பயணம்

குமாரிகள் கோட்டம் – 4

ஆரத்தி

பக்மதி நதிக்கு ஆரத்தி எடுக்கும் காட்சி எனக்கு காசியில் இருந்த தினங்களை நினைவூட்டியது. காசியில் படந்திருந்த சாம்பல் பூத்த பழமையை நதிக்கு இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த படித்துறையில் காணமுடிந்தது. காணும் இடமெல்லாம் மனித தலைகள்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 3

சாமியாருடன் நான்

மாலை ஐந்து மணிக்கு வேன் புறப்படுவதாகத் திட்டம். எதிரில் பாதையை மறைத்து நின்ற கார் ஒதுங்கிச் செல்ல  காத்திருந்ததில் 5.15 ஆனது. வழியெங்கும் சாலை நெரிசல். களைக்கப்பட்ட கோலிக் குண்டுகள் போல வாகனங்கள் நான்கு பக்கமும் உருண்டு தங்களுக்கான பாதைகளில் புகுந்தன. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். எந்த நெருக்கடியான சூழலிலும் ‘ஹாரன்’ சத்தம் வாகனங்களிலிருந்து எழவே இல்லை. மக்கள் இயல்பாகவே ஒருவகை புரிந்துணர்வுடன் செயல்பட்டனர். எரிச்சலும் பரபரப்பும் இன்னும் ஒரு தொற்றுவியாதியாக அங்குப் பரவாமல் இருந்தது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 2

மதிய உணவுக்கு ஒரு வித்தியாசமான இடத்திற்கு அழைத்துப்போக சுரேஷ் விரும்பினார். அது ‘தாமில்’ (Thamel) பகுதியில் உள்ள ஒரு சப்பாதிக்கடை. ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் நடைப்பயணம். கட்டடங்களும் கடை வரிசைகளும் சூழ்ந்திருந்த இடைவெளிகளில் நடை. சுரேஷ் பெரும்பாலும் நடக்கவில்லை. காற்று அவர் உடலைத் தள்ள அவர் பறந்துகொண்டிருந்தார். நாங்கள் அவரைத் துரத்திப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தோம்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 1

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் விமானம் இறங்கியபோது நன்கு விடிந்திருந்தது. விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. நேபாள் ஏர்லைன்ஸ் (Nepal Airlines)   ஓரளவு வசதியானது. கை கால்களை நீட்டிக்கொள்ள கொஞ்சம் கரிசனம் காட்டியது. பயணத்தினூடே சன்னல் வழியாக மலைச்சிகரங்களைக் காண முடிந்திருந்தது. முதலில் நெளிந்து படுத்திருக்கும் பெரிய உடும்புகளின் தோல்போல சாம்பல் மடிப்புகளில் மலைகள். உற்றுப் பார்த்தபோது சாம்பல் கரும்பச்சையாக மாறியது. அவற்றைக் கடந்து தொலைவில் பனி மூடிய இமைய மலைத்தொடர்கள். வெண்மையின் கம்பீரம் சிலிர்க்க வைத்தது. 

Continue reading

க்யோரா 15: பச்சைக்கல் குறியீடுகள்

தங்கா, செல்வா, ராணி ஆகியோருடன்

காலை கொஞ்சம் பரபரப்பாகவே விடிந்தது. விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணங்கள் அனைத்தும் அவ்வாறுதான் மாறிவிடுகின்றன. என்னைப் போன்ற குழப்படி ஆசாமிகளுக்கு விமானப் பயணம் இன்னும் சவாலானது.

