கோணக்கழுத்து சேவல்

இன்னிக்குதான் கொக்குக்கும் நரிக்கும் கல்யாணம் போல. ஒரு மாதிரியா வானம் இருட்டிக்கிட்டு, மழை வந்தும் வராமலும் வெயிலடிச்சா அம்மா அப்படித்தான் சொல்லுவா.

அது உண்மையா இல்லையானெல்லாம் தெரியல… ஆனா இந்த மாதிரி நடக்குறதுக்கு சாத்தியப்படாத இல்ல நம்ம கண்ணுக்குதெரியப்படாம, நடந்துருக்குமோங்குற சந்தேகத்த தாங்கி நிக்கிற சங்கதியெல்லாம் கேட்டா என்னவோ சந்தோசமாதான் இருக்கு. அத சந்தோஷமுன்னு கூட சொல்லிட முடியல. ஏதோ ஒரு ஆராய்ச்சியோட தொடக்கமோன்னு மனசு பரபரங்குது .

கொக்கு…நரி… கல்யாணம்.

Continue reading

வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி!

இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும் அடிப்படையான தரம் இல்லாமல் அது குறித்து நான் ஒருவார்த்தைகூட பேசுவதில்லை. ஒருவேளை ஒரு குப்பை தேவைக்கு மீறி கொண்டாடப்பட்டால் இளம் ரசிகர்களின், வாசகர்களின் குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதை விமர்சிக்கலாம். அது குப்பை என சுட்டிக்காட்டலாம். அதேவேளையில் , மலேசியாவில் கலை முயற்சிகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது அது குறித்து மௌனமாக இருப்பதும் அதைவிட கேவலமானதுதான். நாம் அது குறித்து பேச வேண்டியுள்ளது. அதன் நகர்ச்சிக்கு நம்மாலானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.

Continue reading

கவிதையும் குழப்பமும்

ஒரு கவிதை விளங்கிக்கொள்ளவதில் வாசகனின் வாசிப்பு அனுபவத்திற்கு சம்பந்தம் உண்டா? வாசிப்புத்தளத்தில் ஓரளவாவது இயங்கிகொண்டிருக்கும் என்னைப்போன்றவர்களே விளக்கம்பெற ஒரு சிலரை நாட வேண்டியிருக்கும்போது சாதாரண வாசகனை குழப்பி விடுவதில் என்ன பயன்? – விஜயலட்சுமி

விஜயா,ஏற்கனவே நான் இதற்கு பதில் சொன்னேன். இன்னும் தெளிவாக பதில் சொல்ல முயல்கிறேன். ஒரு அன்பர் , ‘உன்னால் முடியாவிட்டால் மக்களுக்குப் புரியும்படி கவிதை எழுதமுடியவில்லை என ஒப்புக்கொள் .நான் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் ‘ என வேறு சொல்லியுள்ளதை பின்னூட்டத்தில் படித்திருக்கலாம். நிச்சயமாக என்னால் முடியவில்லை. எல்லாருக்கும் புரியும்படி எழுத தெரியவில்லை. ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து அவர் சொல்லித்தரட்டும்.

Continue reading

புனிதத்தைக் களங்கடிக்கும் கலை

விஜயா, நான் உலகின் மிக முக்கியமான இரு கலை  ஆளுமைகளை கொஞ்சம் அறிமுகம் செய்கிறேன். பின்னர் விரிவாகப் பேசலாம்.

எம்.எஃப்.உசைன் :
எம்.எஃப்.உசைன் (M F Husain) பற்றி கேள்வி பட்டிருக்கலாம்.  இந்தியாவின் ஓர் சிறந்த ஓவியக்கலைஞராக வர்ணிக்கப் படுகிறார் . உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன. ஃபோர்பஸ் இதழ் இவரை இந்தியாவின் பிக்காசோ எனப் பாராட்டுகிறது. இவரது ஓவியங்களைக் காண : http://webneel.com/mf-husain-paintings-art-controversy-indian-artist

Continue reading

சுதந்திரம்

சட்டென சந்திக்கும் பெண்ணிடம்
எழும் காமத்தை…
காதல் தீர்ந்துவிட்ட கணத்தின்
கசப்பை…
உன் நட்பு இனி தேவையில்லை
என்ற வெறுப்பை…
இதற்காகத்தான் பழகினேன்
என்ற உண்மையை…
நான்தான் குற்றவாளி
என்ற வாக்குமூலத்தை…
எனக்கு யாருமே தேவையில்லை
என்ற இறுமாப்பை…
நான் மரணத்தை மட்டுமே விரும்புபவன்
என்ற மௌனத்தைசத்தமிட்டு சொல்லமுடியாதவரை
இந்த வாழ்க்கை
சுதந்திரமற்றதுதான்.

