கடிதம்/எதிர்வினை

கடிதம் 2 : நகம்

நகம் சிறுகதை

அன்புள்ள நவினுக்கு,

நகம் சிறுகதை வாசித்தேன். ஒரு கதையின் தொடக்கப்புள்ளி எங்கிருந்து வருகிறது என யோசிக்கத் தோன்றியது. இக்கதை உங்களுக்கு பேய் மாத காலத்தின் கடைசி நாள் கூத்து என்ற ஒற்றை நிகழ்விலிருந்து வளர்த்தெழுந்திருக்கலாம். ஆனால் ஒரு சிறுகதையின் வெற்றியில் மூன்று முக்கியமான விஷயங்களை இக்கதை கொண்டிருக்கிறது.

Continue reading

சு.வேணுகோபால், சாரு நிவேதிதா, ஷோபா சக்தி சில தெளிவுகள்

சேனன் எழுதிய ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவல் வெளியீட்டின் ZOOM பதிவை பார்த்தேன். அந்த நூல் குறித்து சாரு நிவேதிதாவின் உரை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதில் முக்கியமானது ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் சேனனின் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவலின் தழுவல் என்று சுற்றித்திரியும் அவதூறு குறித்த சாருவின் உரைப்பகுதி. எழுத்தாளனைச் சுற்றி உருவாக்கப்படும் இதுபோன்ற அவதூறுகளை பிற எழுத்தாளர்கள் எப்போதும் அனுமதிக்கக் கூடாது என விரும்புபவன் நான்.

Continue reading

தமிழ் விக்கிப்பீடியாவும் தரங்கெட்ட நிர்வாகமும்

‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்ட பிறகு நேர்காணலுக்காக அணுகிய சில ஊடகத்தினர் விக்கிப்பீடியாவில் முழு விபரங்களும் இருந்தால் முன் தயாரிப்புக்கு உதவியாக இருக்கும் என்றனர். என் புளோக்கிலேயே அனைத்து தகவல்களும் உள்ளதை நான் சுட்டிக்காட்டினேன். பொதுவான ஒரு தளத்தில் இருப்பது தங்களுக்கு எளிது என்றதால் என் ஆசிரியர் தோழி ஒருவர் எனக்கான விக்கிப்பீடியாவை உருவாக்க முன் வந்தார்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 7

பட்சி ஒரு அற்புதமான கதை, பறவைகளை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது, பறவைகளை புகைப்படம் எடுப்பதில் இருக்கும் முக்கியமான விதி பறவையைப்போலவோ, வேறு எந்த சத்தத்தின் மூலமாகவோ ஈர்க்க முயற்சிக்கக்கூடாது என்பது, செயற்கையான ஒரு சிறிய அதிர்வுகூட பறவைகளின் சூழ்நிலையில் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த விதிமீறல்தான் கதையின் முக்கியமான அம்சம்.

Continue reading

பட்சி: கடிதம் 6

பட்சி சிறுகதை

பொருட்களையும் உயிர்களையும் தனதாக்கி கொள்வதே தன் அகங்காரத்தின் இயல்பு. பெரும்பாலான நேரங்களில் அதனால் விளையும் மதிப்பொன்றுமில்லை.

மாலிக்கின் ஆசையும் அத்தகையதே. பணமிருந்து அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒருவன். திறமைக்கு கிடைதத அங்கீகாரத்தை பொருட்படுத்தாமல் பணத்தேவையுடைய ஒருவன்.

Continue reading

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல் (லதா)

ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளால் பல்வேறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் சார்ந்த அவதூறுகள் ஒரு எழுத்தாளரின் மேல் விழும்போது மௌனம் சாதிக்கும் சூழலில், பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக வெளிவந்த குரல்கள் பெரும்பாலும் பெண்களுடையவை என்பது ஆச்சரியமளிக்கிறது. மேலும், எழுதப்பட்ட கட்டுரைகளில் காணப்படும் விமர்சனப் பார்வை வல்லினத்தின் பத்தாண்டுகால முயற்சியின் பலனென உணர முடிகிறது. விரிவாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்ட ஒரு நாவல் குறித்து  எழுதுவதற்கு சில காரணங்கள் உண்டு.

Continue reading

காலம் தாண்டி நிலைக்கும் பேய்ச்சி (ப.தெய்வீகன்)

நாவல் என்பது காலமாற்றத்தின் இலக்கிய வடிவம்.

காலமாற்றத்திற்குள் தன்னை தொடர்ச்சியாக புதுப்புத்திக்கொள்கின்ற பண்பாட்டு கூறுகள் மீதான ஆழமான அவதானிப்புக்கள், அந்த மாற்றங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுகின்ற மானுட உணர்ச்சிகள், அவற்றின் மீதான மதிப்பீடுகள் ஆகியவற்றை நுட்பமாக பேசுகின்ற நாவல்கள் காலம்தாண்டிய பிரதிகளாக இலக்கியத்தில் நிலைபெறுகின்றன.

Continue reading

உள்மடிப்புகளால் உயிர்க்கும் பேய்ச்சி (பவித்திரா)

காலத்தைக் கிழித்துக் கொண்டு வரும் இயற்கையின் பூதாகரமான கரங்களால் இந்த நாவல் தன்னைத் தானே வடித்துக் கொண்டதாகதான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இந்த நாவலுக்குள் வந்து போன ஒவ்வொரு வாழ்க்கைக்குமான துயரம் ஓர் இரும்பு பிடி போல நம்மை உலுக்குபவை. இறுதியில் இந்த வாழ்க்கை, துயரத்தைப் போர்த்திக்கொண்ட வெறும் தூசுபடலம்தானோ என்ற வெறுமையின் உச்சத்தைக் கண்டடைகிறேன்.

Continue reading

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு (கி.இ.உதயகுமாரி)

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுத்துத் தின்றுவிடும் சாமி என்ற அச்சம் என்னை அதன் அருகில் போகவிடாமல் தடுத்தது. கொஞ்சகாலத்திற்குப் பிறகு வேறொரு கோயிலில் கைநிறைய கண்ணாடி வளையல்களுடன் சாந்தமான கோலத்தில் பெண்மையின் அம்சமாய் நின்றிருந்ததும் பேச்சிதான்.

Continue reading