திற‌ந்தே கிட‌க்கும் டைரி

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 11

00002.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

ரெங்கசாமி அவர்களின் நேர்காணலுக்குப் பிறகு மனதில் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. இது வெறும் 40 நிமிட ஒளிப்படமாக மட்டும் வர தகுதி கொண்ட நேர்காணல் அல்ல என தோன்றியது. Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 10

00002.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

அ.ரெங்கசாமியின் வாழ்வை அவர் வாய் வழியாகவே ஆவணப்படுத்தும் நடவடிக்கைக்காக முதன் முறையாக சிவாவுடன் பந்திங் போன அனுபவம் இனிமையானது. Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 9

renga 02சுவாமி பிரமானந்தா தன் முடிவை பின்னர் பொதுவில் சொன்னார். ஒவ்வொரு வருடமும் சுவாமியின் தியான ஆசிரமம் மூலம் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை இம்முறை இலக்கியத்துக்காக அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படும் என்பதுதான் அது. ரெங்கசாமியின் முகத்தில் பெரிதாக சலனம் இல்லை. Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 8

தைப்பிங் சந்திப்பின் வழி வாழ்வை இன்னும் கற்றுக்கொண்டேன் என்றுதான் கூற வேண்டும். வல்லினம் குழுவுக்குள் சின்ன சின்ன பிளவுகள் ஏற்பட்டதும் அங்குதான்.

கடைசிநாள் இரவில் அனைவரும், ஒரு சீனர் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த நிகழ்வில் நான் அழைக்காமலேயே வந்திருந்த நண்பனின் நண்பன் ஏற்பாடுகளில் உள்ள குறைகள் குறித்து பேசத்தொடங்கினார். அதில் ஒரு நையாண்டி இருந்தது. உண்மையில் தங்கியிருந்த பங்களாவில் சில குறைகள் இருக்கவே செய்தது. குளிக்க நீர் வர தாமதமானது. முதல் சந்திப்பு என்பதால் கேளிக்கைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கிவிட்டிருந்தோம். யாரையும் கட்டுப்படுத்தும் திறனும் என்னிடம் இல்லாமல் இருந்தது. மகிழ்ச்சியான ஒரு சூழலில் யாரையும் இலக்கிய உரையாடல் என்ற பெயரில் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 7

renga 01திருத்தம் :

மூன்றாவது பாகத்தில் ஒரு தகவலைத் தவறாகக் கொடுத்துவிட்டேன். திலகவதி ஐ.பி.எஸ் மூலம் மீண்டும் வெளியீடு கண்ட நாவல் ‘புதியதோர் உலகம்’. நான் தவறாக ‘லங்காட் நதிக்கரை’ என எழுதியிருந்தேன். தவறுக்கு மன்னிக்கவும்.

                                                                                                                                                      ***

Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 6

Image37232.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

அ.ரெங்கசாமியைச் சந்தித்தபோதுதான் அவர் புதிதாக ஒரு நூல் எழுதி வைத்திருப்பது தெரிந்தது. அப்போது உச்சத்தில் இருந்த ஈழபோர் குறித்த நிகழ்கால சம்பவங்கள் மலேசிய இளைஞர்களுக்குத் தெரிந்திருந்ததே தவிர, அதன் தொடக்கக் கட்ட வரலாறை அறியாமல் இருந்தனர். இளைஞர்கள் படித்து ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் சின்னஞ்சிறிய நூல் ஒன்றை கையெழுத்துப்பிரதியாக தானே எழுதி வைத்திருந்தார். நான் அதை நூலாக்கித் தருவதென முடிவெடுத்தேன்.

Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 5

a rengasamy2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

‘வல்லினம்’ தொடங்கியப்பின்தான் நான் ரெங்கசாமி அவர்களை முதன்முறையாகத் தொலைப்பேசியில் அழைத்தேன். வல்லினத்தில் அவரது பத்திகள் வர வேண்டும் என்றும் அது அவரது வாழ்வின் அனுபவங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்தார். Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 4

2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

ரெங்கசாமி சொன்ன வார்த்தை மனதில் ஆழ தைத்திருந்தது. மலேசியாவில் ஒருவன் எழுத எவ்வித புறத்தூண்டுதல்களும் காரணமாய் இல்லாத வரண்ட நிலையில், போட்டி அவன் இயங்க ஒரு நெம்புகோலாக அமைகின்றது. ஆனால், போட்டியில் பங்கெடுக்கும் படைப்பாளன் அதன் பரிசுக்கு மட்டுமே குறியாய் இருந்து படைப்பில் சமரசம் செய்வானேயானால் அவன் ஒரு வணிகன் மட்டுமே. நல்ல மொழியும் சிந்தனையும் கொண்ட பல எழுத்தாளர்கள் போட்டிக்காக பொதுபுத்தியிலுள்ள நன்னெறிகளை போதிப்பதை வாசித்துள்ளேன். ரெங்கசாமியின்  நாவல்கள் யாரையோ மகிழ்விக்க எழுதப்பட்டதல்ல. அதில் வாழ்வும் வரலாறும் இணைந்திருந்தன. ஒரு நாவலை எழுதிவிட்டு ஒன்றும் செய்யாமல் பலவருடம் பாதுகாத்து வைக்கும் பக்குவம் அவரின் வயதுக்கு இருந்ததை அவரது அனுபவப் பகிர்வில் அறிய முடிந்தது. எனக்கு அதெல்லாம் இயலாத வயது. எதிலும் அவசரம்.

Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 3

caver2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

மீண்டும் 2005லேயே பேரவைக் கதை போட்டியில் பொதுப்பிரிவில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்திருந்தது. அந்த ஆண்டின் இரண்டாவது வெற்றி. நான் முதன்முதலாக அந்த ஆண்டுதான் பேரவை கதைப்போட்டியில் கலந்துகொண்டிருந்தேன். உடன் சிவம் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவருடன்தான் மோட்டாரின் வீடு திரும்பினேன். இன்னும் நாட்டில் என்னென்ன போட்டிகள் நடக்கிறதோ அதிலெல்லாம் பங்குபெற்று வெற்றி வாகைச்சூடுவதென்ற உற்சாகம் இருவரிடத்திலும் இருந்தது. எப்படியாவது எங்கள் அடையாளத்தை மலேசிய இலக்கியத்தில் ஆழப் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாவது வெற்றியில் வேரூன்றியது.

Continue reading

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 2

VB00011532.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்

ஒரு வெற்றி அடைந்தபின் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமே மறுநாள்களில் மிஞ்சியது. தொலைக்காட்சி, நாளிதழ் என பலவற்றிலும் என் படங்கள் தொடர்ந்து வந்தாலும் நான் எழுதிய நாவல் குறித்து கேட்டபவர்களைக் காணக்கிடைக்கவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் யாருக்குமே நாவல் குறித்தோ அதில் பரிசு பெறும் எழுத்தாளன் எனும் வகையரா  அவர்களுடந்தான் இந்த பூமியில் வாழ்வது குறித்தோ கொஞ்சமும் கேள்விகள் இல்லை. பள்ளியில் நான் மட்டுமே ‘ஈ…’ என பார்ப்பவர்களிடமெல்லாம் பல்லைக்காட்டிக் கொண்டிருந்தேன். எனது வெற்றி குறித்து அறியாதவர்கள்மேல் கடும் கோபம் வந்தது. பின்னர், ‘அவர்கள் ஏன் அறிந்திருக்க வேண்டும்’ என்ற எனக்குள் எழுந்த கேள்வியே சோர்வடையவும் வைத்தது.

Continue reading