நிதி உதவி தேவை

கடந்த சில வாரங்களாகவே எழுத்தாளர் மஹாத்மன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை அறிவேன். சில ஆண்டுகளாகவே அவரை வெவ்வாறு நோய்கள் தாக்கியபடி இருந்தன. அப்படி ஈராண்டுகளுக்கு முன் அவரை சுங்கை பூலோ மருத்துவமனையில் ஶ்ரீதருடன் சென்று சந்தித்தேன். மூளையில் உருவாகியுள்ள கட்டியால் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்தார். நேர்பார்வை மட்டுமே இருந்தது. பக்கத்துக் காட்சிகள் அனைத்துமே இருள். உடன் அவர் மனைவி இருந்தார். அவர் திருமணம் செய்திருப்பதை அப்போதுதான் அறிந்தேன். ஶ்ரீதரும் அப்போதுதான் அறிந்திருந்தார். கண்களை குறுக்கி வாசித்துக்கொண்டிருந்தார். தன்னால் இன்னமும் வாசிக்க முடிவதை எண்ணி உற்சாகமாகப் பேசினார்.

Continue reading

சிகண்டி: கித்தாகாட்டு மண்ணின் இருளுலகம் – துரை.அறிவழகன்

“தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தின் 3-ஆம் தேதி. மலேசிய வாழ்கை முடிவடைந்து ‘கிரீன் ப்ளாண்டேசன் சர்வீஷ்” விசாவில் தாயகம் திரும்பியது, 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இக்காலகட்டத்தில், மலேசிய இலக்கிய உலகுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அங்கிருந்த கடைசி ஆண்டுககளில்தான். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர் கோணங்கி அவர்கள். மலேசியாவின் சுண்ணாம்பு மலையை திருடிப்போக வந்திருந்தார் கோணங்கி. ம.நவீன் அப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.

Continue reading

உரை: யுவன் சந்திரசேகர் படைப்புலகம்

2006இல்

அனைவருக்கும் வணக்கம்.

இங்கு வந்திருக்கும் பலரும் யுவன் சந்திரசேகரின் புனைவுகளை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஒரு சில கதைகளை வாசித்துவிட்டு கொஞ்சம் குழப்பத்துடன் பின்வாங்கவும் செய்திருக்கலாம். இந்த உரையை யுவனை அணுக ஓர் ஆரம்பக்கட்ட வாசகனுக்கு வேண்டிய மனத்தயாரிப்பு குறித்து பேசலாம் என வடிவமைத்துக்கொண்டேன். அதன் வழி மலேசியாவில் யுவனை வாசிக்கக்கூடிய புதிய வாசகர்கள் உருவாவார்கள் என்றால் அதுவே மகிழ்ச்சி.

Continue reading

இருளெழுத்து எனும் கலை – சிகண்டியை முன்வைத்து சுனில் கிருஷ்ணன்

2019 ஆம் ஆண்டு ம. நவீன் தனது முதல் நாவலான ‘பேய்ச்சியை’ வெளியிட்டார். மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் நிகழ்ந்த சாராய சாவு எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்ட நாவல். முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வு தொடங்கி தோட்ட வாழ்வு வரை முன்னும் பின்னுமாக ஊடாடும் கதை. பேய்ச்சியின் மையம் என்பது தாய்மைதான். ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதையில் வரும் பகவதி, மூத்தம்மை இளையம்மை என இரண்டு வடிவில் இருப்பாள். பிள்ளையை இடுப்பில் சுமந்தவளாகவும் வாயில் கவ்வி கடித்து உண்பவளாகவும் காட்சியளிப்பாள். பேய்ச்சி நாவலும் இதையொட்டி தாய்மையின் இரு வடிவங்களையம் காட்டுகிறது. ஒரே அன்னையே கௌரியாகவும் காளியாகவும் ஆகிறாள். நவீனின் இரண்டாவது நாவலான சிகண்டியின் மைய பேசுபொருளும் தாய்மைதான். தாய்மையை பால் அடையாளத்திலிருந்து துண்டிக்கிறது சிகண்டி. தாய்மையையும் பெண்மையையும் எய்தத்தக்க ஒரு நிலையாக முன்வைக்கிறது. இந்த தரிசனம் தமிழுக்கு புதிதல்ல. சு. வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ சட்டென நினைவுக்கு வருகிறது.

