
எதிர்பார்த்ததைவிட இரவு குளிர்ந்தது. கையுறையால் விரல்களில் ஏற்படும் குளிர்வலியில் இருந்து தப்ப முடிந்தது. நாங்கள் குளித்திருக்கவில்லை. நேரத்தை விரையம் செய்ய வேண்டாமென குளிராடையை உடுத்திக்கொண்டு அவசரமாக வெளியேறி இருந்தோம். அந்த அவசரத்தில் எங்களிடம் கொடுத்த சிவப்பு நிற அட்டையும் உடன் வந்தது. எங்குச் சென்றாலும் அந்த அட்டையை அணியச் சொன்னது நினைவுக்கு வந்தது. கழுத்தில் இருந்ததை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.
Continue reading