2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.

Continue reading

தாரா சொல்லும் வாழ்க்கை – சுகுனா செல்வராஜா

தாரா நாவலைப் படித்து முடித்து விட்டேன். எனக்கு மற்றவர்கள் போல் உங்கள் கதையில் விமர்சனம் செய்ய தெரியவில்லை. நீங்கள் திறமையான எழுத்தாளர் என்று உங்கள் எழுத்தில் மூலம் தெரிந்து கொண்டேன்.

நீங்கள் எழுதிய நாவல்களில் நான் படித்த முதல் நாவல் இதுதான். தாராவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் என்னை சுற்றி உள்ள நபர்கள் போல தோன்றியது.

Continue reading

தாரா: ஒரு வாசிப்பு – ஹேமா

புதிய குடியேறிகளுக்கும் நிலத்தில் காலம்காலமாய் வசிப்பவர்களுக்கும் உண்டாகும் சர்ச்சைகளை, முன்னேறிய நாடுகளும் முன்னேறிவரும் நாடுகளும் காலம் காலமாய் எதிர்நோக்கி வருகின்றன. இத்தகைய சர்ச்சைகளை எதிர்கொண்டு அவற்றைச் சமாளித்து அந்நிலத்தில் காலூன்றுவது புதிய குடியேறிகளுக்கு சவாலாக அமைகிறது.

Continue reading

தாரா: காழ்ப்புணர்ச்சியின் யுத்தம் – கோ. புண்ணியவான்

படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல் வாசிப்பது நல்ல அனுபவம். சிறுகதைகள் போலல்லாமல் வாசகனைத் தொடர்ச்சியாக சிலபல நாட்களுக்கு தன்னுடன் பயணம் செய்யவைத்து அதன் தட்ப வெப்பச் சூழலோடு நம்மையும் பிணைத்து பரவசமூட்டக்கூடிய இலக்கியப் புனைவு நாவல். அதிலும் வாசகன் அறியா ஒரு கதைக்களத்தையும், கதை மனிதர்களையும், நில அமைப்பையும் அறிமுகம் செய்து அவனுக்குள் புதிய அனுபவத்தை ஏற்றி அறிவார்ந்த சூழலுக்குள்ளேயே அவனை வைத்துக்கொள்வது நாவல் எழுத்தின் பயனாகும். நாவல் நெடுக புனைவுத்தர்க்க எல்லைக்குள் இயங்கவைத்து, வாசித்து முடித்த பின்னரும் அதன் இயங்கு விசையை வாசகனிடம் கடத்தி பாதிப்படையச் செய்யும் நாவல் சிறந்த படைபென்பேன். ‘தாரா’ அதனை செவ்வனே செய்திருக்கிறாள்.

Continue reading

வாசுகி டீச்சர் (விரிவாக்கப்பட்டது)

எனது ‘தாரா’ நாவல் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே நண்பர்கள் பலரும் என் நாவலை வெளியீடு செய்யப்போகும் அந்த வாசுகி டீச்சர் யார் எனக்கேட்டனர். இலக்கியச் சூழலில் அறிமுகமில்லாத அவர் யாராக இருக்கும் என்பதை அறிய பலருக்கும் ஆர்வமும் குழப்பமும் இருந்தது. அவர் என் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் என்றேன் சுருக்கமாக. ஆனால் அவர் அது மட்டுமல்ல. என்னை ஓர் எழுத்தாளன் என முதன் முறையாகக் கண்டுப்பிடித்து என்னிடம் சொன்னவர் வாசுகி டீச்சர்தான்.

Continue reading

தாரா: கால்களும் இறக்கைகளும் கொண்ட கதை – சாலினி

நல்ல நாவல்கள் விசாலமான வாழ்க்கையைச் சொல்வதாகவே அமைகின்றன. அந்த வாழ்க்கையின் ஊடே நுழைந்து பெறக்கூடிய நிகர் அனுபவங்களே நாவல் வாசிப்பு கொடுக்கும் இன்பமாகிறது. ம.நவீனின் ‘தாரா’ அப்படியான ஒரு நாவல்தான். அவரது முந்தைய நாவல்களைப் போலவே யதார்த்த வாழ்க்கையோடு மிகுபுனைவும் கலந்த நாவல் இது. ஒரு புறம் தரையில் கால்களை ஊன்றி நடக்கும் மனிதன் இறக்கைகளையும் அசைத்துக் கொண்டிருப்பதுபோல மெய்யான வாழ்க்கையினூடே நாம் அறியாத இன்னொரு மெய்யும் இணையும் புனைவு ‘தாரா’.

Continue reading

யுவன் சந்திரசேகர்: சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது. தாத்தா பள்ளிக்கு வந்தால் எங்கள் பள்ளியுடன் ஒட்டியுள்ள மாரியம்மன் கோயிலின் முற்றத்தில் அமர்ந்துகொள்வார். நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு மேஜிக் செய்யும்படி கெஞ்சுவோம்.

Continue reading

ஆழம்: தோண்டப்படாத மணற்கேணி

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் வேர்விடத் தொடங்கிய 70ஆம் ஆண்டுகளில் அதன் சாதனை முனையாக உருவானவை சீ. முத்துசாமியின் சிறுகதைகள். தோட்டப்புற வாழ்க்கையின் புற அழுத்தங்களோடும் அன்றாட அவலங்களோடும் எழுதப்பட்டுக் கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில் அப்பாட்டாளிகளிடம் உள்ள அந்தரங்கமான யதார்த்தத்தை நுண்மையாக முன்வைத்த முதன்மையான படைப்பாளி அவர். அகவயமான பயணத்தின் வழி மனதின் இருண்மையை இடைவிடாது வரைந்து காட்டியவர். 90களுக்குப் பின்னர் அவரது மறுபிரவேசம் மலேசிய நவீன தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.

Continue reading

தாரா நாவல் வாசிப்பனுபவம் 1 – அரவின் குமார்

தாரா நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய முதல் கேள்வி நாவல் என்பது தருக்கத்தால் மட்டுமே ஆனதா என்பதுதான். அந்தக் கேள்வியை நாவலென்னும் கலை வடிவத்தில் தருக்கத்தின் பயன் என்னவாக இருக்கிறது என்பதாகவும் தொகுத்துக் கொள்ள முடியும்.

Continue reading

தாராவைச் சந்தித்த கதை

ஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

Continue reading