அம்ருதா இதழில் வரும் தொடர்…
மனிதன் ந
ம்பிக்கைகளால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு கொடும் துன்பத்துக்குப் பிறகு எப்படியும் எங்காவது ஒரு நற்செய்தியை வாழ்வின் நீண்ட பயணத்தில் எதிர்க்கொள்வதே சாத்தியம் என்ற நிபந்தனையில் நிகழ்கால கசப்பிலிருந்து சிந்தனைகளை மடைமாற்று செய்துகொள்கிறான். நம்பிக்கைக்கு வசப்படாத தொடரும் இழப்புகளின்மீதும் உளைச்சல்களின் மீதும் அடுக்கடுக்காக நம்பிக்கைகளை ஏற்றி தன் வாழ்வை தானே உயிர்ப்பித்துக் கொள்கிறான்.









