நண்பர்கள் அறிந்ததுதான், புத்தாண்டுதான் நான் கொண்டாடும் முதன்மையான தினம். எனக்குத் தமிழ்ப் புத்தாண்டு இந்துப் புத்தாண்டு என எதுவும் இல்லை. அதனால் அது குறித்த குழப்பங்களும் இல்லை. பிற பண்டிகைகளும் அப்படித்தான். தீபாவளி, பொங்கலுக்கு விடுப்புக் கிடைப்பதால் அந்நாட்களைக் குடும்பத்துடன் கழிக்கிறேன். சுவையாகச் சமைத்து வைத்தால் சாப்பிடுகிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக என்னை அச்சூழலுக்கு ஏற்ப ஓரிரு நாட்கள் மாற்றி வைத்துக்கொள்கிறேன். மற்றபடி ஒரு வருடத்தில் நாள் முழுவதும் பண்டிகை எனும் குதூகலத்தில் இருப்பது வருடத்தின் முதல் தினத்தில் மட்டும்தான்.
Continue readingதிறந்தே கிடக்கும் டைரி
2024: காற்றும் புனலும் கடலுமே நான்

இன்னொரு புதிய ஆண்டைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. புதிய ஆண்டுதான் ஒருவருடத்தில் நான் கொண்டாடும் தினம்; எனக்கான தினம். கடந்து வந்த ஆண்டை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக்கொண்டுள்ளேன் எனும் நிறைவும் புதிய ஆண்டை எவ்வாறு கையாளப்போகிறேன் என்ற ஆர்வமும் ஒருங்கே இத்தினத்தை உற்சாகப்படுத்தும். அந்த உற்சாகத்துடன் கடந்து வந்த ஆண்டின் முக்கியத் தருணங்களைத் தொகுத்துப் பார்ப்பது வழக்கம். அதன் வழியாகவே புதிய ஆண்டின் போக்கையும் ஓரளவு வடிவமைக்க முடியும்.
ஒவ்வோர் ஆண்டும் இப்படி எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் ‘உங்கள் வாழ்வில் துன்பமே இல்லையா?’ என்பார்கள். எல்லார் வாழ்விலும் துன்பங்கள் உண்டு. முதலாவது, உலகியல் சார்ந்த அடைவுகளையும் இழப்புகளையும் நான் இங்குப் பதிவிடுவதில்லை. இரண்டாவது, உற்சாகமும் செயலூக்கமுமே எனது வழி. அங்குச் சோர்வுக்கும் தன்னிரத்திற்கும் இடமே இல்லை.
Continue readingமிருகம்: கடிதங்கள் 3

ம. நவீன் சார் அவர்களுக்கு,
‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.
Continue readingசிறுகதைகளின் ஆன்மாவை அறிதல்- 2

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை எனது தளத்தில் பதிவேற்றியப் பிறகு வாசகர்களிடமிருந்தும் சக நண்பர்களிடமிருந்தும் பல்வேறுவகையான கேள்விகளை எதிர்க்கொண்டேன். அதில் முதன்மையான கேள்வி ‘ஏன் இந்த அங்கத்திற்குச் சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள்? சிறுகதையின் நுட்பங்களை அறிதல் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்பதாக இருந்தது.
Continue readingசண்முகப்பிரியா கடிதங்கள் -1

அன்பு நவீன். 2024இல் முதல் கதையென நினைக்கிறேன். வழக்கமான உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட கதை. நேரடியாக யதார்த்த பாணியில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். ஆனால் அது எளிமையல்ல. புனைவு கைவசம் வந்த கலைஞன் மொழியை கையாளும் லாவகம். தகிக்கும் இடங்களை அசால்டாக கடந்து செல்கிறீர்கள். ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை.
ராம்
Continue readingயாவரும் பதிப்பகத்திற்கு 60,000 ரூபாய் நிதி

பெருமழையின் காரணமாக சென்னை புத்தக் கண்காட்சி அரங்கில் நீர் புகுந்து சில பதிப்பகங்களின் நூல்கள் பாதிக்கப்பட்டன. அதில் யாவரும் பதிப்பகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நட்டம் எனக் கேள்விப்பட்டேன். நேற்று யாவரும் பதிப்பகத்திற்கு மலேசிய நண்பர்கள் சார்பாக 50,000 ரூபாய் அனுப்பி வைத்தோம். (நண்பர் அனைவருமாக கொடுத்த மொத்தத் தொகை 2750) இது தவிர என் முகநூலைப் பார்த்து சிங்கையைச் சேர்ந்த மதிப்பிற்குறிய அழகிய பாண்டியன் அவர்கள் தன் சார்பாக 10,000 ரூபாய் வழங்கினார். இத்தொகை யாவரும் பதிப்பகம் அடைந்த நட்டத்தில் இருந்து ஓரளவு மீண்டுவர உதவும் என நம்புகிறேன்.
Continue reading2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.
Continue readingதாராவைச் சந்தித்த கதை

ஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
நள்ளிரவினூடே ஒரு மனசிலாயோ- நோவா

எனக்கு நெருக்கமாக தான் இது உருவாகி உள்ளது… மனசிலாயோ… எனக்கு நிர்மலா அக்கா தான் நினைவுக்கு வந்தார்… முழுக்க முழுக்க ஒரு தனிமை பயணத்தில் ஆன்ம வடிக்கால் தேடும் சூழல். கேரளாவுக்கு ஏற்கனவே சென்றிருந்ததால் வரிகள் அனைத்தும் காட்சிகளாகவே விரிந்தன. கூடவே தனிமை பயணம் என்பதால் என்னுடைய பெலாகா பயண அனுபவங்களும் இணைந்து கொண்டு அனுபவ சுகத்தை விரிவாக்கின.
Continue readingயாத்திரிகர்களின் பாதை

கேரளாவிற்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதலாவதாக கண்ணூரில் (Kannur) எனது தாய் தகப்பன் வழி சொந்தங்களைப் பார்த்துவிட்டு, முத்தப்பனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து படிப்படியாக கோழிக்கோடு, பாழக்காடு, திரிசூர், ஏரணாக்குழம், கோட்டயம், ஆழப்புழா, கொல்லம் கடைசியில் திருவானந்தபுரம் என்று ஒரு மாதத்திற்கு பயணம் செய்தேன். இரண்டாம் முறை கண்ணூர் மாத்திரம். எனவே, நவீன் கண்ட கேரளாவை நானும் கண்டிருந்தேன்.
Continue reading
