கட்டுரை/பத்தி

ரயில்: கானகத்தில் கரையாத காலடிகள்

இரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை  குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.

Continue reading

சிகண்டி: ஈரத்தீயில் நனையும் மனிதர்கள் – மணிமாறன்

ம.நவீனின் ‘பேய்ச்சி’ மற்றும் ‘சிகண்டி’ நாவல்களை வாங்கி படித்துள்ளேன். வல்லினம் இணையப்பக்கத்தையும் அதன் இலக்கியச் சேவைகளையும் ஓரளவு அறிவேன். ‘திறந்தே கிடக்கும் டைரி’ படித்த காலத்திலேயே ஆசிரியர் எழுத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்றைய எனது வாழ்வியல் சூழல்களால் வல்லினத்தோடும் ம.நவீனோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அது வல்லினத்தின் ஆரம்பகாலம் என்றே நினைக்கின்றேன். எப்போதாவது எது மூலமாகவோ, யார் மூலமாகவோ வல்லினச் செய்திகள் கண்ணில் காதில் படும். அவ்வகையில் எனக்கு வல்லினத்தை அறிமுகம் செய்த தோழி கலைமணிக்கு நன்றிகள்.

Continue reading

சிகண்டி: இரு வேறு துருவங்களையும் இணைத்துச் செல்லும் வாழ்க்கை – அருணா காத்தவராயன்

வாசிப்பின்போது எனக்குள் எந்த தேடலும் இல்லை, கேள்விகளும் இல்லை. விடைத் தெரியாத பல புதிர்களுக்குள் நடுவே நம் மனித வாழ்க்கை அதன் போக்கில் நகர்வது போல, நான் அறிந்திராத ஒரு புதுமையான வாழ்க்கைக்குள் அடி எடுத்துவைத்த உணர்வோடு சிகண்டி முழுதும் பயணித்தேன். இது சரி அது தவறு என அசலிப்பார்க்கும் அவசியம் எனக்குள் ஏற்படவில்லை. ஒவ்வொரு பக்கமும் வெவ்வெறு விடியலோடு பிரகாசிக்க,மனமோ கயிறறுந்த காற்றாடியாக பறந்தது.

Continue reading

எழுத்தாளர் சங்க முன்னெடுப்புகள் மலேசியப் புதுக்கவிதைக்கு மறுமலர்ச்சியை உண்டாக்கியதா?

‘மலேசியப் புதுக்கவிதைகள்: தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூல் மலேசியப் புதுக்கவிதை குறித்த ஆய்வுகளில் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படுவதுண்டு. இராஜம் இராஜேந்திரன் அவர்கள், தன் முதுகலைப்பட்டப் படிப்புக்காகத்  தயாரித்த ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். நவம்பர் 2007இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலுக்கு சிறந்த கட்டுரை நூலுக்கான எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்கவாசகம் விருது அந்த ஆண்டே கிடைத்தது. அவர் விருது பெற்ற ஆண்டு இராஜம் அவர்களின் கணவரான இராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உலக பொதுவிதி படி இந்த விருது ஒரு முறைக்கேடானது என எதிர்வினைகள் வந்தன. இந்தக் கட்டுரை அந்த நூலின் உள்ளடக்கத் தரம் குறித்தும் முன்னெடுக்கும் அரசியல் குறித்தும் ஆராய முற்படுகிறது.

Continue reading

என் வாசிப்பில் சிகண்டி – புஷ்பவள்ளி

சிகண்டி நாவலை வாசிக்கத் தொடங்கியபோது ம. நவீன் எழுதிய பல சிறுகதைகள் என் கண்முன் வந்தன. தொடர்ந்து அந்நாவலை வாசித்தபோது அறிந்த அக்கதைகள் வழி அறியாத வேறொரு அத்தியாயத்திற்குச் செல்வது போல் ஓர் உள்உணர்வு.

Continue reading

சிகண்டி: மன்னிப்பதற்காக படைக்கப்பட்டவள் அன்னை – மு. சுப்புலட்சுமி

இன்றும் நம்மிடையே பேசப்படாத அல்லது தவிர்க்கப்படும் திருநங்கைகளைக் கதைமாந்தராகக் கொண்டிருக்கும் சிகண்டி, இருளுக்குள் அடைபட்டு வாழும் அவர்களின் அவலங்களையும் அவஸ்தைகளயும் பேசுகிறது. இவ்வளவு விரிவாக இந்த வாழ்க்கை வேறெந்த மலேசிய தமிழ் நாவலிலும் பதிவாகயிருக்கின்றதாவென்று தெரியவில்லை.

