கட்டுரை/பத்தி

சிகண்டி: மன்னிப்பதற்காக படைக்கப்பட்டவள் அன்னை – மு. சுப்புலட்சுமி

இன்றும் நம்மிடையே பேசப்படாத அல்லது தவிர்க்கப்படும் திருநங்கைகளைக் கதைமாந்தராகக் கொண்டிருக்கும் சிகண்டி, இருளுக்குள் அடைபட்டு வாழும் அவர்களின் அவலங்களையும் அவஸ்தைகளயும் பேசுகிறது. இவ்வளவு விரிவாக இந்த வாழ்க்கை வேறெந்த மலேசிய தமிழ் நாவலிலும் பதிவாகயிருக்கின்றதாவென்று தெரியவில்லை.

Continue reading

சிகண்டி: இருமையின் கூண்டை கடக்கும் சிறகுகள் – விக்னேஷ் ஹரிஹரன்

மனிதச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படிநிலை மனிதன் உலகை இருமைகளாக புரிந்துகொள்ளத் தொடங்கியதே என்று நினைக்கிறேன். நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் மிக நிச்சயமாக எந்த மனிதனையும் அச்சுறுத்தக்கூடியதே. அந்த பிரம்மாண்டத்தை ஏதோ ஒரு வகையில் தன் எல்லைகளுக்குள் சுருக்கி மட்டுமே மனிதனால் புரிந்துகொள்ள முடியும். அப்படிச் சுருக்கமுடியாமல் போனால் அந்த பிரம்மாண்டத்தைப் பற்றிய பிரஞையே நம் சிந்தையை அழித்துவிடும். அந்த நிலைக்கு நாம் சூட்டும் பெயர் ஞானமா, மனப்பிறழ்வா என்பது நம் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அது நம் உலகியல் வாழ்வுக்கு ஏற்ற நிலை அல்ல என்பதை மட்டும் நிச்சயமாக கூறமுடியும். இப்படியான பிரம்மாண்டத்தை மனிதனின் எல்லைகளுக்குள் சுருக்கும் மிகச் சிறந்த கருவியாக இருமைகள் இருக்கின்றன. இருளென்றும் ஒளியென்றும் தனியே அறிந்தவற்றை இருமைகளாக தொகுப்பதன் வழியே மனிதர்கள் தங்கள் சிந்தனையின் புதிய சாத்தியங்களை கண்டடைந்தனர். அந்த இருமை விளையாட்டிலிருந்தே இறைவனும் சாத்தானும், நன்மையையும் தீமையும், ஆணும் பெண்ணும், தானும் பிறரும், தோன்றினர். மனிதச் சிந்தனையின் அடிப்படையாக அமைந்த இந்த இருமை தர்க்கத்தின் காரணமாகவே நாம் இருமைகளின் கட்டுக்குள் வராதவற்றை அஞ்சுகிறோம்.

Continue reading

தேன் துளிகளை கானகம் அறிவதில்லை

வாசிப்பில் நான் தாண்டி வந்த படிநிலைகள் குறித்து சில இடங்களில் பேசியும் எழுதியும் உள்ளேன். நவீன இலக்கியத்தில் இயங்கத் தொடங்கிய காலத்தில், வாசித்த நூல்களின் எண்ணிக்கையே நல்ல வாசகனுக்கான அடையாளம் என்ற நம்பிக்கை இருந்தது. சுந்தர ராமசாமி, ஜானகிராமன், நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன் என அடுத்தடுத்து இடைவிடாது வாசித்துத் தள்ளினேன். வாசித்த நூல்களின் எண்ணிக்கையையும் அதன் ஆசிரியர் பெயர்களையும் ஒரு ‘மெடல்’ போல சுமந்து திரிவதில் சொல்லண்ணா பெருமை. ஆனால் 2006இல் ஜெயமோகனைச் சந்தித்தபிறகு அந்த பெருமையெல்லாம் பொலபொலவென சரிந்து விழுந்தன.

Continue reading

சிகண்டி: பேரன்னையாகும் திருநங்கைகள் – சண்முகா

சிகண்டியை வாசித்து முடித்தேன். போகவே முடியாத இடங்களுக்குச் சென்றும், பார்க்கவே முடியாத மனிதர்களைப் பார்த்தும், வாழவே முடியாத வாழ்க்கையை வாழ்ந்தும் பார்த்தேன். வாசிப்பனுபவம் எப்போதுமே மிகவும் அந்தரங்கமானது. கதைவழி நாம் நம் வாழ்க்கையில் உணர்ந்தவையெல்லாம் அல்லது கதையையே நம் வாழ்க்கையாக உணருவதெல்லாம் நிறைய இடங்களில் சொல்லாக வெளிக்கொணர முடிவதில்லை. சிகண்டி அவ்வனுபவத்தைச் சொற்களால் கடத்தியுள்ளது.