Continue reading

க்யோரா 14: இறுதி நாள் பயணங்கள்

எண்பதுகளில் பிறந்த மலேசியக் குழந்தைகள் அனைவருக்கும் ‘Fernleaf’ பால்மாவு மூலம் நியூசிலாந்து, நன்கு அறிமுகம் இருக்கும். பசும் புல்வெளியில் மேயும் பெரிய கருப்பு மாடுகள் உடலில், உலக வரைப்படம் போன்ற வெண் வடிவங்கள் திப்பித்திப்பியாய் இருப்பதை தொலைக்காட்சி விளம்பரங்களில் நாங்கள் ஆச்சரியமாகப் பார்த்ததுண்டு. அந்த பசுமையான புல்வெளிகளில் மேயும் பசுவின் பாலை, சிறுவனாக நான் குடித்தபோது அடைந்த பரவசம் இன்று எளிதில் சென்று சேர முடியாத தொலைவில் உள்ளது. அறிவும் புரிதலும் எத்தனை சந்தோஷங்களைக் கெடுத்துவிடுகின்றன.

Continue reading

க்யோரா 13: ஹக்கா

தமிழ் விழா முடிந்தபிறகு பங்கேற்பாளர்களுக்கான விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்கு வேறு திட்டம் இருந்தது.

அன்று பெண்களுக்கான ரக்பி (Rugby) உலகக் கிண்ண விளையாட்டுப்போட்டி ஆக்லாந்து ஏடன் பார்க்கில் (Eden Park, Auckland) நடைபெற்றது. இரவு ஏழு மணிக்கு நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன என செல்வா பரபரப்பாக இருந்தார். எனக்கு எந்த விளையாட்டிலும் ஆர்வம் இருந்ததில்லை. காற்பந்து விளையாட்டு ரசிகர்கள் ஒன்றாகச் சேரும்போது நான் கூட்டத்தில் தொலைந்த சிறுவனாகிவிடுவேன்.

Continue reading

க்யோரா 12: தமிழ் மாநாடும் தமிழ்க்கல்வியும்

நியூசிலாந்து தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மாநாட்டுக்கு நவம்பர் 12 காலையிலேயே புறப்பட்டோம். வெலிங்டனில் அமைந்திருந்த Lower Hutt Events Centreல் மாநாடு நடைபெற்றது. செல்வா அவரது துணைவியார் ஆகியோருடன் நானும் காரில் சென்று இறங்கினேன். செல்வா அவர்கள் நியூசிலாந்தில் ஒரு முக்கிய பிரமுகர் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், இயக்கப் பொறுப்பாளர்கள் என அனைவரும் அவரை அறிந்து வைத்திருந்தனர். அனைவரிடமும் செல்வா என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனது ‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்டதை பெரும்பாலோரிடம் பகிர்ந்துகொண்டார். புதிய நாவலான ‘சிகண்டி’ திருநங்கைகளை மையமிட்டு எழுதப்பட்டுள்ளதைக் கூறினார். எனக்கு ஆங்கிலம் மந்தம். எனவே தொடர்ந்து உரையாடுவதற்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.

Continue reading

க்யோரா 11: கேளிக்கை இரவு

Library Bar

தங்கா தன் கைப்பேசியில் முதலில் எங்கு போகலாம் எனத் தேடினார். Library Bar எனப் பார்த்தவுடன் “இதென்ன லைப்ரரி” என திகைத்தார். ‘எனக்குத் தெரியாம எவன்டா இங்கன நூலகத்த கட்டுனது’ எனும் அதிர்ச்சியாக இருக்கலாம். அவரது அத்தனை புலன்களும் சுறுசுறுப்பாகின. கேளிக்கைகளுக்குக்கூட இந்த மனிதருக்கு நூலகம் தேவைப்படுகிறதே என அவரைப் பின் தொடர்ந்தேன்.

Continue reading

க்யோரா 10: பெருங் கடல் நீந்துவர் நீந்தார்

தங்காவுடன் சைக்கிளில் வெலிங்டனைச் சுற்றிய அனுபவம் வாழ்நாளில் மறக்க முடியாதது. மென்மழை தூறிக்கொண்டே இருந்தது. வாகனங்களின் இரைச்சலற்ற சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது. எனக்குள் உற்சாகம் ஊறிக்கொண்டே இருந்தது.

Continue reading