ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 5

Borobudur ஜாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நி002னைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. மகாயானம் என்பது என்னவென்று பிறகு விளக்குகிறேன். அதற்கு முன் இந்த பௌத்த சின்னத்தின் பூகோல அமைப்பைப் பற்றி  முதலில் சொல்ல வேண்டியுள்ளது.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 4

IMG_4372மறுநாள் Borobudur போகப்போகும் ஆர்வம் முதல் நாளே தொற்றிக்கொண்டது. Borobudur க்குச் செல்ல இருவகையான திட்டங்கள் இருந்தன. முதலாவதும் காலையில் ஒன்பது மணிக்குப் புறப்படுவது. இரண்டாவது, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டுச் செல்வது. அதிகாலையில் செல்வதில் உள்ள விசேடம் சூரிய உதயத்தை மலையிலிருந்து காணலாம். நான், சந்துரு , யோகி மற்றும் மணிமொழி ஏற்கனவே மலையிலிருந்து சூரிய உதயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ‘புரோகா’வில் இருக்கும் மலையில் ஏறியதுண்டு. காஜாங்கில் இருக்கும் அந்த மலையில் அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஏறிச் சென்றோம். செங்குத்தான சிக்கலான பாதையில் ஏறி மலையை அடைந்தபோது  காலை மணி ஏழாகி இருந்தது.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 3

001இந்து மதத்தின் மாதரம் வம்சத்தின் சின்னமாக இன்றும் மத்திய ஜாவாவில் இருக்கும் பழங்கோயில்தான் Prambanan. கோயிலை நெருங்கிய போது நேற்றிருந்த ஆச்சரியம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பிரமம் எனும் சமஸ்கிருத சொல் ஜாவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்கோயில் அமைந்துள்ள இடம் பிரம்பனன் எனும் பெயர் பெற்று இடத்தின் பெயரையே கோயிலுக்கும் இட்டுள்ளனர்.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 2

005மறுநாள் முதல் வேளையாக ‘Candi Sambisari’ யை நோக்கி பயணமானோம். இது 12ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் கோவில். கிழக்கு ஜோக்ஜா பக்கம் அமைந்துள்ள இந்த கோவிலை முதன் முதலாய் 1986ல் கண்டுப்பிடித்தவர் ஒரு விவசாயி. விவசாயப்பணியின் போது தமது மண்வெட்டியில் ஏதோ இடிபட  அவ்வூர் தலைவரிடம் புகார் செய்துள்ளார். அதன் பின்னரே அகழ்வாராய்ச்சி மூலமாக இங்குள்ள கோயிலை மீட்டெடுத்திருக்கின்றனர்.

Continue reading

ஜோக்ஜா : எரிமலையின் ஊடல் தேசம் – 1

003பயணங்கள் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்கள். ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து செல்கிறோம் என்ற கிளுகிளுப்பையெல்லாம் கடந்து பயணங்கள் வெவ்வேறு விடயங்களை நமக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பல உலக நாடுகளைச் சுற்றிவரும் நபர்களை நான் சந்தித்ததுண்டு. ஓர் அந்நிய நாட்டில் காலடி எடுத்து வைத்த உற்சாகம் மட்டுமே அவர்களிடம் இருக்கும். வழக்கமான சுற்றுப்பயணத்தளங்கள், வழக்கமான ஆச்சரியங்கள், வழக்கமான தகவல்களைத் தவிர்த்து அவர்களிடம் பகிர்வதற்கு வேறொன்றும் இருப்பதில்லை.

Continue reading

“வல்லினம் மஞ்சள் பத்திரிகை” – பெ.ராஜேந்திரன்

00தயாஜியின் கதை சர்ச்சையானப்பின்னர் பலரும் பலவித கருத்துகளைச் சொன்னாலும் அதில் எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் சொன்னது மட்டும் மிக அர்த்தம் வாய்ந்தது. “வல்லினம் மஞ்சள் பத்திரிகைபோல” நடத்துப்படுவதாகச் சொல்லியிருந்தார். நல்லக் கருத்துதான். அந்த நிமிடத்திலிருந்து ராஜேந்திரனிடம்தான் இனி ஓர் இதழை எப்படி நடத்துவது என பயிற்சி பெறலாம் என முடிவெடுத்திருந்தேன்.

Continue reading

காதல், வல்லினம், பறை மற்றும் நாங்கள்…

PARAI COVER 02 copyநான் நண்பர்களுடன் இருக்கும் போது அதிக உற்சாகம் அடைபவன். இதழியல் தொடர்பான எவ்வித தொடக்கமும் இல்லாத போதே எனக்கு நண்பர்கள் ஆனவர்கள் ஓவியர் சந்துருவும் பூங்குழலியும். மாற்றுக்கருத்துகளால் சிவம் எதிரியாக இருந்து நண்பரானவர். எங்களிடம் அப்போதெல்லாம் பெரிய கனவுகள் இல்லாத போதும் இலக்கியம் தொடர்பான நிறைந்த ஆர்வம் இருந்தது. பின்னாளில் இந்த ஆர்வம்தான் ‘காதல்’ இதழ் தொடங்க உதவியாக தூண்டுகோளாக இருந்தது.

Continue reading

ஜன்னலின் ஓரம் சிறுமி

u‹e“cˆê•v‰‰Œ€ÜvŽöÜŽ®கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார்.

Continue reading

ஒலி

குட்டைக்கார முனியாண்டி முன் மண்டியிட்டுக் கதறிய சின்னியை முதலில் பார்த்தது பிளாக்காயன்தான். அவள் உச்சக்குரல் எடுத்து ஓலமிட்டு அழுதபோது அவர் சுவர் ஓரமாக காவி வேட்டியைத்தூக்கி ஒன்னுக்கடித்துக்கொண்டிருந்தார். திடுமென தூக்கிப்போட்டதில் பீய்ச்சிய சிறுநீர், குறி தவறி பக்கத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பு நாயின் முகத்தில் பட்டுவிட பதறியடித்துக்கொண்டு ஓடி தலையிலிருந்து தொடங்கி உடல் முழுதும் உலுக்கி சுதாகரித்துக்கொண்டது. அதற்குப்பின் ஓட இடம் இல்லாமல் ஒரு சின்ன முனகலுக்குப் பின் தாடை முழுவதும் தரையில் பதிய அங்கேயே படுத்துக்கொண்டது. என்ன இருந்தாலும் அது கோயில் சாப்பாட்டையே நம்பி வாழும் ஒரு புனிதமான நாய். அதற்கும் ஆச்சாரம் இருக்காதா என்ன?

Continue reading

மண்டை ஓடி

சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார்.

Continue reading