Author: ம. நவீன்

அழிவை நோக்கி கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகள்

கடந்த சில மாதங்களாகவே கோலசிலாங்கூரில் உள்ள இயற்கை பூங்கா (Kuala Selangor National Park) ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. அலையாத்தி காடுகளால் சூழப்பட்ட இந்த பூங்கா எதிர்க்கொண்டுள்ள ஆபத்து குறித்து, இதுவரை மலேசியத் தமிழ் ஊடகங்கள் எதிலும் வெளிவராத நிலையில் நான் அந்தப் பூங்காவின் நிர்வாகி மைக்கல் அவர்களைச் சென்று சந்தித்தேன்.

Continue reading

தூரன் ; பத்மபாரதி; சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

1954ஆம் ஆண்டு தொடங்கி 1963 வரை சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒன்பது கலைக்களஞ்சியத் தொகுதிகள் என்னிடம் உள்ளன. அதில், முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள தி.சு.அவினாசிலிங்கத்தின் முகவுரை முக்கியமானது. சில வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும்; ஈடுபட்டால் அவற்றைச் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. சுதந்திர தினத்துக்கு முந்திய நாள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வழி தி.சு.அவினாசிலிங்கம் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டார். இரண்டே நாட்களில் இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை திரண்டது. அவ்வாதரவு கொடுத்த நம்பிக்கையுடன் அக்டோபர் 1947இல் கலைக்களஞ்சியப் பணியை சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கினார். இந்தக் கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர் ம.ப. பெரியசாமித்தூரன்.

காண்க: பெரியசாமி தூரன்

Continue reading

எழுத்தாளர் மஹாத்மன் நிதி RM 10598.56 சேர்ந்தது

ஜூன் 25, மஹாத்மனுக்கு நிதி உதவி தேவை என குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். இந்த நிதி சேகரிப்புத் திட்டத்தை வல்லினம் மூலம் ஒரு மாதம் தொடர திட்டமிட்டோம். எழுத்தாளர் மஹாத்மனுக்காக இந்நிதி திட்டத்தை முன்னெடுக்க சில காரணங்கள் இருந்தன.

Continue reading

மஹாத்மனுக்கான நன்கொடை

முந்தையை பதிவு

மஹாத்மனின் உடல் நலம் முன்னிலும் மெல்ல தேறி வருகிறது. பேசுவது புரிகிறது. கண்களைத் திறக்கிறார். ஆனால் முகங்களை அடையாளம் காணமுடிகிறதா என்பது தெரியவில்லை. சுவாசிக்க அவ்வப்போது இயந்திர உதவி தேவைப்படுகிறது.

Continue reading

நிதி உதவி தேவை

கடந்த சில வாரங்களாகவே எழுத்தாளர் மஹாத்மன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை அறிவேன். சில ஆண்டுகளாகவே அவரை வெவ்வாறு நோய்கள் தாக்கியபடி இருந்தன. அப்படி ஈராண்டுகளுக்கு முன் அவரை சுங்கை பூலோ மருத்துவமனையில் ஶ்ரீதருடன் சென்று சந்தித்தேன். மூளையில் உருவாகியுள்ள கட்டியால் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்தார். நேர்பார்வை மட்டுமே இருந்தது. பக்கத்துக் காட்சிகள் அனைத்துமே இருள். உடன் அவர் மனைவி இருந்தார். அவர் திருமணம் செய்திருப்பதை அப்போதுதான் அறிந்தேன். ஶ்ரீதரும் அப்போதுதான் அறிந்திருந்தார். கண்களை குறுக்கி வாசித்துக்கொண்டிருந்தார். தன்னால் இன்னமும் வாசிக்க முடிவதை எண்ணி உற்சாகமாகப் பேசினார்.

Continue reading

சிகண்டி: கித்தாகாட்டு மண்ணின் இருளுலகம் – துரை.அறிவழகன்

“தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தின் 3-ஆம் தேதி. மலேசிய வாழ்கை முடிவடைந்து ‘கிரீன் ப்ளாண்டேசன் சர்வீஷ்” விசாவில் தாயகம் திரும்பியது, 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இக்காலகட்டத்தில், மலேசிய இலக்கிய உலகுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அங்கிருந்த கடைசி ஆண்டுககளில்தான். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர் கோணங்கி அவர்கள். மலேசியாவின் சுண்ணாம்பு மலையை திருடிப்போக வந்திருந்தார் கோணங்கி. ம.நவீன் அப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.

Continue reading

உரை: யுவன் சந்திரசேகர் படைப்புலகம்

2006இல்

அனைவருக்கும் வணக்கம்.

