மூன்றாவது பாகத்தில் ஒரு தகவலைத் தவறாகக் கொடுத்துவிட்டேன். திலகவதி ஐ.பி.எஸ் மூலம் மீண்டும் வெளியீடு கண்ட நாவல் ‘புதியதோர் உலகம்’. நான் தவறாக ‘லங்காட் நதிக்கரை’ என எழுதியிருந்தேன். தவறுக்கு மன்னிக்கவும்.
***
மூன்றாவது பாகத்தில் ஒரு தகவலைத் தவறாகக் கொடுத்துவிட்டேன். திலகவதி ஐ.பி.எஸ் மூலம் மீண்டும் வெளியீடு கண்ட நாவல் ‘புதியதோர் உலகம்’. நான் தவறாக ‘லங்காட் நதிக்கரை’ என எழுதியிருந்தேன். தவறுக்கு மன்னிக்கவும்.
***
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
அ.ரெங்கசாமியைச் சந்தித்தபோதுதான் அவர் புதிதாக ஒரு நூல் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. அப்போது உச்சத்தில் இருந்த ஈழபோர் குறித்த நிகழ்கால சம்பவங்கள் மலேசிய இளைஞர்களுக்குத் தெரிந்திருந்ததே தவிர, அதன் தொடக்கக் கட்ட வரலாறை அறியாமல் இருந்தனர். இளைஞர்கள் படித்து ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் சின்னஞ்சிறிய நூல் ஒன்றை கையெழுத்துப்பிரதியாக தானே எழுதி வைத்திருந்தார். நான் அதை நூலாக்கித் தருவதென முடிவெடுத்தேன்.
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
‘வல்லினம்’ தொடங்கியப்பின்தான் நான் ரெங்கசாமி அவர்களை முதன்முறையாகத் தொலைப்பேசியில் அழைத்தேன். வல்லினத்தில் அவரது பத்திகள் வர வேண்டும் என்றும் அது அவரது வாழ்வின் அனுபவங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்தார். மேலும்
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
ரெங்கசாமி சொன்ன வார்த்தை மனதில் ஆழ தைத்திருந்தது. மலேசியாவில் ஒருவன் எழுத எவ்வித புறத்தூண்டுதல்களும் காரணமாய் இல்லாத வரண்ட நிலையில், போட்டி அவன் இயங்க ஒரு நெம்புகோலாக அமைகின்றது. ஆனால், போட்டியில் பங்கெடுக்கும் படைப்பாளன் அதன் பரிசுக்கு மட்டுமே குறியாய் இருந்து படைப்பில் சமரசம் செய்வானேயானால் அவன் ஒரு வணிகன் மட்டுமே. நல்ல மொழியும் சிந்தனையும் கொண்ட பல எழுத்தாளர்கள் போட்டிக்காக பொதுபுத்தியிலுள்ள நன்னெறிகளை போதிப்பதை வாசித்துள்ளேன். ரெங்கசாமியின் நாவல்கள் யாரையோ மகிழ்விக்க எழுதப்பட்டதல்ல. அதில் வாழ்வும் வரலாறும் இணைந்திருந்தன. ஒரு நாவலை எழுதிவிட்டு ஒன்றும் செய்யாமல் பலவருடம் பாதுகாத்து வைக்கும் பக்குவம் அவரின் வயதுக்கு இருந்ததை அவரது அனுபவப் பகிர்வில் அறிய முடிந்தது. எனக்கு அதெல்லாம் இயலாத வயது. எதிலும் அவசரம்.
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.
மீண்டும் 2005லேயே பேரவைக் கதை போட்டியில் பொதுப்பிரிவில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருந்தது. அந்த ஆண்டின் இரண்டாவது வெற்றி. நான் முதன்முதலாக அந்த ஆண்டுதான் பேரவை கதைப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். உடன் சிவம் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவருடன்தான் மோட்டாரின் வீடு திரும்பினேன். இன்னும் நாட்டில் என்னென்ன போட்டிகள் நடக்கிறதோ அதிலெல்லாம் பங்குபெற்று வெற்றி வாகைச்சூடுவதென்ற உற்சாகம் இருவரிடத்திலும் இருந்தது. எப்படியாவது எங்கள் அடையாளத்தை மலேசிய இலக்கியத்தில் ஆழப் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாவது வெற்றியில் வேரூன்றியது.