Continue reading

இன்றிரவு நான் தூங்கப்போகிறேன்

நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்

இவ்விரவில் தூங்கப்போகும் முன்
கதவுகளை சன்னல்களை அடைக்க வேண்டும்
காற்று அதன் ஓரங்களை உரசாமல் இருக்க
பாரங்களை நகர்த்தி முட்டுக்கொடுக்க வேண்டும்
தொலைக்காட்சி வானொலியிலிருந்து
ஓசை எழாமல் இருக்க
அதை முற்றிலும் சேதமுற செய்ய வேண்டும்
நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்.
Continue reading

கவிதையில் உள்ளார்ந்த அர்த்தம்

படிமங்கள், குறியீடுகள் என்னவென்று விளங்காதபோது கவிதையின் உள்ளார்ந்த அர்த்தம் மறைந்து அக்கவிதை கொச்சை வார்த்தைகளால் ஆன, புனிதத்தை களங்கடிக்கும் குப்பையாக காட்சிபடுமே? – விஜயலட்சுமி

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.’
Continue reading

பாமரனுக்கான கவிதை

வாசகனுக்கு குறிப்பாக பாமரனுக்கு நீங்கள் கூறும் படிமம், குறியீடு பற்றிய பிரக்ஞையே இல்லாதபோது அவர்கள் தங்கள் சிந்தனைக்குட்பட்டுதானே ஒரு கவிதையை வாசிப்பார்கள். அப்படியென்றால் உங்கள் கவிதை பாரமனை முழுமையாகச் சென்றடையாமல் பாதியிலேயே தேங்கி நிற்குமே?

விஜயா இலக்கியம் ஒரு கலை வடிவம். ஓவியம், இசை, சிற்பம், நடனம் போல இதுவும் ஒரு கலை வடிவம். மேற்சொன்ன கலை வடிவங்களுக்கு வெவ்வேறான மூலப்பொருள்கள் இருக்க இலக்கியத்துக்கு மொழியே மூலப்பொருள். அந்த மூலப்பொருள்தான் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் என பயன்பாட்டில் உள்ளன. இந்த மூலப்பொருள்தான் சக மனிதனுடனான உரையாடலுக்கு ஊடகமாக உள்ளது. எளிய மனிதனிலிருந்து அசாதாரண ஆளுமை கொண்ட மனிதர்கள் வரை மொழி பொது பயன்பாட்டில் உள்ளது.

எனவே எல்லோரும் அறிந்த மொழியில் ஒரு கலை உருவாக, அதை வாசிப்பு அறிமுகம் இல்லாத ஒருவன் அணுகும் போது பதற்றம் அடைகிறான். தான் வாழ்நாள் முழுக்கவும் பயன்படுத்திய ஒரு மொழி தனக்கு புரியாமல் இருப்பதில் கோபம் அடைகிறான். இந்தக் கோபத்தை நீங்கள் குறிப்பிடும் பாமரர்கள் அல்ல… பல்கலைக்கழக பேராசிரியர்களிடமே கண்டுள்ளேன் . இவர்கள் ஒரு நவீன ஓவியம் புரியாதது பற்றியோ, கர்நாடக இசையை ரசிக்க முடியாதது பற்றியோ, நவீன சிற்பங்கள் வடிவம் சிதைந்திருப்பதன் மர்மம் பற்றியோ, பரத அசைவுகளில் இருக்கும் புரியாத முத்திரைகள் பற்றியோ எவ்வித அசூயை உணர்வையும் அடைவதில்லை. காரணம் அவர்கள் அக்கலை குறித்த நுட்பங்கள் தங்களுக்குத் தெரியாது என அறிவர். அதை அறிய பயிற்சி தேவை என உணர்வர். ஆனால் இலக்கியம் என வந்துவிட்டால் மட்டும் இந்த சிந்தனை அவர்கள் யாருக்கும் எழுவதே இல்லை. காரணம் இலக்கியம் எனும் கலை மொழியோடு தொடர்பு பட்டிருக்கிறது.

