ஒலிப்பேழை: கடிதம் – சிவமணியன்

சிறுகதை: ஒலிப்பேழை

அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மதுரைக்கு மேற்கில் தேனி செல்லும் சாலையின் நேரிணையாக உள்ள மலைத்தொடர் நாகமலை எனப்படுகிறது. வறண்ட தாவரங்களால் அடர்ந்து, பெரும்பாலும் செங்குறுங்கற்களாலான மர்மத் தனிமை கொண்ட குட்டி மலைத்தொடர் அது. எதிர்க்காற்றின் செம்மண் தூசு கண்களை நீர்க்க வைக்க வைக்கும் அந்தப் பகுதிதான், வடிவேலுவிடம் பஞ்சாயத்து பேசிய சங்கிலி முருகன் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களின் பின்புலம்.

Continue reading

அஞ்சலி: கோவை ஞானி

கோவை ஞானி இறந்துவிட்டதாக எழுத்தாளர் அர்வின் குமாரிடமிருந்து தகவல் வந்தபோது இணையத்தில் அதை ஒருதரம் உறுதி செய்துக்கொண்டேன். நீரிழிவு பாதிப்பினால் கண் பார்வை இழந்த நிலையிலும் உதவியாளர்கள் மூலமாக வாசிப்பதையும் எழுதுவதையும் விட்டு விலகாத அவர் தனது 86ஆவது வயதில் அனைத்தையும் முழுமையாக நிறுத்திக்கொண்டுள்ளார் எனத் தோன்றியது.

Continue reading

வாழைமர நோட்டு: சிங்கப்பூரில் ஜப்பானிய ஆதிக்கம்

தோக்கியோவிலிருந்து வேலை நிமித்தமாக சில நாட்கள் மலேசியா வந்திருந்த நண்பர், எழுத்தாளர் ரா. செந்தில்குமாரிடம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசிய நாடுகள் மீது போர் தொடுத்தது, அவற்றைக் கைப்பற்றியது பற்றி அந்நாட்டு கல்வியாளர்களால் ஆய்வுகளோ அல்லது பதிவுகளோ செய்யப்பட்டுள்ளனவா, அவர்களிடம் அது குறித்த பார்வைகள் என்னவாக உள்ளன என்று கேட்டேன். அவர் பதில் ஆச்சரியமாக இருந்தது. நூல்கள் ஒன்றும் இல்லாதது மட்டுமல்ல எந்த ஜப்பானியரும் அது குறித்து உரையாடவும் மாட்டார்கள் என்றார்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 5

சிறுகதை: பட்சி

பெரும் கொந்தளிப்புக்குப் பின் நிகழும் ஒரு பேரமைதி பட்சியை வாசித்து முடித்த கணம் மனம் முழுக்க பரவிப் படர்ந்து இருந்தது. அந்த அமைதியென்பது எண்ணங்களற்றது. இனி சொல்வதற்கும் சொல்லித் திளைப்பதற்கும் அறிவதற்கும் வேறொன்று புதிதாய் இல்லையென்ற சில கண உச்ச நிலையாக அது இருந்திருக்கலாம்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 4

சிறுகதை: பட்சி

அன்புள்ள நவீனுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 

மனித மைய நோக்கில், உயிரினங்களின் பரிணாமப் பிரமிடின் உச்சியில் மனிதன் தன்னை வளர்த்துக் கொண்டு பொருத்தியிருக்கின்றான்  எனலாம்.  

Continue reading

பட்சி: கடிதம் 3

சிறுகதை: பட்சி

நவீன்,

தலை முறையாக காட்டை வழிபட்ட முத்துவுக்கு பச்சையம்மன் தந்த பலி இறுதியில் அந்த மஞ்சான் என வாசித்தேன். சற்று மிகைதான் என்றாலும் அங்கு செல்லும் விசை இந்த சிறுகதையில் உள்ளது. மறு புறம் முத்துவுக்கு தொண்டை புற்று என்பதும் ஒரு பலி வாங்கல் தான். பறவைகளை கள்ளக் குரலில் அழைத்ததற்கு.

Continue reading

பட்சி: கடிதம் 2

சிறுகதை: பட்சி

நவின், பட்சி கதையை வாசித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் எண்ணம் அது ஒலிப்பேழை சிறுகதையில் இன்னொரு வடிவம் என்பதே. வணிகம் x கலை, பொருள் x அருள், பணம் x மனம் என இரண்டு வகையான மனநிலைகள் இரு வேறு தலைமுறையில் பிளவுபட்டு இருக்கையில் மூன்றாவதாக இன்னொன்றை நோக்கிச் செல்லும் கதை அமைப்பு.

Continue reading

பட்சி: கடிதம்

சிறுகதை: பட்சி

தருமசங்கட நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துவை பச்சையம்மன் மன்னிக்க வேண்டும் என வேண்டிடத் தோன்றுகிறது. கதையின் பின்னனி என்னவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அது தவறாகவும் இருக்கலாம். எந்திரன் 2.0 திரைப்படதின் வில்லன் கதாப்பாத்திரம் பட்சிராஜன் உண்மையின் ORNITHOLOGY எனப்படும் பறவைகள் ஆராய்ச்சித் துறை அறிஞர் சலீம் அலி என்பாரின் நீட்சி ஆகும்.

Continue reading

சிறுகதை: பட்சி

“சிறுவனை நீங்கள் உடன் அழைத்து வருவது, எனக்கு அவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றவில்லை,” என்றார் மாலிக். மேடு ஏறி வந்ததில் அவருக்கு மூச்சிரைத்தது. வாய்வழியாக நீராவிப் புகை குபுக் குபுக்கென வெளியேறிக்கொண்டிருந்தது. அவரது உதவியாளன் எங்களைப்போல் குளிருடை அணியாமல் பழுப்பு நிற டீசட்டையுடன் கனத்துத் தொங்கும் பையைத் தோள்களில் சுமந்தபடி இயல்பாக நின்றுகொண்டிருந்தான். 

Continue reading

நேர்காணல்: இரு கேள்விகள்

நேர்காணல் இணைப்பு

நேர்காணலைக் கேட்டேன். மிகவும் தெளிவான பதில்கள். நிச்சயமாக மலேசிய இலக்கியம் குறித்த ஆழமும் அகலமும் எனக்கும் அதிலிருந்தே புலப்பட்டது. இரண்டு கருத்துகள் அல்லது கேள்விகள் எனக்குத் தோன்றியது. உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Continue reading