சை.பீர்முகம்மது நாவல்கள்

மலேசியாவில் மு.வரதராசனின் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம்போலவே ஜெயகாந்தனின் நாவல்களும் பரந்த வாசகர் பரப்பை அடைந்த காலம் ஒன்றுண்டு. இவ்விரு எழுத்தாளர்களுடைய படைப்பின் தளமும் தரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் சூழலில் வாசகர்களை இவர்கள் ஒருங்கே பாதித்தது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்.

Continue reading

உலகத் தமிழ்ச் சங்கத்தில் கொட்டிய குப்பை

நண்பர் ஒருவர் கு.அழகிரிசாமி மலேசியாவில் பணியாற்றியது குறித்து ஆச்சரியமாகக் கேட்டார். நான் சில விளக்கங்களைக் கூறியபோது குழம்பிப்போய் உலகத் தமிழ்ச் சங்க இணையக் கலந்துரையாடல் யூடியூப் பதிவொன்றை அனுப்பி வைத்தார். அதில் எம்.கருணாகரன் (மலேசியா) தமிழ்ச் சங்க உறுப்பினர்களிடம் மலேசியச் சிறுகதை வரலாறு குறித்து கொடுத்த விளக்கங்களைக் கேட்க முடிந்தது. தொடர்ச்சியாக மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனங்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருப்பதால் கருணாகரனின் அந்த அபத்த  உரைக்கு மறுப்பு எழுத வேண்டுமா என யோசித்தேன்.

Continue reading

டிராகன்: கடிதம் 3

நவீன்,
பசியின் உக்கிரத்தில் விழுமியங்கள் கரைந்து போய் பின் தலை தூக்கி மீண்டும் பசியிடம் சரணடைவது இக்கதை. இறுதியில் இளங்கோ தனது தாயை பழைய வேலைக்கே செல்ல சொல்லுதல் இயலாத ஒருவனின் பாச வெளிப்பாடு. சூழலின் நெருக்கடியில் விழுமியங்கள் சரியும் போது அதனினும் உயர்ந்த உணர்வின் எழுச்சி அபாரமானது. இது இக்கதையில் சாத்தியமாகி உள்ளது. உண்மையில் இலக்கியம் இயங்க வேண்டிய விசேஷ தளம் இதுதான். 

Continue reading

டிராகன்: கடிதம் 2

சிறுகதை: டிராகன்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நவீன இலக்கிய முகாமில் கலந்து கொண்டேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ‘இன்றைய உலக இலக்கியம் அறிமுகம்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். உலக இலக்கியப் படைப்புகளைச் சில கட்டமைப்புக்குள் வகைப்படுத்திக் கூறினார். அந்த வகையில், டிராகன் சிறுகதை இடப்பெயர்ச்சி சார்ந்த புனைவா (exodus writing) அல்லது புலம்பெயர்தலைச் சார்ந்த புனைவா (diaspora writing) ஒழுக்கச் சிக்கலை மையப் படுத்தும் புனைவா என கதையை வாசித்தவுடன் என்னை யோசிக்க வைத்தது. 

Continue reading

டிராகன்: கடிதம் 1

சிறுகதை: டிராகன்

டிரேகன் சிறுகதையை வாசித்தேன். இந்தக் கதையை இரு கோணத்திலிருந்து அணுகத் தோன்றுகிறது. உடற்குறையுள்ள மகனை ஈன்றதற்காக மனைவி மீது கோபம் கொள்வகிறார் இளங்கோவின் அப்பா. அந்தக் கோபத்தை அவன் தாயின் கற்பின் மீதான வெறுப்பாக ஐயமாக மாற்றிக் கொள்கிறார்.

Continue reading

சிறுகதை: டிராகன்

இளங்கோவுக்குப் பசித்தது.

வயிற்றினுள் அமிலம் ஊற்றியதுபோல கொதித்துக் கொதித்து அடங்கியது. கொதிக்கும்போது கை கால்கள் நடுங்கின. அடங்கும்போது தலை வலித்தது. சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட டிராகன் படத்தை சுருட்டி வைத்தான்.

அம்மா இன்னும் வரவில்லை.

Continue reading

பூனியான்: கடிதம் 4

பூனியான் சிறுகதை தொடக்க வரியைப் படித்ததும், என் நினைவிற்கு வந்தது, பேய்ச்சியில் இராமசாமியும், அப்போயும் காட்டிற்குச் செல்லும் பயணம்தான். அதில் பூனியான் பற்றிய எச்சரிக்கைகள் வழங்கப்படும் இருப்பினும் மிகப் பெரிய பாதிப்பைக் கொண்டு வரவில்லை.

Continue reading

பூனியான்: கடிதங்கள் 3

பூனியான்

அண்ணா, பூனியான் கதை வாசித்துவிட்டேன்.
பூனியான் அமானுஷ்யம் அறிவியல் என இரண்டு எதிரீடுகளின் நடுவில் நிற்கும் ஒரு சாம்பல் நிறத்தை தொடும் கதை. ரீத்தா, அருண் இருவரும் இந்த இரண்டு எதிரீட்டின் ஒன்றைப் பற்றிக் கொண்ட புள்ளிகள்.

Continue reading

அ.ரெங்கசாமி நாவல்கள்

‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்’ வரை என்ற தனது சுயவரலாற்று நூலில், நாவல் எழுதுவதற்கான உந்துதலை மலேசியத் தமிழர்களின் இக்கட்டான வாழ்வை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பெற்றதாகச் சொல்கிறார் எழுத்தாளர் அ.ரெங்கசாமி. இயல்பிலேயே இருந்த கலையார்வம் அவரை புனைவை நோக்கி தள்ளியது. தனது இளமைக் காலத்தில் தொடர்கதைகள், சிறுகதைகள் எழுதியதோடு வில்லுப்பாட்டு, மேடை நாடகம் என ஆர்வமாக இயங்கினார். கலை என்பது மனிதனுக்குப் படிப்பினையைக் கொடுக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரெங்கசாமி. ‘பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்’ என இமயத் தியாகம் நாவல் முன்னுரையில் ரெங்கசாமி எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

Continue reading

பூனியான்: கடிதங்கள் 2

பூனியான் சிறுகதை

நவீன், பூனியான் கதையில் புனைவின் சாகசம் நிகழ்ந்திருக்கிறது. தாமதமாக படிக்கிறேனே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. பூனியான் உலகை ரீத்தா மனக்கற்பனைக்கும் நிஜத்திற்குமான மெல்லிய கோட்டின் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் விளையாடி இருக்கிறாள். குறிப்பாக ஒவ்வொரு தற்கொலை முயற்சியிலும் காப்பாற்றப்படுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்ட நுட்பம் கண்டுபிடிக்க முடியாதவிதத்தில் இருக்கிறது. கதையில் நிதானமும் மனச்சிக்கலும் ஒரு சாகசத்துடன் உருவாகி உள்ளது. திறமையான எழுத்தாற்றல் அது. சபாஷ் நவீன்.

சு.வேணுகோபால்

Continue reading