Author: அ.பாண்டியன்

சீ. முத்துசாமியின் ஆழம்; ஒரு வாசிப்பனுபவம்

மலேசியாவில் தோட்டப்புற வாழ்வை தீவிரத்தன்மையுடன் எழுதிக்காட்டும் எழுத்தளராக சீ. முத்துசாமி அறியப்படுகின்றார். ஆயினும்,  மக்களின் வெளிப்புற போராட்ட வாழ்க்கையைவிட அகச்சிக்கல்களை கவனப்படுத்துவதையே தனது கலையின் நோக்கமாக அவர் கொண்டிருப்பதை ‘மண்புழுக்கள்’ நாவல் தொடங்கி அறியமுடிகிறது. குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதன் வழி அவர் ஆராய்வது அவர்களின் மனச்சிக்கல்களையே என்பது என் அவதானம். தோட்டக்காடுகளின் இருளையும் அடர்ந்த வனங்களையும் மனித மனங்களின் குறியீடாக அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.…

அரசியல்வாதி

நாடு என்பதை நான் எப்போதும் ஒரு நிர்வாகியின் கீழ் இயங்கும் ரப்பர் தோட்டத்தோடு ஒப்பிட்டு யோசிக்கிறேன். ரப்பர் தோட்டங்களில்  நிர்வாகிக்கு கீழே துணை நிர்வாகி,  கிராணி, தண்டல், தோட்டத் தொழிலாளர்கள், வேலி அமைப்பவர்கள், ஓட்டுனர், குமாஸ்தா, தோட்டிகள், எடுபிடிகள் போன்றவர்களோடு  தோட்ட காவலாளியும் இருப்பார். நாட்டில்,  அரசியல்வாதிகள்தான் அந்த நிர்வாகியும் துணை நிர்வாகியும். அரசாங்க ஊழியர்களைக்…

விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்

அவன் மாஹ்டை சந்தித்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் சாத்தேவுக்குப் பேர்போன சிறு நகரமான காஜாங்கில் ஒன்றாகப் படித்தார்கள். ஆனால், அவர்கள் ஒரே பள்ளியில் படிக்கவில்லை. அவன் ஒரு பள்ளியில் படித்தான். மாஹ்ட் வேறு பள்ளியில் படித்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டு திரும்பும்போது பேருந்து நிலையத்தில் கட்டாயம் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது…

‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி

(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி) ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன.…

உலகத் தமிழ்க் களஞ்சியம்: காகித விரயம்

உமா பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதியைக்  கடந்த வாரம் கவனிக்க நேர்ந்தது. கெட்டி அட்டையில் அழகிய முகப்புடனான களஞ்சியம் அது. இரண்டாவது தொகுதியின் இறுதி சில பக்கங்களில் மலேசிய தகவல்கள் தொடங்கினாலும் மூன்றாவது தொகுதியில்தான் பெரும்பாலான மலேசிய தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிந்தது.…

அமரத்துவ வாழ்வைத் தேடிய ஆதிமனிதன் கில்கமேஷ்

நாடோடி வாழ்க்கையிலிருந்து மாற்றங்கண்டு ஒரு நிலத்தில் நிலையாகத் தங்கி வாழும் காலத்தை மனித நாகரீக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனித வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் பின்னர் நகர உருவாக்கங்களுக்கு வழிகோலின. உலகின் முதல் நகர உருவாக்கம் பொ. ஆ. மு 4500 காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம் என அகழ்வாய்வுகள் காட்டுகின்றன.…

பி. கிருஷ்ணன் சிறுகதைகள்: புதுமையின் ஊற்றுமுகம்

எழுத்தாளர் பி. கிருஷ்ணன் நாடகம், கட்டுரை, கதைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை எழுதிய முன்னோடி படைப்பாளர். புதுமைப்பித்தனின் நேசனான அவர் தன் பெயரைப் புதுமைதாசன் என வைத்துக் கொண்டார். அந்தப் புனைப்பெயரிலேயே அவர் இன்றும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இன்று அவர் சிங்கப்பூர் வாசியாக அறியப்பட்டாலும், பூர்வீகமாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும், சிங்கப்பூர்…

