
பெருநகர வாழ்க்கை என்பது பலதரப்பட்ட சாத்தியங்களைக் கொண்டது. தமிழ்நாட்டில் சென்னையையும், மதுரையையும் பார்த்தாலே தெரியும் அங்கே எத்தனை விதமான வாழ்க்கை சாத்தியம் என்று. மதுரையில் கோரிப்பாளையத்திற்கும், பாண்டி கோவிலுக்கும் இடையே ஐந்து கி.மீ தூரம் தான் ஆனால் இரு இடத்திற்குமான வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறிவிடும். சென்னை என்னும் பெருநகரத்தில் எத்தனை விதமான வாழ்க்கையை நாம் பார்க்கலாம். ஆனால் தமிழ் நாவல்களில் இந்த வாழ்க்கையின் பத்து சதவிகிதம் கூட பதிவு செய்யப்படவில்லையோ எனத் தோன்றுகிறது.
Continue reading








