என் மலாய் சிறுகதை நூல் வெளியீடு

நூலை ஷோப்பியில் வாங்க: https://my.shp.ee/1vFtmrs

நேற்று (பிப்ரவரி 1) எனது முதல் மலாய் சிறுகதை தொகுப்பான ‘Pita Suara Mona Fandey’ மாற்று புத்தகக் கண்காட்சியில் வெளியீடு கண்டது. இந்தக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை சென்ட்ரல் மார்க்கெட்டில் (Central Market) நடைபெறுகிறது.

Continue reading

அ. ரெங்கசாமிக்கு அஞ்சலி

ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது.

“அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 13

காலையிலேயே மேற்கு ஏரிக்குப் புறப்பட்டோம். இதைச் சீனாவின் அழகிய இதயம் எனக் குறிப்பிடுவதால் இதயத்தைக் காண ஆவலாக இருந்தது. இயற்கை அழகு, கலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால் கவனம் பெற்ற ஏரி இது.

அஸ்ரின் அங்குள்ள வாடகை வண்டி பிடிக்கும் செயலியைத் தறவிரக்கம் செய்திருந்ததால் காலை 9 மணிக்கெல்லாம் அவ்விடத்தை அடைந்தோம். காலைக் காற்று புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 12

காப்பி இதமான இருந்தது. நடுங்கி உதறச் செய்த குளிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. பால்கனிக்குச் செல்லும் தைரியம் எழவில்லை. முன்னறைக்குச் சென்று சாய்ந்து அமர்ந்தேன். தூரமாகக் கிடந்த சிவப்பு நிற அட்டை பயமுறுத்தியது. அதில் ‘சிப்’ இருக்கலாம் என விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் ‘இருக்கலாமோ’ என இப்போது தோன்றியது. அறையைச் சுத்தம் செய்யும் கிழவி ஒரு விசையை அழுத்தி நான் யார் என உறுதிப்படுத்திக்கொண்டதும் அமரும் இடம் தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் என் இருப்பை ஏற்பாட்டுக்குழு உறுதி செய்துகொண்டதும் யாரோ எந்த நேரமும் என்னை உற்றுப் பார்ப்பதுபோன்ற உணர்வை உண்டாக்கியது. ஒட்டுமொத்தசத சீனாவும் ஏதோ ஒரு பிரமாண்ட கண்ணினால் பார்க்கப்பட்டுக்கொண்டே இருக்கிறதோ எனத் தோன்றியது.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 11

எதிர்பார்த்ததைவிட இரவு குளிர்ந்தது. கையுறையால் விரல்களில் ஏற்படும் குளிர்வலியில் இருந்து தப்ப முடிந்தது. நாங்கள் குளித்திருக்கவில்லை. நேரத்தை விரையம் செய்ய வேண்டாமென குளிராடையை உடுத்திக்கொண்டு அவசரமாக வெளியேறி இருந்தோம். அந்த அவசரத்தில் எங்களிடம் கொடுத்த சிவப்பு நிற அட்டையும் உடன் வந்தது. எங்குச் சென்றாலும் அந்த அட்டையை அணியச் சொன்னது நினைவுக்கு வந்தது. கழுத்தில் இருந்ததை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.

Continue reading

2024: காற்றும் புனலும் கடலுமே நான்

இன்னொரு புதிய ஆண்டைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. புதிய ஆண்டுதான் ஒருவருடத்தில் நான் கொண்டாடும் தினம்; எனக்கான தினம். கடந்து வந்த ஆண்டை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளேன் எனும் நிறைவும் புதிய ஆண்டை எவ்வாறு கையாளப்போகிறேன் என்ற ஆர்வமும் ஒருங்கே இத்தினத்தை உற்சாகப்படுத்தும். அந்த உற்சாகத்துடன் கடந்து வந்த ஆண்டின் முக்கியத் தருணங்களைத் தொகுத்துப் பார்ப்பது வழக்கம். அதன் வழியாகவே புதிய ஆண்டின் போக்கையும் ஓரளவு வடிவமைக்க முடியும்.

ஒவ்வோர் ஆண்டும் இப்படி எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் ‘உங்கள் வாழ்வில் துன்பமே இல்லையா?’ என்பார்கள். எல்லார் வாழ்விலும் துன்பங்கள் உண்டு. முதலாவது, உலகியல் சார்ந்த அடைவுகளையும் இழப்புகளையும் நான் இங்குப் பதிவிடுவதில்லை. இரண்டாவது, உற்சாகமும் செயலூக்கமுமே எனது வழி. அங்குச் சோர்வுக்கும் தன்னிரத்திற்கும் இடமே இல்லை.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 10

‘லியாங்ஸு பண்பாட்டுக் கருத்தரங்கு’ எனும் தலைப்பில் நடைபெற்ற அனைத்துலகச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டபோதே அதன் தலைப்பில் ஈர்க்கப்பட்டு லியாங்ஸு பண்பாடு குறித்து ஆராயத் தொடங்கியிருந்தேன். மிகக்குறைவாகவே தமிழில் அதுகுறித்து எழுதப்பட்டிருந்தது.

உலகின் தொன்மையான பண்பாடுகள் குறித்து பள்ளிக் காலத்தில் இருந்தே படித்திருப்போம். அவற்றை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 9

காலையில் எந்தப் பதற்றமும் இல்லை. நிதானமாக எழுந்து குளித்துவிட்டு உணவுண்ணச் சென்றேன். விருப்பமான உணவுகளைச் சாப்பிட்டேன். முக்கியமாக வாத்துக்கறி. நான் சிறுவனாக இருந்தபோதிருந்தே வாத்துக்கறி சாப்பிட்டு வருகிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊரான லூனாஸில் வாத்துக்கறி மிகவும் பிரபலம். கோழியைவிட சற்று கடினமாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பிடிக்கும்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 8

மதியம் விட்டதை இரவில் பிடித்துவிட்ட திருப்தியுடன் அறைக்குத் திரும்பினேன். இனி நாளைய உரைக்குத் தயாராக வேண்டியிருந்தது. எங்கள் அரங்கில் பத்துப் பேர் பேசுவார்கள் என்றும் ஒருவருக்கு ஐந்து நிமிடம் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கில் பேச அழைப்பிதழ் போல ஒன்றைக் கொடுத்திருந்தனர். இதை மலேசியாவில் இருக்கும்போதே கொடுத்திருந்தால் பேருரைக்கே தயார் செய்திருப்பேன்.

Continue reading

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 7

அஸ்ரினுடன்

நேர்காணல் முடிந்தபின்னர் வெளியில் நின்றுகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட கருத்தரங்கு முடியும் தருவாயில் இருந்ததால் உள்ளே செல்லச் சங்கடமாக இருந்தது. வெளியே மாதிரி புத்தகம் ஒன்றை பெரிதாக வைத்திருந்தார்கள். அதில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர் தாய்மொழியில் கையொப்பம் வைத்திருந்தார்கள். நான் தமிழில் என் கையொப்பத்தை வைத்து தூர நின்று பார்த்தேன். மொத்த கையொப்பங்களில் ஒரே தமிழ்க் கையொப்பம். இன்னொரு பக்கம் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஒவ்வொருவரையாக வாசித்து சிலரை கூகுளில் தேடிப்பார்த்தேன்.

Continue reading