Author: ம. நவீன்

லீகாட் : தீபனின் இருள் – அழகுநிலா

அழகுநிலா

சில எழுத்தாளர்களின் நாவல்களைத்தான் வெளியனாவுடன் வாசித்துவிட வேண்டுமென்று தோன்றும். எனக்கு அப்படி தோன்றும் எழுத்தாளர்களில் நவீனும் ஒருவர். நவீனின் நான்காவது நாவலான லீகாட்டை சிங்கையில் வெளியாவதற்கு முன்பே வாசித்துவிட்டேன்.

தனது முன்னுரையில் லீகாட் நாவல்தான் முதல் நாவலாக வெளிவந்திருக்க வேண்டும் என்று நவீன் குறிப்பிட்டுள்ளார். எனக்கும் அப்படியே நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. Coming off age நாவலான லீகாட் நாவலின் கதைநாயகன் தீபனையும் அவனது அக இருளையும் ஏற்கனவே சிகண்டியில் வாசித்திருப்பதால் அது என்னுள் பெரிதான பாதிப்பு எதையும் நிகழ்த்தவில்லை.

Continue reading

லீகாட்: 90களின் வாழ்க்கை – ராமசாமி நடேசன்

மிகவும் எளிமையான நடையிலும், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் ‘லீகாட்’ நாவலைப் படைத்திருப்பது சிறப்புக்குரியது. கம்பத்து சூழல், இடைநிலைப் பள்ளிச் சூழல், பட்டணச் சூழல் என மூன்று வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்தியிருப்பது நாவலுக்குச் சிறப்பான உயிரோட்டத்தை அளிக்கிறது.

Continue reading

லீகாட்: நன்றியுணர்வு – ஜி.எஸ்.தேவகுமார்

பொதுவாக பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்தப் பிறகு பள்ளிக்கு விடுப்பு எடுத்து கொள்வார்கள். சடங்கு சம்பிரதாயம் எல்லாவற்றையும் விடுப்போடு முடித்துக் கொண்டு பள்ளிக்கு வருபவர்களின் முகம் பொழிவுடன் காணப்படும். அவள் அச்சுறுத்தப்பட்டுமிருப்பாள். ஆண்களோடு பேசுவது தொடங்கி உடைகள் வரை  வீட்டுப் பெரியவர்கள் எச்சரித்து அனுப்பி வைப்பார்கள். ஆண்களுக்கு ஏன் அவ்வாறான சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தப்படவில்லை என்ற கேள்வி ஆண்களின் மனதில் எழாமல் இருக்காது. அந்த ஆழ்மனத்தின் அடக்கப்பட்ட உணர்வுகள் பேசுவது லீகாட் நாவல்.

Continue reading

லீகாட்: வாசகர்களின் சில கருத்துரைகள்

வணக்கம்.

லீகாட்டை செப்பாட்டாக (cepat) வாசித்து முடித்துவிட்டேன். மூன்று நாள்களுக்குள் வாசித்து முடிக்க உற்சாகமும் உத்வேகமும் அளித்தது ஆசிரியரின் நடை. என்னுடைய தோட்ட வாழ்க்கையையும் பள்ளிப் பட்டறிவையும் (சூழல்) ஒத்திருந்ததாலோ என்னவோ… மேலும் ஆவலைத் தூண்டி வாசிக்க வைத்தது.

Continue reading

லீகாட்: மீட்பு உதறிய இருள் – அரவின் குமார்

எழுத்தாளர் ம. நவீனின் நான்காவது நாவலான லீகாட் நாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். ஒரு நல்ல புனைவு எப்பொழுதுமே பதில்களை வழங்குவதில்லை. வாழ்க்கை, மனித உளவியல் குறித்து கேள்விகளை எழுப்பும் என்பதை அனுபவமாகவே உணர்ந்திருக்கிறேன். லீகாட் நாவலை வாசித்து முடித்ததுமே தோன்றிய கேள்வி என்பது உடல் மட்டுமே ஆன காமத்தின் எல்லைத்தான் என்ன அதற்கான மீட்புத்தான் என்ன என்பதாக இருந்தது.

