Author: அரவின் குமார்

சிகண்டி : திட்டமிடப்பட்ட விதியின் கதை

இலக்கியத்திலும் திரைப்படத்திலும் பால் புதுமையினர், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடிகள் என மையச் சமூகத்துக்கு வெளியே அதிகமும் அறியப்படாமல் இருக்கும் விளிம்பு நிலையினரை முன்வைத்துப் புனையப்படும் படைப்புகள், தாம் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்காகவே சிறந்த படைப்பு எனும் தகுதியைப் பெறுவதைக் காண முடிகிறது. ஆனால், படைப்பின் கலை ரீதியிலான வெற்றி என்பது அந்தப் பிரதி முன்வைக்கும் களத்தையும்…

யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான்.  “அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன். “அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே…

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல: வாசிப்பனுபவம்

தமிழில் உரைநடை இலக்கியத்தின் தொடக்கம் முதலே நீதிகளை உணர்த்துவதற்காக அளவில் சிறிதாக எழுதப்படும் கதைகளான நீதிகதைகள், ஈசாப் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவை இருந்து வருகின்றன. அதைப் போன்று, சமூக ஊடகத்தளங்களான முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் சிறிய பதிவுகளாகப் பதிவிடப்படும் அனுபவப்பதிவுகள், கதைகளும் அளவில் சிறியவையே. இந்த இரண்டுமே, தற்போது எழுதப்பட்டுவரும் குறுங்கதைகளில் அதிகமான…

அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம்…

வாடாமல் வாழும் வாழைமரங்கள்

சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார்.…

ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…

எலி

வந்ததிலிருந்து ஒருவார்த்தை கூட பேசாமல் என்னையும் எதிரிலிருந்த மணி அண்ணனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெலிசியா. அவள் கண்களின் கீழே விழுந்திருந்த அழுத்தமான கரிய ரேகைகள் கணினித் திரையில் விழுந்த கோடுகளாகத் தெரிந்தன. அறையில் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று சாமிபடங்கள் எண்ணெய் படிந்ததைப்போல இருந்தன. சாம்பிராணி புகையின் நெடி காட்டமாக இருந்தது. காவி…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…

சிண்டாய்

“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது,  கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது  எனக்கு ஒருவித எரிச்சலாக…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…

அழகுநிலாவின் ‘சங் கன்ச்சில்’ ஒரு பார்வை

‘ஆறஞ்சு’ (2015), என்ற  சிறுகதைத் தொகுப்பையும் “சிறுகாட்டுச் சுனை” (2018) என்ற சிங்கப்பூர் மரபுடைமை பற்றிய கட்டுரைத் தொகுதியையும் எழுதி வெளியிட்டுள்ளவர் எழுத்தாளர் அழகுநிலா. ‘கொண்டாம்மா கெண்டாமா’ (2016), ‘மெலிஸாவும் மெலயனும்’ (2016), ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’ (2018), ‘பா அங் பாவ்’ (2019) என குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களையும் அழகுநிலா எழுதியுள்ளார்: சிங்கப்பூர்…

நீர்ச்சுழலின் பாதை

இலக்கியத்தின் மகத்தான பணியாக வாழ்க்கைக்குத் தேவையான தன்னறத்தைப் போதித்தலை ஜெயமோகன் மீள மீளக் குறிப்பிட்டிருக்கின்றார். உலகின் சரிபாதி மக்கள் தத்தம் இல்லங்களில் உறைந்து இயல்பு வாழ்வு கெட்டு இருக்கும் கொரோனா காலத்துச் சூழலில் வாழ்வு மீதான நம்பிக்கையையும் அறத்தையும் வலியுறுத்துவது இலக்கியம் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பணியாக இருக்கிறது. அத்தகைய சூழலில் ஜெயமோகன் நாள்தோறும்…

புல்லின் விதைகள்

ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது.…

அடித்தூர்

மேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே…

மலேசிய சமகால கவிதைகள்: ஒரு பார்வை

வல்லின இலக்கியக் குழுவும் கூலிம் நவீன இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நவீன இலக்கிய முகாம்’ பலவகையிலும் பெருந்திறப்பாக இருக்கும் என்றே ஆவலோடு கலந்துகொண்டேன். நவீனத் தமிழிலக்கிய ஆளுமைகளான ஜெயமோகன், சு.வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோரது படைப்புகள் முன்னமே சிறிது வாசித்திருப்பதால், அவர்களை நேரடியாகக் காணும் மகிழ்ச்சியும் அச்சமும் ஒருசேரத் தொற்றியிருந்தது. முகாம் நடந்த மூன்று…