இங்கு வந்திருக்கும் பலரும் யுவன் சந்திரசேகரின் புனைவுகளை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஒரு சில கதைகளை வாசித்துவிட்டு கொஞ்சம் குழப்பத்துடன் பின்வாங்கவும் செய்திருக்கலாம். இந்த உரையை யுவனை அணுக ஓர் ஆரம்பக்கட்ட வாசகனுக்கு வேண்டிய மனத்தயாரிப்பு குறித்து பேசலாம் என வடிவமைத்துக்கொண்டேன். அதன் வழி மலேசியாவில் யுவனை வாசிக்கக்கூடிய புதிய வாசகர்கள் உருவாவார்கள் என்றால் அதுவே மகிழ்ச்சி.

Continue reading

இருளெழுத்து எனும் கலை – சிகண்டியை முன்வைத்து சுனில் கிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு ம. நவீன் தனது முதல் நாவலான ‘பேய்ச்சியை’ வெளியிட்டார். மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் நிகழ்ந்த சாராய சாவு எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்ட நாவல். முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வு தொடங்கி தோட்ட வாழ்வு வரை முன்னும் பின்னுமாக ஊடாடும் கதை. பேய்ச்சியின் மையம் என்பது தாய்மைதான். ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதையில் வரும் பகவதி, மூத்தம்மை இளையம்மை என இரண்டு வடிவில் இருப்பாள். பிள்ளையை இடுப்பில் சுமந்தவளாகவும் வாயில் கவ்வி கடித்து உண்பவளாகவும் காட்சியளிப்பாள். பேய்ச்சி நாவலும் இதையொட்டி தாய்மையின் இரு வடிவங்களையம் காட்டுகிறது. ஒரே அன்னையே கௌரியாகவும் காளியாகவும் ஆகிறாள். நவீனின் இரண்டாவது நாவலான சிகண்டியின் மைய பேசுபொருளும் தாய்மைதான். தாய்மையை பால் அடையாளத்திலிருந்து துண்டிக்கிறது சிகண்டி. தாய்மையையும் பெண்மையையும் எய்தத்தக்க ஒரு நிலையாக முன்வைக்கிறது. இந்த தரிசனம் தமிழுக்கு புதிதல்ல. சு. வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ சட்டென நினைவுக்கு வருகிறது.

Continue reading

அம்பரம் நாவல் (உரை)

அனைவருக்கும் வணக்கம்

நான் வாழ்ந்த லுனாஸ் வட்டாரத்தில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ‘பேய்ச்சி’ நாவலில் அந்தக் கோயிலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் மண்டபத்தில் தேர் ஒன்று ஓரமாக ஒதுங்கி நிற்கும். திருவிழாவின்போது மட்டுமே அதை கண்டுகொள்வார்கள். மற்ற நாட்களில் அது எங்கள் விளையாட்டு பொருள்களில் ஒன்று. திருவிழாவின்போது அதை மண்டபத்தில் இருந்து இழுத்துச் சென்று பெரிய காளை மாடுகளுடன் இணைக்க வேண்டி இருக்கும். அது சாதாரண காரியமல்ல. அவ்வளவு சீக்கிரம் தேர் நகராது. ஆனால் அதை இழுத்துச் சென்று மாட்டிடம் இணைப்பதே ஒரு மங்கள செயலாகக் கருதப்பட்டதால் பலரும் தங்கள் கைகளை தேரில் வைத்திருப்பார்கள். ஐம்பது அறுபது கரங்கள் அதில் பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில இளைஞர்களின் பலத்தால்தான் அந்தத் தேர் நகரும். அவர்களே அதில் பிரதானமானவர்கள். மூச்சுத்திணர தேரை இழுத்து மாட்டுடன் பூட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.

Continue reading

தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

தமிழ் விக்கி தளம்

ஜனவரி மாதம் ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘தமிழ் விக்கி’ ஒன்றை உருவாக்கப்போகும் தனது திட்டத்தையும், அதற்காக மலேசியாவின் முக்கியத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதும் பணியில் இணையவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது ஈடுபட்டிருந்த பணிகளை முடிக்க ஒரு வார காலம் தேவைப்பட்டதால் அவகாசம் கேட்டு சற்று சாவகாசமாகத்தான் களத்தில் நுழைந்தேன். அப்போதே இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் போடப்பட்டிருந்தன. இந்த வேகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அதில் சரிபாதியாவது ஜெயமோகனால் தமிழ் விக்கிக்கு என எழுதப்பட்ட கட்டுரைகள் இருக்கும். இன்னும் சில நாட்கள் தாமதமானால் மலேசிய எழுத்தாளர்கள் குறித்து அவரே எழுதி முடித்துவிடும் தீவிரம் தெரிந்தது.

Continue reading