Tag: பி. எம். மூர்த்தி

நான் அறிந்த பி.எம்.மூர்த்தி

2008 ஆம் ஆண்டின் இறுதி அது. புருவங்களிலும் மீசையிலும் உரோமம் அடர்ந்திருந்த ஒருவர் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார். அவர் கையில் அவ்வருட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக நான் தயாரித்த பயிற்சி நூல் (module) இருந்தது. “இதைத் தயாரித்தவர் நீங்களா?” என்றார். “ஆம்” என்றேன். தன்னைத் தேர்வு வாரிய அதிகாரி என அறிமுகம் செய்து…

பாட்டையை உருவாக்கிய முன்னோடி

2016 ஆம் ஆண்டு வாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் விதி சமைப்பவர் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஒரு துறைக்குள் தனியொரு மனிதராகத் தளராத ஊக்கத்தால் மாற்றங்களையும் பங்களிப்பையும் கொண்டு வரும் முன்னோடிகளைப் பற்றிய மிக முக்கியமான கட்டுரை அது. அந்தக் கட்டுரையையொட்டி எழுத்தாளர் ம. நவீன் மலேசியாவில் அப்படி விதி சமைப்பவர் எனும் பதத்துக்கு எல்லா வகையிலும்…

மூர்த்தியும் நானும்

சிறு வயது முதலே நான் ஒரு தனிமை விரும்பி. நட்பு வட்டம் என்று எனக்கு இருக்காது. பள்ளிக்குச் செல்லும் முன் நண்பர்கள் எவருமிலர். பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஒரு சில தோழர்கள். அவர்களுடன் பள்ளி அளவிலான நட்பு மட்டுமே. ஆசிரியரான பிறகு ஒரு சில ஆசிரிய நண்பர்கள். அவர்களுடனும் பள்ளிக்கூடம், செய்யும் தொழில் என்ற அளவில்தான்…

மூர்த்தி எனும் சிறுவன்

‘தொலைந்தது எதுவென்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்…’ என்ற யுவனின் இந்தக் கவிதை வரியைத் தொடக்கத்தில் வாசிக்கும்போதெல்லாம் நிலையற்ற தேடலின்மை, இலக்கற்ற வாழ்க்கை, குழப்பமான மனநிலை, மனச்சோர்வு என சில நேரங்களில் எனக்குள் எழும் எண்ணங்களே நினைவில் வருவதுண்டு. எதை தேடிப் பயணிக்கின்றோம், எதை அடைகின்றோம், இதற்கிடையில் எழும் சவால்களைக் கண்டு துவண்டு போகுதல் போன்ற எதிர்மறை எண்ணங்கள்…

பெருஞ்செயல்களின் அளிப்பும் ஏற்பும்

நமது வாழ்க்கை நமது செயல்பாடுகளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதும் அல்லதும் விளைவது நமது செயல்பாடுகளால்தான். இன்று நாம் நம் வாழ்க்கையில் துய்கின்ற பல்வேறான படைப்புகள் அனைத்தும் எங்கோ எப்போதோ யாரோ ஒருவரால் அல்லது கூட்டுச் செயல்களால் உருவாக்கப்பட்டவை என்பதுதான் உண்மை. நல்ல செயல்களால் மனித வாழ்க்கையில் அகம் புறம் என்ற இரு நிலைகளிலும் வளர்ச்சியியும் மேன்மையும்…

பி. எம். மூர்த்திஎனும்ஆசிரியர்

பி. எம். மூர்த்தி அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு வல்லினம் வழியாக அமைந்தது. குறிப்பாக ஒரு பள்ளி ஆசிரியராக அவர் மேற்கொண்ட பயணங்களை அறிந்துகொள்வது ஓர் ஆசிரியரான எனக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. உண்மையில் பி. எம். மூர்த்தி அவர்களின் முதல் பள்ளி அனுபவம் மிகவும் சுவாரசியமானது. அவர் 1984ஆம் ஆண்டு லாடாங் பீயோங் என்ற முதல்…

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது 2025க்கான வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மலேசியக் கல்விச் சூழலில் தமிழிலக்கியப் பாடம் நிலைத்திருப்பதற்கும் அதில் மலேசிய நாவல் இடம்பெறுவதற்கும் வித்திட்டவர் பி. எம். மூர்த்தி. ஆரம்பப்பள்ளி அடைவுநிலை தேர்வுத்தாள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைத்து அதில் படைப்பிலக்கியம் எனும் புதிய பகுதியை உருவாக்கியவர்.   படைப்பிலக்கியப்…