கடிதம்/எதிர்வினை

வண்டி: கடிதங்கள்

IMG-20170505-WA0009‘வண்டி’ சிறுகதையை வாசித்தேன். அருமை!  ஈப்போ வாசகி ராஜி  எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அத்தனை கருத்துக்கும் உணர்வுக்கும் நானும் உடன்படுகிறேன்! நிறைய இடங்களில்,’வார்த்தைக்குள் வாக்கியம்’ வைத்துள்ளீர்கள்! வாசகனின் ஊகத்துக்கும் சிந்தனைக்கும் – சொல்லாமலே உணர்ந்து கொள்வதற்கும் நிறையவே இடம் கொடுத்துள்ளீர்கள்.

‘சொல்லப்பட்ட வார்த்தைகளைவிட சொல்லாமல்விட்ட வார்த்தைகளுக்கே வலிமை அதிகம்’ என எங்கேயோ படித்ததாக ஞாபகம். சொல்லாமலேயே நிறைய சொல்லி இருந்த இடங்கள் ஏராளம். அந்த இடைவெளியும் வாசகனுடைய சுய சிந்தனைக்கும் முடிவுக்கும் இடங்கொடுக்கும் கதைகள்தானே சிறந்த கதைகளாக அமையும்.

Continue reading

வண்டி – கோ.புண்ணியவான் கடிதம்

punniavan11வண்டி சீராக ஓடியது.

நேற்று நவீன் பதிவிட்டவுடன் வண்டி கதையை வாசித்தேன். முதல் வாசிப்பில் கதை பிடிக்குள் வரவில்லை. முதலில் கிருஸ்த்துவ கதை மாந்தர்கள் வருகிறார்கள். அடுத்த மடிப்பில் இந்து கதைமாந்தர்கள் ஏன் வரவேண்டும் என்று குழப்பமாகவே இருந்தது.  இந்தப் புரியாமைக்கு ரொம்ப நாட்களாய் இருக்கும் என் கவனச் சிதறல் குறைவு ஒரு காரணம். வயது கூடிப்போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது வாசிப்பில் கதை புரியத் தொடங்கியது. நல்ல வேளையாக  எல்லா அடுக்கிலும் கதைப் பொருள் ஒன்றே என்பதால் கொஞ்சமாய்த் தெளிவு உண்டானது. பின்னல் வேலைப்பாடும்தான் குழப்பத்துக்குக் காரணம். மூன்றாவது அடுக்கில்தான் கொஞ்சமாய் வெளிச்சத் தீற்றல் விழுந்தது.

Continue reading

வண்டி: ஈப்போவிலிருந்து மூன்று கடிதங்கள்

வணக்கம் நவீன் நான் விமர்சனம் செய்பவள் அல்ல. ஆனால் ‘வண்டி ‘நிறைய விடயங்களை ஒவ்வொருராஜி வாக்கியத்திற்குப் பின்னாலும் ஒளித்து வைத்திருப்பதாக உணருகிறேன். நீங்கள் திறன்மிக்க கதை சொல்லி என்பதை ஒவ்வொரு முறையும் உணருகிறேன். கதையின் ஆரம்பித்திலேயே மரியதாஸ் எனும் பெயர் இக்காலச் சூழலுக்கான கதை இல்லை என சொல்லாமல் சொல்லி செல்கிறது. இப்பொழுது இந்த பெயர்கள் இளம் பிள்ளைகளுக்கும் இளைஞர்களிடமும் இல்லை. அல்லது மிக மிக அரிது என்பதே அதன் காரணம்.

Continue reading

ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 4

malaysia.tamil_.writers.association.logo_இந்தக் கட்டுரையை எழுதத்தொடங்கியது முதல் புளோக்கைப் படிப்போர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.  பல்வேறுவிதமான கடிதங்களும் அழைப்புகளும் வருகின்றன. மகிழ்ச்சிதான். ஆனால், சில சங்கடமான கடிதங்களையும் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. சோரம்போன தலைமைத்துவத்தையும் எழுத்தாளர்களையும் பார்த்துப் பார்த்து பழகிவிட்டவர்களுக்கு அனைத்துமே சந்தேகத்திற்குறியவைதான். வந்திருக்கும் கடிதங்கள், புலனப்பதிவுகள், அழைப்புகள் அடிப்படையில் சில விடயங்களைத் தெளிவு படுத்திவிடலாம் என நினைக்கிறேன்.

