
ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.
Continue reading






