
மக்கள் கலைகள் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை அதன் ஊடாக அமைந்திருக்கும் நகைச்சுவைக் கூறாகும். நகைச்சுவையின் வழி உலகமக்களைக் கவரவும் ஒன்றுதிரட்டவும் முடியும். நகைச்சுவை, மக்களின் மனோவியலை மென்மைப்படுத்துகிறது. மனக்கட்டுகளை அவிழ்த்து மனதை இலகுவாக்கி உணர்ச்சிகளைச் சமன்படுத்துகிறது. நகைச்சுவை என்பது ஒரு சொல்லில் இருந்தோ ஒரு அசைவில் இருந்தோகூட வெளிப்படலாம். நமக்கு எது நகைப்பை உருவாக்குகிறது என்பது…