கடிதம்/எதிர்வினை

யாக்கை: கடலூர் சீனு கடிதம்

பிரிய எழுத்தாளர் நவீன்

உங்கள் தளத்தில்  யாக்கை சிறுகதைக்கு வந்த வாசகர் எதிர்வினை அனைத்தும் வாசித்தேன் . ஒரு கதை எவ்வாறெல்லாம் வாசித்து உள்வாங்கப்படுகிறது என்பதை நெருங்கி அறிவது ஒரு வாசகனாக எப்போதுமே எனக்கு உவகை அளிப்பது .

கடிதங்களை வாசித்த வரையில் நான் அவதானித்தது மூன்று.

Continue reading

யாக்கை : கடிதம் – கிருஷ்ணன்

நவீன் ,

இந்த சிறுகதை மிகச்சிறப்பாக இருந்தது ,

உங்களது போன சிறுகதை போயாக்கில் வரும் கனவு மிக செயற்கையாக இருந்தது. உண்மையில் உள்ள அச்சம் அவ்வாறே கனவுருக்கொள்ளாது , உருமாறித் தான் தெரியும். மேலும் ஒரு ஆங்கில ஆசிரியரின் தர்க்கம் மீறிய அச்சம் ஏற்புடையதாக இல்லை. கதை சற்று மார்கோஸ் சாயலில் இருந்தது.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 4

யாக்கை சிறுகதை  கதையை நகர்த்தும் பாத்திரங்களின் இரு உடல்களும் தங்களைக்row-boat-boat-rowing-paddle-steering-girl-braid காப்பாற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறது என்பதை மையப்படுத்துகிறது. ஈத்தனின் உடல் இனி மகளின் எதிர்கலத்தைக் காப்பாற்ற உதவாது என்பதையும், கேத்ரினின் உடல் காமுகரிடம் சிக்கி சிதைவுறப் போகிறது என்பதைக் குறியீட்டு ரீதியாகயாகவும் அழகியல் ரீதியாகவும் சொல்லிச் செல்கிறார்.  இரண்டு உடலுமே ‘தின்னக் கொடுத்து’ சன்னஞ் சன்னமாக அழிகிறது அல்லது அழியப்போகிறது என்பது அதன் சொல்லும் திறனில் சிறக்கிறது.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 3

திருவாளர் நவீன் அவர்களுக்கு. போயாக் சிறுகதையின் மூலம் chewjettyஉங்களை அறிந்து உங்களது சிறுகதைகளையும் அறிந்தேன். ‘யாக்கை’ நல்லதொரு சிறுகதை.

ஈத்தனுடைய தந்தையார் ஈத்தனுக்காக தன் யாக்கையை சுறாமீனுக்குத் திண்ணக்கொடுக்கிறார். ஈத்தனுடைய மகளும் ஈத்தனால் தன் உடம்பை மனிதர்களுக்குத் திண்ணக்கொடுக்கிறாள். இப்படி இரு தலைமுறையினரை தனக்காகவும் தன்னாலும் திண்ணக்கொடுக்கவைத்த ஈத்தன் தன் யாக்கையையும் கடலுக்குத் திண்ணக்கொடுக்கிறார்.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 2

விபச்சார விடுதியில் வண்ணக்காட்சிகளாகவும்,m கடலின் நடுவிலே வெள்ளை கருப்பு காட்சிகளாகவும், கதை இரண்டு தளத்திற்கும் மாறி மாறி நகர்வது சுவாரசியம்.

முதல் இரு வாசிப்புகளில் ‘ஈத்தன்’ மீதுதான் நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தன. அவன் மகளையே உடலால் உறவுக்கொள்ளும் ஒரு கொடூரன் என்றும், உடல் செயலிழந்து காம உறவை தொடர இயலாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறான் என்றும் புரிதல் இருந்தது. பிறரின் கதையாக இது இருந்திருந்தால் அந்த புரிதலோடு….சரி கதை ஓகே இரகம் என கடந்திருப்பேன்.

Continue reading

யாக்கை சிறுகதை – கடிதங்கள் 1

வல்லினத்தில் வெளிவந்துள்ள எனது யாக்கைக் குறித்து நண்பர்களின் பார்வையும் விமர்சனமும். Hand-in-the-Water-500x337

சிறுகதையை வாசிக்க : யாக்கை

யாக்கை என்றால் உடல். யாக்கை என்றவுடனே யாக்கை நிலையாமையும் நினைவில் வருகிறது. இக்கதை உடல் மூலதனமாகும், பயனற்று போகும் இரு சரடுகளால் பின்னப்பட்டுள்ளது. கேத்தரினா, அவள் தந்தை என மாறி மாறி பயணிப்பது நல்ல வாசிப்பை அளிக்கிறது. கதையின் மிக முக்கியமான இடம், ஈத்தன் தன் மகள் துணையின்றியே இரண்டு மாதம் இருந்திருக்கிறாள். அதுவும் ஜொலிப்புடன் என்பதை உணரும் தருணம். அங்கிருந்து கேத்தரினா இன்று பார்க்கும் தொழிலுக்கு ஒரு நேர்கோட்டு இணைவை வாசகராக கற்பனை செய்து கொள்கிறேன்.

