கடிதம்/எதிர்வினை

கடிதம் : பனை மட்டையும் பத்திரிகையும்

jeyakanthan59சீனுவின் கடிதம் சிற்றிதழ் சூழல் குறித்து மேலும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கத் தூண்டியது. புறத்தோற்றம், வணிகமற்ற போக்கு, குரல் நசுக்கப்பட்டவர்களுக்கான தளம் என்கிற மாதிரியான வரையறைகள் சில முன்வைக்கப்படுவதைப் போலவே சிற்றிதழை மற்றுமொரு ஊடகமாகவும் (another medium) அல்லது குறிப்பிடத்தக்க ஒரு குறுங்குழுவுக்கானதாகவும் பார்ப்பதும் மிகக் குறுகலான பார்வை என்றே நினைக்கிறேன். அப்படியான வகைபாட்டு சிந்தனையினூடேதான் சீனுவின் கடிதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

Continue reading

தீவிர (வணிக) இலக்கியம்

imagesஅன்பான சீனு. மலேசிய இலக்கிய வரலாற்றை பலரும் திணற திணற மேடைகளில் பேசுவதை நான் கேட்டுள்ளேன். வருடங்களையும் சம்பவங்களையும் சரியாக ஒப்பிப்பதன் மூலம் தத்தம் ஞாபக சக்தியின் பளபளப்பைப் பொதுவில் காட்டி கண்ணைக் கூசச்செய்யும் திறன் வாய்ந்த நிபுணர்கள் எங்கும் உள்ளதுபோல மலேசியாவிலும் உண்டு. இப்படி ஒப்புவிக்கப்படும் இலக்கிய வரலாறுகள் பெரும் நிகழ்வுகளாகவோ சூழலை மாற்றியமைத்ததாகவோ சலனத்தை ஏற்படுத்தியதாகவோ தரவுகளின் பட்டியலாகவோ மட்டுமே இருந்துவிடுகிறது. வரலாற்றில் மாற்றங்களை நிகழ்த்தும் தனி மனிதர்களின் அந்தரங்க மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போதே மொத்த வரலாற்றின் வரைபடம் ஓரளவு பூர்த்தியாகிறது என்று நினைக்கிறேன். இதை வாய்மொழி வரலாறு மூலமே தொகுப்பது சாத்தியம். அவ்வாறான முயற்சியில் இறங்கியபோதுதான் குறிப்பிட்ட ஒரு காலத்தில் நவீன இலக்கியத்தில் இயங்கிய பலருக்கும் ஜெயகாந்தனின் தாக்கம் இருந்தது புரியவந்தது. அவர் வழியே அவர்கள் இலக்கியத்தின் காத்திரமான ஒரு பகுதியை அடைந்தனர். ஆனால் அந்தத் தாக்கம் ஜனரஞ்சக இதழ்கள் வழி கிடைக்கப்பெற்ற நகைமுரணே மலேசிய இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ள சரியான பாதை என நினைக்கிறேன்.

Continue reading

பனை மட்டையும் பத்திரிகையும் – கடலூர் சீனு

22023022அன்பு அண்ணா ,

இக்கடிதம் அவ்வப்போது இலக்கு விலகி அலைய சாத்தியம் உண்டு . உங்கள் வினா வழியே நான் சிந்தித்தவற்றை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு இதை எழுதுகிறேன் எனக்கொள்ளலாம் .

முதலில் உங்கள் வினாவை  தமிழ் நிலத்தில், இந்த வினா உருவாகி வந்த கலாச்சார பின்புலத்தில் வைத்து அணுகிப் பார்க்கிறேன்.

Continue reading

எதிர்வினை: அபோதத்தின் அலறல்

20525353_10213684199490132_1641800559498316816_nவல்லினம் 100 களஞ்சியத்தில் சிங்கை பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் குறித்து நான் எழுதியிருந்த ‘இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி’ எனும் விமர்சனக்கட்டுரையை ஒட்டி நண்பர் சிவானந்தம் நீலகண்டன் சில மாற்றுக்கருத்துகளை முன்வைத்திருந்ததை வாசித்தேன். என் விமர்சனக் கட்டுரையில் பல இடங்களில் தவறான அணுகுமுறைகளும் மேலோட்டமான பார்வைகளும் உள்ளதால்  அதை விமர்சனத்திற்குள்ளாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதைப் பாராட்ட வேண்டும். சிவானந்தன் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் எனது சில மாற்றுக் கருத்துகளை முன்வைக்க நினைத்தேன். Continue reading

