Category: கட்டுரை

ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்

‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது. கொஞ்சம் கூட இலக்கிய அறிவு இல்லாத எழுத்தாளர் சங்க…

ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா – ம.மதிவண்ணன் கவிதைகள்

இருவருணாசிரமக் கோட்டையை நாய் போலக் காத்துக் கிடப்பதோடு பொச்சிக்காப்பு கொண்ட சாதிமானுக்கு அல்லக்கையாகவும் அன்னார் தம் இல்லத்தில் தாது புஷ்டி லேகியமாகவும் குல மகளிர் பொற்புக்குப் பூட்டருளியும் அருள் பாலிப்பான் எச்சிக்கலையும் எரப்பாளியுமான உன் கடவுள்…    – ம.மதிவண்ணன்   நான் அண்மையில் வாசித்த கவிதைத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க தொகுப்பு ம. மதிவண்ணனின் ஏதிலியைத் தொடர்ந்து…

Plagiarism: அறிவுத் திருட்டின் சில மேற்கோள்கள்

அறிவுத் திருட்டு (plagiarism) எனும் சொல் எழுத்துத் துறை சார்ந்த திருட்டுகளை சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இவ்வாறு சொன்னவுடன் எழுத்துக்களைத் திருட முடியுமா என்ற கேள்வி எழலாம். எழுத்து வடிவம்பெறும் ஒவ்வொன்றும் ஒருவரின் அனுபவம், கற்றல் பேறு, சிந்தனையாற்றல் ஆகியவற்றின் வழியாகத் தோன்றிய அறிவுசார்ந்த சொத்தாகும். அதனை பிறர் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தும்போது திருட்டாகவே கருதப்படுகிறது.…

வருங்கால வரண்ட சமுதாயம்

1988-ஆம் ஆண்டு. ஏதோ வரலாற்று கட்டுரை என கடந்து போய் விடாதீர்கள். கொஞ்ச வருடங்களாக நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு பழக்கத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். அப்போது எனக்கு 4 வயது. அதற்கு முன்பான வாழ்க்கை ஒரு மங்கலான நிழற்படம் மாதிரிதான் நினைவில் இருக்கிறது. 4 வயதிற்குப் பிறகான நினைவுகள் மிகப் பசுமையாக இருக்கின்றன. அந்த…

கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்

நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது. என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.…

ஆண்குறி சுடும் போட்டி

எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வசதி உண்டு. அத்தனை நீளமும் கைப்பிடியளவு அமைந்திருக்கவேண்டும். இல்லையேல் விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது. விளையாட்டு என்பதே சுவாரஸ்யம் மிகுந்ததுதானே. இப்போது உடம்பை குறைக்கவும் வயதை மறைக்கவும் ஓடிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நினைவுகளில் சூழ்ந்திருப்பது அந்த போட்டி விளையாட்டுதான். இது குழு முறை விளையாட்டு. குழுவாக செயல்படவேண்டும். ஆண்களும் பெண்களும்…

உஸ்தாத் சொன்னது தப்புதான்… ஆனா…

வர வர ஒன்னுமே புரிய மாட்டேங்குது நைனா. எல்லாமே முன்னுக்குப் பின்ன முரணா கெடக்குது. அண்மையில உஸ்தாத் ஷாகுல் ஹமிட் (Uztaz Shahul Hamid) இஸ்லாமியர்களோட கட்டுப்பாடுகள் பற்றி பேசியிருக்காப்படி. அதுல ஹலால் உணவுகள் என இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு அழகப்பாஸ் மற்றும் பாபாஸ் மசாலாத்தூள்களை வாங்குவதை விமர்சித்து ஏன் அவர்கள் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் மசாலா தூள்களை வாங்குவதில்லை…

விவாகரத்து (திரைப்படம்): குடும்ப அமைப்பின் ஒற்றை குரல்

‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி…

இன்னும் இறந்து போகாத நீ… கவிதையும் கவித்துவமும்…

எப்படி எழுத வேண்டும் என்று நான் கூறவில்லை உங்கள் வரிகளில் எந்த விபரீதமும் நிகழ்வதில்லை வெற்று வெளிகளில் உலவும் மோனப் புத்தர்கள் உலகம் எக்கேடாவது போகட்டும் காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கிறேன் எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள் உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின் தொலைதூர எதிரொலி கூட கேட்கவில்லை வார்த்தைகளின் சப்தங்கள் அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன. எழுதுங்கள்…

இதான் மனநோயா அடேங்கப்படிங்கப்பா

நெடுஞ்சாலையில் நண்பருடன் காரில் போய்க்கொண்டிருந்தேன். தூரத்தில் மேம்பாலம் தெரிந்தது. நடந்து சாலையை கடக்க போடப்பட்டிருந்த மேம்பாலத்தில் மோட்டார்களில் பலர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். இதனை கண்ட நண்பருக்கு கடுங்கோபம். “எதை எதுக்கு பயன்படுத்தனுமோ அதை அதுக்குத்தான் பயன்படுத்தனும். மனுசனுங்க நடக்கறதுக்கு மேம்பாலம் கட்டினா இதுங்களை பாரேன். இந்த பன்றிங்க மேம்பாலத்துல போய் மோட்டார்ல போகுதுங்க” என…

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் – உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னை. ஜூலை 9, 2014 இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்: 1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை, 2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை, 3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு, 4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித்…

பதிப்புரிமை: சில கேள்விகள் சில விளக்கங்கள்

Copyright – தமிழில் பதிப்புரிமை என்று அழைக்கப்படும் சொல் பரவலாக அனைவராலும் குறிப்பாக பதிப்புத்துறையை சார்ந்தவர்களால் அதிகம் உச்சரிக்கபடும் சொல்லாக இருக்கிறது. பெரும்பாலும் copyright தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் அவ்வப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அரங்கிலும் நடந்த வண்ணமாகவே இருந்தாலும்கூட இது தொடர்பான புரிதல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக, பெரும்பான்மையானோர் பதிப்புரிமையை…

தாயகம் பெயர்தல் : வாழ்வும் வலியும்

(மலேசியத் தமிழ் இலக்கியத்தில் அதன் பதிவுகள்) 20,21,22 தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை   ‘இடப் பெயர்வு’ என்பது பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்த போதிலும்கூட அதில் பறவைகளுக்குச் சுதந்திரம் இருந்தது. ஏனெனில் வானம் பறவைகளுக்குப் பொதுவானதாக இருந்தது. ஆனால், நிலம் மனிதர்களுக்குப் பொதுவானதாக இருந்ததில்லை. இருந்திருந்தால் அவர்கள் ஏன் கடல்…

கருவில் வளரும் அணு ஆயுதம்

மலேசிய மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் அனுவார் ரிட்வான் ( Anwar Ridhwan). 1949 ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இவர், 1970 களில் இருந்து சிறுகதை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறுகதை தவிர சில நாவல்கள், கட்டுரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நவீன மேடை நாடகங்களில் இவரது பணி…

யஸ்மின் அமாட் : அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

யஸ்மின் அமாட் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக இருந்து, அவர்களின் மனத்தில் வெறுப்பையும் அதே சமயம் புதிய இரசனையையும் கொண்டு சேர்த்த திரைப்பட இயக்குனர். ‘தீவிர மதச் சார்புடைய மக்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் மலேசிய மக்களின் மனத்தை ஆழமாகத் தொட்டவர்’ என ஸ்டார் நாளிதழ் ஒருமுறை செய்தி வெளியிட்டிருந்தது. மத அடிப்படைவாதிகள் யஸ்மின் அமாட்டுக்கு…