கட்டுரை/பத்தி

சோரம் போனவனின் சொற்கள் : 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்து…

மாநாட்டில் கலந்துகொண்ட முதல் நாளிலிருந்து ‘எதையும் வெளிப்படையாக பேசாதே… உனக்குத்தானே தலைவலி. எல்லாருக்கும் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துண்டு. ஆனால் இப்படிப் பேசிப்பேசி கிடைக்கப்போகும் நன்மைகளை கெடுத்துக்கொள்வதில்லை. நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய்…’ என்பது போன்ற அறிவுரைகள் தொடர்ந்து பல நலவிரும்பிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தன. ‘வல்லினம்’ நிகழ்வை தவிர்த்து கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்விலும் அதிகம் கலந்துகொள்ளாததால் பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்தது உற்சாகமாக இருந்தது. பலருக்கும் என்னைப் பார்த்தவுடன் நலன் விசாரிப்பதைவிட அறிவுரை சொல்லவே தோன்றியது. கெட்டு சீரழிந்து போயிருக்கும் நான், அவர்கள் அறிவுரை மூலம் உணர்ந்துகொண்டது முதலில் சோரம் போக பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். எனவே இந்தப் பதிவை சோரம் போன மனநிலையில்தான் எழுத வேண்டியுள்ளது.

Continue reading

டோட்டோ சானும் நமது கல்வி முறையும்

டோட்டோ-சான்கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார்.

எனக்குத் தோழியின் பதில் ஆச்சரியமாக இருந்தது. மேலும் அங்குள்ள கல்வி சூழல் குறித்து அறியும் ஆவலில் பேசத்தொடங்கினேன்.  சுதந்திரமான கல்வி முறை. கற்பனை ஆற்றலை வளர்க்கும் பாடத்திட்டம். திறனை மையப்படுத்தியப் பள்ளிகள் என கவர்ச்சிகரமான கல்விச்சூழலை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருந்தது. அவர் பேச பேச எனக்கு Tetsuko Kuroyanagi எழுதிய ‘Totto-chan, The Little Girl at the Window’ எனும் நூல் ஞாபகத்துக்கு வரத் தொடங்கியது.

Continue reading

போலி அறிவுவாதமும் மலேசிய கலை உலகமும்!

மலேசிய கலை இலக்கிய வெளிபாட்டின் மீது எனக்கு எப்போதும் எதிர்பார்ப்பும் அதைவிட அதிக ஏமாற்றமும் உண்டு. ஊடகங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு சில கலை ஆக்கங்களைத் தூக்கிப்பிடிக்கத் தொடங்கும்போது அவற்றை ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் போலி அறிவுஜீவித்தனங்களாகவே  (Pseudo Intellectuals) உள்ளன.  இந்தப் போலி அறிவுஜீவிகளை அடையாளம் காட்டுவது மிகக் கடினம். காரணம், அவர்கள் சமூகத்தால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஏதோ மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் போல ஊடகங்களால் முன்னிறுத்தப்படுவார்கள். இவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரே வழி இவர்களின் படைப்புகளைக் கட்டுடைத்துப்பார்ப்பதுதான்.

Continue reading

ஒழுங்கில்லா இளம் எழுத்தாளர் கூட்டமும் ஒருமையின்மையும்

‘பின் நவீனத்துவம்’ என்ற வார்த்தை தமிழில் நாசப்பட்ட நிகழ்வு போல வேறெந்த மொழிகளிலாவது நேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அச்சொல்லை உச்சரிப்பதால் இலக்கியத்தின் மிக சமீபத்திய நகர்வுடன் சரி சமமாய் பயணிப்பது போல எப்படி பாவனை காட்டப்படுகிறதோ அதே அளவுக்கு அதை மறுப்பதாய் சொல்பவர்கள் மத்தியிலும் நிகழ்த்தப்படுகிறது.

Continue reading

ஞானக்கூத்தன் : மழைக்குளம்

12‘விஷ்ணுபுரம் விருது’ ஞானக்கூத்தனுக்குக் கிடைக்கின்றது என அறிந்த அன்று அவர் கவிதைகள் அறிமுகமான தினம் ஒரு மந்தமான நினைவாய் முறையற்று ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. ஒரு கவிதை வாசகனுக்கு அவனது ஆரம்பகால கவிதை ரசனையைக் கூர்மை செய்தவர்கள் இலக்கிய வாழ்வில் ஒரு பகுதியாகி விடுகின்றனர். எங்கு எப்போது கவிதை குறித்து பேசினாலும் அந்த ஆளுமையை வலிந்து இழுத்து,துணைக்கு வைத்துக்கொள்கிறது நினைவு .

