அநுராதபுரத்திலிருந்து காலையிலேயே யாழ்பாணம் கிழம்பினோம். நீண்ட பயணம். நான்கு மணி நேரம் என நினைவு. வவுனியா, புளியங்குளத்தைத்தாண்டி கிளிநொச்சியை அடைந்தபோது பேருந்து இராணுவத்தினரால் நிறுத்தி பரிசோதிக்கப்பட்டது. எங்களது சுற்றுப்பயணப் பேருந்து என்பதால் கடப்பிதழை மட்டும் சோதனைக்கு அனுப்பினார்கள். நான் சில நண்பர்களுடன் கீழே இறங்கினேன். பொட்டல் நிலம். ஆங்காங்கு இராவணுத்தினர் துப்பாக்கிகளோடு நின்று கொண்டிருந்தனர். உள்ளூர்வாசிகள் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு தரவாகச் சோதிக்கப்பட்டனர். சுமையுந்துகளின் பின்பக்கம் உயர்த்தப்பட்டுச் சோதிக்கப்பட்டன. அருகில் இருந்த கழிவறைக்குச் சென்றேன். கால்வைக்க இடம் இல்லை.
இலங்கையில் ஏழு நாட்கள்…1
இலங்கையிலிருந்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அப்பயணம் குறித்து எழுத பலமுறை தொடங்கியும் முடிக்க முடியாமல் அழித்தபடி இருக்கிறேன். ஒருவகையில் இது ஒரு நிறைவான பயணமா என்ற கேள்வி மனதில் எழுந்தபடி உள்ளது. பொதுவாகவே நான் திட்டமிடப்பட்ட பயணத்தளங்களுக்குச் செல்லும் பயணி அல்ல. சில நாடுகள் அவ்வாறு சுற்றுப்பயணிகளுக்கு முகம் காட்டும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. சட்டென நினைவுக்கு வருவது பாலித்தீவு. அத்தீவின் அனைத்துப்பகுதிகளுமே பயணிகளின் வசீகரப்பார்வையை உள்வாங்கிக்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவே அங்கிருந்த காலங்களில் தோன்றியது. அதனாலேயே அத்தீவு குறித்து எழுத ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் இலங்கை அப்படி அல்ல.
இலக்கிய அ-ஒழுக்கவாதியும் கலாச்சார போலிசுமான கோ.முனியாண்டி – கே.பாலமுருகன்
மலேசிய இலக்கிய ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் அ-ஒழுக்கவாதி கோ.முனியாண்டியின் என் கடிதத்திற்கான எதிர்வினையை, மன்னிக்கவும் வசை கூட்டங்களை வாசிக்க நேர்ந்தது. ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களையும் நாட்டுக்குள் வருபவர்களையும் சிறுநீர் பரிசோதனை செய்து அதனை உறுதி செய்துகொள்வார்கள். இது உள்நாட்டு சட்டத்திற்குக் கீழ் வரையறுக்கப்பட்ட சட்டமாகும். கோ.முனியாண்டியின் என் ஒழுக்கத்தின் மீதான கிண்டலைப் படிக்கும்போது எனக்கு அவரை அடுத்தவர்களின் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்து அவனை நிர்ணயம் செய்யும் ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரைப் போலவே தோன்றியது. கோ.முனியாண்டி யார் யார் என்னென்ன செய்கிறார்கள் எங்கெல்லாம் ஒழுக்கத்தை மீறுகிறார்கள் என்பதைக் கவனமாக கடந்த 50 ஆண்டுகள் பரிசோதித்து ஒரு கலாச்சார அதிகாரியாகப் பணியாற்றியமைக்கு என் வாழ்த்துகள். தொடருங்கள், எனகொன்றும் பிரச்சனை இல்லை.