Continue reading

சிகண்டி: குற்றமும் விடுதலையும் -சிவமணியன்

உயிர்வளி ஏற்றுபவைகள்,  செறிவூட்டப்பட்ட அரிக்கும் அமிலங்கள்,  வினையூக்கிகள்,  காற்றேறி எரிபவைகள்,  பூச்சுக்குள் மறைந்திருக்கும் நச்சுகள், காரகாடி பொருட்கள், நீர்மக் கரைப்பான்  போன்ற நேரெதிர் வேதியல் இயல்புள்ள பல்வேறு பாத்திரங்களாலும், அவைகள் அருகருகே உரசியதால்  வெடிக்கும் கதைத்தருணங்களால் நிரம்பியவைகள் பெரிய நாவல்கள்.  பாத்திரங்களால் சம்பவங்களால்  படிமங்களால்  விரிந்த பெரிய நாவல்களை  தொடர்ச்சியாக வாசிக்க அதிக சிரத்தை தேவைப்படுகிறது.  குவிந்தும் விரிந்தும்  சிதறியும் செல்லும்  வடிவில் இருக்கும் நாவலை உள்வாங்குவது வாசிப்பை விட அதிக மன உழைப்பினை கோருபவை. 

Continue reading

சிகண்டியின் நவயுகம் – கோ. புண்ணியவான்

என் அறியாப் பருவத்தில் நானும் திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவே எதிர்கொண்டேன். அவர்கள் பார்வையாளர்களைக் கவர பெண்வேடம் போட்டுக்கொள்கிறார்கள் என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணுவதற்கு ஒரு காரணம் இருந்தது. சின்னக் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சுயமாக அம்மாவுடைய பாவாடையை அணிந்துகொள்வதும் செருப்பைப் போட்டுக்கொள்வதும்  முகப்பூச்சிகளை பூசிக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். உளவியல் ரீதியாக, அவர்கள் தன் தாயை தனக்குள்ளே தகவமைத்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதையே சில விடலைப்பையன்களும் செய்துகொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பு அந்த எண்ணம் குறுகலானது என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது.

Continue reading

ஊழ்வினையின் பெருஞ் சீற்றம் – ஆசிர் லாவண்யா

கதாபாத்திரங்களை மிக நூதனமான முறையில் கையாண்ட பல நாவல்களில் சிகண்டிக்குத் தனி இடமுண்டு. வாசிப்பை இரு முறை மேற்கொண்டு, நாவலை அலசி பார்த்ததில் எழுத்தாளர் ம.நவீன், திருநங்கைகள் எனும் இணைப்புப் புள்ளிகளை வைத்து சத்தியத்தின் பெருஞ்சீற்றத்தினை முடுக்கி விட்டிருப்பது நாவலினுள் எழும் பேரிரச்சல் வழி புலப்படுகிறது.

Continue reading

மா. ஜானகிராமன் : பழைய காகிதங்களைப் பொறுக்கும் துறவி

மா. ஜானகிராமன் குறித்து நான் முதன்முறையாக கவிஞர் தேவராஜுலு வழிதான் அறிந்தேன். அது 2006. அப்போது ‘காதல்’ இலக்கிய இதழைத் தொடங்கியிருந்தோம். அது காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, திண்ணை அகப்பக்கம் என வாசிப்பு சுருங்கியிருந்த காலம். இவ்விதழ்கள் முன்னெடுத்த அன்றைய எழுத்தாளுமைகளை மட்டுமே அதிகம் வாசித்திருந்தேன். அப்போது எழுந்து வந்த பெண் கவிஞர்கள் ஏற்படுத்திய அலையால் நவீன கவிதைகளை வாசிப்பதும் உரையாடுவதுமே முன்னெடுப்பாக இருந்தது.

Continue reading

பூச்சாண்டி: குட்டையில் சிந்திய ஒரு துளி நஞ்சு!

24.1.2022 – சன்வே வெலோசிட்டி பேரங்காடியில் ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது. நண்பர் செல்வம் அழைத்ததால் திரையரங்கம் சென்றேன். அவர் அப்படத்தில் பணியாற்றியிருந்தார். இப்படத்தை ஜே. கே. விக்கி (விக்னேஸ்வரன் கலியபெருமாள்) இயக்கியுள்ளார். ஜே. கே. விக்கி திரை உலகில் மட்டுமல்லாமல் பொதுத்தளத்திலும் நன்கு அறியப்பட்டவர். பூஜாங் பள்ளத்தாக்கு, மலாயாவுக்குச் சோழர்கள் வருகை என தொடர்ந்து மேடைகளில் பேசி வருபவர்.

Continue reading

2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

2021இன் தொடக்கம் லங்காவி தீவில்தான் விடிந்தது. லங்காவி வரி விலக்குத் தீவு. எனவே வெளிநாட்டினர் அதிகம் இருப்பர். அதனால் கொண்டாட்டங்களும் அதிகம் இருக்கும். நாங்கள் சென்றபோதும் கேளிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. கொரோனா தொற்று தொடர்பான எச்சரிக்கை இருந்தாலும் யாரும் பெரிதாக அச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

Continue reading