
நேர்காணல் முடிந்தபின்னர் வெளியில் நின்றுகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட கருத்தரங்கு முடியும் தருவாயில் இருந்ததால் உள்ளே செல்லச் சங்கடமாக இருந்தது. வெளியே மாதிரி புத்தகம் ஒன்றை பெரிதாக வைத்திருந்தார்கள். அதில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவரவர் தாய்மொழியில் கையொப்பம் வைத்திருந்தார்கள். நான் தமிழில் என் கையொப்பத்தை வைத்து தூர நின்று பார்த்தேன். மொத்த கையொப்பங்களில் ஒரே தமிழ்க் கையொப்பம். இன்னொரு பக்கம் வெளிநாட்டு எழுத்தாளர்களின் பட்டியல் கொடுத்திருந்தார்கள். ஒவ்வொருவரையாக வாசித்து சிலரை கூகுளில் தேடிப்பார்த்தேன்.
Continue reading