
யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம். அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். தோற்றங்களைப் போலவே அந்த நிலத்தில் தெய்வம் உருவானதற்கான கதைகளும் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுண்டு. இந்தக் கதைகள் அனைத்துமே மக்களின் கண்ணோட்டங்கள், பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள் என்றும் அந்தக் கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை, உணர்வுகளை, மதிப்பீடுகளை, வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன். (தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்).
Continue reading