ஒரு ஒரு பத்திக்கு நடுவில் நிறுத்த முடியாமல் சிரித்து சிரித்து வாய் வலித்துவிட்டது. கால்பந்து ஏதோ ஆண்களுக்கானது போலவும் அதை விளையாட அது தொடர்பாக பேச இயலாதவர்கள் ஏதோ ஆண்களே இல்லை என்பதுபோல் பார்க்கும் விதம் அனேகமாக எல்லா எல்லா இனங்களிடத்திலும் இருக்குமென நினைக்கிறேன். இதற்கு பின் ஏதோ அரசியல் பொருளாதார தந்திர வேலைகள் இருக்குமோ? இந்த பத்தியில் முக்கிய பகுதி அதன் கடைசி வாக்கியம்.
கட்டுரை/பத்தி
காலில் தப்பும் பந்துகள்
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் லுனாஸில் உள்ள கம்பங்களில். பன்மையில் சொல்லக்காரணம் இரு கம்பங்கள் சார்ந்து வாழ்விருந்ததால்தான். முதல் கம்பமான கம்போங் லாமாவில் வெளியே செல்லவே அனுமதி இல்லை. மண்ணை மிதிக்கக் கட்டுப்பாடு. பக்கத்து வீட்டு எல்லைக்குச் சென்றுவிட்டால் அணு ஆயுதங்களைவிட பயங்கரமான ஆயுதங்களால் நான் தாக்கப்பட சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் செட்டிக்கம்பத்தில் நல்ல சுதந்திரம். விசாலமான கம்பம் அது. மிக அருகாமையில் திடல் கூட இருந்தது.
விஜயாவின் கடிதம்: படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா?
கலை வடிவங்களை எளிமையான சொற்களில் உங்கள் முன்னனுபவம், வாசிப்பனுபவம், பிற ஆளுமைகளின் கருத்து எனும் அடிப்படையில் வெறும் கலைசார், வாழ்வுசார் விமர்சனமாக முன் வைப்பது நல்ல புரிதலைக் கொடுக்கிறது. உங்கள் விமர்சன கட்டுரைகள் ஓரளவு ஆய்வுபூர்வமான ஒப்பீடுகள் இருப்பது கூடுதல் சிறப்பு. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் முக்கியமானதாக உணர்கிறேன். கலைகள்பால் நுட்பமான ஆழமான புரிதலுக்கு இதுபோன்ற விமர்சனங்கள் அவசியம். தொடர்ந்து எழுதுங்கள்.//ஒழுங்குகளில் கலை வருவதில்லை. கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் கட்டுப்பாட்டை மீறாமையும் உழைப்பாளிகளை உருவாக்குமே தவிர படைப்பாளனை உருவாக்காது.// அப்படியென்றால் படைப்பாளிகள் ஒழுங்கற்றவர்களா? அல்லது எதை ஒழுங்கு ஒழுங்கின்மை என்றும் கூறுவது?
விஜயாலட்சுமி
எழுத்தும் எதிர்பார்ப்பும்
அன்புமிக்க சுவாமி,
முதலில் நான் உங்கள் ரசிகன். சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்தே. அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில் சமய வகுப்பு நடக்கும். நான் எங்கள் வெல்லஸ்லி பள்ளியில் பிரதான பாடகர்களின் ஒருவன். தேவாரம், திருவாசகம், மந்திரங்கள் என ஒன்று விடாமல் நல்ல மனனம். மாதத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியிலிருந்து பேருந்து உங்கள் தியான ஆசிரமத்திற்கு புறப்படும். காலையில் எட்டு மணிக்கு அங்கு வந்தால் நான்கு மணிக்குத்தான் வகுப்பு முடியும்.
கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 4
அன்று இரவே கிராண்ட் பசிப்பிக் விடுதியில் 10க்கும் மேற்பட்ட திரைத்துறையைச் சார்ந்தவர்களோடு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. லீனா மணிமேகலையின் தேவதை மற்றும் செங்கடல் படம் ஒளிபரப்பாக பின்னர் விவாதங்கள் நடந்தன. லீனா நண்பர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்தார். எல்லா கேள்விகளையும் சந்தேகங்களையும் விடவும் ஒரு படைப்பாளியின் நேர்மையான ஆக்கமே பல விடயங்களைப் பேசும் என நான் நம்புபவன். எனவே லீனாவின் ஆவணப்பட முயற்சி எதை பேச விரும்புகிறது என்ற பிரக்ஞையை உருவாக்கியிருக்கும்.
கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 3
லீனா மணிமேகலை மலேசியாவுக்கு வருகிறார் என அறிந்தப்பின் பல்வேறு விதமான ஆலோசனைகளும் எதிர்ப்புகளும் முணகல்களும் காதுகளுக்கு எட்டவே செய்தன. இது எனக்கு பழக்கமானதுதான். என்னளவில் நான் ஒருவரை அழைக்க தனிப்பட்ட காரணங்கள் இருப்பதில்லை. மலேசிய கலை இலக்கிய உலகுக்கு அவர்களின் வருகை ஏதோ ஒருவகை மாற்றத்தை உருவாக்கும் என்றே இப்பணியைத் தொடர்ந்து செய்கிறோம். ஆனால், அப்படி அழைக்கப்படுபவர் அனைவருமே அன்புக்குறியவர்கள்.
கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள் – 2
சிங்கையிலிருந்து புறப்பட்ட அன்றுதான் லீனாவும் அந்த தவறை கவனித்தார். சூழல் பரபரப்பானது. அவர் சிங்கை வந்து சேரும் நேரம் மாலை ஆறு. எனவே அதற்குப்பின்பே விமான டிக்கெட் போட வேண்டும். ஒரு உணவகத்தில் அமர்ந்தேன். மீண்டும் டிக்கெட் போட்டபோதுதான் நிம்மதி. முதலில் இரவு 11 மணிக்குப் போடலாமா என யோசித்தோம். மூன்று மணி நேரம் காத்திருப்பதா என யோசித்து ஒன்பது மணிக்கு போட்டேன்.
கலை இலக்கிய விழா 6 – சில நினைவுகள்
கடந்த ஆண்டு இறுதியில் வல்லினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டோம். தாஜ் கார்ட்னில் அந்தக் கூட்டம் நடந்தது. அதில் முக்கியமாக மாற்று சினிமா அல்லது ஆவணப்படம் தொடர்பான சிந்தனைகளை இளம் தலைமுறை இயக்குனர்களிடம் விதைப்பதாய் எங்கள் திட்டம் இருந்தது. லீனா மணிமேகலை அடுத்த ஆண்டு வந்துகலந்துகொள்வார் என நான் முடிவெடுத்துக்கூறியபோது நண்பர்கள் அனைவரும் சம்மதித்தனர். ஆனால் அதுவரை லீனாவிடம் முன் அனுமதியோ அவரது கால அட்டவணையையோ கொஞ்சமும் சோதிக்கவில்லை.
நாத்திகம்; பொதுவுடமை; மற்றும் போலிகள்
இன்று காலையில் ஒருவர் வீட்டுக்கு மணிமொழியுடன் சென்றிருந்தேன். பறை இதழ் கேட்டிருந்தார். 50 வயதைக் கடந்த பெண்மணி. “எனக்குத் தெரியும் தம்பி. நீங்க தீபாவளியெல்லாம் கொண்டாட மாட்டீங்க. எம்பையன்தான் சொல்வான். கம்ப்யூட்டர்ல உங்கள படிப்பான். ஆனா பாருங்க நம்மால அது முடியாது. பெருநாள் வந்தாதான் சொந்தங்களையெல்லாம் பார்க்க முடியுது. அப்புறம் நான் நல்லா சாமியெல்லாம் கூம்பிடுவேன்” என்றார் .
பெண் எழுத்து
இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின் குரல்களோடு இணைந்திருக்கும். அது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அதுபோன்ற கோஷங்கள் எழுப்ப அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. எதையும் வாசிக்க வேண்டியதும் இல்லை. ஆனால் பொது பார்வையில் அந்தக் கூச்சலும் சர்ச்சையின் ஒரு பகுதியாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கவனம் பெறும்.