தாரா

மேன்மையின் பிரதிநிதி அந்தரா – ஜெயராம்

அன்புள்ள நவீன்,

ஜெயராம்

உங்களது ‘தாரா’ நாவலை வாசித்தேன். அண்மையில் என்னை தொந்தரவு செய்த  படைப்பு தாரா. மலேசியாவில் பூழியனின் தலைமையில் வேலைக்கு வந்து அங்கேயே வேர்விட்ட தமிழ் வம்சாவளியினருக்கும் மிக அண்மையில் வேலைக்காக குடிபெயர்ந்த நேபாள நாட்டவர்களுக்கும் இடையில் நடக்கும் உரசல்களினூடாக நாவல் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கி வாழ எப்போதும் மனிதர்களுக்கிடையில் அல்லது மனித கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் பூசல்களில் உள்ள பல பரிணாமங்களை நாவல் தொட்டு செல்கிறதாக வாசிக்க முடிந்தது.

Continue reading

மண்ணின் கதை சொல்லி – சௌந்தர்

சௌந்தர்

வனவிலகுங்களோ, வளர்ப்பு விலங்குகளோ, தங்கள் எல்லைகளை வகுப்பதை ஒரு மூர்க்கமான கலையாக தங்கள் மரபணுவில் கொண்டுள்ளது, நம் தெருவில் வாலாட்டிக்கிடக்கும் ‘சாந்தமான’ என நாம் பெயரிட்ட நாய் கூட, தன் குழுவில் இல்லாத நாயை தன் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. கூர் பற்களைக்காட்டி வெறியுடன் மாற்றானை துரத்துவதும் மாற்றான் பின்னங்கால்களுக்கு நடுவே வாலை சுருட்டியபடி பயந்து ஓடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சி.  மனிதனோ வேறு சில கொடுக்கல் வாங்கல்களில் மூலமாக இந்த மூர்க்கக்கலையை, சமூகம் எனும் சட்டகத்திற்குள் வைத்து, நெறி படுத்திய பின்னரும், பூமி முழுவதும் அவனுடைய ‘மூர்க்கக்கலை ‘ வெளிப்பட்ட வண்ணமே இருக்கிறது. 

Continue reading

தாரா: ஒரு நாட்டார் கவிதை – மணிமாறன்

தாரா நாவல் 80களில் மலேசியாவின் கம்பப் பின்புலத்துடன் குகன் கொலையிலிருந்து தொடங்குகிறது. கம்பம் என்பது தமிழ் சொல்லானாலும் மலாய் மொழியில் கம்போங் என்றால் (கிராமம்) என்றே அறியப்படுகிறது. கூலி வேலைக்காக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியர்கள் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட வரலாற்றில் மருவி கம்பத்தை அடைந்தவர்களின் படிமத்தை முன்வைக்கிறார் நாவலாசிரியர்.

Continue reading

நினைவில் நிற்கும் தாரா – பா.கங்கா

பா. கங்கா

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பல நூல்களை வாங்கினேன், அவற்றுள் ஒன்று தாரா. வாங்கியப் பிறகு ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சித்ரா ரமேஷ் ‘சிங்கப்பூர் வாசகர் வட்டம்’ வழியாக ம. நவீன் எழுதிய ‘தாரா’, அ. பாண்டியன் அவர்கள் எழுதிய ‘கரிப்புத் துளிகள்’ ஆகிய நாவல்கள் குறித்தக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘தாரா’ நாவல் கையிலிருந்தும் படிக்காமல் எப்படிச் செல்வது என்று ஒரு தயக்கம். ஏன்றாலும் நவீன் முகநூலில் தாராவுடனான பயணத்தைக் குறித்து எழுதியிருந்த பதிவுகளைப் படித்திருந்ததால் போக முடிவு செய்தேன். கலந்துரையாடலுக்கு ஒருநாள் முன்பு தாரா நாவலை எடுத்துச் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்தேன். கிச்சி, லிங்கம், கோகிலாவின் அறிமுகம், அஞ்சலையின் சொலவடை, கந்தாரம்மன், லஷ்மி சிலை, குளம், குகனின் மரணம், மருதுவின் செயற்பாடு என நாவல் என்னைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ள தொடங்கியது.

Continue reading

அந்தரா தாராவானக் கதை – ஜி.எஸ்.தேவகுமார்

தாராவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு பாணியில் அணுக இயலும். ஒவ்வொரு நாவல்களும் அதை அணுகுபவரின் தனிப்பட்டப் புரிதல்களை வைத்தே அளக்கப்படும். நவீனப் படைப்புகளை வாசகன் தனிமையில் தன் உளம் சார்ந்தே அணுகுகின்றான்.

