாகவே நமது பண்டை கவிதைகளும் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புது விளக்கங்களை தந்த வண்ணம் உள்ளன. தமிழ் இலக்கிய மரபிலும் கவிதைகளுக்கு…

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்: ஒரு பார்வை

ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே  அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து,  உணர்ச்சிகளால்  ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில்  ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட…

நான்கு கவிதை நூலும் நானும்

அண்மையில் நான்கு கவிதை நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்கக்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால்…

தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்.

“அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..” -மலர்வதியின் முன்னுரையிலிருந்து மக்களின் மொழியில்…

சொற்களைக் கொல்லும் கலையானது…

யார் அந்த மாயா? ஏன் அவள் மட்டும் இந்த உலகின் ஒழுங்கை எந்த முன்னறிவிப்புமின்றி களைத்துப் போடுகிறாள்? அவளுக்கு மட்டும் உலகம் ஏன் எந்தக் கொள்கையும் எந்த இலட்சியங்களும் இல்லாத ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடுகின்றது? நவீனின் கவிதைகளில் வரும் ஒரு மாயாவாக மாறிவிடுவதைவிட இந்த உலகம் செய்த அனைத்துக் கவிதை கொலைகளையும் வேறெப்படியும் மறக்கவோ…

கே.பாலமுருகனின் ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ கவிதை நூலை முன்வைத்து…

இலக்கியம் என்பது பிற கலை வடிவங்களைப் போன்றே படைப்பாளியின் உள கொந்தளிப்பையும் அழகியல் ஈர்ப்பையும் சாரமாக கொண்ட வெளிப்பாடாகும். ஓவியம் சிற்பம் போன்ற கலைகளுக்கு நிறமும் வடிவமும் ஊடகமாக இருப்பது போல் இலக்கியத்தின் ஊடகம் மொழியே. அவ்வகையில் ஒரு மொழியின் உச்சபச்ச திறனையும் மேன்மையையும் கொண்டு செயல்படுவது கவிதைத் துறையே. கவிதையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும்…