
பாவண்ணனுடன்...
தி. நகர் பேருந்து நிலையத்தில் பௌத்த அய்யனாருடன் பாவண்ணனும் இருந்தார். தொடக்கத்தில் நான் பாவண்ணனை பெயரளவில் அறிந்து வைத்திருந்த போது அவரை வாசிக்கத் தூண்டியவர் நண்பர் காளிதாஸ். கவிதை, சிறுகதை, கட்டுரைத்தொகுதிகள், குறுநாவல்கள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள், குழந்தைப்பாடல்கள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருப்பவர். மொழிபெயர்ப்பிற்காகச் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர். அவரை ‘நேற்று வாழ்ந்தவர்கள்’, ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்ற இரு சிறுகதை தொகுதி மூலமாகவே அறிந்து வைத்திருந்தேன். ஒருசில கட்டுரைகளை வாசித்ததுண்டு. இத்தனைக் குறைவாக வாசிப்பின் மூலம் அறிந்த ஒருவருடன் நேரில் அமர்ந்து பேசுவது ஒருவகையான கூச்சத்தைக் கொடுத்தது.
Continue reading →