கடிதம்/எதிர்வினை

உச்சை: கடிதங்கள் (2)

சிறுகதை: உச்சை

நேற்று நீலகண்டம் குறித்து திரு. காளி பிரசாத் பேசியதை கேட்டேன். அதில் நஞ்சிற்கும் அமுதத்திற்கும் இடையே தோன்றிய சில உயிர்களை பற்றி கூறினார். இன்று தான் தெரிந்து கொண்டேன் உச்சை சிரவஸ் என்ற வெள்ளை குதிரையும் சமுத்திர மந்தனத்தின் போது பாற்கடலில் இருந்து தோன்றியது என.
பந்தய குதிரைகள் செயல்பட இயலாத நிலை வரும் போது அவை சுட்டு கொல்லப்படுவதே வழக்கம் என்று கேள்விபட்டிருக்கிறேன். தகுதிக்கு மீறியதாக தோன்றும் உறவுமுறைகள் ஏற்படுவதை தடுக்க செய்யப்படுவதாக அறியப்படும் கவுரவ / ஆணவக்கொலைகள் நினைவிற்கு வந்தது.

Continue reading

உச்சை: கடிதங்கள் (1)

சிறுகதை: உச்சை

அண்ணா, வாசித்தேன். நல்ல மொழிநடை. வாசிபின்பம் அமைந்த கதை. ஆனால் கதையின் மைய முடிச்சு வலிமையாக உருவாகி வர வில்லை. புராணகதை  அதில் ஒன்றினை மாற்றி அமைக்கும் ஆளுமை. அது மிஸ்டிக் உரு கொண்டு மண்ணில் இறங்கி வரலாற்று தருணம் ஒன்றினை மாற்றி அமைக்கும் இந்த தொடர் பின்னல் வலிமையாக உருவாகி இல்லை. காரணம் புராண கதையில்  அந்தக் குதிரைக்கு எந்த role ம் இல்லை. கத்ரு அவள் பொறாமை மற்றும் அவள் ஏவும் பாம்புகள் சதி இவைதான் அங்கே வினையாற்றிக் கொண்டிருக்கிறது.

Continue reading

பேய்ச்சி: தமிழ்ப்பிரபா

ஒரு நல்ல நாவலுக்குள் நுழைந்து விட்டோம் என்கிற உணர்வென்பது தூரத்து அருவியின் சலசலப்பு ஏற்படுத்தும் பரவசத்திற்கு ஒப்பானது. ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ என்கிற இந்நாவல் படிக்கத் துவங்கிய முதல் சில பக்கங்களிலேயே அவ்வுணர்வை எனக்களித்தது.

Continue reading

கழுகு: கடிதம்

கழுகு சிறுகதை

மிஸ்டிக் ஆன கதை.

ப்ரமாதம்.

கழுகாக தோற்றம் தரும் அமிர்தலிங்கத்தில் துவங்கி…பிணங்களை உண்ண கழுகு போல காத்திருக்கும் நிலைக்கு
சிவா வருவது (அல்லது வரப்போவது) வரை…

Continue reading

பேய்ச்சி ஒரு வாசிப்பு – ‘மகிழம்பூ’ கலைசேகர்

வழக்கமாக நவீனின் படைப்புகள் என்றாலே வாசிக்க தொடங்கிவிட்டால் முடிக்கும்வரை வேறெதிலும் ஆர்வம் திரும்பாது. ஆனால் பேய்ச்சியை பல இடங்களில் நிறுத்தி எடுத்து வைக்க நேர்ந்தது. மீண்டும் வாசிப்பை தொடர சற்று கால அவகாசமும் தேவையாக இருந்தது எனக்கு.
ஒருவேளை நாவலில் இடம்பெற்ற சில காட்சியமைப்புகளின் சாயல்களை முன்னமே அவர் படைப்புகளில் வாசித்துள்ளது காரணமாக இருக்கலாம். அது ஏற்கனவே எனக்கு அறிமுகமான ஒரு நிலத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் இருந்து அறிமுகம் செய்வதால் உண்டாகும் ‘பழகிவிட்ட’ மனநிலையாகவும் இருக்கலாம்.