அந்நியத் தொழிலாளர்கள் வருகையின் தொடக்கத்தில் கதை நடக்கும் காலகட்டம். ஆனாலும் காட்சிகள் முன்னும் பின்னுமாகக் காலப்பயணம் செய்ய வைத்ததில் தான் நாவலின் சுவாரசியமே அடங்கியுள்ளது. கிச்சி தாராவை தேடிப் போகும் காட்சிகளில் எதிர்ப்பாராத திருப்பம் வியக்க வைத்தது. தற்காலத்தோடு கடந்த காலத்தையும் அதே பாத்திரத்தைக் கொண்டு பிணைத்து பிரித்த விதம் சிறப்பு. மிக கவனமாக கையால வேண்டிய யுக்திகள் அவை.

Continue reading

தாரா சொல்லும் வாழ்க்கை – சுகுனா செல்வராஜா

தாரா நாவலைப் படித்து முடித்து விட்டேன். எனக்கு மற்றவர்கள் போல் உங்கள் கதையில் விமர்சனம் செய்ய தெரியவில்லை. நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று உங்கள் எழுத்தில் மூலம் தெரிந்து கொண்டேன்.

நீங்கள் எழுதிய நாவல்களில் நான் படித்த முதல் நாவல் இதுதான். தாராவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் என்னை சுற்றி உள்ள நபர்கள் போல தோன்றியது.

Continue reading

தாரா: ஒரு வாசிப்பு – ஹேமா

புதிய குடியேறிகளுக்கும் நிலத்தில் காலம்காலமாய் வசிப்பவர்களுக்கும் உண்டாகும் சர்ச்சைகளை, முன்னேறிய நாடுகளும் முன்னேறிவரும் நாடுகளும் காலம் காலமாய் எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய சர்ச்சைகளை எதிர்கொண்டு அவற்றைச் சமாளித்து அந்நிலத்தில் காலூன்றுவது புதிய குடியேறிகளுக்கு சவாலாக அமைகிறது.

Continue reading

தாரா: காழ்ப்புணர்ச்சியின் யுத்தம் – கோ. புண்ணியவான்

படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல் வாசிப்பது நல்ல அனுபவம். சிறுகதைகள் போலல்லாமல் வாசகனைத் தொடர்ச்சியாக சிலபல நாட்களுக்கு தன்னுடன் பயணம் செய்யவைத்து அதன் தட்ப வெப்பச் சூழலோடு நம்மையும் பிணைத்து பரவசமூட்டக்கூடிய இலக்கியப் புனைவு நாவல். அதிலும் வாசகன் அறியா ஒரு கதைக்களத்தையும், கதை மனிதர்களையும், நில அமைப்பையும் அறிமுகம் செய்து அவனுக்குள் புதிய அனுபவத்தை ஏற்றி அறிவார்ந்த சூழலுக்குள்ளேயே அவனை வைத்துக்கொள்வது நாவல் எழுத்தின் பயனாகும். நாவல் நெடுக புனைவுத்தர்க்க எல்லைக்குள் இயங்கவைத்து, வாசித்து முடித்த பின்னரும் அதன் இயங்கு விசையை வாசகனிடம் கடத்தி பாதிப்படையச் செய்யும் நாவல் சிறந்த படைபென்பேன். ‘தாரா’ அதனை செவ்வனே செய்திருக்கிறாள்.

Continue reading

தாரா: கால்களும் இறக்கைகளும் கொண்ட கதை – சாலினி

நல்ல நாவல்கள் விசாலமான வாழ்க்கையைச் சொல்வதாகவே அமைகின்றன. அந்த வாழ்க்கையின் ஊடே நுழைந்து பெறக்கூடிய நிகர் அனுபவங்களே நாவல் வாசிப்பு கொடுக்கும் இன்பமாகிறது. ம.நவீனின் ‘தாரா’ அப்படியான ஒரு நாவல்தான். அவரது முந்தைய நாவல்களைப் போலவே யதார்த்த வாழ்க்கையோடு மிகுபுனைவும் கலந்த நாவல் இது. ஒரு புறம் தரையில் கால்களை ஊன்றி நடக்கும் மனிதன் இறக்கைகளையும் அசைத்துக் கொண்டிருப்பதுபோல மெய்யான வாழ்க்கையினூடே நாம் அறியாத இன்னொரு மெய்யும் இணையும் புனைவு ‘தாரா’.

Continue reading

தாரா நாவல் வாசிப்பனுபவம் 1 – அரவின் குமார்

தாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.

Continue reading