Continue reading

அம்பரம் நாவல் (உரை)

அனைவருக்கும் வணக்கம்

நான் வாழ்ந்த லுனாஸ் வட்டாரத்தில் ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ‘பேய்ச்சி’ நாவலில் அந்தக் கோயிலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் மண்டபத்தில் தேர் ஒன்று ஓரமாக ஒதுங்கி நிற்கும். திருவிழாவின்போது மட்டுமே அதை கண்டுகொள்வார்கள். மற்ற நாட்களில் அது எங்கள் விளையாட்டு பொருள்களில் ஒன்று. திருவிழாவின்போது அதை மண்டபத்தில் இருந்து இழுத்துச் சென்று பெரிய காளை மாடுகளுடன் இணைக்க வேண்டி இருக்கும். அது சாதாரண காரியமல்ல. அவ்வளவு சீக்கிரம் தேர் நகராது. ஆனால் அதை இழுத்துச் சென்று மாட்டிடம் இணைப்பதே ஒரு மங்கள செயலாகக் கருதப்பட்டதால் பலரும் தங்கள் கைகளை தேரில் வைத்திருப்பார்கள். ஐம்பது அறுபது கரங்கள் அதில் பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில இளைஞர்களின் பலத்தால்தான் அந்தத் தேர் நகரும். அவர்களே அதில் பிரதானமானவர்கள். மூச்சுத்திணர தேரை இழுத்து மாட்டுடன் பூட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள்.

Continue reading

தமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்

தமிழ் விக்கி தளம்

ஜனவரி மாதம் ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘தமிழ் விக்கி’ ஒன்றை உருவாக்கப்போகும் தனது திட்டத்தையும், அதற்காக மலேசியாவின் முக்கியத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் எழுதும் பணியில் இணையவும் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது ஈடுபட்டிருந்த பணிகளை முடிக்க ஒரு வார காலம் தேவைப்பட்டதால் அவகாசம் கேட்டு சற்று சாவகாசமாகத்தான் களத்தில் நுழைந்தேன். அப்போதே இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் போடப்பட்டிருந்தன. இந்த வேகத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அதில் சரிபாதியாவது ஜெயமோகனால் தமிழ் விக்கிக்கு என எழுதப்பட்ட கட்டுரைகள் இருக்கும். இன்னும் சில நாட்கள் தாமதமானால் மலேசிய எழுத்தாளர்கள் குறித்து அவரே எழுதி முடித்துவிடும் தீவிரம் தெரிந்தது.

Continue reading

சிடிக் கொடுத்த 72,000 ரிங்கிட்டும் புத்தகக் காட்சியில் 100 ரிங்கிட்டும்

எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டறிக்கையை இன்று வாசிக்க நேர்ந்தது. அதில் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு செடிக் (SEDIC) மூலம் ரி.ம 72,000 கொடுக்கப்பட்டதாகவும் அப்பணத்தை எழுத்தாளர் சங்கம் அவ்வமைப்பிடமே திரும்ப கொடுத்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. சங்கம் திட்டமிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு 240,000 ரிங்கிட் தேவைப்பட்டதாகவும் ஆனால் 72,000 மட்டுமே கிடைத்ததால் அப்பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையிலேயே சங்கத்தின் பதிலும் உள்ளது.

Continue reading

ஜெயமோகன் 60: சியமந்தகம்

சியமந்தகம்

நாளை எழுத்தாளர் ஜெயமோகன் அறுபது வயதை நிறைவடைகிறார். வயது என்பது கூடுதலாக ஒரு வருடம். எல்லோருக்குமே அப்படி ஒரு வயது வரக்கூடியதுதான். ஆனால் ஆளுமைகளை நாம் தொகுத்துப் பார்க்கவும் அவர்களை இன்னொரு தலைமுறைக்கு மேலும் தீவிரமாகக் கடத்திச்செல்லவும் அது ஒரு சந்தர்ப்பம். ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையைக் கொண்டாட அப்படியான சந்தர்ப்பங்களைத் தவறவிடுதல் கூடாது. அவருக்கான ஒரு களஞ்சியத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆவலை முதலில் சொன்னது சு. வேணுகோபாலிடம். அவருக்கே அப்படி ஒரு திட்டம் இருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

Continue reading

இருள்சூழ் உலகில் தேவஒளியின் நடனம் – அழகுநிலா

நம் இந்திய மனங்களுக்கு மகாபாரதம் வழியாக அறிமுகமாகும் சிகண்டி என்ற கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பீஷ்மர் என்ற ஆளுமையால் மட்டுமே நிலைகொள்கிறது. இந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டால் நாம் அருவருப்புடன் முகம் சுளிக்கும் அல்லது அவமானப்படுத்தும் ஒருவனாகத்தான் சிகண்டிஇருந்திருப்பான். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ வாசிக்கும் வரை நானும் தினசரி வாழ்வில் சிகண்டிகளைச் சந்திக்க நேர்ந்தால் ஒருவித அசூயையுடன் ஒதுங்கிச் சென்றவள்தான். ஆனால் வாசித்த பிறகு, தனது அன்னைக்காக ஒற்றை இலக்குடன் வாழ்ந்து வென்றவள் அவளென அறிந்தபோது மகாபாரத சிகண்டி மீதும் தனது பால் அடையாளத்தை சமூகத்தில் நிலை நிறுத்துவதைஒற்றை இலக்காகக் கொண்டு போராடும் மற்ற சிகண்டிகள் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.

Continue reading

ரயில்: கானகத்தில் கரையாத காலடிகள்

இரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை  குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.

Continue reading