பயணம்

க்யோரா 9: ‘வைத்தாங்கி’ ஒப்பந்தம்

கொஞ்ச நேரம் ‘தி பாப்பா’ அருங்காட்சியகத்தில் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருந்த மாவோரி கண்காட்சி தளத்தில் அமர்ந்தோம். அத்தளத்தில் இருந்த சிறிய இடைவெளிகள் வழியாக மாவோரிகளின் பொருள்களைப் பார்க்க முடிந்தது. உண்மையில் ஏமாற்றம்தான். மெல்ல நடந்து வெளிச்சுவரில் பிரம்மாண்டமாகத் தொங்கிய மாதிரி ‘வைத்தாங்கி’ ஒப்பந்தத்தைப் பார்த்தேன்.

Continue reading

க்யோரா 8: மாவோரிகள்

‘தி பாப்பா’ (Te Papa) அருங்காட்சியகத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய மற்றுமொரு பகுதி மாவோரிகளின் கண்காட்சிக்கூடம் என தங்கா சொல்லியிருந்தார். உண்மையில் நான் அதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். சொல்லப்போனால் நியூசிலாந்தில் இறங்கியது முதலே மாவோரிகள் குறித்தே தங்காவிடமும் செல்வா ஐயாவிடமும் தகவல்களைக் கேட்டு பெற்றபடி இருந்தேன். அவர்கள் வாழ்விடத்தில் சென்று நெருங்கிப்பார்க்க வேண்டும் எனும் ஆசையை மலேசியாவிலிருந்து புறப்படும் முன்னரே தங்காவின் கோரினேன். மாவோரிகள் மெல்ல மெல்ல தங்கள் பண்பாடுகளை விட்டு வந்துவிட்டதையும் இன்று அசலான மாவோரி வாழ்வியலைப் பார்ப்பது கடினம் என்றும் கூறியது ஏமாற்றமாக இருந்தது.

Continue reading

க்யோரா 7: கலிபொலி போர் (Gallipoli)

மிதிக்க மிதிக்க சைக்கிள் முதலில் கால்களுக்கு வசமானது. பின்னர் கைகளுக்கு. உடலில் அதிகம் இறுக்கம் இல்லாததில் அதை அறியலாம். கியர் போடும் நுட்பம் மட்டும் விரல்களில் வந்துசேர கொஞ்சம் தயங்கியது. எந்தக் கருவியையும் இயல்பாகச் செலுத்துதல் என்பது அதனை ஒரு தனித்த கருவி என மறப்பதும் அதை நம் உடலின் ஒரு பாகமென பொருத்திக்கொள்வதிலும்தான் உள்ளது. காதலில் உடல்களும் அப்படித்தான்.

Continue reading

க்யோரா 6: சுவருக்கு வெளியே

புதிய நிலபரப்புக்குள் செல்வதென்பது என்ன? கண்களை மூடிவைத்திருந்தாலும் பிற அத்தனை புலன்களும் புதுமையை உணர்வது. ஓசையில் காற்றில் வாசத்தில் அந்த பேதம் மூளைக்குள் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருப்பது. நான் கோலாலம்பூருக்கு வந்த புதிதில் மீண்டும் கெடாவுக்குச் செல்லுதல் என்பது இன்னொரு வகை வாழ்வியலில் நுழைந்துவிட்டு வருவதுதான். இன்று மலேசியா முழுவதும் காட்சியும் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகிவிட்டதாகவே உணர்கிறேன். அந்தந்த மாநிலங்களில் உள்ள சில சிற்றூர்களின் அதிகாலைகள் கொஞ்சம் வேறாக உள்ளன. மற்றபடி பெரும்பாலான நகரங்கள் தங்களைக் கோலாலம்பூராக மாற்றிக்கொள்ளவே மெனக்கெடுகின்றன. கெந்திங் மலை என்பது குளிரெடுக்கும் கோலாலம்பூர். லங்காவி அலையடிக்கும் கோலாலம்பூர். இன்னும் சில ஆண்டுகளில் இருக்கின்ற அத்தனை காடுகளையும் அழித்துவிட்டு அரசாங்கம் செம்பனையை நட்டுவிடும். செம்பனையை நட முடியாத இடங்களில் கட்டடங்களை நட்டுவிடும். பின்னர் தேசமெங்கும் ஒரே மணம்; ஒரே குணம்.

Continue reading

க்யோரா 5: தமிழ் மணி

சரியாக காலை 10 மணிக்கு நியூசிலாந்து அருங்காட்சியகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ள கட்டடம் செல்ல வேண்டியிருந்தது. அங்குப் பழங்கால கப்பல் மணி ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மாநாட்டை ஒட்டி ஏற்பாட்டுக்குழு இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தது.

