பப்பிகள்

நாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான். இன்று ஒரு நாட்டில் இருந்தபடியே மற்றொரு நாட்டை ஏவுகணைகள் மூலம் தாக்க முடியும் என்கிறார்கள். அந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்ததே எங்கள் கம்பம்தான். வீட்டில் இருந்தபடியே திட்டித்தீர்க்கலாம். பாதுகாப்பும் கூட.

Continue reading

கோபாலு…கோ…கோபாலு… (பூலாவ் பெசாரில்)

பூலாவ் பெசார் (Pulau Besar) குறித்த துல்லியமான விளக்கங்களை நான் கூறுவதைவிட அண்ணன் ‘விக்கி’ இன்னும் சிறப்பாகக் கூறுவார். அண்ணன் விக்கி என நான் இங்குச் சொல்வது ‘விக்கிபீடியாவைதான்’. மலாக்காவிலிருந்து (Jeti Anjung Batu)ஓர் இயந்திர படகு சேவையில் பயணம் செய்தால் 15 நிமிடத்தில் பூலாவ் பெசார்.  நுழைந்தவுடனேயே மூடுந்து (Van) சேவை உண்டு. அவற்றுக்குக் கதவுகள் இருக்காது. மேடுபள்ளமான பாதையில் உருளும் அதை நாம்தான் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நேராக மூடுந்து நம்மை Syarifah Rodziah கல்லறை முன் நிறுத்தும். கொஞ்சம் வேகமாக பிரேக் பிடித்தால் கதவு இல்லாத மூடுந்திலிருந்து குபீர் என வெளியே வந்து விழுந்து சமாதி பக்கத்தில் படுத்துக்கொள்ளும் சிறப்பு வசதி  உண்டு.

Continue reading

நவரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான் (பீபல்சம்)

நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் கதையை அருவருப்பில்லாமல் வாசிக்க முடியவில்லை. எத்தனையோ நல்லவிசயம் இருக்க அருவருப்பு எதற்கு? திருக்குறளில் இல்லாத ஞானமா மற்ற நாட்டு தத்துவ ஆசிரியர்கள் சொல்லிவிட்டார்கள்? தமிழில் இல்லாததா? தொல்காப்பியத்தில் இல்லாததா? நீங்கள் எதையும் எழுதலாம் . ஆனால் அதை பிரசுரிக்கக் கட்டுப்பாடுகள் உண்டு என மறக்காதே. எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டனும் இப்படி புதைகுழி காட்டக்கூடாது. கவனம்!
Continue reading

படைப்பிலக்கியத்தின் வெற்றி

உங்கள் விளக்கத்துக்கு நன்றி நவீன். ஓரளவு தெளிவு பெற்றேன். ஆனாலும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. என்ன செய்யலாம் என இருக்கிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களும் தொடர்கின்றனவே. நாளிதல்களிலும்.  எதிரிகள் வண்டவாளங்களை நான் உங்களுக்குப் பட்டியல் இட்டிருந்தேன். தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கலாசாரம் குறித்து பேசுபவர்களின் படங்களைப் பார்த்தீர்களா?
santhalsanthal@gmail.com
Continue reading

இறுதியாக -தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 5

வணக்கம் ஐயா. தங்களின் விரிவான நான்கு பதில்களையும் படித்தேன். மிகுந்த விரிவான பதில்கள். எனக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. பொறுமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், உங்களையும் வல்லினத்தையும் தயாஜியையும் திட்டிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்ய முடியும்? என் அண்ணன் வழக்கறிஞர் என்பதால் அதில் உள்ள சில வரிகளை வைத்து வழக்குப் போடமுடியும் என்றார். இன்னும் ஒரு விளக்கம் மட்டும் கொடுத்தால் போதும். இந்தக் கதையைப் படிக்கும் போது எளிய வாசகம் குழம்ப மாட்டானா? அவன் இதை பின்பற்ற மாட்டானா? அப்புறம் கடவுள் என்பது எப்படி இருந்தாலும் கடவுள்தானே. அதை கடவுளாக பார்க்கிறோம். அதனால் அதில் ஆபாசம் இருக்குமா? இது என் தோழியின் கேள்வி. தங்கள் அக்கறைக்கு நன்றி. இனி தொடர்ந்து வல்லினத்தை வாசிப்பேன்.
durga6776@gmail.com

Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 4

ஒழுக்கமானவர்கள் போல உங்களையும் வல்லினத்தாரையும் ஏசிக்கொண்டிருக்கும் சிலரின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் போல. என் தோழியிடம் முக நூலில் எப்படிப் பேசினார்கள் என இந்த ஒழுக்கச்சீலர்களின் உண்மை முகத்தை வல்லினத்தில் காட்டுகிறேன். (எல்லாவற்றையும் சேகரித்து அனுப்பினால் வல்லினம் பிரசுரிக்குமா?)அதேபோல எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். தயாஜியின் சிறுகதையில் காளி என்ற பெண் தெய்வத்தின் மீது காமம் கொள்வது போல உள்ளது. இது முறையா? நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன். கடவுளின் மேல் காமம் கொள்வதுதான் நவீன இலக்கியமா ? அல்லது பின் நவீன இலக்கியமா?

santhalsanthal@gmail.com
Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 3

தன் தாயையே காம நோக்கோடு பார்த்ததற்காக தன் தவறை உணர்ந்து தொடக்கத்திலேயே தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். அப்படி மன்னிப்பு கேட்கும் போது தான் எப்படி இந்த காரியத்தை செய்யத் துணிந்தேன் என்பதை அன்றைய நாளில் தான் பார்த்த புளூ பிலிமை காரணம் காட்டுகிறான். மனசாட்சியின் கோரப்பிடியில் சிக்கி, சித்திரவதை அனுபவிக்கும் அவன் தான் பார்த்த புளூ பிலிமில் கண்ட காட்சிகளை அணு அணுவாக ரசித்து தாயிடம் விளக்குவது ஏன்?

Continue reading

ஆதவன் தீட்சண்யாவின் கடிதம்

1.”ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)

2. “தாய், மகள், சகோதரி – எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை அறிவாளியையும் வெற்றிகொள்ளும்” என்கிற மனுஸ்மிருதியின் உத்தரவு அன்றிருந்த நிலைமையை விளக்கப் போதுமானது.

– பண்டைய அமைப்புமுறை: ஆரிய சமூகத்தின் நிலை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 7 பக்கம் 12 மற்றும் 389

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்) – 2

நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘oedipus complex’ மற்றும் தாய் வழி சமூகத்தில் உள்ள உறவு முறை எப்படி நம் தமிழ் சமூகத்துடன் தொடர்பு கொள்வது? தமிழ் படைப்பாக இருக்கும் இதை படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் மேல் பகிர்ந்துள்ள கருத்தும் கோட்பாடுகளும் அந்த அந்த சமூக கட்டமைப்புகளில் காலகோலத்தோடு தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு தமிழ் வாசகனுக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளன் ஒரு சமூக மறுமலர்ச்சியாளனாக கண்டிப்பாக இருக்க வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் அந்தச் சமூகத்தோடு / சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துகளை அல்லது சற்று அப்பாற்பட்ட கருத்துகளை வைக்கும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சற்று யோசிக்கலாம்.

Continue reading

தாய்மை என்பது புனிதமா? (கடிதமும் விளக்கமும்)

வணக்கம் நண்பரே. மிகவும் வருத்தத்துடன்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இம்மாத வல்லினத்தில் தயாஜியின் சிறுகதையைப் பார்த்து பயந்தேன். அதில் தாய்மையை அசிங்கப்படுத்தியுள்ளார். அது போல வரிகள் இருந்தன. வல்லினம் மீது எனக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை உண்டு. நீங்கள் சரியானதைச் செய்வீர்கள் என. இது போன்ற கதைக்கு உங்கள் விளக்கம் என்ன? முக நூலில் இது குறித்த சர்ச்சையிலும் உங்கள் தரப்பை சொல்லவில்லை. அவர்கள் கருத்துக்கு கருத்து ரீதியில் பதில் சொல்லலாமே. என்னைப் போன்ற வாசகர்களுக்கு இது குழப்பத்தை உண்டு செய்கிறது. எனக்கு போதிய விளக்கம் கொடுப்பீர்களா? எனக்கு தெரியாததைத் தெரிய படுத்துங்கள்.  உங்களுக்கு இந்தக் கதையைப் பிரசுரித்ததில் சம்மதமா?

durga6776@gmail.com

Continue reading