கடிதம்: மண் பொம்மை
திரு நவீன் அவர்களுக்கு,
நான் ராமனின் நிறங்கள் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து படித்து கொண்டு வருகின்றேன், அது தற்பொழுது வாக்கு வாதத்தில் வந்து முடிந்து இருக்கின்றது, நமது தொடர்புகள் மிக நீளம் என்றாலும் எனக்குள் நாம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும், அந்த உணர்வில்தான் இப்பொழுது இதை எழுதுகிறேன், எனக்கு தெரிந்த வரை நமது தமிழர் வரலாற்றில் தமிழ் புலவர்கள் எத்தனையோ பேர் நமது வாழ்கை முறைமைகளையும் நமது மரபுகளையும்,பண்பாடுகள் பழக்க வழக்கங்கள்,மருத்துவ முறைகள்,இல்லற நெறிகள்,நமக்கு சொல்லி விட்டு தமிழுக்காக வாழ்ந்து மறைந்தார்கள், அந்த காலத்தில் ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது மன ஓட்டத்தை அவர்களது தமிழ் புலமையில் படைத்தார்கள், அவர்கள் பயணிக்கும் இடம் வேறாக இருந்தாலும் முடியும் இடம் ஒன்றாகத்தான் இருந்துள்ளது, தமிழுக்காக ஒரு நல்ல பணியை செய்கின்றோம் என்பதுவே அது. தற்காலதில் தமிழ் பற்றாளர்கள் என்று உங்களை போன்றவர்களை நினைத்து பெருமை படும் இந்த நேரத்தில் இது போல போன்று வாக்கு வாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்றே தோன்றுகின்றது.சம்பந்தமே இல்லாமல் இதில் எங்கு வந்தது இந்த கருப்பு பிரச்சினை, நான் உங்கள் எதிமரையாலரை பார்த்தது இல்லை, அனால் அவரும் கருப்பு கலந்த நிறமாகத்தான் இருப்பார் என்பது எனது கற்பனை,அவர் உருவாக்கிய மண் பொம்மை நன்றாக உள்ளது என்று அவருக்கு தோன்றும் ஆனால் அதை வாங்கி உபயோகபடுத்த நினைபவனுக்கு அதன் உண்மையான தன்மை இந்த பொம்மையில் கை கொஞ்சம் நீளமாக உள்ளது வடிவம் சரி இல்லை, இதை பார்க்கும்பொழுது எனக்கு பொம்மையாகவே தெரியவில்லை என்பது புரியும் என்று அவருக்கு புரியவில்லை. நீங்கள் இந்த விவாதத்தை இனியும் தொடராமல் நமக்கே உரிய பெருந்தன்மையுடன் இதை இத்துடன் நிறுத்தி விட்டு வேறு எதாவது ஆரோக்கியமான் தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்று வேண்டுகின்றேன். Continue reading
கறுப்பனாக இருப்பதின் பிரச்சனைகள்: கோ.முனியாண்டி
இலங்கையிலிருந்து திரும்பிய களைப்பு இன்னமும் தீரவில்லை. காலம் தாழ்த்தியே கோ.முனியாண்டியின் எதிர்வினைகள் கண்ணில் பட்டன. பொதுவாகவே எதிர்வினைகளையும் மாற்று கருத்துகளையும் வரவேற்பவன் நான். தொடர்ந்த உரையாடல்கள் மூலமாக மட்டுமே ஒரு சமகால அரசியல் சூழ்நிலையை பல்வேறு கோணங்களில் காண முடியும்; முடிந்திருக்கிறது. துரதஷ்டவசமாக மலேசியாவில் மாற்று கருத்துகளை பலரும் விரும்புவதில்லை. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கோ.முனியாண்டி.
Continue reading
காசியும் கருப்பு நாயும்
தன் அருகில் வந்து நின்ற நாயை ஒருதரம் அந்நியமாய் பார்த்தார் காசி. நல்ல உயரம். வாலின் ஒரு பகுதி உரோமம் இழந்திருந்தது. உடலின் இன்னும் இதரப்பகுதிகளிலும் உரோமம் இல்லாமல் இருக்கலாம். அதன் கருமை நிறம் இருட்டில் எதையும் கணிப்பதற்குத் தடையாக இருந்தது. தமிழர்களின் வாடை அதற்கு ஏற்கனவே பரீட்சையமாகியிருக்க வேண்டும். மிக இயல்பாக அவர் பக்கத்தில் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் காலடியில் படுத்துக்கொண்டது. காசிக்கு நாயின் தோற்றம் ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தியது. முழுவதும் கறுமை படர்ந்திருந்த அதன் ரோமங்களுக்கு மத்தியில் கண்கள் பளிச்சென வெள்ளை நிறத்தில் இருப்பது மிரட்டலை தருவது போல் உணர்ந்தார். அதன் கழுத்தில் நைந்து சிவப்பு வண்ணத்தை முற்றிலுமாக இழக்கத் தயாராகியிருந்த துண்டுத் துணி முன்பு யாரோ ஒருவரால் வளர்க்கப்பட்ட நாய் என்பதை அடையாளப்படுத்தியது.