Continue reading

ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 3

4கவனம்: நான் இங்கே பேசுவது முன்னாள் எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரனின் செயல்பாடுகளில் உள்ள பலவீனங்கள் குறித்தும் அவர் ஏன் தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டியதில்லை என்பது குறித்துமே. அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஒழுக்கம், குடும்பம் குறித்து எனக்குத் தகவல்களை அனுப்பும் சல்லிகள் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. நான் எழுத்துக்கூலி அல்ல. நான் செய்வது தேர்தல் பிரச்சாரமும் அல்ல. நேற்று என் முகநூலில் ராஜேந்திரனை ஒருமையில் அழைத்த varusai omar என்பவரையும் அவர் கருத்துகளையும் நீக்குகிறேன். அறிவார்த்தமான மாற்றுக்கருத்துகளையே வரவேற்கிறேன். ஆதரவுக்குரல் கொடுக்கும் உணர்சிகளைக்காட்டிலும் அவை மேலானவை.

Continue reading

ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 2

cheranநேற்றைய கட்டுரையை வாசித்து பல நண்பர்கள் தொடர்புகொண்டனர். பெரும்பாலும் அறிவுரைகள். சில ஆதரவு கருத்துகள். சில அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள். எடுத்த எடுப்பில் “சார் உங்கள் இலக்கிய பாதையும் அவர்கள் இலக்கியப் பாதையும் வேறு வேறு. ஆனால் இருவருமே தமிழுக்கு முக்கியம்தான்…” என தங்கள் ஞானம் பொருந்திய முகரையை என்  தரிசனத்துக்கு வைத்தனர். நான் அவர்களிடம் கேட்டதெல்லாம் ‘முதலில் கட்டுரையை ஒழுங்காக வாசித்தீர்களா?’ என்பதுதான். எதையும் நிதானமாக வாசிக்காத புரிந்துகொள்ளாதவர்களில் இளம் எழுத்தாளர்களே அதிகம் என நான் நினைத்திருந்தேன். ஆனால் மை.தி.சுல்தான் அவர்கள் என் கட்டுரையை வித்யாசாகர் எழுதியது என எதிர்வினை ஆற்றியதில் இருந்தே இந்தக் கொடிய நோய் மூத்தப்படைப்பாளிகள் மத்தியிலும் உண்டு எனப்புரிந்தது.

Continue reading

ஏன் பெ.ராஜேந்திரனுக்கு நான் ஓட்டுப்போடப்போவதில்லை – 1

rajenthiranஅடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை (23.4.2017) மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தேர்தல். நானும் அச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்தான். ராஜேந்திரன் தலைமையில் சடங்குகள் செய்ய மட்டுமே தகுதி உள்ளதாக மாறிவிட்ட அவ்வியக்கத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்து ஆண்டுகள் சில ஆகின்றன. இந்நிலையில் விரிவுரையாளர் மன்னார் மன்னன் அவர்களை ஒரு கண்துடைப்புக்காக ஒருதவணை தலைவராக நியமித்தக் கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே. பதவியைத் தக்க வைக்க ஆவல் இல்லாத; தன்னை மீறி புதியத்திட்டங்களை உருவாக்க முயலாத ஒருவரை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் பெ.ராஜேந்திரன். ஒருவர் இரு தவணைக்கு மேல் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற சட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்திய திருவிளையாடல் அது என அறிவுள்ளவர்கள் அறிவர்.

