பயணம்

மனசலாயோ 4: பிரதமன்

Ada-Pradhaman-Creativity (படைப்பாற்றல்) மற்றும் Crafting skills (கைவினை திறன்) ஆகியவற்றுக்கான வித்தியாசம் என்ன?

இதன் வித்தியாசம் தெரியாமல்தான் நமது கல்விக்கூடங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதாகச் சொல்லி இயங்குகின்றன. இந்த வித்தியாசம் தெரியாமல்தான் நமது கலை இலக்கிய உலகமும் படைப்புத்திறன் எனச் சொல்லிக்கொண்டு இயங்குகிறது. பயன்படுத்தாத பாட்டில்களைக் கொண்டு சிறிய பூச்சாடிகளை உருவாக்குவது, மணிகளைக் கொண்டு ஓவியத்தை அலங்கரிப்பது, அலுமினிய டின்களில் குருவிகள் செய்வது எனப் பள்ளிகளில் போதிக்கப்படுவதையும் அதை திறமையாகச் செய்யும் மாணவனையும் படைப்பாளன் எனச் சொல்ல முடியாது. அவர்கள் கைவினைத்திறன் பெற்றவர்கள் எனலாம்.

Continue reading

மனசலாயோ 3: ரயிலில்

train2திரும்பும்போது ஜெயமோகனின் மூன்று கதைகள் குறித்தும் நினைத்துக்கொண்டேன். கதை குறித்து உரையாடியவற்றைத் தொகுத்துப்பார்த்தேன். விடுபட்டவற்றை இணைத்துக்கொண்டேன். மீண்டும் அவற்றைப் படித்துப்பார்க்க தோன்றியது. தொலைபேசியில் இணைய இணைப்பில்லை. சில இடங்களை சில வரிகளை மட்டும் நினைவில் இருந்து மீட்டுப்பார்த்தேன்.

Continue reading

மனசலாயோ 2: செருக்கழித்தல்

000இவ்வருடம் வழக்கத்தைவிட முன்னதாகவே கலை இலக்கிய விழாவுக்கான பணிகள் தொடங்கியிருந்தன. மலேசியா மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் கலை இலக்கிய விழாவில் வெளியீடு காணும் நூல்கள் அறிமுகமாக வேண்டும் எனும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் நூல்களை வெளியீடு செய்திருந்தோம். நூல்களைப் பற்றி பேசியவர்கள் அனைவரும் தமிழின் முக்கியப்படைப்பாளிகள். ஒரு நூலின் உள்ளடகத்தின் தரத்தை அளவிடுவதில் நிபுணத்துவம் மிக்கவர்கள். அவர்கள் வழியே நூல் கவனம் பெற வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.

Continue reading

மனசலாயோ 1: தென்னங்கடல்

20181202_175332திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கியதும் கார் காத்திருந்தது. காரில் அமர்ந்தவுடன், பார்வதிபுரம் இங்கிருந்து பக்கமா? எனக் கேட்டேன். வாகனமோட்டி அருகில்தான் எனச் சொன்னார். ஆனால் எவ்வளவு அருகில் எனக் கொஞ்சம் தமிழ் கலந்த மலையாளத்தில் சொல்ல நெடுநேரம் முயன்றுக்கொண்டிருந்தார். சிகிச்சைக்கு கேரளா வந்ததும் வராததுமாக ஏன் தமிழகத்தில் உள்ள ஊரைப்பற்றி விசாரிக்கிறான் என அவர் யோசித்திருக்கக் கூடும்.  ஆயுர்வேத சிகிச்சை நிலையம் விமான நிலையத்திலிருந்து தள்ளி ஒரு மேட்டுப்பகுதியில் பசுமைக்கு நடுவில் இருந்தது. தனித்த இருமாடிக் கட்டடம். மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சுற்றிலும் பச்சையாகத் தெரியலாம் என நினைத்துக்கொண்டேன்.  இரவாகிவிட்டிருந்தது. மருத்துவர் காத்திருந்து தங்கும் வசதிகளைக் காட்டினார்.

Continue reading

உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்

29386887_10209200878613573_584066072583487421_nஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 7: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

20171220_094818_resizedகாலையிலேயே எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் மாணிக்கவாசகர் திருக்கோயில் சென்றோம். கோயிலை நெருங்கியதுமே அதன் புற வளாகத்தில் இருந்து வேப்ப மரக் காற்று சிலிர்க்க வைத்தது. “இதுதான் நம்ம இடம்” என கோணங்கி கைகளை விரித்து காற்றை உள் வாங்கினார். மாணிக்கவாசகர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் அக்கோயில் மிக எளிமையாக, சிறிய பரப்பளவைக் கொண்டிருந்தது. அங்கிருந்த கிணறு மிகப்பழமையானது எனச் சொன்னார்கள். கோயிலைவிட அதன் சுற்றுப்புறம் அவ்வதிகாலையில் உற்சாகத்தைக் கொடுத்தது. கொஞ்ச நேரம் அவ்வின்பத்தைப் பருகிவிட்டு திருமறைநாதர் கோயில் புறப்பட்டோம்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 6: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

