
பெரும்பாலோரின் பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே நகர வாழ் மக்கள் இவர்களை வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன். அவர்களுடனான தொடர்பை மீட்டெடுக்கும் போக்கில் கேமரன் மலைப் பகுதியில் (பகாங்) வாழும் பழங்குடியினர் கிராமமான ‘கம்போங் பன்கான்’ வாழிடத்திற்கு செல்லும்…







