க்யோரா 4: வண்ணங்களின் உலகம்

நியூசிலாந்துப் பயணம் உறுதியானபோது, நான் பார்க்க ஆசைப்படுவதாக தங்கவேலிடம் விரும்பிக்கேட்ட இடம் ஒரு தொடக்கப்பள்ளி. நான் செல்லும் நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளிக்குச் சென்று பார்த்திருக்கிறேன். அனுமதி கேட்டு அங்குள்ள பாட நூல்களை எடுத்து வந்திருக்கிறேன். ஒரு சமூகத்தின் மனம் தொடக்கப்பள்ளியில்தான் வடிவமைக்கப்படுகிறது. அதை ஒவ்வொரு நாடும் எவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகிறது, தன் குடிமக்களின் மனம் எவ்வாறு இயங்க வேண்டும் என ஓர் அரசு விரும்புகிறது என்பதை தொடக்கப்பள்ளிக்குச் செல்வதன் மூலம் அறியலாம்.

Continue reading

க்யோரா 3: மகத்துவமாகும் குற்றங்கள்

தங்கவேலுடன்

திட்டமிட்டபடி தங்கவேல் சரியாக காலை எட்டு மணிக்கு செல்வா வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நியூசிலாந்தில் நான் பார்த்தவரை பெரும்பாலும் நேர ஒழுங்கை கடைபிடிக்கின்றனர். அல்லது நான் சந்தித்தவர்கள் அப்படி இருந்தனரா என்று தெரியவில்லை. ஆனால் அக்குணம் எனக்கு உவப்பானது.

Continue reading

க்யோரா 2: குளிர் நிலம்

தங்கவேல் மற்றும் ரவீனுடன்

வெலிங்டன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது நண்பர் தங்கவேல் மற்றும் ரவீன் காத்திருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நியூசிலாந்து தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக சிறுகதைப் பயிலரங்கு ஒன்றை நடத்தியபோதே தங்கவேலுவை அறிவேன். திருநெல்வேலிக்காரர். நல்ல இலக்கிய வாசகர். அந்தப் பயிலரங்கில் ஆர்வமாகப் பங்கெடுத்தார். சிறந்த புனைவுகளைத் தேடி வாசிப்பவராக இருந்தார். நேரில் பார்த்தபோது இணையச் சந்திப்பில் பார்த்ததைவிட இளமையாகத் தெரிந்தார். அவர் கையில் என் பெயர் பொறித்த பலகை இருந்தது. அதில் ‘நியூசிலாந்து தங்கள் அன்புடன் வரவேற்கிறது’ எனும் வாசகம். ரவீன் நான் கலந்துகொள்ளும் தமிழ் விழாவை ஏற்பாடு செய்துள்ள தமிழ் சங்கத்தின் தலைவர்; மலேசியர்.

Continue reading

க்யோரா 1: காணாமல் போன கதை

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிட்னி விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் எனக்கு நடு இருக்கை எனத் தெரிந்தது. கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது சன்னல் ஓர இருக்கை கிடைத்தது. ஆனால் ரசிப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. மலேசியாவைக் கடக்கும்போது தொழுநோய் போன்ற செம்பனை திட்டுகள். சிங்கப்பூரில் இறங்கும்போது கட்டடக்காடுகள். சன்னல் ஓர இருக்கை கிடைப்பது பெரிதல்ல; அது எங்கு கிடைக்கிறது என்பதுதான் தலைவிதி.

Continue reading

பொன்னியின் செல்வன் திரைப்படம் என்னை ஏன் கவரவில்லை!

