
எதிரிலுள்ள கார்கள்கூட தெரியாமல்போன இருள் கவிழ்ந்த ஒரு மழைப்பொழுது. நீண்ட வாகன நெரிசல். அம்மோய் கடைக்கு உடனே சென்று அமலாவை ஏற்ற வேண்டும் என்கிற தவிப்பில் மணியம் கால்கள் நடுங்க காருக்குள் இருந்தார். அவள் பிரத்தியேக வகுப்பு முடிந்து இந்நேரம் மழைக்கு ஒதுங்கி அம்மோய் கடையோரம் நின்று கொண்டிருப்பாள். அமலா இந்த வருடம் ஆறாம் ஆண்டு.…