Continue reading

கடிதம் : காலில் தப்பும் பந்துகள்

ஒரு ஒரு பத்திக்கு நடுவில் நிறுத்த முடியாமல் சிரித்து சிரித்து வாய் வலித்துவிட்டது. கால்பந்து ஏதோ ஆண்களுக்கானது போலவும் அதை விளையாட அது தொடர்பாக பேச இயலாதவர்கள் ஏதோ ஆண்களே இல்லை என்பதுபோல் பார்க்கும் விதம் அனேகமாக எல்லா எல்லா இனங்களிடத்திலும் இருக்குமென நினைக்கிறேன். இதற்கு பின் ஏதோ அரசியல் பொருளாதார தந்திர வேலைகள் இருக்குமோ? இந்த பத்தியில் முக்கிய பகுதி அதன் கடைசி வாக்கியம்.

உங்களுக்கு மட்டுமல்ல நவீன்,  பலருக்கும் இப்படித்தான். கெளரவம் கருதி வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அவ்வளவே…
விஜயலட்சுமி
டேய், பழைய ஞாபகங்களை அசைப்போட வைத்தாய்
தோமஸ்

காலில் தப்பும் பந்துகள்

football-fiesta-salisburyநான் பிறந்து வளர்ந்ததெல்லாம் லுனாஸில் உள்ள  கம்பங்களில். பன்மையில் சொல்லக்காரணம் இரு கம்பங்கள் சார்ந்து வாழ்விருந்ததால்தான். முதல் கம்பமான கம்போங் லாமாவில் வெளியே செல்லவே அனுமதி இல்லை. மண்ணை மிதிக்கக் கட்டுப்பாடு. பக்கத்து வீட்டு எல்லைக்குச் சென்றுவிட்டால் அணு ஆயுதங்களைவிட பயங்கரமான ஆயுதங்களால் நான் தாக்கப்பட சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் செட்டிக்கம்பத்தில் நல்ல சுதந்திரம். விசாலமான கம்பம் அது. மிக அருகாமையில் திடல் கூட இருந்தது.

Continue reading

விஜயாவின் கடிதம்: படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா?

karthik 3நவீன்,

கலை வடிவங்களை எளிமையான சொற்களில் உங்கள் முன்னனுபவம், வாசிப்பனுபவம், பிற ஆளுமைகளின் கருத்து எனும் அடிப்படையில் வெறும் கலைசார், வாழ்வுசார் விமர்சனமாக முன் வைப்பது நல்ல புரிதலைக் கொடுக்கிறது. உங்கள் விமர்சன கட்டுரைகள் ஓரளவு ஆய்வுபூர்வமான ஒப்பீடுகள் இருப்பது கூடுதல் சிறப்பு. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் முக்கியமானதாக உணர்கிறேன். கலைகள்பால் நுட்பமான ஆழமான புரிதலுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் அவசியம். தொடர்ந்து எழுதுங்கள்.//ஒழுங்குகளில் கலை வருவதில்லை. கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் கட்டுப்பாட்டை மீறாமையும் உழைப்பாளிகளை உருவாக்குமே தவிர படைப்பாளனை உருவாக்காது.// அப்படியென்றால் படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா? அல்லது எதை ஒழுங்கு ஒழுங்கின்மை என்றும் கூறுவது?

விஜயாலட்சுமி

Continue reading

எழுத்தும் எதிர்பார்ப்பும்

Kuraiyondrumillai back(f)-1

பிரம்மானந்த சரஸ்வதி

அன்புமிக்க சுவாமி,

முதலில் நான் உங்கள் ரசிகன்.  சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்தே.  அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில் சமய வகுப்பு நடக்கும்.  நான் எங்கள் வெல்லஸ்லி பள்ளியில் பிரதான பாடகர்களின் ஒருவன்.  தேவாரம், திருவாசகம், மந்திரங்கள் என ஒன்று விடாமல் நல்ல மனனம். மாதத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியிலிருந்து பேருந்து உங்கள் தியான ஆசிரமத்திற்கு புறப்படும்.  காலையில் எட்டு மணிக்கு அங்கு வந்தால் நான்கு மணிக்குத்தான் வகுப்பு முடியும்.

Continue reading

கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 4

0001அன்று இரவே கிராண்ட் பசிப்பிக் விடுதியில் 10க்கும் மேற்பட்ட திரைத்துறையைச் சார்ந்தவர்களோடு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. லீனா மணிமேகலையின் தேவதை மற்றும் செங்கடல் படம் ஒளிபரப்பாக பின்னர் விவாதங்கள் நடந்தன. லீனா நண்பர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார். எல்லா கேள்விகளையும் சந்தேகங்களையும் விடவும் ஒரு படைப்பாளியின் நேர்மையான ஆக்கமே பல விடயங்களைப் பேசும் என நான் நம்புபவன். எனவே லீனாவின் ஆவணப்பட முயற்சி எதை பேச விரும்புகிறது என்ற பிரக்ஞையை உருவாக்கியிருக்கும்.

Continue reading