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
ஒரு வெற்றி அடைந்தபின் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமே மறுநாள்களில் மிஞ்சியது. தொலைக்காட்சி, நாளிதழ் என பலவற்றிலும் என் படங்கள் தொடர்ந்து வந்தாலும் நான் எழுதிய நாவல் குறித்து கேட்டபவர்களைக் காணக்கிடைக்கவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் யாருக்குமே நாவல் குறித்தோ அதில் பரிசு பெறும் எழுத்தாளன் எனும் வகையரா அவர்களுடந்தான் இந்த பூமியில் வாழ்வது குறித்தோ கொஞ்சமும் கேள்விகள் இல்லை. பள்ளியில் நான் மட்டுமே ‘ஈ…’ என பார்ப்பவர்களிடமெல்லாம் பல்லைக்காட்டிக் கொண்டிருந்தேன். எனது வெற்றி குறித்து அறியாதவர்கள்மேல் கடும் கோபம் வந்தது. பின்னர், ‘அவர்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும்’ என்ற எனக்குள் எழுந்த கேள்வியே சோர்வடையவும் வைத்தது.
2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
2005 வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு காதல் தோல்வியில் மனம் மிக சோர்ந்திருந்த ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் அழுகை பொத்துக்கொண்டு வரும் எனும் முகத்தோற்றம். மருத்துவர் சண்முகசிவா அப்போதுதான் அறிமுகமாகியிருந்தார். அவசரத்துக்கு ஏதாவது பாராட்டு சொற்களைக் கேட்க வேண்டுமென்றால் அவரை அழைப்பதுண்டு. அதுதான் நான் ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டும்.
இதற்கிடையில் நயனத்திற்கு நான் அனுப்பியிருந்த கவிதையும் பிரசுரம் கண்டிருந்தது. கோ.புண்ணியவானின் சொல்லுக்குக் கிடைத்த மரியாதை அது. நயனத்திற்குச் சென்று அதன் ஆசிரியரைக் காண இந்த ஒரு கவிதை போதுமென கருதி ஓவியர் ராஜாவை அழைத்தேன். ‘நயனம்’ என்று சொன்னவுடன் ஓவியர் ராஜா சட்டென மறுத்தார். நயனம் ஆசிரியர் இராஜகுமாரனின் இலக்கிய ஆளுமையைப் பற்றி சிலாகித்துக் கூறியவர் ,அவர் தனிமையில் இருக்க விரும்புபவர் என்றும் புதியவர்களைச் சந்திக்க மாட்டார் என்றும் கூறினார். இராஜகுமாரன்தான் ‘புதுநிலவு’ என அறிந்த போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும்
ஒரு பள்ளி விடுமுறையில் கோலாலம்பூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்வில் முதல் நீண்ட பயணம் அது. கோலாலம்பூரின் மேல் பெரும்பலோர் போல் எனக்கும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கு கட்டடங்கள் பரபரப்பான வாழ்வு என எல்லாமே லுனாஸில் ஒரு கம்பத்தில் இருந்த எனக்கு ஒரு அந்நிய நாட்டின் கவர்ச்சியைக் கொடுத்தப்படி இருக்கும். இவற்றையெல்லாம் மீறி நான் கோலாலம்பூருக்குச் செல்ல வேறொரு விஷயமும் காரணமாக இருந்தது. அது பத்திரிக்கை அலுவலகம்.
ஓரளவு இதழ்களின் செயல்பாடு புரிந்தபோது கவிதை எழுதுவதில் மிகுந்த தீவிரமடையத் தொடங்கினேன். ஏறக்குறைய எல்லா பத்திரிகைகளில் படைப்புகள் வந்துவிட்டாலும் ‘நயனம்’ இதழில் எனது கவிதைகள் வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தபடியே இருந்தது.
எல்லா பத்திரிகைகள் படைப்புகளைப் பிரசுரித்தாலும் ‘நயனம்’ மட்டுமே கவிதையை மிகச் சிறப்பாகப் பிரசுரித்து வந்தது. கவிதைக்கு மிகப் பொருத்தமான படங்களோடு முழுப்பக்கத்தில் வெளிவரும் நயனம் இளம் வாசகர்களிடையே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தது. அக்காலக் கட்டத்தில் ஜாசின் தேவராஜன், பெ.ச.சூரியமூர்த்தி, பா.ராமு போன்றோரின் கவிதைகள் அதிகம் இடம்பெற்று வந்தன. பல முறை அனுப்பியும் கவிதை வெளிவராமல் இருந்த நான் கோ.புண்ணியவானின் உதவியை நாடினேன்.