கடிதம்/எதிர்வினை

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல் (கி.இளம்பூரணன்)

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில் அருள்பாலிக்கிறாள். தோற்றங்களைப் போலவே அந்த நிலத்தில் தெய்வம் உருவானதற்கான கதைகளும் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதுண்டு. இந்தக் கதைகள் அனைத்துமே மக்களின் கண்ணோட்டங்கள், பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள் என்றும் அந்தக் கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை, உணர்வுகளை, மதிப்பீடுகளை, வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள் என்கிறார் லக்‌ஷ்மி மணிவண்ணன். (தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்).

Continue reading

பேய்ச்சி: அன்னையின் பேய்மையும் அதீதத்தின் திரிபும் (அழகுநிலா)

‘பேய்ச்சி’ நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை எழுதுவதற்கு முன்பு பேச்சியைப் பற்றிய எனது அறிதல்களையும் அனுபவங்களையும் முதலில் எழுத விரும்புகிறேன். என்னுடைய சிறுவயதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அந்தச் சம்பவத்தைப் பார்த்தேன். அம்மாச்சி வீட்டிலிருந்த நாய் ஒன்று குட்டிகள் ஈனுவதைச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத வகையில் நாய் தனது குட்டி ஒன்றைச் சாப்பிட ஆரம்பித்தது. நான் ஓடிச்சென்று அம்மாச்சியிடம் விஷயத்தைச் சொல்ல “பெத்தவளுக்கு இல்லாத உரிமையா? தின்னுட்டுப் போகட்டும் விடு” என்று அலட்டிக்கொள்ளாமல் பதில் அளித்ததை அந்த வயதில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாய்மையின் வேறொரு பரிமாணத்தைப் பற்றிய குழப்பம் முதன் முதலில் அன்றுதான் என் மனதில் நுழைந்தது.

Continue reading

கடிதம்: இலக்கிய அறம்

ZOOM நேர்காணல்

வணக்கம் நவீன் அவர்கள். தங்களின் zoom உரையாடலில் எனக்கு ஒரு கேள்வி இருந்தது. அதை கேட்க சூழல் அமையவில்லை. நேரநிர்வகிப்பை நீங்கள் எவ்வாறு மேற்கொள்கிறீர்கள். வல்லினம் திட்டங்களை எவ்வாறு நேர்த்தியாக வடிவமைக்கிறீர்கள். அதை சொன்னால் எங்களைப் போன்றவர்களுக்குத் தெளிவு கிடைக்கும். உதவியாக இருக்கும். மேலும் இன்னொரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் சொல்லலாம். (இல்லாவிட்டால் தனியாக அனுப்பலாம்) அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு சர்ச்சைகளில் ஈடுபடுவது சிக்கலாக இல்லையா? பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லையா?

பாரதி.

Continue reading

ஒலிப்பேழை: கடிதம் – சிவமணியன்

சிறுகதை: ஒலிப்பேழை

அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

மதுரைக்கு மேற்கில் தேனி செல்லும் சாலையின் நேரிணையாக உள்ள மலைத்தொடர் நாகமலை எனப்படுகிறது. வறண்ட தாவரங்களால் அடர்ந்து, பெரும்பாலும் செங்குறுங்கற்களாலான மர்மத் தனிமை கொண்ட குட்டி மலைத்தொடர் அது. எதிர்க்காற்றின் செம்மண் தூசு கண்களை நீர்க்க வைக்க வைக்கும் அந்தப் பகுதிதான், வடிவேலுவிடம் பஞ்சாயத்து பேசிய சங்கிலி முருகன் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்களின் பின்புலம்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 5

சிறுகதை: பட்சி

பெரும் கொந்தளிப்புக்குப் பின் நிகழும் ஒரு பேரமைதி பட்சியை வாசித்து முடித்த கணம் மனம் முழுக்க பரவிப் படர்ந்து இருந்தது. அந்த அமைதியென்பது எண்ணங்களற்றது. இனி சொல்வதற்கும் சொல்லித் திளைப்பதற்கும் அறிவதற்கும் வேறொன்று புதிதாய் இல்லையென்ற சில கண உச்ச நிலையாக அது இருந்திருக்கலாம்.

Continue reading

பட்சி: கடிதங்கள் 4

சிறுகதை: பட்சி

அன்புள்ள நவீனுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 

மனித மைய நோக்கில், உயிரினங்களின் பரிணாமப் பிரமிடின் உச்சியில் மனிதன் தன்னை வளர்த்துக் கொண்டு பொருத்தியிருக்கின்றான்  எனலாம்.  

Continue reading

பட்சி: கடிதம் 3

சிறுகதை: பட்சி

நவீன்,

தலை முறையாக காட்டை வழிபட்ட முத்துவுக்கு பச்சையம்மன் தந்த பலி இறுதியில் அந்த மஞ்சான் என வாசித்தேன். சற்று மிகைதான் என்றாலும் அங்கு செல்லும் விசை இந்த சிறுகதையில் உள்ளது. மறு புறம் முத்துவுக்கு தொண்டை புற்று என்பதும் ஒரு பலி வாங்கல் தான். பறவைகளை கள்ளக் குரலில் அழைத்ததற்கு.

Continue reading

பட்சி: கடிதம் 2

சிறுகதை: பட்சி

நவின், பட்சி கதையை வாசித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் எண்ணம் அது ஒலிப்பேழை சிறுகதையில் இன்னொரு வடிவம் என்பதே. வணிகம் x கலை, பொருள் x அருள், பணம் x மனம் என இரண்டு வகையான மனநிலைகள் இரு வேறு தலைமுறையில் பிளவுபட்டு இருக்கையில் மூன்றாவதாக இன்னொன்றை நோக்கிச் செல்லும் கதை அமைப்பு.

Continue reading

நேர்காணல்: இரு கேள்விகள்

நேர்காணல் இணைப்பு

நேர்காணலைக் கேட்டேன். மிகவும் தெளிவான பதில்கள். நிச்சயமாக மலேசிய இலக்கியம் குறித்த ஆழமும் அகலமும் எனக்கும் அதிலிருந்தே புலப்பட்டது. இரண்டு கருத்துகள் அல்லது கேள்விகள் எனக்குத் தோன்றியது. உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Continue reading

டிராகன்: கடிதம் 4

சிறுகதை: டிராகன்

இதுவரை நவீன், கழுகு, உச்சை, சியர்ஸ், ராசன், பூனியான் சிறுகதைகளை எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் ஒன்னொடு ஒன்று கலக்காதப் பாதரசம் போன்றது. யாதார்த்தம் நிறைந்த கதைக்களம். அதே சமயம் புதிர் அவிழா மர்ம முடிச்சுகள் சிக்கிக்கொண்டு இருக்கும் அது வாசகனின் வாசிப்புத்தன்மையையும் விரிவடையச்செய்து கொண்டே இருந்தது. நக்கல், நையாண்டி, பகடி வசனம், கருத்துத்தளவிவாதம், விலங்குகளின் சராசரி குணத்தைத் தவிர்த்து நுட்பமான செயல்பாங்கு, மானிட அனுபவமும், மானிட சிந்தனையும் ஒன்று திரண்ட சுவையுடன் நவீன இலக்கிய இலட்சணத்துடன் விளங்கின. இவைகள் ஒன்றை ஒன்றோடு கலப்பது சாத்தியமில்லை.

Continue reading