Category: கட்டுரை

இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

பல காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை. நாவலில், காதல், அன்பு, ஏக்கம், கவலை, வறுமை என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் நெஞ்சைப் பிழியும் வலியும், துயரமும், வறுமையும் கதை முழுவதும் இருக்கிறது. மஜித்,…

அண்மைக்காலச் சிறுகதைகள்

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும்.…

பேனாவை முறிக்கும் அதிகார கரங்கள்

படைப்புலகம் கலை நயமும் அழகியலும் சார்ந்தது என்றாலும் அது விட்டுச் செல்லும் தாக்கமானது அதிகார வர்க்கத்திற்கு எப்போதும் அச்சுறுத்தல் தருவதாகவே இருக்கிறது. தீவிர நிகழ்த்துக் கலைகளாக இருந்தாலும் இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அது அதிகார வர்க்கத்தின் பொதுபுத்தி சார்ந்த போக்குகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் சவால் விடுவதாகவும் மாற்றுச் சிந்தனைகளை முன்னெடுப்பதாகவும் இருப்பதால்தான் அரசுகள் படைப்பாளர்கள் மேல் அவ்வப்போது…

சாதி மயிர்

“ஆசிரியருக்கும் முடிவெட்டறவருக்கும் என்ன வித்தியாசம்..?” “ஆசிரியர் பிழை திருத்துவார் முடிவெட்டறவர் முடி திருத்துவார்..” சமீபத்தில் சில மாணவர்களைக் கடக்கும் போது அவர்கள் பேசியது எனக்கு சிரிப்பை வரவைத்தது . இதனை கவனித்த இரண்டு மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இடத்தைவிட்டு மெல்ல மறைந்தார்கள். தற்போது பணி நிமித்தம் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.…

இல்லாத திசைகள் 5 – முதல் முழு சம்பளம்

பாடாவதி ஓவியரிடமிருந்து தப்பித்து வார இதழ் ஆசிரியரின் தம்பி நடத்திவந்த நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தேன். மறக்க முடியாத வருடங்கள் அவை. அங்கு வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஒரு வெள்ளைக் கவரில் சம்பள பணத்தைப் போட்டு கொடுத்தார்கள். கவரின் மேல் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கவரைக்…

மாற்று வரலாறு பேசுவோம்

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத்…

‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்

பொதுவாகவே சிற்றிதழ் குறித்த மரபான ஒரு மனப்பதிவு நம்மிடையே உண்டு. சிற்றிதழ் என்பது அதிகம் விற்கப்படாத, தரம் குறைந்த காகிதத்தில் தயாராகி, விளம்பரம் இல்லாமல், 2000 அல்லது அதற்கும் குறைவான பிரதிகள் அச்சாகி, வண்ணங்கள் இல்லாமல் கறுப்பு வெள்ளையில் வெளிவரும் பிரதி என்பதை வரையறைகளாகச் சொல்வதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கப்படும் அளவீடுகள். ஆனால்…

அயோத்திதாச பண்டிதர்: தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வு உருவாக்கம்

இந்தக் கட்டுரை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில், தென்னிந்தியாவில் வெளிப்பட்ட தலித் தன்னுணர்வின் அடிப்படைக் கூறுகளைப் பற்றிய பகிர்வு ஆகும்.  குறிப்பிட்ட அக்காலத்தின் வரலாற்றுத் தகவல்களுக்குள் அதிகம் நுழையாது, தலித் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதர் (1845-1914) அவர்களால் முன்னிறுத்தப்பட்ட தலித் தன்னுணர்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரிப்பதாகவும் ஆராய்வதாகவும் இக்கட்டுரை…

பொய்யிலிருந்து மெய்க்கான நகர்வு

தன்னுடைய செயல்கள் அனைத்திலும் பொருளாதார லாபத்தை மட்டும்  குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மறுகாலனியம் கல்வியை விற்பனைச் சரக்காக மாற்றியதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மதிப்பு இழந்த பாடப்பிரிவுகளில் வரலாறும் ஒன்று. ஆனால் மறுகாலனியத்தால் பன்னாட்டுச் சந்தையில் மேலாதிக்கம் செய்கின்ற நிறுவனங்களைச் சேர்ந்த வளர்ச்சியைடைந்த நாடுகளில் வளரும் நாடுகளைக் குறித்த வரலாறு உட்பட இதர சமூக அறிவியல்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 3

நிறைய பேர் மனதிலும் மூளையிலும் குடி கொள்ளும் ஒரு பிம்பம் பெண். அவள் குழந்தையாக இருக்கும் போதும் சரி, பூப்படையும் போதும் சரி, அவள் தாய்மையடைந்த கர்ப்பக்காலத்திலும் சரி, தொடர்ந்து மீண்டும் குழந்தை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல நம்பிக்கைகளுக்கு உள்ளாகிறாள் (உள்ளாக்கப்படுகிறாள்). பெரும்பாலும் பெண்ணின் வாழ்க்கை முறையை கட்டமைக்க பல நம்பிக்கைகள் உட்புகுத்த படுகின்றன.…

சக கவிஞன் கி.பி. அரவிந்தன் நினைவாக…

என் இளமை பருவத்தில் இறந்த தோழர்கள், சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்து வந்தேன். முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரத்துவம் எய்திய போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள்.…

லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!

நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக…

குறையொன்றுமில்லை: நூல் அறிமுகம்

துறவிகள், முனிவர்கள், சன்யாசிகள் போன்ற ஆன்மீக பணியாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அன்னியமானவர்கள் அல்ல. பன்னெடுங்காலமாகவே தமிழ் இலக்கியத்தோடு முனிவர்களும் தவச் சான்றோர்களும் துறவிகளும் நெருங்கிய தொடர்பாளர்களாகவே இருந்துவருவதை தமிழ் இலக்கிய வரலாறு மெய்பிக்கிறது. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ ஒரு சமண துறவி. பக்தி இலக்கியம் படைத்த சமயக் குறவர்கள் ஆன்மீக வாழ்க்கையை நாடியவர்களே. சைவ…

சங்ககாலப் பண்பாடு – ‘பாதீடு’

தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான…

பொய்யால் விளைகிற வன்முறைகள்

என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன. மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே…