கு. அழகிரிசாமியின் குழந்தைகள் (உரை)

அனைவருக்கும் வணக்கம்.

2005இல் நான் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தேன். தமிழ் மொழி ஆசிரியர் நான். பொதுவாகவே புதிதாகப் பணியில் அமரும் ஆசிரியர்களைப் படிநிலை ஒன்றில் பயிற்றுவிக்கப் பணிப்பது மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் வழக்கம். அப்படி எனக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சற்றுக் கண்டிப்பான ஆசிரியர்தான். மாணவர்கள் மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் பிடிவாதமாகவே இருந்தேன்.

Continue reading

பவா செல்லதுரையும் கூல் சுரேஷும்

‘பிக் பாஸில்’ பவா செல்லதுரை அவர்கள் கலந்துகொண்டபோது நான் என் முகநூலில் ஒரு பதிவு இட்டிருந்தேன். சினிமாவுடன் சம்பந்தப்பட்ட கூல் சுரேஷ் ‘பிக் பாஸ்’ செல்லும்போது யாருக்கும் தவறாகப் படவில்லை; இலக்கிய உலகில் அந்த இடத்தை வகிக்கும் பவா செல்லதுரை செல்வதில் என்ன தவறு எனக் கேட்டிருந்தேன். இதை நக்கலாகவெல்லாம் கேட்கவில்லை. என் மனதில் பவா செல்லதுரை அதற்கான இடத்தில் மட்டுமே அமர்ந்துள்ளார்.

Continue reading

சை.பீர்முகம்மதுவுக்கு அஞ்சலி

சை.பீர்முகம்மது இன்று (26.9.2023) அதிகாலையில் இறந்துவிட்டார் எனும் செய்தி அவர் மகனிடமிருந்து வந்திருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன் பார்த்திருப்பேன். நார்மன் வின்சென்ட் பீலின் ‘நேர்மறைச் சிந்தனைகள்’ எனும் நூல் வாசிக்க வேண்டும் என கேட்டிருந்தார். தனியாக ஓர் அறையில் அமர்ந்திருந்தார். சக்கரை நோயினால் கால் துண்டிக்கப்பட்டதும் அந்த அறையில்தான் பெரும்பாலும் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். ‘அக்கினி வளையங்கள்’ நாவல் வெளியீடு குறித்துப் பேசினார். நான் அந்தப் பேச்சைத் தவிர்க்க நினைத்தேன். அந்த வெளியீடு குறித்து அவருக்குச் சில திட்டங்கள் இருந்தன. நான் எவ்வகையிலும் இணைந்து செயல்பட முடியாத திட்டங்கள் அவை.

Continue reading

வெறுப்பின் தொடக்கங்கள்

சகோதரர் நவீன் அவர்களுக்கு,

ஜூலை மாத வல்லினம் வாசித்து முடித்தேன். மூன்று சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதில் எஸ்.ராவின் சிறுகதை அடக்கம் என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஏற்கெனவே அனுப்பிய சிறுகதைகளை நீங்கள் வல்லினத்தில் பிரசுரிக்காமல் நிராகரித்ததுண்டு. நீங்கள் நிராகரித்தவற்றை மற்ற இணைய இதழ்கள் பிரசுரித்ததும் உண்டு. அதனால் எனக்கு சங்கடம் இல்லை. நான் ஆச்சரியப்படுவது இவ்விதழ் 142ஆவது இதழ் என உங்கள் முக நூலில் அறிவித்திருந்தீர்கள். இத்தனை இதழ்களையும் இதே தீவிரத்துடன்தான் செய்கிறீர்களா? இத்தனை ஆண்டுகள் இந்தத் தீவிரம் குடிகொண்டிருக்க எது காரணமாக உள்ளது? அப்படி தீவிரமாகத் தோன்றிய சில இதழ்கள் ஏன் நின்றுவிடுகின்றன? வாசகர்களின் எண்ணிக்கையா? இணைய இதழ்களில் பணமும் வருவதில்லையே. எது உங்களை இயக்குகிறது?

பவன்

Continue reading

அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி

2019இல் தொடங்கி தமிழ் புனைவிலக்கியத்தில் இயங்கும் ஒரு தலைமுறையின் வருகையைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஜி.எஸ்.எஸ்.வி நவின், சுஷில்குமார், வைரவன், செந்தில் ஜெகந்நாதன் போன்றவர்கள் தமிழகத்திலிருந்தும் அரவின் குமார் மலேசியாவிலிருந்தும் சப்னாஸ் ஹாசிம் இலங்கையில் இருந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வகைமையில் சிங்கப்பூரில் உருவான முக்கிய இளம் படைப்பாளியாக கே. முகம்மது ரியாஸைச் சொல்வேன்.