தமிழ் விக்கி: மலேசியக் கலைக்களஞ்சியம் அறிமுக விழா

நடைமுறையில் இருக்கும் ஒன்றின் மீது பொதுவாகப் பலருக்கும் விமர்சனங்கள், குறைகள் மாற்று கருத்துகள் இருப்பது மிக இயல்பானது. அரசியல் முதல் சமூக அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மீதும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் பெருவாரியாகக் குறை காண்பவர் அல்லது விமர்சனம் வைப்பவர் அந்தச்  சூழலை மாற்றும் திட்டங்களில் இறங்குவதில்லை.  அப்படி இறங்கி போராடி மொத்த அமைப்பையும்…

இப்போது உயிரோடிருக்கிறேன்: மரணம் துரத்தும் வாழ்க்கையின் வலி

வாழ்வது என்பது என்ன என்று யோசித்தால், அது சாவில் இருந்து தப்பிக்கும் கலை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சாவு என்பது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை. அது வாழ்வின் ரகசியம் போல மறைந்திருந்து ஒரு நாள் வெளிப்படுகின்றது.  மூப்பில் மரணம் என்பது வாழ்க்கையின் பிடி தளர்ந்து,  ஒரு விடைபெருதல் போல நிகழ்கின்றது. மனம் அதை ஏற்றுக்…

ஆதி பூமியை வரையும் கைகள்

(அபிராமி கணேசனுக்கு ‘வல்லினம் இளம் படைப்பாளி விருது’ வழங்கப்பட்ட போது அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் முழு வடிவம்) அ.பாண்டியன் உரை யூடியூப்பில் கோவிட் நோய்தொற்று காலத்துக்கு முன்பே அதாவது 2020 தொடக்கமே திட்டமிடப்பட்ட இந்நிகழ்ச்சி சூழல் சரியாகும் வரை ஒத்திபோடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் , நோய்சூழல் இன்றுவரை சரியாகாவிட்டாலும் அரசின் அனுமதிக்குப் பிறகு…

மா. ஜானகிராமன்: வரலாற்றை தேக்கி நிற்கும் சாமானியனின் அகம்

மலேசியத் தமிழர்களும் வரலாறும் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக வாழும் மலேசியா போன்ற நாடுகளில் இனத்தின் வரலாறு எப்போதும் புத்துணர்ச்சிமிக்க பேசுபொருளாக இருக்கிறது. இந்நாட்டின் மண்ணோடும் அரசியலோடும் தங்களைப் பிணைத்துக் கொள்ள வரலாற்றுச் சுவடுகளை நோக்கிய தேடலை பலர் முன்னெடுக்கின்றனர். தேசிய வரலாற்று வரையறைக்குள் வராத பல முக்கிய குறிப்புகளையும் உண்மைகளையும் தொகுத்துக் கொள்வதன் வழி தங்களின்…

எம்.கே குமார் சிறுகதைகள்

தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியம் என்று தனித்த அடையாளங்களைப் பெறுவதில் இன்றும் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் படைப்புகளை ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பெருநிலங்களில் குடியேறிய தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர் இலக்கியங்களோடு ஒப்பிட்டு…

பிளாச்சான்

நேற்று மாலை லீ சாய் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து என் முன்னால் நின்றான். சில வாரங்களுக்குப் பின் இன்றுதான் அவனைப் பார்க்கிறேன். வழக்கமாக பெரிய கேரியர் சைக்கிளில் வருபவன் நேற்று தலைதெறிக்க ஓடி வந்திருந்தான். அந்தப் பெரிய உடம்பு மழையில் நனைந்த  பூனைக்குட்டி போல உதறிக் கொண்டிருந்தது. உயிர் பயம் அவன் உடலெங்கும் படர்ந்திருக்க வேண்டும். …

மலேசிய நாவல்கள்: ஒரு தீவிர வாசகனின் மறைக்கப்பட்ட குரல்

கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார்.  தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.…

அடிமை

மீண்டும் ஒருமுறை எண்ணிப்பார்த்தேன். ஐம்பது டாலர் சரியாக இருந்தது.நான் மூங்கில் கேட் வழியாக நுழைந்து ஆர்கிட் தோட்டத்துக்குச் சென்றேன். செதுக்கிய கல் தட்டைகளை புதைத்து பாதை அமைக்கப்பட்டிருந்தது. நான் நடந்து நடந்து சலித்த பாதைதான்.  கடந்த இரண்டு மாதங்களிலேயே மூன்று முறை மேடத்தை சந்தித்து பேச வந்துவிட்டேன். ஆனால் எதுவும் நான் நினைத்தது போல அமையவில்லை.…