கடிதம்/எதிர்வினை

கன்னி: கடிதங்கள் 4

கன்னி சிறுகதை

ம.நவீனின் கன்னி சுவாரசியமான ஒரு கதை. இதை நான் ஒரு கதைப்போர் என்றுதான் வாசிக்கிறேன். கதைசொல்லி ஒரு கதைசொல்லியை சந்திக்கிறான். அந்த கதைசொல்லி ஒரு பேய்க்கதையைச் சொல்கிறான். இவன் அதன் ஓட்டைகள் வழியாக கிரைமை கண்டுபிடிக்க முயல்கிறான். இருவரும் கதைகளால் மோதிக்கொள்கிறார்கள்.

Continue reading

கன்னி: கடிதங்கள் 3

சிறுகதை: கன்னி

அன்புள்ள நவீன்
ஒரு நாட்டின் வரலாற்றை இப்படியும் எழுதலாம் என கோடிட்டு காட்டியிருக்கும் கதை கன்னி.

புதர் மண்டி கிடக்கும் வரலாற்று பாதையில் சரண் போன்ற பத்திரிக்கையாளர்கள் கையில் வரலாறு என்று சொல்லப்படுவது மீட்டரு வாக்கம் செய்யப்படுகிறது .

Continue reading

கன்னி: கடிதங்கள் 2

சிறுகதை கன்னி

அன்பான நவின், கன்னி சிறுகதையை வாசித்தேன். இன்றைய எழுத்துகளில் நிலமே இல்லையா என ஏங்கி போயிருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற சிறுகதைகள் வாசிப்பு சுவையை கொடுக்க கூடும்.

Continue reading

கடிதம்: கன்னி

சிறுகதை:கன்னி

நவீன், கன்னி சிறுகதையை வாசித்தவுடன் எனக்கு திருப்பரங்குன்றத்தின் பின்புறம் உள்ள ஞாயிறுக்கிழமை கோயில் நினைவுக்கு வந்தது. சோழர்காலம் முதலே இருக்கும் சப்த கன்னியர் கோயில் தமிழகம் முழுவதுமே இருப்பதுதான். மாமல்லபுரத்திற்கு நீங்கள் வந்தாலும் பார்க்கலாம்.

Continue reading

ராசன்: ஒரு வாசகர் பார்வை

சிறுகதை ராசன்

 

இந்த ஆண்டு தொடக்கத்தில், வல்லினம் பரிந்துரைக்கப்பட்ட நாவல்கள் ஐந்தையும் படித்து முடிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட இடுப்பணியும் இதுவே. மார்ச் மாதத்திற்குள் ஐந்து புத்தகங்களைப் படித்து முடித்து விட வேண்டும் என தோழிகள் பவித்திரா, சுந்தரி, புஷ்பா, பாரதி அனைவரும் ஒரு மனதாக தீர்மானித்தோம். இடையில் திடீர் அறிவிப்பு, 31 மார்ச் மாதம் வரை பள்ளி விடுமுறை நீடிப்பு என்று நானும் தோழி பவித்திராவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம் ஒவ்வொரு நாளும் படித்ததைப் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடுவது என்று.

Continue reading

ராசன்: கடிதங்கள் (2)

சிறுகதை ராசன்

அண்ணா, உங்கள் சமீபத்திய சிறுகதைகளுள் அதன் வடிவம் சார்ந்த ஒரு கவனம் கூடியிருக்கிறது. அதன் crafting கலை சியர்ஸ், ராசன் இரண்டிலுமே நன்கு அமைந்துள்ளது. “உண்மையாகவே ரத்தினக்கல்லை எடுக்கதான் அமிர்கான் ராஜநாகத்தை வளர்த்தார் துவான்” சிறுகதையின் சொடுக்கான நடை கச்சிதமாக அமைந்த வரிகளுள் ராசன் சிறுகதையும் ஒன்று.

Continue reading

பேய்ச்சி: இடி போல் முழங்கும் தாய்மை – நலவேந்தன் அருச்சுணன் வேலு

சித்திரைப்புத்தாண்டில் முதல் பரிசாக வந்தது எழுத்தாளர் ம.நவின் அவர்களின் பேய்ச்சி நாவல். எழுத்தாளரின் முதல் நாவல். நம் நாட்டில் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ம.நவீன் அவர்களின் படைப்பை நம்பிக்கையோடு வாசிக்கலாம். யதார்தமான சிறுகதை மற்றும் கவித்துவமான நவினக்கவிதைகளை படைக்கும் எழுத்தாளர் என அறிமுகமான இவரின் முதல் நாவலை வாசித்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. வாங்கினேன் வாசித்தேன். இதற்கிடையில் பலர் போற்றியும் சிலர் தூற்றியும் இந்நாவலை தொடர்ந்து விமர்சனம் செய்துக்கொண்டுயிருந்தனர். இதன் விளைவே இந்நாவலுக்கு நல்ல ஒரு விளம்பரமானது. இவ்வேளையில் அவர்களுக்கு எனது நன்றி

Continue reading

கடிதம்: ராசன்

சிறுகதை: ராசன்

மரியாதைக்குரிய ஆசிரியர் நவீன் அவர்களுக்கு. யாக்கை சிறுகதைக்குப் பிறகு நான் எழுதும் கடிதம். இரு மன்னர்கள் சந்திக்கும் கதை ராசன். ஒருவன் மன்னன் என்பவன் அதிகாரத்தின் ருசியை காண்பவன் என்கிறான். மற்றவர் மன்னர் என்பது தன் உடமையை பாதுகாப்பதும் பாதுகாக்க முடியாதபோது சரணடைவதும் என்கிறார். ஆனால் கீழ்மையை தவறி செய்தாலும் மரணத்தை தேடிச் செல்வது என்கிறார். அதுதான் தீபனுக்கு நடத்தப்படும் வைத்தியம் அல்லவா?

Continue reading

சியர்ஸ் : கடிதம் 3

சியர்ஸ் சிறுகதை

பிரியமுள்ள எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு,

சியர்ஸ் கதை வாசித்தேன். ‘சியர்ஸ்’ களித்திருக்கும் சந்திப்பு. இனிய சந்திப்பு ஒன்றின் முடிவு. இந்த இரண்டு தருணங்களிலும் அதை துவங்கி வைக்க முடித்து வைக்க கையாளப்பட்ட உவகைச் சொல். கதையின் உறவும் பிரிவுமான உணர்வுநிலைக்கு அதன் துவக்கத்துக்கும் முடிவுக்குமான சரியான சொல்லும் கூட சியர்ஸ்.

Continue reading

சியர்ஸ் : கடிதம் 2

சியர்ஸ் சிறுகதை

சியர்ஸ் சிறுகதையை வாசித்தேன். தாயைத் தேடிச் செல்லும் அலைவு மிகச் சிறப்பாக இருந்தது. இந்தத் தேடலை அலைவை எந்த விசை உந்தி தள்ளுகிறது எனும் கேள்வியை இச்சிறுகதை எழுப்புகிறது. தாய்மை என்கிற உணர்வு. தாயை இழந்து போகின்ற தருணத்தில் யாருமே அருகில் இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்.

Continue reading