கடிதம்/எதிர்வினை

வைரம்: ஒரு விவாதம்

அன்புள்ள நவீன்,

உங்கள் வைரம் கதை படித்தேன். நல்ல சிறுகதை, ஆனால் இது எனக்கான சிறுகதை அல்ல. இங்க கொஞ்சம் அழுத்தம் கூட்ட விரும்புகிறேன், இல்லையென்றால் இது தப்பான அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளப்படும். மேலும் இந்த கடிதம் வைரம் கதைக்கான வாசிப்பு அனுபவமாக எழுதாமல், ஒரு விவாத கட்டுரையாக எழுதலாம் என தோன்றியது. காரணம் அடுத்தடுத்த நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் (நகம், வைரம்) அதனை ஒட்டி வந்த கடிதங்கள். இந்த இரண்டு கதைகளுக்கான வாசிப்பை கூறி அதிலிருந்து இப்போது சிறுகதைக்கான டிரெண்ட் என்ன என்பதை சொல்லலாமென நினைக்கிறேன்.

Continue reading

வைரம்: கடிதம் 2

வைரம் சிறுகதை

நவீன்,

ஒரு வெற்றிகரமான சிறுகதை அதன் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற்றிருக்கும். வைரம் அத்தகைய சிறுகதை. ஒரு உயர்தர சிறுகதையைப் படித்தபின் நம்முள் கிளைவிட்டு வளரும் மலர்ந்த கனியை நாம் பறிப்போம். வைரம் அந்த வகையில் கூட உயர்தரமான சிறுகதை. ஓர் ஆழமான சிறுகதை வாழ்க்கையில் இருந்து பெற்ற வினாக்களை வாழ்க்கையை நோக்கி ஏவும், இம்முகத்திலும் வைரம் ஆழமிக்க சிறுகதை.

Continue reading

வைரம் : கடிதம் 1

வைரம் சிறுகதை

நவீன் நலம்தானே…

அடுத்தடுத்த சிறுகதைகளை உங்களிடமிருந்து பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கொடுங்காலத்தில் கலைஞர்கள் செய்ய வேண்டிய பணி அதுதானே. உங்கள் ‘நகம்’ சிறுகதை என்னை நெருங்கி வராததை குறித்து கடிதம் எழுதி இரண்டு வாரத்தில் ‘வைரம்’ சிறுகதை. ஆனால் எனக்கு இக்கதை மிகவும் நெருக்கமான கதையாகிவிட்டது. ஆச்சரியம்தான்.

Continue reading

கடிதம் 3 : நகம்

நகம் சிறுகதை

அன்புள்ள நவீனுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அம்மாவைப் போல நகங்களில் சாயமிடவும், நன்றாகப் படித்து குளிரூட்டப்பட்ட அறையில் குமாஸ்தா வேலை செய்யவும் ஆசைப்படுகிறாள் வளர்மதி.  துரத்தும் வாழ்வு  கையறு நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

Continue reading

கடிதம் 2 : நகம்

நகம் சிறுகதை

அன்புள்ள நவினுக்கு,

நகம் சிறுகதை வாசித்தேன். ஒரு கதையின் தொடக்கப்புள்ளி எங்கிருந்து வருகிறது என யோசிக்கத் தோன்றியது. இக்கதை உங்களுக்கு பேய் மாத காலத்தின் கடைசி நாள் கூத்து என்ற ஒற்றை நிகழ்விலிருந்து வளர்த்தெழுந்திருக்கலாம். ஆனால் ஒரு சிறுகதையின் வெற்றியில் மூன்று முக்கியமான விஷயங்களை இக்கதை கொண்டிருக்கிறது.

Continue reading

சு.வேணுகோபால், சாரு நிவேதிதா, ஷோபா சக்தி சில தெளிவுகள்

சேனன் எழுதிய ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவல் வெளியீட்டின் ZOOM பதிவை பார்த்தேன். அந்த நூல் குறித்து சாரு நிவேதிதாவின் உரை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதில் முக்கியமானது ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் சேனனின் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவலின் தழுவல் என்று சுற்றித்திரியும் அவதூறு குறித்த சாருவின் உரைப்பகுதி. எழுத்தாளனைச் சுற்றி உருவாக்கப்படும் இதுபோன்ற அவதூறுகளை பிற எழுத்தாளர்கள் எப்போதும் அனுமதிக்கக் கூடாது என விரும்புபவன் நான்.

Continue reading

தமிழ் விக்கிப்பீடியாவும் தரங்கெட்ட நிர்வாகமும்

‘பேய்ச்சி’ நாவல் தடைசெய்யப்பட்ட பிறகு நேர்காணலுக்காக அணுகிய சில ஊடகத்தினர் விக்கிப்பீடியாவில் முழு விபரங்களும் இருந்தால் முன் தயாரிப்புக்கு உதவியாக இருக்கும் என்றனர். என் புளோக்கிலேயே அனைத்து தகவல்களும் உள்ளதை நான் சுட்டிக்காட்டினேன். பொதுவான ஒரு தளத்தில் இருப்பது தங்களுக்கு எளிது என்றதால் என் ஆசிரியர் தோழி ஒருவர் எனக்கான விக்கிப்பீடியாவை உருவாக்க முன் வந்தார்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 7

பட்சி ஒரு அற்புதமான கதை, பறவைகளை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது, பறவைகளை புகைப்படம் எடுப்பதில் இருக்கும் முக்கியமான விதி பறவையைப்போலவோ, வேறு எந்த சத்தத்தின் மூலமாகவோ ஈர்க்க முயற்சிக்கக்கூடாது என்பது, செயற்கையான ஒரு சிறிய அதிர்வுகூட பறவைகளின் சூழ்நிலையில் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த விதிமீறல்தான் கதையின் முக்கியமான அம்சம்.

Continue reading

பட்சி: கடிதம் 6

பட்சி சிறுகதை

பொருட்களையும் உயிர்களையும் தனதாக்கி கொள்வதே தன் அகங்காரத்தின் இயல்பு. பெரும்பாலான நேரங்களில் அதனால் விளையும் மதிப்பொன்றுமில்லை.

மாலிக்கின் ஆசையும் அத்தகையதே. பணமிருந்து அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒருவன். திறமைக்கு கிடைதத அங்கீகாரத்தை பொருட்படுத்தாமல் பணத்தேவையுடைய ஒருவன்.

Continue reading