Continue reading

Wiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்

மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில்  34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும் நான் தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் என்னை அவ்வமைப்புடன் பிணைத்தே வந்துள்ளேன்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 20

குமாரி தேவிகளைச் சந்தித்து திரும்பும்போது சிறிய சலசலப்பு ஏற்பட்டது. எங்களுடன் வந்த கோமளவள்ளி, சிவலட்சுமி, தேவஜித்தா ஆகியோரைக் காணவில்லை. அவர்கள் மூவரும் குமாரிகளைக் காணும் திட்டத்தில் இணைந்திருக்கவில்லை. அப்பகுதியில் ஷாப்பிங் செய்ய விரும்புவதாக அவர்கள் சொல்லியிருந்ததால் மீண்டும் சந்திக்கும் நேரத்தையும் இடத்தையும் நிர்ணயம் செய்துவிட்டுதான் பிரிந்தோம். திரும்பி வந்தபோதுதான் அவர்கள் அங்கு இல்லாததும் அவர்களைத் தொடர்புகொள்ள வேறு வழிகள் இல்லாததும் எங்களுக்கே உறைத்தது.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 19

குமாரியாக சனிரா

ராயல் குமாரி இரண்டாவது மாடியில் இருந்த மையமான சன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது கீழ்த்தளத்தில் அமைதி சூழ்ந்தது. பழுப்பும் கறுப்புமாக இருந்த கட்டடத்திலிருந்து சிவப்புடையுடன் ஓர் ஒளித்துளியாக குமாரி தேவி பிரசன்னமானார். யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காத கண்கள் குமாரி தேவியுடையது. விழியோரங்களில் கூர்மை கொண்ட மையால் கண்கள் துலங்கி தெரிந்தன. குமாரியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இருக்கக் கூடாது என்பதுதான் விதி. குமாரி தேவி முகத்தில் தோன்றும் சின்னச் சின்ன சலனங்களுக்குக் கூட காரணங்கள் கணிக்கப்படும். புருவத்தை அசைப்பதுகூட அபச குணமாகக் கருதப்படும். குமாரி தேவி அதிக பட்சம் இருபது வினாடிகள் எங்களைப் பார்த்திருப்பார். பின்னர் அமைதியாகத் தன்னை அறையிருளுக்குள் இழுத்துக்கொண்டார்.

Continue reading

குமாரிகள் கோட்டம் – 18

இன்றைய குமாரி

காலை மணி பத்தை நெருங்கியபோது என் பதற்றம் உச்சத்தை அடைந்தது. குமாரி தேவி காலை பதினொரு மணிக்குத்தான் பொதுமக்களுக்காகப் பிரசன்னமாவார். இனி எப்போது கிளம்பி எப்போது அவ்விடத்தை அடைவது? எப்படியும் நாங்கள் சேர்வதற்குள் குமாரி தேவி தரிசனம் முடிந்துவிடும். பின்னர் எதற்கு இந்தத் தொடருக்குக் ‘குமாரிகள் கோட்டம்’ எனப் பெயர் வைத்தேன்? எது என்னை அத்தலைப்பை வைக்கத் தூண்டியது?

Continue reading

குமாரிகள் கோட்டம் – 17

மறுநாள் இரவு புறப்பாடு. இன்றே அனைத்துப் பொருள்களையும் முறையாக அடுக்கிக் கட்ட வேண்டியிருந்தது. அதற்கு முன் நினைவு பொருட்களை வாங்க வேண்டும். நான் பச்சை நிற தாரா சிலையை வாங்கத் திட்டமிட்டிருந்தேன். நபராஜ் தன்னை ஒரு வியாபாரி என அறிமுகம் செய்துகொண்டதால் அவர் வழியாகப் பொருள்களை மலிவாக வாங்குவதுதான் எங்கள் திட்டம். எந்தக் கடைக்குச் சென்றாலும் எங்களைத் தென்னிந்திய சுற்றுலாவாசிகள் என விலையை அழுத்தினர். எனவே எங்களுக்கு ஒரு ‘விவரமான’ நேபாளியின் உதவி அவசியமாக இருந்தது.

Continue reading