2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா 6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர் ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்
2005 வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு காதல் தோல்வியில் மனம் மிக சோர்ந்திருந்த ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் அழுகை பொத்துக்கொண்டு வரும் எனும் முகத்தோற்றம். மருத்துவர் சண்முகசிவா அப்போதுதான் அறிமுகமாகியிருந்தார். அவசரத்துக்கு ஏதாவது பாராட்டு சொற்களைக் கேட்க வேண்டுமென்றால் அவரை அழைப்பதுண்டு. அதுதான் நான் ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டும்.