Continue reading

லீகாட்: ஓர் இளம் மனத்தின் இருண்ட பாதையும் தேடலும் – கிருஷ்ணன்

ம. நவீன் எழுதிய ‘லீகாட்’ என்ற உள்ளூர் தமிழ் நாவலை வாசித்து முடித்தேன். இந்நாவல் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைக் கதையாக மட்டும் அமைந்துவிடாமல், இளையோர் குற்றச்செயல்கள், சக மாணவர்களின் அழுத்தம், உடல் மற்றும் மனரீதியான வன்முறை, தனிமை, பாலுணர்வு, தாழ்வு மனப்பான்மை, அங்கீகாரத்திற்கான ஏக்கம் போன்ற பல்வேறு உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசுகிறது.

Continue reading

லீகாட்: சமூக கருப்பு வெள்ளை இருமை அல்லாத எண்ணற்ற சாம்பல் நிறங்களின் தொகுப்பு – கி. இளம்பூரணன்

தமிழ் நவீன இலக்கியத்தில் இளம்பருவ மனவியல், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை ஆழமாகப் பதிவு செய்யும் படைப்புகள் மிகக் குறைவு. அந்த வகையில், ‘லீகாட்’ நாவல் வெறும் வளரிளம் பருவக் கதையாக இல்லாமல், ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொள்ள மேற்கொள்ளும் அகப்பயணத்தின் ஆவணமாக அமைகிறது. குறிப்பாக இடைநிலைப் பள்ளி மாணவன் ஒருவன் தனது விடலைப் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல், சமூக, உடலியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகளை மிகுந்த யதார்த்தத்துடன் பதிவு செய்கிறது.

Continue reading

லீகாட்: இரண்டு முரணுணர்வுகளின் வலைப்பின்னல் – சாலினி

இந்த மண்ணில் பிறப்பெடுத்து வாழும் எந்த உயிரும் இந்த உலகில் வாழத் தகுதியுடையதே. ஒருவனின் செயல்களைக் கொண்டு, ஒருவன் வாழத் தகுதியற்றவன் என்று நம்மால் தீர்ப்பளித்துவிட இயலாது.  அவ்வாறு இந்த மண்ணில் ஜனனம் கொண்டு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவனாகவும், ஒழுக்கமற்றவன் என அழைக்கப்படுபவனாகவும் உருமாறும் ஒருவனின் அகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பை புனைவுகள் நமக்கு அளிக்கின்றன. அவ்வகையில், ‘லீகாட்’ நாவலும் அப்படிப்பட்ட ஓர் ஆணின் அகத்தை, அவன் அகத்தில் தேங்கிக் கொண்டிருக்கும் இருளை, உளவியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Continue reading

நாளை என் பிறந்தநாள்; மேலும்…

நாளை எனக்குப் பிறந்தநாள்.

நாற்பத்து மூன்றாவது வயதின் இறுதி நாளில் நிற்கிறேன். இந்நாளில் நண்பர்களுடன் இணைந்து ‘வல்லினம் அறவாரியம்’ தொடங்கும் செய்தியைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

இந்த முயற்சியை முன்னெடுக்க முதன்மையான உந்துசக்தி திரு அருண் மகிழ்நன் அவர்கள். மே 24ஆம் திகதி அவருடனான சந்திப்பில் இது காலத்தின் தேவையெனப் புரிந்தது. திட்டம் வகுப்பது மட்டுமல்லாமல், அத்திட்டம் முழுமையடைய தமது ஆதரவை அருண் மகிழ்நன் அவர்கள் உணர்த்தியபோது எனக்கு இம்முயற்சி குறித்த ஆழமான நம்பிக்கை பிறந்தது. 

Continue reading

கடிதங்கள் (அற்புதம்)

அற்புதம் என்றே தலைப்பு வைத்துவிட்டதால், வேறு எதுவும் சொல்லமுடியாது 😁 புனைவு எழுத்தாளரை அமெரிக்கா அழைத்துவந்தால் இப்படித்தான் நம்மையே பாத்திரங்களாக மாற்றி அழகு பார்ப்பார்கள் போலும். மானுடத்தின் சிறப்பைச் சொல்லும் இக்கதை அற்புதம்!

சௌந்தர், ஆஸ்டின்

Continue reading