பொன்னியின் செல்வன் வரலாற்றின் துளிகளைக் கோர்த்து கல்கி எழுதிய தொடர்கதை. என் பதின்ம வயதில் உற்சாகத்தை ஊட்டிய நாவல். பாயா பெசாரில் இருந்த ‘வீரா நாவல்’ புத்தகக் கடையில் பதினேழு வயதில் வேலை செய்தபோது மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து முடித்த புனைவு அது. இதைச் சொல்லக் காரணம் பதினேழு வயது கொண்டவனுக்குக்கூட புரியும்படியாகத்தான் கல்கி அந்நாவலை எழுதியுள்ளார் என்பதுதான். என் அடுத்தகட்ட வாசிப்பு சுந்தரராமசாமியில் இருந்து தொடங்கியபோது ‘பொன்னியின் செல்வன்’ வணிக இலக்கிய வகையைச் (popular literature) சார்ந்தது எனப் புரிந்தது. காட்சி விவரணைகளற்று, கதாசிரியர் குறுக்கிட்டுப் பேசும் எளிய மொழியிலான நாவல். எனவே பொதுவாசகர்களுக்கு அது அனைத்தையும் எடுத்துக்கூறும் தன்மையில் புனையப்பட்டதை அறிந்துகொண்டேன். தொடர்கதை அம்சம்கொண்ட அந்த நாவலின் பல கூறுகளை வெவ்வேறு எம்.ஜி.ஆர் படங்களில் பின்னாட்களில் பார்த்துள்ளேன். இன்று எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும்போது எவ்வளவு கவனமில்லாமல் அணுகுவேனோ அதே மதிப்புடன்தான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலையும் இன்று வாசித்தால் அணுகக்கூடும்.

Continue reading

அழிவை நோக்கி கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகள்

கடந்த சில மாதங்களாகவே கோலசிலாங்கூரில் உள்ள இயற்கை பூங்கா (Kuala Selangor National Park) ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. அலையாத்தி காடுகளால் சூழப்பட்ட இந்த பூங்கா எதிர்க்கொண்டுள்ள ஆபத்து குறித்து, இதுவரை மலேசியத் தமிழ் ஊடகங்கள் எதிலும் வெளிவராத நிலையில் நான் அந்தப் பூங்காவின் நிர்வாகி மைக்கல் அவர்களைச் சென்று சந்தித்தேன்.

Continue reading

தூரன் ; பத்மபாரதி; சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

1954ஆம் ஆண்டு தொடங்கி 1963 வரை சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒன்பது கலைக்களஞ்சியத் தொகுதிகள் என்னிடம் உள்ளன. அதில், முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள தி.சு.அவினாசிலிங்கத்தின் முகவுரை முக்கியமானது. சில வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும்; ஈடுபட்டால் அவற்றைச் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. சுதந்திர தினத்துக்கு முந்திய நாள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வழி தி.சு.அவினாசிலிங்கம் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டார். இரண்டே நாட்களில் இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை திரண்டது. அவ்வாதரவு கொடுத்த நம்பிக்கையுடன் அக்டோபர் 1947இல் கலைக்களஞ்சியப் பணியை சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கினார். இந்தக் கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர் ம.ப. பெரியசாமித்தூரன்.

காண்க: பெரியசாமி தூரன்

Continue reading

எழுத்தாளர் மஹாத்மன் நிதி RM 10598.56 சேர்ந்தது

ஜூன் 25, மஹாத்மனுக்கு நிதி உதவி தேவை என குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். இந்த நிதி சேகரிப்புத் திட்டத்தை வல்லினம் மூலம் ஒரு மாதம் தொடர திட்டமிட்டோம். எழுத்தாளர் மஹாத்மனுக்காக இந்நிதி திட்டத்தை முன்னெடுக்க சில காரணங்கள் இருந்தன.

Continue reading

மஹாத்மனுக்கான நன்கொடை

முந்தையை பதிவு

மஹாத்மனின் உடல் நலம் முன்னிலும் மெல்ல தேறி வருகிறது. பேசுவது புரிகிறது. கண்களைத் திறக்கிறார். ஆனால் முகங்களை அடையாளம் காணமுடிகிறதா என்பது தெரியவில்லை. சுவாசிக்க அவ்வப்போது இயந்திர உதவி தேவைப்படுகிறது.

Continue reading