anbu

அன்புவேந்தன்

தோழர் அன்புவேந்தனைச் சந்தித்தவுடன் மதுரைக்கு வந்த உற்சாகம் பிறந்துவிட்டது. கடந்த முறை தமிழகப் பயணத்தில் யானை மலையில் உள்ள சமண படுகைகள் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளுக்கு என்னையும் தயாஜியையும் அழைத்துச் சென்றார். பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான தொடர்ந்த ஆய்வில் இருப்பவர். மீனாட்சியம்மன் ஆலயத்தில் அவரைச் சந்தித்தோம். விஜயலட்சுமியை மீனாட்சி தரிசனத்துக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் ‘வல்லினம் 100’ கொடுக்க வேண்டும் என விரும்பினேன். கொடுத்தேன். அவரது அப்போதைய ஆய்வுத்திட்டங்கள் குறித்து விளக்கிக்கொண்டிருந்தார். கடும் உழைப்பை கோரும் பணிகள். கோணங்கி எங்களுக்காகப் பசியுடன் காத்துக்கொண்டிருப்பார் என்பதால் சீக்கிரமாகவே புறப்பட்டோம்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 5: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

தூயன்அழகான குடும்பம் எழுத்தாளர் தூயனது. சற்று நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். விஷ்ணுபுரம் கலந்துரையாடலில் இளம் படைப்பாளிகளை நோக்கி ‘இப்படி எழுதக் காரணம் என்ன?’ எனும் அர்த்தத்தில் கேள்விகள் தொடர்ந்து எழுவதைக் காண முடிந்தது. தூயனை நோக்கி அவ்வாறான கேள்விகள் அதிகமே எழுந்தன. உண்மையில் அதுபோன்ற கேள்விகளுக்குப் பதில்கள் கிடைப்பதில்லை. அல்லது படைப்பாளிகளும் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளிக்கின்றனர்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 4: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

20171219_073739_resizedமத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம், மண்டபம் எனும் ஊரில் அமைந்திருந்தது. முந்தையநாள் தோழர் தமிழ்மணி கூறிய மீன் அறுவடை செயல்திட்டத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தோம். Cobia மற்றும் pompano ரக மீன்களைப் பராமரித்து அவை உற்பத்தி செய்யும் குஞ்சுகளைக் கூண்டுகளில் வளர்க்கும் தொழில்நுட்ப முறையை  இந்த ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்கின்றனர். 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவைக்கூண்டுகள் பல்வேறு அளவு துவாரங்கள் கொண்ட வலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு முறையாக உணவிட்டு வளர்ச்சி அடைந்தவுடன் அதை அறுவடை செய்கின்றனர்.

Continue reading

மூதாதையர்களின் நாக்கு – 3: விஷ்ணுபுரம் விருதுவிழாவும் சில பயணங்களும்

001பாம்பன் பாலத்தில் பயணிக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. 2,340 மீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் முதல் கடல் பாலம். 1914இல் சேவையைத் தொடங்கி 100 வருடங்கள் கடந்துவிட்ட இப்பாலம் பெரிய கப்பல்கள் கடக்கும்போது நடுவில் தூக்கி வழிவிடும். திட்டமிட்டபடி காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து காத்திருந்தோம். இடையில் இரயில் பரமகுடி நிறுத்தத்தில் நின்றவும் தயாஜி பரவசமாகி அந்தப் பூமியில் கால்பதித்தார். கமலஹாசன் பிறந்த ஊரின் அருளால் தான் ஒரு சிறந்த நடிகனாக வரலாம் என்ற ஏக்கம் தெரிந்தது. அரை மணி நேரத்தில் பாம்பன் பாலத்தில் ரயில் ஊர்ந்து செல்லத் தொடங்கியது. நாங்கள் கடலைப் பார்த்துக்கொண்டே வந்தோம். காலைக் குளிரைச் சுமந்திருந்த காற்று சிலிர்க்க வைத்தது. கீழே தண்டவாளத்தையோ அதை தாங்கியுள்ள தூண்களையோ பார்க்க முடியவில்லை. அகன்ற ரயில் கடலுக்கு மேல் அந்தரத்தில் மிதப்பது போன்றதொரு உற்சாகம். பக்கத்தில் வாகனம் செல்லும் பாலத்தில் நின்றபடி நிறைய பேர் எங்களைப் பார்த்துக் கையசைத்துக் கூச்சலிட்டனர். அது ரயிலுக்கான கையசைப்பு. அவர்கள் பார்வையில் நாங்கள் ரயிலின் உயிருள்ள உபரிப் பாகங்கள்.

Continue reading