
தாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.
Continue readingதாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.
Continue reading2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.
Continue reading“தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தின் 3-ஆம் தேதி. மலேசிய வாழ்கை முடிவடைந்து ‘கிரீன் ப்ளாண்டேசன் சர்வீஷ்” விசாவில் தாயகம் திரும்பியது, 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இக்காலகட்டத்தில், மலேசிய இலக்கிய உலகுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அங்கிருந்த கடைசி ஆண்டுககளில்தான். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர் கோணங்கி அவர்கள். மலேசியாவின் சுண்ணாம்பு மலையை திருடிப்போக வந்திருந்தார் கோணங்கி. ம.நவீன் அப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.
Continue reading2019 ஆம் ஆண்டு ம. நவீன் தனது முதல் நாவலான ‘பேய்ச்சியை’ வெளியிட்டார். மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் நிகழ்ந்த சாராய சாவு எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்ட நாவல். முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வு தொடங்கி தோட்ட வாழ்வு வரை முன்னும் பின்னுமாக ஊடாடும் கதை. பேய்ச்சியின் மையம் என்பது தாய்மைதான். ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதையில் வரும் பகவதி, மூத்தம்மை இளையம்மை என இரண்டு வடிவில் இருப்பாள். பிள்ளையை இடுப்பில் சுமந்தவளாகவும் வாயில் கவ்வி கடித்து உண்பவளாகவும் காட்சியளிப்பாள். பேய்ச்சி நாவலும் இதையொட்டி தாய்மையின் இரு வடிவங்களையம் காட்டுகிறது. ஒரே அன்னையே கௌரியாகவும் காளியாகவும் ஆகிறாள். நவீனின் இரண்டாவது நாவலான சிகண்டியின் மைய பேசுபொருளும் தாய்மைதான். தாய்மையை பால் அடையாளத்திலிருந்து துண்டிக்கிறது சிகண்டி. தாய்மையையும் பெண்மையையும் எய்தத்தக்க ஒரு நிலையாக முன்வைக்கிறது. இந்த தரிசனம் தமிழுக்கு புதிதல்ல. சு. வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ சட்டென நினைவுக்கு வருகிறது.
Continue readingஅனைவருக்கும் வணக்கம்
நான் வாழ்ந்த லுனாஸ் வட்டாரத்தில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ‘பேய்ச்சி’ நாவலில் அந்தக் கோயிலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் மண்டபத்தில் தேர் ஒன்று ஓரமாக ஒதுங்கி நிற்கும். திருவிழாவின்போது மட்டுமே அதை கண்டுகொள்வார்கள். மற்ற நாட்களில் அது எங்கள் விளையாட்டு பொருள்களில் ஒன்று. திருவிழாவின்போது அதை மண்டபத்தில் இருந்து இழுத்துச் சென்று பெரிய காளை மாடுகளுடன் இணைக்க வேண்டி இருக்கும். அது சாதாரண காரியமல்ல. அவ்வளவு சீக்கிரம் தேர் நகராது. ஆனால் அதை இழுத்துச் சென்று மாட்டிடம் இணைப்பதே ஒரு மங்கள செயலாகக் கருதப்பட்டதால் பலரும் தங்கள் கைகளை தேரில் வைத்திருப்பார்கள். ஐம்பது அறுபது கரங்கள் அதில் பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில இளைஞர்களின் பலத்தால்தான் அந்தத் தேர் நகரும். அவர்களே அதில் பிரதானமானவர்கள். மூச்சுத்திணர தேரை இழுத்து மாட்டுடன் பூட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.
Continue readingஎழுத்தாளர் சங்கத்தின் ஆண்டறிக்கையை இன்று வாசிக்க நேர்ந்தது. அதில் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு செடிக் (SEDIC) மூலம் ரி.ம 72,000 கொடுக்கப்பட்டதாகவும் அப்பணத்தை எழுத்தாளர் சங்கம் அவ்வமைப்பிடமே திரும்ப கொடுத்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. சங்கம் திட்டமிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு 240,000 ரிங்கிட் தேவைப்பட்டதாகவும் ஆனால் 72,000 மட்டுமே கிடைத்ததால் அப்பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையிலேயே சங்கத்தின் பதிலும் உள்ளது.
Continue readingநம் இந்திய மனங்களுக்கு மகாபாரதம் வழியாக அறிமுகமாகும் சிகண்டி என்ற கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பீஷ்மர் என்ற ஆளுமையால் மட்டுமே நிலைகொள்கிறது. இந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டால் நாம் அருவருப்புடன் முகம் சுளிக்கும் அல்லது அவமானப்படுத்தும் ஒருவனாகத்தான் சிகண்டிஇருந்திருப்பான். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ வாசிக்கும் வரை நானும் தினசரி வாழ்வில் சிகண்டிகளைச் சந்திக்க நேர்ந்தால் ஒருவித அசூயையுடன் ஒதுங்கிச் சென்றவள்தான். ஆனால் வாசித்த பிறகு, தனது அன்னைக்காக ஒற்றை இலக்குடன் வாழ்ந்து வென்றவள் அவளென அறிந்தபோது மகாபாரத சிகண்டி மீதும் தனது பால் அடையாளத்தை சமூகத்தில் நிலை நிறுத்துவதைஒற்றை இலக்காகக் கொண்டு போராடும் மற்ற சிகண்டிகள் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.
Continue readingஇரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.
Continue readingம.நவீன் மலேசியாவில், கெடா, லூனாஸ் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவருடைய முதல் நாவலான பேய்ச்சியைப் போலவே இந்த நாவலும் முழுக்கவே மலேசியப் பின்னணியில் நடைபெறும் கதை. அதைப் போலவே இந்த நாவலும் கோவிலிலேயே ஆரம்பிக்கிறது.
தீபன் என்னும் சிறுவனின், பதின்ம வயதில் இருந்து இருபது வயது வரையிலான கதையே இந்த நாவல். எதிர்பாராமல் ஒரு நிகழ்வினால் திடீரென ஆண்மைக்குறைவு நோய்க்கு ஆளாகும் தீபன், ஆண்மையை மீட்டெடுக்க சகலவிதமான முயற்சிகளையும் எடுக்கின்றான். பதின்ம வயதின் பாலியல் பற்றாக்குறையில் இருந்து பாலியல் உறவுகள் அபரிதமாகக் கிடைக்கும் இடத்திற்குப் போய் சேர்ந்தது, அவனது ஆண்மைக்குறைவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. பாட்டனைப் போலவே வயதுக்கு மிஞ்சி ஆஜானுபாகுவான தோற்றத்தில், எல்லோரையும் பயமுறுத்தும் வேலையில் இருப்பவனுக்கு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத குறைபாடு.
Continue readingம. நவீனின் சிகண்டி நாவல் திருநங்கையரைப் பற்றிய முதன்மையான நாவல் என்றும் மலேசியாவின் இருண்ட நிழல் உலகத்தைப் பற்றி நுட்பமாக விவரிக்கும் நாவலென்றும் அறிமுகக் கூட்டங்களில் கூறப்படுகிறது. ஆனால் இந்நாவல் ஒரு தேவதையின் கதை என எனக்குத் தோன்றுகிறது.
Continue reading