Continue reading

க்யோரா 4: வண்ணங்களின் உலகம்

நியூசிலாந்துப் பயணம் உறுதியானபோது, நான் பார்க்க ஆசைப்படுவதாக தங்கவேலிடம் விரும்பிக்கேட்ட இடம் ஒரு தொடக்கப்பள்ளி. நான் செல்லும் நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளிக்குச் சென்று பார்த்திருக்கிறேன். அனுமதி கேட்டு அங்குள்ள பாட நூல்களை எடுத்து வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் மனம் தொடக்கப்பள்ளியில்தான் வடிவமைக்கப்படுகிறது. அதை ஒவ்வொரு நாடும் எவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகிறது, தன் குடிமக்களின் மனம் எவ்வாறு இயங்க வேண்டும் என ஓர் அரசு விரும்புகிறது என்பதை தொடக்கப்பள்ளிக்குச் செல்வதன் மூலம் அறியலாம்.

Continue reading

க்யோரா 3: மகத்துவமாகும் குற்றங்கள்

தங்கவேலுடன்

திட்டமிட்டபடி தங்கவேல் சரியாக காலை எட்டு மணிக்கு செல்வா வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நியூசிலாந்தில் நான் பார்த்தவரை பெரும்பாலும் நேர ஒழுங்கை கடைபிடிக்கின்றனர். அல்லது நான் சந்தித்தவர்கள் அப்படி இருந்தனரா என்று தெரியவில்லை. ஆனால் அக்குணம் எனக்கு உவப்பானது.

Continue reading

க்யோரா 2: குளிர் நிலம்

தங்கவேல் மற்றும் ரவீனுடன்

வெலிங்டன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது நண்பர் தங்கவேல் மற்றும் ரவீன் காத்திருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நியூசிலாந்து தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக சிறுகதைப் பயிலரங்கு ஒன்றை நடத்தியபோதே தங்கவேலுவை அறிவேன். திருநெல்வேலிக்காரர். நல்ல இலக்கிய வாசகர். அந்தப் பயிலரங்கில் ஆர்வமாகப் பங்கெடுத்தார். சிறந்த புனைவுகளைத் தேடி வாசிப்பவராக இருந்தார். நேரில் பார்த்தபோது இணையச் சந்திப்பில் பார்த்ததைவிட இளமையாகத் தெரிந்தார். அவர் கையில் என் பெயர் பொறித்த பலகை இருந்தது. அதில் ‘நியூசிலாந்து தங்கள் அன்புடன் வரவேற்கிறது’ எனும் வாசகம். ரவீன் நான் கலந்துகொள்ளும் தமிழ் விழாவை ஏற்பாடு செய்துள்ள தமிழ் சங்கத்தின் தலைவர்; மலேசியர்.

Continue reading

க்யோரா 1: காணாமல் போன கதை

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிட்னி விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் எனக்கு நடு இருக்கை எனத் தெரிந்தது. கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது சன்னல் ஓர இருக்கை கிடைத்தது. ஆனால் ரசிப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. மலேசியாவைக் கடக்கும்போது தொழுநோய் போன்ற செம்பனை திட்டுகள். சிங்கப்பூரில் இறங்கும்போது கட்டடக்காடுகள். சன்னல் ஓர இருக்கை கிடைப்பது பெரிதல்ல; அது எங்கு கிடைக்கிறது என்பதுதான் தலைவிதி.

Continue reading

சென்னையில் நான்கு நாட்கள்

23.11.2019 (சனிக்கிழமை)

jeyamohan - navinஎல்லாம் முடித்து உள்ளே நுழைய எத்தனித்தபோது தோள்பையில் கூடுதலாக மூன்று கிலோ இருந்தது. மூன்று கிலோவை குறைத்துவிட்டு வந்தால்தான் உள்ளே நுழைய அனுமதி என வாயிலில் நிற்கும் காவலர் கறாராகவே சொல்லிவிட்டார். என்ன செய்வதென தெரியாமல் வெளியே வந்தபோது ஒரு தமிழகத்துக்காரர் “என்னா பேக்கு பாரமுன்னு சொல்லிட்டான்னா. என்னோட வா,” என்றார். ‘நம்ம பிரச்சினையில இவர் காசு சம்பாரிக்க பாக்குறாரோ’ என சந்தேகம் எழுந்தாலும் அப்போதைக்கு வேறு திட்டங்கள் இல்லாததால் பின் தொடர்ந்தேன். அவர் பெட்டிகளைப் பாதுகாப்பாகப் பையால் சுற்றி அனுப்பும் வேலை செய்பவர். பையைத் திறக்கச் சொன்னார். திறந்தேன். உள்ளே இருந்த சாம்பல் நிற பையைக் கையில் எடுத்தவுடன் பெட்டியில் மூன்று கிலோ குறைந்து ஏழு கிலோவென காட்டியது.

Continue reading