
அகவுலகின் புறவுலகம் அயர்ச்சியுறும்போது புறவுலகின் அகவுலகை இரசிக்கக் கிளம்புவது என்னியல்புமே. இனம் புரியா இன்மையை மிகச் சாதாரணப் பயணமும் தூர்வாரி போதி மரம் நடும்.
Continue reading
அகவுலகின் புறவுலகம் அயர்ச்சியுறும்போது புறவுலகின் அகவுலகை இரசிக்கக் கிளம்புவது என்னியல்புமே. இனம் புரியா இன்மையை மிகச் சாதாரணப் பயணமும் தூர்வாரி போதி மரம் நடும்.
Continue reading
இயற்கையோடும் செம்மண் வாசனையுடனும் கதையோட்டம் படிப்பதற்குச் சுவாரிசமாக இருந்தாலும். அவ்வூர் சப்த கன்னிகள் தோன்றிய விதத்தைப் படிக்கும் போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகிறதே எனலாம். ஒவ்வொரு கன்னியின் தோற்றக் கதை மனதில் திகில் வயப்பட செய்கிறார் கதையாசிரியார்.
Continue reading
இந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.
Continue reading
இந்த நேர்காணல் அகச்சுட்டு இணைய இதழில் இரு பாகங்களாகக் கடந்த வாரம் பிரசுரம் கண்டது. அகச்சுட்டு இதழுக்கு நன்றி.
Continue reading
போப்பிக்காக வாங்கிய உணவு மீதமிருந்தது. அவனுக்குத் தொண்டையில் கட்டி உருவான பின்னர் கெட்டியான உணவுகளைச் சாப்பிட மறுத்துவிட்டான். குட்டியிலிருந்தே அவனுக்கு தோல் அழற்சி இருந்ததால் குறிப்பிட்ட பிராண்டில் உள்ள ‘lamb rice’ பிஸ்கட்டுகளை மட்டுமே கொடுக்கும்படி டாக்டரின் பரிந்துரை. அப்படி கடைசியாக வாங்கிய உணவு அப்படியே மீந்திருந்தது.
Continue reading
போப்பி இன்று இறந்தான். உண்மையில் அதன் அடையாள அட்டையில் பாரதி என்றுதான் பெயரிருக்கும். கனிவும் கம்பீரமும் ஒருங்கே அமைந்த கண்களைக் கொண்டிருந்தான் என்பதால் அப்பெயர் வைத்தேன். ஆனால் போப்பி என்ற பெயர்தான் இயல்பாக ஒட்டிக்கொண்டது. எனவே அவன் தன் பெயர் பாரதியென கடைசி வரை அறிந்திருக்கவில்லை.
Continue reading
பட்சி ஒரு அற்புதமான கதை, பறவைகளை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது, பறவைகளை புகைப்படம் எடுப்பதில் இருக்கும் முக்கியமான விதி பறவையைப்போலவோ, வேறு எந்த சத்தத்தின் மூலமாகவோ ஈர்க்க முயற்சிக்கக்கூடாது என்பது, செயற்கையான ஒரு சிறிய அதிர்வுகூட பறவைகளின் சூழ்நிலையில் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த விதிமீறல்தான் கதையின் முக்கியமான அம்சம்.
Continue reading
பொருட்களையும் உயிர்களையும் தனதாக்கி கொள்வதே தன் அகங்காரத்தின் இயல்பு. பெரும்பாலான நேரங்களில் அதனால் விளையும் மதிப்பொன்றுமில்லை.
மாலிக்கின் ஆசையும் அத்தகையதே. பணமிருந்து அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒருவன். திறமைக்கு கிடைதத அங்கீகாரத்தை பொருட்படுத்தாமல் பணத்தேவையுடைய ஒருவன்.
Continue reading
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதுதான் பழமொழி.
பெண்ணே பேயானால், அது ஈவிரக்கமேயற்றுப் போகும் என்பதுதான் நடைமுறை மொழி. பெண் சாபம் பொல்லாதது என்பது பழமொழி. அது மட்டும் புது மொழியிலும் மாறாதது; அதுவேதான். பெண்ணின் மன வேதனை, அதில் அவள் நெஞ்சுக்குள் கனன்றிக் குமுறும் கனல் அது தன் கொழுந்து விட்டெறியும் தீ நாக்குகள் அடங்கும் வரை ஓயாது. அவளுடைய இந்தக் குமுறல் அவளுக்கு மனதாலும், உடலாலும் தீங்கிழைப்பவர்களை ஜென்ம ஜென்மமாகத் தொடர்ந்து அழிக்கிறது. இதை மண்ணோடு மறைந்த அந்தப் பெண்ணும் அறிவதில்லை. அழிக்கப்படுபவனுக்கும் என்ன தவறு தான் செய்தோம் எனத் தெரிவதில்லை. தன் வாழ்க்கையில் நடைபெறும் சுகக் கேடுகளை வைத்து, சரிவுகளை வைத்து, நிம்மதியிழப்புகளை வைத்துப் பின்னர் அறிந்து கொள்கிறான். கர்ம வினைகள் எனும் ஞானம் பெறுகிறான். ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிந்து போகும் தருணத்திலோ, மேலும் மேலும் துன்பங்களில் உழலும்போதோ மட்டுமே அவனுக்குப் புரிகிறது. இதை ஆரம்பத்திலேயே புரிந்து கொள்பவன் இந்த ஜென்மத்திலாவது நல்வினைகளைப் புரிவோம் என்று தெளிகிறான்.
Continue reading