கடிதம்: நாகம்

IMG-20171101-WA0023நவீன்,

எனக்கு கதைகள் வாசிப்பது பிடிக்கும். ஆனால் அதிகமாக வாசிக்கும் நேர விஸ்தாரம் இல்லை. எப்போதாவது வாசிப்பதில் சில மனதில் இருக்கும். சில பல வருடங்கள் ஆகியும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போகும். தமிழில் மட்டுமல்ல மலாய் மற்றும் ஆங்கில நாவல்களை வாசிப்பேன். அப்படி வாசித்ததில் இன்றளவும் நான் பல முறை படித்து புரிந்து கொள்ள முடியாமல் போய் பல முறை வாசிப்புக்கு பிறகு புரிதலை உண்டாக்கிய கதைகளில் ஒன்றுதான் உங்கள் ‘நாகம்’. பார்க்க ஏதோ கோயில் குளம் நாகம் என பழைய இச்சாதாரி நாகம் பற்றியது போன்ற பீடிகை இருந்தாலும் கதை சரியா இல்லையே என்ற அத்திருப்தியோடுதான் கணிசமான மறுவாசிப்பை செய்தேன்.

Continue reading

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்களுக்கு எதிர்வினை: விஜயலட்சுமி

வணக்கம் டாக்டர்,

நீங்கள் ம.நவீனுக்கு எழுதிய கடிதம் வல்லினம் 100ஐ தொட்டிருப்பதால் அதன் பதிப்பாசிரியர் எனும் அடிப்படையில் என் எதிர்வினையை முன்வைக்கிறேன்.

Continue reading

வண்டி : அழகிய பெரியவன் கடிதம்

azhaigiya2jpgநவீன் வணக்கம். இந்த மாத புது விசை இதழில் உங்களின் சிறுகதை ‘வண்டி’ படித்தேன். மிகவும் நுட்பமான தனித்துவம் கொண்ட கதை அது.உடனே ஆதவனிடம் பேசியபோது உங்கள் எழுத்துக்கள் பற்றி சொன்னார். உங்கள் கதை தன்னளவிலேயே எல்லாவிதமான கூறுகளையும் கொண்டு இயங்குகிறது.எழுதுகிறவனின் ஒரு சின்ன தொந்தரவோ, குழப்பமோ இல்லை.அதிகப்படியான எதுவுமில்லை.அத்தனை நேர்த்தி. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.மலேய அனுபவங்களை. இன்னும் பலவற்றை.

-அழகிய பெரியவன்.

 

வண்டி சிறுகதை

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மியிடமிருந்து ஒரு நகைச்சுவை கடிதம்!

இதை வாசித்து இலக்கிய நண்பர்கள் சிரித்தால் நான் பொறுப்பள்ள. சிரிப்பதற்கெல்லாம் யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என நம்புவோமாக. நான் எதற்கெல்லாம் வன்மமாக நடந்துகொள்வேன் என முனைவர் சீரியஸாகத் தெரிவிக்கும்போது உண்மையில் சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரே நாளில் ஒரு கடிதத்தில் பல்டி அடிப்பதற்கெல்லாம் கொஞ்சம் கூடுதல் பயிற்சிகள் தேவைதான். விவரம் புரியாத நண்பர்களுக்கு நேற்றையக் கடிதம் இங்கே
ம.நவீன்

Continue reading

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி: வல்லினம் 100-இல் லஞ்சம்?

என்னிடம் சிங்கப்பூர் பற்றிக்  கட்டுரை கேட்டல் கூடக் கொடுத்திருப்பேன். ஆனால் மலேசியப்பெண் எழுத்தாளர்கள் (நாவலாசிரியர்கள்) பற்றிய கட்டுரையை அச்சிடுவதாகக் கூறிய தாங்கள் அவ்வாறு செய்யவில்லையே. அச்சிடுவதற்கு வாசகர்வட்டத்தைப்போலப் பணம் எதிர்பார்த்திருந்தால்கூடத் தந்திருப்பேன்.வாக்குத் தவறலாமா? தங்களின் குணம் மாறிப்போனதில் வருத்தம்தான்.

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி.

Continue reading

மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

மன்னர் மன்னன்மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தேர்வானபோதும் தங்களுக்கு மனமுவந்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். உங்கள் மூலம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என நம்பினேன்.

Continue reading