
நேற்று நீலகண்டம் குறித்து திரு. காளி பிரசாத் பேசியதை கேட்டேன். அதில் நஞ்சிற்கும் அமுதத்திற்கும் இடையே தோன்றிய சில உயிர்களை பற்றி கூறினார். இன்று தான் தெரிந்து கொண்டேன் உச்சை சிரவஸ் என்ற வெள்ளை குதிரையும் சமுத்திர மந்தனத்தின் போது பாற்கடலில் இருந்து தோன்றியது என.
பந்தய குதிரைகள் செயல்பட இயலாத நிலை வரும் போது அவை சுட்டு கொல்லப்படுவதே வழக்கம் என்று கேள்விபட்டிருக்கிறேன். தகுதிக்கு மீறியதாக தோன்றும் உறவுமுறைகள் ஏற்படுவதை தடுக்க செய்யப்படுவதாக அறியப்படும் கவுரவ / ஆணவக்கொலைகள் நினைவிற்கு வந்தது.