Continue reading
இலங்கை பயணம்; நண்பர்கள்; இலக்கியம்.
இலங்கைக்குச் செல்வதென முடிவானப்பின் சட்டென ஒரு நண்பர்கள் பட்டியல் மனதில் ஓடியது.
முதலில் தகவலைச் சொன்னது எம்.ஏ.நுஃமான் அவர்களிடம்தான். என் தந்தை போன்றவர். அவர் மலேசியாவில் இருந்த ஒருவருடத்தில் அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளேன். அதிகமான ஞாயிற்றுக்கிழமைகள் அவர் வீட்டில்தான். சதா சிந்திக்கத்தூண்டும் கேள்விகள் அவரிடமிருந்து வந்துகொண்டே இருக்கும். ஒருவருடத்திற்குப் பின் அவர் இலங்கை திரும்புவது உறுதியானப்பின் அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு இறுக்கம் பரவியிருந்தது.
Continue reading
கடிதம்:ராமனின் நிறங்களா? மாரீசனின் நிறங்களா? – சிங்கை இளங்கோவன்
கோமு என்று பிரியத்துடன் நான் அழைக்கும் கோ முனியாண்டியை 1980 -இல் இருந்தும், நவீனை 2009 -இல் இருந்தும் எனக்கு நேரடியாகத் தெரியும். இருவேறு தலைமுறையினரான இவர்களுடனான என் நட்பு அறிவார்ந்த தளத்தையும் கடந்த நெஞ்சார்ந்த அன்பு சார்ந்தது.
Continue reading
இலக்கியம் : சட்டாம்பிள்ளைத்தனமும் விமர்சனமும் – கே.பாலமுருகன்
1. இலக்கிய விமர்சனம்
சமீபத்தில் ம.நவீன் வலைத்தலத்தில் கோ.முனியாண்டி நவீனுக்கு எதிராக எழுதியிருந்த எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. கலைக்கு எதிரான விமர்சனம், படைத்தவனை நோக்கிய தனிமனித விமர்சனம், இலக்கிய செயல்பாடுகளின் மீதான விமர்சனம் என விமர்சனங்களை மூன்று வகையாக முன்வைக்கலாம். ம.நவீன் முன்வைக்கும் பல விமர்சனங்கள் இலக்கியவாதிகளின் இலக்கிய செயல்பாடுகளின் மீதும் அவர்களின் நேர்மையற்ற நடவடிக்கைகளின் மீதுமாக இருக்கும். பலரின் மீது வல்லினம் முன்னெடுத்த எதிர்வினைகள் எந்தத் தனிமனிதரின் சுயநலத்துக்காகவும் அல்லாமல் இலக்கிய பொதுமையைப் பாதிக்கும் செயல்களை நோக்கியே இருந்தன.
Continue reading
கோ.முனியாண்டிக்கு ஒரு சின்ன விளக்கம்.
கோ.முனியாண்டியினின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். http://vallinam.com.my/navin/?p=900#more-900. கோ.முனியாண்டி சொல்லிக்கொள்வது போல 50 ஆண்டுகளாக மலேசிய இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் எதிர்வினை இது. 50 ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கும் ஒருவரால் எப்படி இத்தனை பலவீனமான எதிர்வினையை எழுத முடிகின்றது என்ற ஆச்சரியத்தோடுதான் இதை பிரசுரித்தேன். வசைகள். முறுக்கிய மொழி. உளரல்கள். பொய்கள்.
Continue reading