Author: லதா

சிவானந்தமும் சிங்கப்பூர் இலக்கியமும்

சிங்கப்பூரில் தமிழில் தொடர்ந்து அசராது எழுதுவதற்கான உயிராற்றலைக் கண்டடைந்துள்ள மிகச் சிலரில் சிவானந்தம் நீலகண்டமும் ஒருவர். எழுதப்படும் படைப்புகளை ஒட்டி விரிவான உரையாடல்கள் வாசக சூழலில் எழாவிட்டாலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வாரம் தவறாமல் எழுதி வருபவர். சிங்கப்பூருக்கு அப்பாலும் பரந்த தமிழ் எழுத்துலகில் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்கள் சிராங்கூன் டைம்ஸ்…

பெருந்தேவியின் குறுங்கதைகள்: தமிழ்ப் புனைவின் புதிய நகர்வு

குறுங்கதை எனும் வடிவம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக எழுதப்பட்டபோது அது குறித்து தங்கள் புரிதலுக்குள் கட்டமைக்க பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. அவை குமுதம், விகடன் போன்ற இதழ்களின் ஒரு பக்கக் கதைகளின் வடிவம் என்றும், ஒரு வரிக் கதைகள், படக்கதைகள், துணுக்குகள் போன்றவற்றின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாவனை என்றும் சமூக ஊடகங்களுக்கென்றே எளிமையாக்கப்பட்ட கலை வடிவம்…

சிங்கப்பூரின் மூன்று நூல்கள்

ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தடத்தை இரு வழிகளில் பார்க்கலாம். ஒன்று இலக்கியங்களைப் படைத்தவர்கள். மற்றது இலக்கிய ஆக்கங்கள். சிங்கப்பூரின் முதல் தமிழ் நூலாகக் கருதப்படும் 1872ல் வெளிவந்த முகம்மது அப்துல்காதிறுப்புப் புலவர் எழுதிய முனாஜாத்து திரட்டு, 1887களில் யாழ்ப்பாணத்து சதாசிவ பண்டிதர் எழுதி வெளியிட்ட வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை…

ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்

ந. பாலபாஸ்கரன் உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 19 தமது 82 வயதில் காலமானார் என்ற தகவலை ஷாநவாஸ் தெரிவித்தபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. கடும் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். மரணத்துடன் போராடுவதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டே வந்தார். ஒருவகையில் அவர் தன் மௌனத்தால் அதை தன் அன்புக்குரியவர்களுக்கு முன்னமே அறிவிக்கவும் செய்தார். வானொலிக்…

புதுமைதாசன் : சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ  சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

புதுமைதாசன்: சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

ஓயாத பணிகளால் உருவாகும் பண்பாட்டு பாதை

சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர் பேராசிரியர் அருண் மகிழ்நன். வளங்கள் எங்கும் இருக்கலாம். அதனை நிறைவாக ஒழுங்கமைக்க அறிவாற்றல் அவசியமாக உள்ளது. அவ்வகையில், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளில் தனியாத ஆர்வம் கொண்ட இவரின் திட்டங்கள், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலில் நீண்ட காலம்…

கெம்பித்தாய்களின் சப்பாத்துகளுக்கு கீழே

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள். சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க…

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…

இளவெய்யில்

வெய்யில் படியத் தொடங்கியதும் கடையின் கண்ணாடிச் சுவரில் படிந்திருந்த பனித்துளிகள்  மெல்லக் கரையத்தொடங்கின. எதையோ மறந்துவிட்டோமா என நீலமலர் மங்கியிருந்த வெளிச்சூழலைக் கூர்ந்து பார்த்தாள். ஒரே ஒரு துளி மேலிருந்து கீழ் இறங்கி பனிப் போர்வையின் மேல் கோடிழுத்துச் சென்றது. நீலமலர் வெளிப்புறத்தில் இருந்திருந்தால் அதில் ஏதாவது வரைந்திருப்பாள். அவளுக்குப் பூக்களை வரைவது பிடிக்கும். சுலபமானதும்கூட.…

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு…

இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

பெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா…

சிலந்தி

ஐந்தடி அகலத்தில் நீளமாக இருக்கும் அந்தத் தாழ்வாரத்தின் பூத்தொட்டிகளில் கரும்பச்சை, இளம்பச்சை, செம்பச்சை என்று பலவண்ணப் பச்சைகளில் இருந்த இலைகளில் வெய்யில் நீண்டு படர்ந்திருந்தது. நீளநீளமான வெள்ளைக்கோடுகள் இருக்கும் இலைகள் நிறைந்த செடியின் ஓரமாக எனது நாற்காலியை நிறுத்திவிட்டு, தனது கைப்பெட்டியைத் திறந்து ஒரு பெரிய நீலநிறத் துணியை எடுத்து எனது கழுத்தைச் சுற்றிக் கட்டினான்…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 3

இளம் தலைமுறையின் இடைக்கால ஈடுபாடு ரெ.பாண்டியன், விஜயன், அரவிந்தன், ராஜசேகர், ராஜாராம், சூரியரத்னா, பாலமலர் போன்றவர்களால் 1988ல் தொடங்கப்பட்ட வாசகர் வட்டம் நவீன இலக்கிய வாசிப்பு, விமர்சனத் தேடலுக்குக் களம் அமைத்தது. இதே காலகட்டத்தில் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவின் தமிழ்ப் பகுதியும் உயர்நிலைப் பள்ளி மூத்த தமிழாசிரியர் மத்திய குழுவும் இணைந்து உயர்நிலைப்…

ஆணிவேர்களும் நீர்ப்பாசிகளும்: சிங்கை தமிழ் இலக்கியம் – பகுதி 2

மலாய், சீன இலக்கியங்களின் எழுச்சியும் தனித்து வளர்ந்த தமிழ் இலக்கியமும் இக்காலகட்டத்தில்தான், (1950களில்) மலாய், சீன இலக்கியங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சீன இலக்கியத்தில் சமூகம், கலாசாரம் சார்ந்து இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார் டாக்டர் டான் சீ லே (Chee Lay, Tan, 2015). முதலாவது மலாயா சீன இலக்கியத்தின் தனித்தன்மையை வளர்க்கும் நன்யாங்…