Continue reading

சிகண்டி: இருமையின் கூண்டை கடக்கும் சிறகுகள் – விக்னேஷ் ஹரிஹரன்

மனிதச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படிநிலை மனிதன் உலகை இருமைகளாக புரிந்துகொள்ளத் தொடங்கியதே என்று நினைக்கிறேன். நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் மிக நிச்சயமாக எந்த மனிதனையும் அச்சுறுத்தக்கூடியதே. அந்த பிரம்மாண்டத்தை ஏதோ ஒரு வகையில் தன் எல்லைகளுக்குள் சுருக்கி மட்டுமே மனிதனால் புரிந்துகொள்ள முடியும். அப்படிச் சுருக்கமுடியாமல் போனால் அந்த பிரம்மாண்டத்தைப் பற்றிய பிரஞையே நம் சிந்தையை அழித்துவிடும். அந்த நிலைக்கு நாம் சூட்டும் பெயர் ஞானமா, மனப்பிறழ்வா என்பது நம் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அது நம் உலகியல் வாழ்வுக்கு ஏற்ற நிலை அல்ல என்பதை மட்டும் நிச்சயமாக கூறமுடியும். இப்படியான பிரம்மாண்டத்தை மனிதனின் எல்லைகளுக்குள் சுருக்கும் மிகச் சிறந்த கருவியாக இருமைகள் இருக்கின்றன. இருளென்றும் ஒளியென்றும் தனியே அறிந்தவற்றை இருமைகளாக தொகுப்பதன் வழியே மனிதர்கள் தங்கள் சிந்தனையின் புதிய சாத்தியங்களை கண்டடைந்தனர். அந்த இருமை விளையாட்டிலிருந்தே இறைவனும் சாத்தானும், நன்மையையும் தீமையும், ஆணும் பெண்ணும், தானும் பிறரும், தோன்றினர். மனிதச் சிந்தனையின் அடிப்படையாக அமைந்த இந்த இருமை தர்க்கத்தின் காரணமாகவே நாம் இருமைகளின் கட்டுக்குள் வராதவற்றை அஞ்சுகிறோம்.

Continue reading

தேன் துளிகளை கானகம் அறிவதில்லை

வாசிப்பில் நான் தாண்டி வந்த படிநிலைகள் குறித்து சில இடங்களில் பேசியும் எழுதியும் உள்ளேன். நவீன இலக்கியத்தில் இயங்கத் தொடங்கிய காலத்தில், வாசித்த நூல்களின் எண்ணிக்கையே நல்ல வாசகனுக்கான அடையாளம் என்ற நம்பிக்கை இருந்தது. சுந்தர ராமசாமி, ஜானகிராமன், நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன் என அடுத்தடுத்து இடைவிடாது வாசித்துத் தள்ளினேன். வாசித்த நூல்களின் எண்ணிக்கையையும் அதன் ஆசிரியர் பெயர்களையும் ஒரு ‘மெடல்’ போல சுமந்து திரிவதில் சொல்லண்ணா பெருமை. ஆனால் 2006இல் ஜெயமோகனைச் சந்தித்தபிறகு அந்த பெருமையெல்லாம் பொலபொலவென சரிந்து விழுந்தன.

Continue reading

சிகண்டி: பேரன்னையாகும் திருநங்கைகள் – சண்முகா

சிகண்டியை வாசித்து முடித்தேன். போகவே முடியாத இடங்களுக்குச் சென்றும், பார்க்கவே முடியாத மனிதர்களைப் பார்த்தும், வாழவே முடியாத வாழ்க்கையை வாழ்ந்தும் பார்த்தேன். வாசிப்பனுபவம் எப்போதுமே மிகவும் அந்தரங்கமானது. கதைவழி நாம் நம் வாழ்க்கையில் உணர்ந்தவையெல்லாம் அல்லது கதையையே நம் வாழ்க்கையாக உணருவதெல்லாம் நிறைய இடங்களில் சொல்லாக வெளிக்கொணர முடிவதில்லை. சிகண்டி அவ்வனுபவத்தைச் சொற்களால் கடத்தியுள்ளது.

Continue reading

சிகண்டி: குற்றமும் விடுதலையும் -சிவமணியன்

உயிர்வளி ஏற்றுபவைகள்,  செறிவூட்டப்பட்ட அரிக்கும் அமிலங்கள்,  வினையூக்கிகள்,  காற்றேறி எரிபவைகள்,  பூச்சுக்குள் மறைந்திருக்கும் நச்சுகள், காரகாடி பொருட்கள், நீர்மக் கரைப்பான்  போன்ற நேரெதிர் வேதியல் இயல்புள்ள பல்வேறு பாத்திரங்களாலும், அவைகள் அருகருகே உரசியதால்  வெடிக்கும் கதைத்தருணங்களால் நிரம்பியவைகள் பெரிய நாவல்கள்.  பாத்திரங்களால் சம்பவங்களால்  படிமங்களால்  விரிந்த பெரிய நாவல்களை  தொடர்ச்சியாக வாசிக்க அதிக சிரத்தை தேவைப்படுகிறது.  குவிந்தும் விரிந்தும்  சிதறியும் செல்லும்  வடிவில் இருக்கும் நாவலை உள்வாங்குவது வாசிப்பை விட அதிக மன உழைப்பினை கோருபவை. 

Continue reading