யாழ் பதிப்பகத்தின் மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டி – 2018

மலேசிய கல்வி பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களை பதிப்பித்து வருவதோடு அரசாங்க  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்பு திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசிய தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி…

மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

[2006ஆம் ஆண்டு Nou Hach மாநாட்டில் எழுத்தாளர் கே.எஸ். மணியம்  வழங்கிய சொற்பொழிவு] வணக்கம்! சக எழுத்தாளர்களிடமும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமும் பேசுவதற்கான இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேசப்போவதில் உங்களுக்குத் தேவையான சில கருத்துகள் இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக, மலேசியாவின் இலக்கியம் குறித்த காட்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த…

“அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

90களில் கே.எஸ்.மணியம் அவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல்  அவரது புனைவுலகம் மட்டுமல்லாது கருத்துலகையும் வாசகனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக, அரசியல் அவதானிப்புகளை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது. தமிழ் வாசகர்களுக்காக மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நேர்காணல் வழி அவரது புனைவுலகை மேலும் ஆழமாக உணர முடியும்…

ஒரு கற்பனையின் வழித்தடம் : கே.எஸ். மணியத்துடன் ஓர் உரையாடல்

கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்தும்  மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்களுடைய மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி  பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும்…

புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

கிழவன் மரணத்தை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அமைதியைக் கனவுகள் வந்து தொல்லைபடுத்தி குலைத்தன. அவற்றுள் சில கொடுங்கனவுகளின் கூர்மையான எல்லைவரை கொண்டுபோய் தூக்கத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தன. அவனது சிந்தனையைச் சிதைத்துகொண்டேயிருந்த கனவுகள் அவனை விரக்தியாலும் எரிச்சாலாலும் முணுமுணுக்க வைத்தன. “எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் இருந்தாதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” அவன் அப்போது சன்னல்வழி…

அந்தக் கோயில்

நாங்கள் தத்தளிப்பு மிகுந்த பரவசத்திலிருந்தோம். தேனிலவுடன் வரும் எதிர்ப்பார்ப்பு, விடலைக்காதல், மென்மை, வெம்மை ஆகியவற்றுடன் நெகிழ்ந்திருந்தோம். அரை மாதமே விடுமுறை என்றாலும் வங்வங்கும் நானும் பயணத்தைப் பலமுறை திட்டமிட்டிருந்தோம்; பத்து நாட்கள் திருமண விடுப்பு,மேலும் ஒரு வார கூடுதல் வேலை விடுப்பு. திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எங்களுக்கு அதைவிடவும் வேறெதுவும் அத்தனை…

வாட்ஜ்டாவும் பச்சை நிற சைக்கிளும்

பல நூற்றாண்டுகளாக, பெண் உரிமைக்கும் அவர்களுக்கான சுதந்திர வெளிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சவூதி அரேபியா இன்று பல மாற்றங்களை கண்டு வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சவூதி மன்னன் சல்மான் தலைமையில் நடக்கும் மாற்றத்தின் வேகமும் அவை  மேற்கத்திய செய்தி ஊடகங்களில் முதல் பக்கச் செய்திகளாகக் காட்டப்படுவதும் எத்தனை நாள் நீடிக்கும் என்ற சந்தேகங்களை பல அரசியல்…

கொல்லப்படும் குறிகள்

3000 வருடங்களுக்கு முன், எகிப்து மன்னராட்சியின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, பண்டைக்கால பாபிருஸ் ஏட்டில் (Papyrus Salt 124) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக டெய்லிமெய்ல் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  Deir el Medina-வில் தங்கியிருந்த பானெப் எனும்  சிறந்த  கட்டிடக்கலை கைவினைஞர் (Paneb) மேல்…

“மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாஷ்

பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகத்தின்  நிர்வாகி பிரகாஷ்,  ஜெகதீசன் – ராஜகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகன் . இவர் பிறந்து வளர்ந்தது பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் நகரில். தந்தையார் முடித்திருத்தும் கடைகள் வைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர் தன் சொந்த முயற்சியில் பினாங்கு தீவில் இந்திய மரபியல் அருங்காட்சியகம்…

“தற்காலிக மன விலகல்கள் வரலாற்றுக்கு அவசியமற்றது.” – மா.செ.மாயதேவன்

1950களில் மலேசியாவில் ஏற்பட்ட புதிய இலக்கிய அலையில் உருவானவர் மா.செ.மாயதேவன். இரு நாராயணன்களும் நடத்திய கதை வகுப்பு, கு.அழகிரிசாமி உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் என பல்வேறு கலை இலக்கிய முன்னெடுப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, சிறிது சிறிதாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர். 85 வயதான அவரை நேர்காணலுக்காக தைப்பிங் நகரில் சந்தித்தோம். பலவற்றை அவர்…

“எழுத்தாளனை உருவாக்க முடியாது” – மா.இராமையா

‘இலக்கிய குரிசில்’ முனைவர் மா.இராமையா, 1946ஆம் ஆண்டு ‘காதல் பரிசு’ என்ற முதல் கதையை எழுதியதன் வழி மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகின் அடியெடுத்து வைத்தவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 1000திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 50க்கும் மேற்பட்ட கவிதைகளும் 12 நாவல்களும் எழுதியுள்ளார். இவர்பெற்ற பரிசுகளின் பட்டியல் மிக நீண்டது. ‘மலேசிய இலக்கிய வரலாறு’…