Continue reading

பேய்ச்சி: வாசிப்பனுபவம் (சிவமணியன்)

மதுரை அருகே திருப்புவனத்தில், வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மடப்புரம் காளியம்மன் கோவில், சிறு வயதில் ஒரு சிலமுறை சென்று வழிபட்ட இடம். வெட்டவெளியில் வெள்ளை குதிரையின் உயர்ந்த முன்பாதங்களுக்கு கீழ் பூதங்களுக்கிடையில் உக்கிர தோற்றம் கொண்ட துடியான தெய்வம் காளி. அங்கு செல்லும் வாய்ப்பினை ஏதாவது காரணம் சொல்லி தவிர்க்கும் நான், ரிஷிவர்தன் பிறப்பதற்கு நேர்ந்திருந்த வேண்டுதலின் கட்டாயத்தால் 20 வருடம் கழித்து மீண்டும் சென்றிருந்தேன். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டடிருந்தது. புதியதாக சுற்று மதில்களும், கோயில் முற்றத்தில் செயற்கை கூரையும் அந்த சூழலின் முன்பிருந்த வெயிலின் தீவிரத்தினை குறைத்திருந்தன. ஆடு கோழி பலி கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், . முன்பு என் நினைவு நாசியில் வியாபித்திருந்த குருதிவாடை அப்போது இல்லை.

Continue reading

பேய்ச்சி: உறைவும் மிரள்வும் (நிர்மலா முரசி)

அதிகாலை ஆதவன் ஒளிப்பட்டு சட்டென மறைந்திடும் வெண்பனிபோல் சில நாவல்கள் வாசித்த மாத்திரத்தில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தா வண்ணம் வாசிப்பவர் அகம் விட்டு மறைந்து விடுவது உண்டு. சிற்சில படைப்புகள் மட்டுமே அகத்தினை அணுகி காலவோட்டத்தின் மாறுதலால் அல்லது கால மாற்றத்தால் நினைவடுக்குகளில் புதைந்திருக்கும் / மற(றை)க்கடிக்கப்பட்டிருக்கும் கடந்தகால நினைவலைகளினை அகக்கண் முன்னே காட்சிபடுத்துவது மட்டுமல்லாது நிசப்தமானதொரு தாக்கத்திற்குள் அமிழ்த்தி செல்லும். அத்தகைய தாக்கமானது மீட்டெடுக்க இயலாத கால பெருவெளி சமுத்திரத்தில் வெறும் ஞாபக சின்னங்களாக மட்டுமே நிலைத்திருக்கும். ஆழ்கடலின் உள்ளே அமிழ்ந்திருந்த நீர்குமிழி மேலெழும்புவது போல் பேய்ச்சி நாவல் நினைவடுக்குகளிலிருந்து மறக்கடிக்கப்பட்டிருந்த எனது கம்பத்து வாழ்வனுபவத்தினை தூசு தட்டி எழுப்பியது என்றே கூறலாம்.

Continue reading

பேய்ச்சி: உள்ளிருந்து மீளும் பாலியம் (புஷ்பவள்ளி)

நாவலின் முகப்பே அதிரும் வகையில் இருக்கையில் கதையும் இன்னும் அதிர வைக்கும் என்ற நோக்கத்துடன் இருந்தேன். டிசம்பர் மாதம்  கலந்து கொண்ட முகாமில்  அருண்மொழி நங்கை அவர்கள் பேய்ச்சி நாவலையொட்டி விமர்சனம் செய்கையில் நாவலை கண்டிபாகப் படித்தே ஆக வேண்டும் என்று என் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. நாவலை பேரார்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

Continue reading

அறத்தின் குரல் அதிராது – ஆசிர் லாவண்யா

இலக்கியப்பணியை முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இந்தக் கட்டுரையை எழுத நான் ஏறக்குறைய ஐந்து நாட்கள் ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டேன். எனது பல பணிகளுக்கு மத்தியில் அவதூறுகளுக்கு எதிரான அறத்தைப் பேச ஒரு காரணம் உண்டு. பேய்ச்சி நாவல் குறித்து தொடங்கிய அவதூறுகள் இப்போது படிப்படியாக வளர்ந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒரு வாசகியாக அந்த பொய்மையில் கட்டுண்ட எளிய மனிதர்களை நோக்கி உண்மையைச் சொல்வதை என் கடமையாக நினைக்கிறேன். எனவே தயவு செய்து இதனை தங்கள் வலைத்தளத்தில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

– ஆசிர் லாவண்யா.

Continue reading

பேய்ச்சி சர்ச்சை குறித்து…

‘பேய்ச்சி’ நாவல் குறித்த மதியழகன் கருத்தை நான் என் வளைத்தளத்தில் பதிவேற்றியபோது நண்பர்கள் மத்தியில் இருந்த ஒரே கேள்வி, ஏன் அதை நான் பதிவேற்ற வேண்டும் என்பதே. அதில் அடங்கியுள்ளது வன்மமும் அவதூறும் மட்டுமே என்பதனை வாசித்த பலரும் உணர்ந்திருந்தனர். அப்படி இருக்க, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது நண்பர்களின் குழப்பமாக இருந்தது. ஆனால், அடிப்படையில் நான் ஒன்றை சோதிக்க விரும்பினேன். அதனை சில நண்பர்களிடமும் கூறியிருந்தேன்.

Continue reading