Continue reading

போயாக் : கடிதம் 5

kumang_gawai

குறிப்பு : இவை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பப்பட்டு இன்னும் பிரசுரமாகாத கடிதங்கள்.

எனக்கு இந்தக் கதையை படிக்கும் போது உளப்பகுப்பாய்வு கோட்பாட்டைத் தான் நினைத்துக்கொள்ள முடிகிறது. மேல் மனதிற்கும் அடி மனதிற்கும் இடையேயான இடியாப்பச் சிக்கலைப் பற்றியது அது. அடி மனம் பழங்குடிகளுக்கானது. உள்ளுணர்வையே நம்புவது, கட்டற்றது ஆனால் நாம் வாழும் சமூகம் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டது. மேல் மனம் அதற்க்கேற்றார் போல அடி மனதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒரு போராட்டம் அல்லது சிக்கல் உருவாகிறது. அந்தச் சிக்கல்தான் கதையின் நாயகனின் சிக்கலும் கூட.

Continue reading

போயாக் : கடிதம் 4

அன்புள்ள நவீன்,sarawak-cultural-village-iban-girls-dancing

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

முதன்மைப் பாத்திரமான கதைசொல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துபவைகள்,  பாறைகள் போல ஆங்காங்கே எழுந்து, அதன் மீது மோதித் தெறித்துத், தேங்கிய பின் சுழித்து, வளைந்து பாயும் குறு ஓடையின் போக்கினைப்  போல  விவரிக்கப்பட்டிருந்தது.  தன் கல்விக்கு பொருளுதவி செய்த அதே அரசாங்கத்தால், கதைசொல்லியின் பணிச் சூழலின் விருப்பதேர்வு உரிமை  நசுக்கப்படுகிறது. விமானம்,டாக்சி, படகு என காற்று, நிலம், நீர்  என்ற மூன்று வழிகளில்  ரூமா பாஞ்சாங்கிற்கு வருகிறார் ஆங்கில ஆசிரியரான கதைசொல்லி.   அந்த புதிய சூழலின் ஈபான் ஆதிகுடியை சேர்ந்த மனிதர்களான சக ஆசிரியர் லயாவ், ஊர் தலைவர் ஜேத்தா, இளம் குமரி சீமா, எதிர்காலத்தில் சீமாவை விட அழகியாகப் போகும் அவளின் தங்கை சிம்பா ஆகியோரின் அறிமுகமும் அணுக்கமும் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கிறது.

Continue reading

போயாக் : கடிதம் 3

10-fakta-menarik-mengenai-buayaஅன்புள்ள நவீன், நலம்தானே? நேற்று காலை உணவின்போது Netflixஇல் “Black Mirror” என்ற தொடரின் Crocodile பாகத்தை பார்த்தேன். உடனடியாக போயாக் நினைவில் எழுந்தது. அக்கதையிலும் மைய பாத்திரங்களாக இரண்டு பெண்கள். அறிவியல் மிகுபுனைவுக் கதைகளை கொண்ட இத்தொடரின் இந்தக் கதையில் கண் சாட்சியற்ற ஒருநிகழ்வு உலகியல் தளத்தில் நடைபெற சாத்தியமேயில்லை என்பதை சொல்முறையின் புறவய தோற்றத்தில் நிறுவி விடுகிறது. மேலாக உட்குறிப்பில் எல்லைகளை மீறும் முதலைகளின் உலகில்சாட்சியாக நிற்க்கும் ஒன்றுமறியாத பரிசோதனைப் பன்றி குட்டிகளின் நிலை என்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது.

Continue reading

போயாக்: கடிதங்கள் 2

அன்பு அண்ணா ,suasana-kehidupan-rumah-panjang3

பொதுவாக சொல்லிவிட்ட எதையும் என்னால் எழுத இயலாது. சொல்லியது கடந்து இன்னும் சொல்லாமல் விட்டவை இருந்தால் மட்டுமே பேசியதை எழுத முடியும். போயாக் கதை குறித்து உங்களிடம் உரையாடி விட்டேன்  உரையாடலில்  .விடுபட்டது ஏதேனும் இருப்பின் அதை  எழுதலாம் என எண்ணினேன். இதோ அந்த விடுபடலை எழுது முன்  உங்களுடன் உரையாடியவற்றின் மையத்தை தொகுத்து முன் வைத்து அதன் பின்  விடுபடலை தொடர்கிறேன் .

Continue reading