Continue reading

பெ.ராஜேந்திரன் : சொல்ல மறந்த கதை…

13015308_1157397710972286_8632267970700475905_nDear Navin, Why are you always condemning Rajendran in your articles? He has done a lot of good thinks. He had helped many people. He has risen from the bottom to this level. He may have flaws but one should not always been criticized. We should always look at the both sides. Look in a broader view. He had helped you in many ways, personally too. You never talked about that. Hope you have not forgotten all the help he rendered to you. If you’re not thankful to people who have helped you then there is no point in being a writer. Don’t be an opportunist.
– Anbalagan.M

Continue reading

கடிதம்: நான் மணி மன்றத்தின் எதிரியல்ல!


bell-3-261x300நவீன். உன் அகப்பத்தில் நீயும் வல்லினம் குழுமத்தாரும் அடுக்கடுக்காய் சொன்ன பொய்களைப் பார்த்தேன். எழுத்துக்கூலியான உன் போன்றவர்கள் செய்யும் வேலை இது என நாங்கள் அறிவோம். காய்த்த மரம் கல்லடிப்படும். நாங்கள் காய்த்த மரம். மற்றவர்களைக் குறை சொல்லும் முன், நீ சமுதாயத்துக்கு என்ன செய்தாய்? ஆசிரியர் பணியில் இருக்கும் நீ, போதிப்பதால் மட்டும் சேவை செய்வதாகுமா? கவிதை எழுதுவது மட்டும் சமூக சேவையா? ஏன் உன்னால் மற்ற இயக்கங்கள் குறித்து பேச முடியவில்லை? பயமா? அவர்கள் நண்பர்கள் என்பதாலா?  பொங்கல் கொண்டாடுவதில் உனக்கு என்ன தடை உள்ளது? பின் நவீனத்துவவாதிகள் நீயும் உன் வல்லினம் நண்பர்களும் என அறிவோம். உங்கள் கொள்கைகளை மலேசியத் தமிழர்கள் அனைவரும் பின் பற்ற வேண்டும் என நினைப்பது பேராசை. அவதூறும் பொய்யும் சொல்வதை நிறுத்து. மானியம் வாங்காமல் எப்படி அமைப்பை நடத்துவது? நீங்களெல்லாம் மானியம் வாங்குவதே இல்லையோ? மணிமன்றம் எதையுமே செய்யவில்லை என உன்னால் நிரூபிக்க இயலுமா? ஏன் மலாய்க்காரர்களின் இயக்கத்தில் உள்ளவர்கள் அரசியலில் இல்லையா? தமிழர்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? ஏன் இந்த நண்டு வேலை?

                                                                                                                                                                                                                                                                                      விசுவாசி

Continue reading

மணிமன்றத்தின் வீழ்ச்சி!

முரளி

முரளி

அண்மையில் ஒரு புலனச் செய்தி வாசித்தேன். மொரீசியஸுக்கு மலேசியாவின் உள்ள ஓர் இலக்கிய அமைப்பு பயண ஏற்பாடு செய்கிறது. அங்கு சென்று ‘எழுத்தாளர் பயணிகள்’ சில குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டு சில மணி நேரம் பழக விடுவார்கள். பின்னர் நாடு திரும்பிய பின் ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் அவர்களிடம் புலனத்தில் தமிழில் உரையாட வேண்டும். இதன் மூலம் அங்குள்ள இளம் தலைமுறையினரின் தமிழை வளர்க்கலாம். இதை வாசிக்கும்போதே இதுபோன்ற அபரிமிதமான அறிவுஜீவிதத் திட்டத்தை மலேசியாவில் வாழும் ஒருவர் மட்டுமே உருவாக்க முடியும் என பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதாலும் புலனத் தகவல் சம்பந்தப்பட்டவரிடமிருந்து எனக்கு நேரடியாக வராததாலும் ஆறாவது மாதம் வரை காத்திருந்து யார் அந்த ‘ஆளுமை’ என்றும் 6000 ரிங்கிட் செலுத்தி இந்த உன்னதத் திட்டத்தில் பங்கெடுக்கும் சிந்தனையாளர்கள் யார் என்றும் தெரிந்துகொள்ளலாம்.

Continue reading