கடிதம்/எதிர்வினை

பேய்ச்சியின் திருவிளையாடல்- புனிதவதி

எழுத்தாளர் ம.நவீன் வலைப்பக்கத்தில் மதியழகனின் விமர்சனத்தைப் படித்தேன். அது இலக்கிய விமர்சனம் இல்லை. முன்பு எங்கள் தோட்டத்தில் இரு கிழவர்கள் செய்தித்தாளைப் படித்துவிட்டு இரவில் சாராய போதையில் நாட்டு நடப்பு பற்றி காரசாரமாகப் உளறிக்கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய அதுதான் அந்தக் கட்டுரை. இது எதிர்ப்பார்த்த ஓன்றுதான். ம.நவீனுக்கு இவ்வகை உளறலைப் பார்த்து பார்த்துச் சலித்துப்போய் இருக்கும். எனக்குதான் புதிது.

Continue reading

கோழைத்தனத்தின் கூச்சல்கள்

எனக்கு மலேசிய இலக்கிய நிலை குறித்தெல்லாம் தெரியாது. முகநூல் பக்கம் வருவதும் மிகக் குறைவு. ஆனால் வெளியில் இருந்து பார்த்து சிலர் மேல் மரியாதை உண்டு. ஆனால் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களைப் பார்க்கும்போது பலர் மேல் மரியாதை இல்லாமல் போகிறது. குறிப்பாக கவிஞராகத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாகரன் மீது மரியாதை குறைந்து பரிதாப உணர்வே மேலோங்கியது. நான் கவிஞர்களின் ஆளுமையை பாரதி வழி அறிந்துள்ளேன். கவிஞர்கள் அப்படித்தான் துணிவாக இருப்பார்கள் போல என்றும் நம்பியிருந்தேன். இப்படிப்பட்ட கோழைகளெல்லாம் கவிஞர்களாக இருப்பார்களா என கருணாகரனைக் கண்டு மனம் நொந்தேன்.

Continue reading

படுத்து எழுந்த பாட்டன் – த.குமரன்

மரபிலக்கிய அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் தொடர்பான சர்ச்சைகளைக் காண முடிகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் வந்தாலே ‘இரண்டாயிரம் ஆண்டு இலக்கிய மரபு’ எனும் வாசகம் தேய்வழக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பயன்படுத்துபவரிடம் எங்கே அந்த இரண்டாயிரம் ஆண்டு மரபை கொஞ்சம் விளக்குங்கள் என்றால் திணறிவிடுவார். அப்படிச் சொல்வது ஒரு பாவனை. அந்த பாவனையைத்தான் திரு.மதியழகன் அவர்களும் பயன்படுத்தியுள்ளார். அப்படிச் சொல்லும்போது அனைவரும் வாயடைத்துவிடுவர். மரபிலக்கிய வாசிப்புப் போதாமை அதற்கு ஒரு காரணம்.

Continue reading

எதிர்வினை:சவமாகும் பேய்ச்சி- ஆ.லாவண்யா

ஏகவசனத்தில் தன்னையும் தன் புனைவையும் திட்டியுள்ள மதியழகன் அவர்களின் அவதூறு கட்டுரையை தன் வலைத்தளத்தில் ம.நவீன் அவர்கள் பதிவிட்டது என்னை இந்த எதிர்வினையை எழுதத்தூண்டியது.

Continue reading

ஜோன்சன் விக்டருக்கு எதிர்வினை

துறைசார்ந்த அறிவார்ந்த்தோர் தமக்கென்று ஒரு சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு துறைசார்ந்த படைப்பை மதிப்பீடு செய்வது வழக்கம்.  சங்க காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது.  புலவர்களின் படைப்பை விமர்சித்து கழகத்து தலைமை புலவர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றார்கள்.  நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையும் இப்படி உருவானதுதான்.

Continue reading

கடற்கரையில் குப்பை பொறுக்குவோர்… (அ.பாண்டியன்)

நவீன்,
பேய்ச்சி நாவலைப் பற்றிய மதியழகனின் விமர்சனம் அந்நாவலை முற்றிலும் புறக்கணிக்கிறது என்றாலும் அதை உங்கள் அகப்பக்கத்தில் நீங்கள் பதிவேற்றியிருப்பதை வரவேற்கிறேன். விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்பது ஆரோக்கியமானது என்பதால் மட்டும் இது வரவேற்கத்தக்கது அல்ல.

Continue reading

பேய்ச்சி: பேரன்பின் பெருமூச்சு

பொதுவாக ம.நவீன் படைப்பு, நேர்காணல், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், எதிர்வினைக்கட்டுரைகள் மிக அருமையாக இருக்கும். உண்மைக்குத் துணையாக பல சாட்சிகள் மேற்கோள் குறிப்புகள் படர்ந்து விரிந்து நிறைந்து, சீராக வியாபித்து வியப்பைக் கூட்டும்.

Continue reading

இலக்கியமும் இலேகிய விற்பனர்களும் (இளம்பூரணன்)

இலக்கியம் என்ற சொல்லின் பாரம்பரிய புரிதல்களில் உயர்ந்து நிற்பது இலக்குகளை உணர்த்த வேண்டும்; அவை இன்பம் செய்யவேண்டும். இந்தக் கட்டுக்குள்தான் இன்றுவரை இலக்கியம் படைப்போர் பலர் சுகமனநிலை போக்கில் அவற்றை அணுகிவருகின்றனர். இலக்கியத்தைப் போதை ஏற்றும் கருவியாகக் கொண்டு அதில் சுய இன்பம் தேடித்தேடி திளைக்கின்றனர்.

Continue reading

ச்சும்மா கிழி (கலை சேகர்)

இப்பதிவு மதியழகன் நவீனுடைய நாவல் குறித்து எழுதிய விமர்சனக் கட்டுரைக்கானது.

முன்குறிப்பு: அது இலக்கிய விமர்சனமாக இருந்தால் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் அது இலக்கிய விமர்சனத்திலிருந்து வெளியேறி… ஒரு இலக்கியப்படைப்பு எப்படி இருக்க வேண்டும்?, என்ன தொழில் செய்பவர் எப்படி எழுத வேண்டும்? என்ற போதனைகளாக இருந்தன. அது குறித்த பதிவு மட்டுமே இது.

Continue reading

தமிழக எழுத்தாளர்கள் மலேசியப் படைப்புகளை விமர்சிக்கலாமா?

maxresdefaultநவீன இலக்கிய முகாமில் கவிஞர் சாம்ராஜ் விமர்சனத்திற்குப்பின் உண்மையாக எழுந்திருக்க வேண்டியது மலேசிய கவிதை குறித்த ஓர் உரையாடல். அதை மலேசியக் கவிஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தியிருக்க வேண்டும். சாம்ராஜின் கருத்துகளை மறுக்கும் முகம் கொண்ட வலுவான கவிதைகளை முன்வைத்து கட்டுரைகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக இலக்கியவாதி எப்படி மலேசியப் படைப்புகளைப் புறக்கணிக்கலாம் என்ற தொணியே இங்கு எழுந்தது.

Continue reading