க‌விதை

மாயாவின் ஜனனம்

dark-darkness-girl-light-lost-favim-com-118417ஆதி இருள்

ஆதிக்கும் ஆதியில் உலகில் இருந்தது என்னவென்று கேட்ட மாயாவிடம்
இருள் என்றேன்

 

அவள் வெளியே விரல்களை நீட்டி
அந்த இருளா என்றாள்.

வாகனங்களும் தெருவிளக்கும் நட்சத்திரங்களும்கூட இல்லாத
மாபெரும் ஆதி இருள்
அகப்படாது என்றேன்.

கதவையும் சன்னல்களை அடைத்து
இந்த இருளா என்றவள்
நான் பதில் சொல்லும் முன்பே
விளக்கின் விசைகளை அடைத்து
எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய தீபத்தையும் ஊதினாள்

அது அளவிட முடியாத
அடர்தியான இருள் என்றேன்

அருகில் வந்தவள்
இந்த இருளா என்றாள்

நான் அவள் முகத்தைத் தடவித்தேடி
மூடியிருந்த கண்களை அடைந்தேன்

ஆதி இருள்
இரு சிறு விழியளவு
அவளிடம்
அகப்பட்டிருந்தது.

***

Continue reading

கவிதை : நிரந்தரம்

butterfly-8205கூட்டைக்கிழித்த
ஒரு வண்ணத்துப்பூச்சி
பிரபஞ்சத்தை நோக்கி பறப்பதை கவனித்துள்ளீர்களா?
இதற்கு முன்
பறக்கும் எதையுமே பார்த்திடாத அது
தன் மெலிதினும் மெலிதான இறக்கை விரித்து
மொத்த வானமும் தனக்கென நம்புவதை
தக்கவைக்கவாவது
உடனடியாகக் கொன்று
பாடம் செய்து வைக்க வேண்டியுள்ளது

கவிதை : தப்பித்தல்

smoke-636x310ஒரு பேருந்தை தவற விடுவதுபோல
திரைப்படத்தின் ஓர் அபாரக் காட்சியில் மின்சாரம் நிர்ப்பதுபோல
இரு பறவைகள் மிகச்சரியாக நிலவுக்கு முன் பறந்து கடக்கும் தருணம்
காமிரா செயலிழப்பது போல
வரம் கேட்கும் நிமிடம் சொற்கள் திக்குவதுபோல
உணர்ச்சியற்ற ஒருவனின் முதல் கண்ணீரை அவதானிக்கும் முன்
காய்ந்து கனவாவதுபோல
முதன் முதலாய் வெளியேறும் விந்தின் சுவாரசியத்தை
நினைவில் சேமிக்காததுபோல
அத்தனை அபத்தமானவை
என்னைப்பற்றிய எல்லா புகார்களுக்குமான
தண்டனைகள் இல்லாமல் போகும் ஆச்சரியம்

கவிதை : ஆயுதம் ஏந்தாத வீரன்

1நீங்கள் அன்பு செய்ய முடிவெடுத்தப்பின்
ஆயுதங்கள் ஏந்தாத வீரனாக
உங்களை
கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

ஆயுதம் ஏந்தாத வீரன்
பாய்ந்துவரும் கணைகளை தடுப்பானேயன்றி
தாக்கமாட்டான்

Continue reading

கவிதை : பறவை

mmமின்கலம் தீர்ந்துவிட்ட மடிக்கணினியை
வேறெதுவும் செய்யத்தோன்றாமல்
வலதுபுறம் திரும்பி
சன்னலைப்பார்க்கிறேன்.
இரண்டு தலைகள் நுழையும் அளவில் வானம்.
ஒரு பறவை இந்த மூலையில் தொடங்கி
அங்கே சென்று மறையும் வரை
இறக்கையைச் சிலதரம் அசைத்தது.
மின்கலம் தீர்ந்த மடிக்கணினியை
ஓரிருதரம் மூடி மூடி திறந்தேன்.

20.9.2014 – இரவில் எழுதிய கவிதைகள் (wine துணையுடன் )

by navin

by navin

நான்
பிரிவு பற்றி கூறியதை
புரிந்துகொள்ள முடியாத
உன் சூன்யப் பெருவெளிக்கு
சில உதாரணங்கள் காட்டினேன்

Continue reading

சுதந்திரம்

சட்டென சந்திக்கும் பெண்ணிடம்
எழும் காமத்தை…
காதல் தீர்ந்துவிட்ட கணத்தின்
கசப்பை…
உன் நட்பு இனி தேவையில்லை
என்ற வெறுப்பை…
இதற்காகத்தான் பழகினேன்
என்ற உண்மையை…
நான்தான் குற்றவாளி
என்ற வாக்குமூலத்தை…
எனக்கு யாருமே தேவையில்லை
என்ற இறுமாப்பை…
நான் மரணத்தை மட்டுமே விரும்புபவன்
என்ற மௌனத்தைசத்தமிட்டு சொல்லமுடியாதவரை
இந்த வாழ்க்கை
சுதந்திரமற்றதுதான்.

Continue reading

இன்றிரவு நான் தூங்கப்போகிறேன்

நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்

இவ்விரவில் தூங்கப்போகும் முன்
கதவுகளை சன்னல்களை அடைக்க வேண்டும்
காற்று அதன் ஓரங்களை உரசாமல் இருக்க
பாரங்களை நகர்த்தி முட்டுக்கொடுக்க வேண்டும்
தொலைக்காட்சி வானொலியிலிருந்து
ஓசை எழாமல் இருக்க
அதை முற்றிலும் சேதமுற செய்ய வேண்டும்
நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்.
Continue reading

காலணியில் கதை சொல்பவள்

சிறையிலிருந்து மீண்டு
தனியாக வாழும் அவள்
தன் வீட்டு வாசலில்
காலணிகளைச் சேகரித்து வைக்கிறாள்
பல வண்ணங்களில்
பல பிராண்டுகளில்
பல அளவுகளில்

Continue reading