எளிய மக்களுக்குப் புரியாத மேற்சொன்ன பிற கலைகள் குறித்து நாம் கவலை படுவதில்லை. வருத்தம் தெரிவிப்பதில்லை. ஆனால் இலக்கியம் எனும் கலை வடிவத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறோம். எம்.ஏ.நுஃமான் 1996 ல் எழுதிய ஒரு கட்டுரையில் தான் மேற்கொண்ட ஒரு ஆய்வைக் குறிப்பிட்டிருப்பார். மஹாகவியின் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி ‘ என்ற கவிதையை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து அதன் பொருளைக் கேட்டிருப்பார். மாணவர்கள் கூறிய பொருள்களை அந்தக் கட்டுரையில் கொடுத்திருப்பார். தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் பயிலும் அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்த வெவ்வேறு பொருளை கொடுத்திருப்பர். இத்தனைக்கும் எளிதாக அர்த்தம் கொள்ளக்கூடிய கவிதை அது.

விஜயா, உண்மையில் கவிதை சிலருக்குதான் புரியும்; சிலருக்குப் புரியாது என்பது முற்றிலும் தவறு . இன்னாருக்குப் புரியும் படி நான் எழுதப்போகிறேன் என்பது அபத்தம். பத்திரிகையில் தலைப்புச் செய்தியைக் கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் சூழலில், கவிதை எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்றோ பாமரனுக்கும் புரிய வேண்டும் என்றோ திட்டமிடுவதெல்லாம் நடவாத காரியம். நான் இங்கு கவிதை எளிய மனிதர்களுக்குப் புரியக்கூடாது என சொல்லவரவில்லை. ஒரு படைப்பாளனுக்குத் தன் படைப்பு சகல நிலைகளிலும் உள்ள மக்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சிதானே. அதைவிட அவனுக்கு வேறென்ன ஆனந்தம்.

ஆனால் அது வாசிப்புப் பயிற்சி மூலமே சாத்தியம் என்கிறேன். அந்தப் பயிற்சியை மேற்கொண்டால் நீங்கள் குறிப்பிடும் ‘பாமரர்களுக்கும்’ கவிதை சென்று சேறும். அதை அறிய படிமம், குறியீடெல்லாம் முக்கியமே இல்லை. கவிதையை உள்வாங்கும் மனம் மட்டுமே தேவை.

கவிதை புரியாதது ஏன்?

கருத்துகளையும் எண்ணவுணர்வுகளையும் சுருக்கமாக சொல்லும் மிகக் குறுகிய இலக்கிய வடிவமான கவிதை அனைவருக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம்தானே? – விஜயலட்சுமி

விஜயா, முதலில் உங்கள் கேள்விகளுக்கு நன்றி. ‘கடவுளின் மலம்’ கவிதை குறித்த சர்ச்சை எழுந்தபோது யாரும் நேரடியாகக் கேள்வி எழுப்பவில்லை. ஒரு நக்கல், சில வசைகள், உணர்ச்சிக் கொந்தளிப்பு என தொடர்ந்ததே தவிர யாரும் நேருக்கு நேராக எதிர்க்கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்குத் தெரியும் என்னிடம் பதில் உள்ளதென்று. அவர்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் நான் கூறும் பதிலைக் கடந்து விவாதிக்க அவர்களின் வாசிப்புப் பயிற்சி அதிகரிக்க வேண்டும் என்று.

Continue reading

காலணியில் கதை சொல்பவள்

சிறையிலிருந்து மீண்டு
தனியாக வாழும் அவள்
தன் வீட்டு வாசலில்
காலணிகளைச் சேகரித்து வைக்கிறாள்
பல வண்ணங்களில்
பல பிராண்டுகளில்
பல அளவுகளில்

Continue reading